disalbe Right click

Sunday, February 8, 2015

பட்டா வாங்குவது எப்படி?



பட்டா வாங்குவது எப்படி?
****************************************************

நமக்கு ஒரு சொத்து வாரிசுரிமைப்படியோ, பாகப்பரிவினை பத்திரபடியோ, உயில் ஆவணத்தின் படியோ, செட்டில்மெண்ட் பத்திரப்படியோ, விற்பனை மூலம் வாங்கியதாக இருந்தாலோ அதற்கு பட்டா மாற்றம் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

மேற்கண்ட வகையில் கிடைக்கும் சொத்திற்கு அந்த சொத்து எந்த தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்த பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்மந்தமாக விண்ணப்பிக்க வேண்டும். 
இந்த சான்று தனியாக 3 பக்க விண்ணப்பப்படிவம் உள்ளது. 

(இணையத்தில் பதிவிறக்கம் செய்ய www.tn.gov.in/LA/forms) அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்பட்வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டிய விசயங்கள்:

விண்ணப்பதாரர் பெயர்

தகப்பனார்/கணவர் பெயர்

இருப்பிட முகவரி

பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்)

மனை அங்கீகரிக்கப்பட்ட மனையா/அங்கீகாரம் இல்லாத மனையா என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடம் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும்.

சொத்து மனுதாரருக்கு எவ்வாறு கிடைக்கப்பட்டது என்ற விவரம் (துவக்கத்தில் கூறப்பட்ட முறைகளில் ஒன்று)
பத்திர ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்கப்பட்டுள்ளதா?

சொத்து மனுதாரரின் அனுபவத்தில் உள்ளதா?
எவ்விதம் அனுபவத்தில் உள்ளது? (அதற்கான அத்தாட்சி ஆவணங்களின் நகல்கள் இணைக்கபடவேண்டும் அவை, மாநகராட்சி சொத்துவரி செலுத்திய ரசீது/மின் கட்டண அட்டை/குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை/குடும்ப அட்டை/வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஏதேனும் ஒன்று)

பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தில் ஒரு பகுதியா? அல்லது முழுமையானதா? 


பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.

குறித்த காலத்திற்கும் பட்டா கொடுக்கப்படவில்லை! என்றாலோ, அல்லது லஞ்சம் கேட்டாலோ கோட்டாட்சியர்(RDO) மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம். மேலும் தகவல் பெறும் உரிமம் சட்ட மூலமும் நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.

மிக முக்கியமாக தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது தங்கள் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவுத்தபாலில் ஒப்புதல் அட்டை இணைத்து தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.


























வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டுவர


வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டுவர முடியுமா?
**********************************************************************

நீங்கள் வெளிநாட்டில் இருந்து,இந்தியாவிற்கு பயணிக்க திட்டமா?
************************************************************
அப்படி வரும் போது தங்கத்தையும் கொண்டு வரும் எண்ணம் இருந்தால் இந்திய அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கு வரும் போது உங்கள் பயண உடைமைகளுடன் தங்க நகைகள் அல்லது தங்கத்தை சேர்த்து கொண்டு வருவதற்கு, கீழ்கூறிய 5 முக்கியமான நிபந்தனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1) ஒரு இந்திய ஆண் பயணி ரூ.50,000/- மதிப்புள்ள நகைகளை கொண்டு வர மட்டுமே அனுமதிக்கப்படுவார். அதுவே பெண் பயணி என்றால் ரூ.1 லட்சம் வரை வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி தங்கம் கொண்டு வருவதற்கு ஒரு வருட காலத்திற்கு அதிகமாக அந்த பயணி வெளிநாட்டில் இருந்திருக்க வேண்டும். இந்த வரம்பிற்கு மேல் கொண்டு வரும் தங்க நகைகளுக்கு சுங்க வரி வசூலிக்கப்படும்.

2) பாஸ்போர்ட்டை கொண்டிருக்கும் பயணி தன்னுடைய பயண உடைமையாக தங்கத்தை இறக்குமதி செய்யலாம். 6 மாதங்கள் கழித்து வெளிநாட்டில் இருந்து வருகை தரலாம். ஆனால் இந்தியாவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்க கூடாது.

3) வெளிநாட்டில் இருந்து தாயகத்திற்கு தங்க கட்டிகளை நீங்கள் கொண்டு வந்தால், அந்த தங்க கட்டிகளில் வரிசை எண், எடை மற்றும் தயாரிப்பாளரின் பெயர் கட்டாயமாக இருக்க வேண்டும்.

4) நீங்கள் தங்க கட்டிகள் அல்லது நாணயங்கள் கொண்டு வந்தால், அதன் மீது சுங்க வரியாக, ஆறு சதவீத வரியும், மூன்று சதவீத மேல் வரியும் கட்ட வேண்டும். நீங்கள் டோலா கட்டிகள் அல்லது நகைகள் கொண்டு வந்தால், அதன் மீது சுங்க வரியாக பத்து சதவீத பெறுமான வரியும் மூன்று சதவீத மேல் வரியும் கட்ட வேண்டும். தங்கமும் முத்துக்களும் பதிக்கப்பட்ட நகைகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.

5) இந்தியாவுக்கு வந்து இறங்கியவுடன் தங்கம் இருப்பதை அறிவித்து விட்டு, வட்டியை கட்ட வேண்டும். ஒரு வேளை, உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்துள்ள தங்க நகைகள் தீர்வையில்லா வரம்புக்கு மீறி உள்ளதென்றால், தீர்வையில்லா பொருட்களை கொண்டுள்ள பயணிகளுக்கான பச்சை சேனலை பயன்படுத்த முடியாது. மாறாக, வரி கட்ட வேண்டிய பொருட்களை கொண்டுள்ளதால் சிவப்பு சேனல் வாயிலாக நடக்க வேண்டும். வரம்பு எல்லைக்கு மீறிய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட அந்த பயணி சுங்க வரி சட்டம் 1962ன் கீழ் தண்டிக்கப்படுவார்.