disalbe Right click

Showing posts with label வெளிநாட்டுக் கல்வி. Show all posts
Showing posts with label வெளிநாட்டுக் கல்வி. Show all posts

Saturday, February 11, 2017

அமெரிக்காவில் படிக்க வேண்டுமா?

No automatic alt text available.

அமெரிக்காவில் படிக்க வேண்டுமா?

அமெரிக்க கல்வி பெறுவது எப்படி?

சென்னை:அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகம் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க துாதரக அதிகாரிகள் கூறியதாவது:

அமெரிக்காவில் கல்வி பெற விரும்புவோர், எப் 1 விசா பெற வேண்டும். அது தொடர்பான நடைமுறைகளை அறிந்து கொள்ள, மே, 13ல், சென்னை, அமெரிக்க துாதரகத்தில் உள்ள நுாலகத்தில், மதியம், 2:30 மணி முதல், மாலை, 4:00 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

அதற்காக, http:/bit.ly/EducationUSAChennaiPDO என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யவேண்டும். 

மேலும், ஜூன், 3 மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை, bit.ly/educationusawebinarஎன்ற இணையதளத்தில், ஆன்லைன் வகுப்பு நடைபெற உள்ளது. 

மாணவர்கள், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற புகைப்படத்துடன் கூடிய ஆவணங்கள் அல்லது பள்ளி, கல்லுாரி அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும்.

நேர்காணலுக்கு அழைக்கப்படுவோர், அழைக்கப்பட்ட நேரத்துக்கு, 15 நிமிடங்களுக்கு முன்னதாக வரக்கூடாது. 

எந்தெந்த பொருட்களை, சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்துக்கு கொண்டு வரக்கூடாது என்பதை,www.ustraveldocs.com/in/innivsecurityinfo.aspஅல்லது goo.gl/piYcPP என்ற இணையதளத்தில் பார்த்து அறியலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர்-கல்விமலர்-23.04.2016

Sunday, June 5, 2016

வெளிநாட்டுக் கல்வி


வெளிநாட்டுக் கல்வி - என்ன செய்ய வேண்டும்?
வெளிநாட்டுப் படிப்பு... நில்... கவனி... புறப்படு!
வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்புகிறவர்கள் இன்றைக்கும் நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் என்ன மாதிரியான விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சன்சீ சர்வதேச கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ரவிசாகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

1. நீங்கள் படிக்கப் போகும் கல்வி நிறுவனம் அந்த நாட்டின் அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்கக் கல்வித் துறை அல்லது உயர் கல்வி அங்கீகரிப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். அரசினால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதைப் பார்ப்பதுடன் எந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். பல நாடுகளில் போலி அங்கீகரிப்பு நிறுவனங்கள் வழங்கிய அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.  இதுமாதிரியான நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்க அரசாங்கம் ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறது. மற்ற நாடுகள் என்றால், நீங்கள்தான் விசாரித்தறிய வேண்டும்.

2. இந்திய வங்கிகள் ஏதாவது ஒன்று, நீங்கள் படிக்கப்போகும் வெளிநாட்டில் கிளை வைத்திருக்கிறதா என்று பாருங்கள். அப்படி ஒரு வங்கி இருந்தால், அதன் மூலமாக இந்தியாவிலிருந்து பணம் செலுத்த முடியும். செலுத்தப்படும் பணம் நீங்கள் இருக்கும் நாட்டின் கரன்சியாக வங்கியே மாற்றித்  கொடுக்கும். இப்படி வேறு நாட்டில் உள்ள வங்கிக் கிளைக்குப் பணம் அனுப்ப குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். குறைவான கட்டணத்தில் தரமான சேவை வழங்கும் வங்கி எது என்பதை அறிந்து, அதில் கணக்கைத் தொடங்கலாம்.

3. வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும்போது யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மாணவர் அடையாள அட்டையை வைத்திருப்பது பல நேரங்களில் உதவியாக இருக்கும். இந்த அட்டை 133 நாடுகளில் செல்லுபடியாகும். இந்த அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க
http://www.isic.co.in/identity-cards-request-form.php
என்கிற லிங்கை க்ளிக் செய்யலாம். இந்த அட்டையைப் பயன்படுத்திப் பல பிராண்டட் கடைகளில் செய்யும் பர்சேஸ்களுக்கும், ஹோட்டல் பில் களுக்கும் சலுகை பெறலாம். தவிர, இது ஒரு சர்வதேச போட்டோ ஐடியாகவும் பயன்படும்.

4. சர்வதேச இளைஞர் பயண அட்டையையும் மேற்கூறிய லிங்கிலேயே விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் பயணக் கட்டணங்கள் சலுகைக் கட்டணத்தில்  கிடைக்கும். இந்த அட்டையை 12 -30 வயதுள்ளவர்கள் மட்டுமே வாங்க முடியும். பல நாடுகளில் உள்ள அருங்காட்சியகம், கலாச்சார மையங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பிடங்களைக் குறைந்த கட்டணத்தில்  சுற்றிப் பார்ப்பது, பல நாடுகளின் உள்நாட்டுப் போக்குவரத்துகளில் பயணச் சலுகைகள், ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் கட்டணச் சலுகை இதன் மூலம் கிடைக்கும்.

5. வெளிநாடுகளில் படிப்புக்கு செலவழிக்கும் தொகையில் பாதிக்கு மேல் தங்கும் இடம் மற்றும் உணவுக்கு மட்டுமே செலவாகும். நீங்கள் கல்லூரி விடுதியில் தங்க விரும்பினால், அதற்கான கட்டணம் அதிகமாகவே இருக்கும். ஆனால், கல்லூரிக்கு வெளியே டார்மெட்ரியில் (dormitory)  தங்கினால், கல்லூரி விடுதியை விடக் குறைந்த வாடகையே ஆகும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்குவதற்காக மேன்ஷன் போன்ற அமைப்புகளும் இருக்கும். எடுத்துக்காட்டாக, நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூருக்கு அருகில் பிரின்ஸ் ஜார்ஜ் பார்க் என்கிற இடத்தில் 2000-க்கும் மேற்பட்ட நல்ல டார்மெட்ரிகள், குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது.

6. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரி, தொலை பேசி எண் போன்றவைகளைக் கூகுள் ட்ரைவில் பதிந்து கொள்ளுங்கள். ஒருவேளை தற்செயலாக உங்கள் உடமைகள் தவறினாலும் இன்டர்நெட் மூலம் முகவரியைக் கண்டுபிடிக்க முடியும். இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் போனவுடன் அந்த நாட்டின் சிம் கார்டை பயன்படுத்தத் தொடங்கி விடுவீர்கள். ஆகையால் நிரந்தரமாக உங்களைத் தொடர்புகொள்ள உங்கள் மெயில் ஐடிகளே உதவும்.

7. நீங்கள் படிக்கச் செல்லும் நாட்டின் அடிப்படை சட்ட திட்டங்களைக் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, சிங்கப்பூரில் சூயிங்கம் மென்றுதுப்ப தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதியை மீறினால் 500 டாலர் அபராதம் விதிக்கப்படும்.

8. பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் கல்விக்கு ஸ்காலர்ஷிப்களை வழங்கி வருகின்றன. அதில் நீங்கள் படிக்கப் போகும் கோர்ஸ்களுக்கு  ஸ்காலர்ஷிப் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது நல்லது. சில ஸ்காலர்ஷிப்கள் முதுகலை படிப்புக்கும் கிடைக்கிறது எனவே, இளங்களைப் படிப்பில் சிறப்பாகச் செயல்பட்டாலே முதுகலைப் படிப்பை இலவச மாகப் படிக்கலாம். ஸ்காலர்ஷி பற்றிய விவரங்களை அறிய
http://www.abroadplanet.com/scholarships/
லிங்கை சொடுக்குங்கள்.

9.வெளிநாட்டுப் படிப்புகளுக்குக் கல்விக் கடன் கிடைக்கிறது. இந்த வெளிநாட்டுக் கல்விக் கடனுக்குக் கட்டும் வட்டியை 80 E பிரிவின் கீழ் காட்டி வருமான வரிச் சலுகை பெறலாம். சில வங்கிகள் கல்விக் கட்டணத்தின் முழுத் தொகையையும் கடனாக வழங்குகிறது. சில வங்கிகள்  30 லட்சம் ரூபாய், 50 லட்சம் ரூபாய் என்று ஒரு குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே கடனாக வழங்குகிறது. சில வங்கிகள் விமானப் பயணத்துக்கும் சேர்த்து கடன் வழங்குகிறது. வெளிநாட்டுக் கல்விக் கடனை வாங்கும்போது எத்தனை வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும், படிப்பு முடிந்தபின் எத்தனை வருடம் வரை வட்டி கணக்கிடப்படாது என்பது போன்ற தகவல்களை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.

10. உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விசா காலத்துக்கு ஒரு குறிபிட்ட காலம் ஸ்டே பேக் காலமாக வழங்கப் பட்டிருக்கும். படிப்பு முடிந்த உடன் ஊருக்கு வந்துவிடாமல் அந்த ஸ்டேபேக் காலத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டிலேயே வேலை தேடுங்கள். அதோடு இருக்கும் காலத்தில் நிரந்தர அட்டை வாங்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் ஆலோசியுங்களேன். 

மு.சா.கெளதமன்

நன்றி : நாணயம் விகடன் - 03.05.2015

Friday, June 3, 2016


அமெரிக்கா சென்று படிக்க என்ன செய்ய வேண்டும்?

அமெரிக்காவில் படிக்க செல்லும் மாணவர்கள் எளிதில் விசா பெறுவது குறித்து சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரக தலைமை விசா அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தலைமை விசா அதிகாரி சார்லஸ் லூவோமா ஓவர்ஸ்டீரிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவில் கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மொத்தம் 4 ஆயிரத்து 700 உள்ளன. அவற்றில் இந்திய மாணவ- மாணவிகள் ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 72 ஆயிரம் மாணவ- மாணவிகள் அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ளனர்.

இந்திய மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில்தான் 78 சதவீதம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த அளவு இந்திய மாணவர்கள்தான் அமெரிக்காவில்  படித்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 4 மடங்காக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் அங்குதான் படிக்க வேண்டும் என்பதை உறுதி செய்த பின்னர் 
ustraveldocs.com 
என்ற இணையதளத்திற்கு சென்று அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளை தேர்ந்தெடுங்கள். உங்கள் வசதிக்கு ஏற்ப தகுதியான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள். 

 அமெரிக்காவில் கல்விக்கான வகுப்புகள் தொடங்குவதற்கு முன் 120 நாட்களுக்கு முன்பாக விசாவுக்கு அழைக்க மாட்டோம் . விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விசாவுக்கான நேர்முகத் தேர்வுக்கான நேரம் குறிப்பிட்டு தெரிவிக்கப்படும். விசா நேர்முகத் தேர்வுக்கு உங்களுக்கு ஒதுக்கிய நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக வாருங்கள். உண்மையான சான்றிதழை காண்பியுங்கள். போலி சான்றிதழ்களை காண்பிக்காதீர்கள். பொய் சொல்லாதீர்கள். உங்களால் கல்வி கட்டணம் செலுத்த முடியுமா? சிலர் தொழிலதிபராக இருப்பார்கள். கல்வி கட்டணம் செலுத்துவதற்கு அவர்களுக்கு எளிதாக இருக்கலாம். சிலர் வங்கிகளில் கடன் பெறலாம். சிலர் குடும்ப நண்பர்கள் அல்லது உறவினவர்கள் மூலம் பணம் செலுத்தலாம். எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லுங்கள். இவைகள்தான் முக்கிய அம்சங்கள். இவ்வாறு செய்தால் விசா பெறுவது எளிது" என்று தெரிவித்தார்.
நன்றி :  விகடன் செய்திகள் - 22.04.2016


Thursday, June 2, 2016

வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள்


வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி 
உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?
வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில, மிகவும் முக்கியமானவை. அதைப்பற்றி அறிந்துகொள்வது, வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
பிரிட்டன்
BRITISH CHEVENING SCHOLARSHIPS
இது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு உதவித்தொகையாகும். இந்த உதவித்தொகையைப் பெற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சாராத, இதர 116 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான விபரங்களுக்கு www.chevening.org
COMMONWEALTH SCHOLARSHIPS
இந்த உதவித்தொகை, காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து, பிரிட்டனில், உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
டியூஷன் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள், விமானப் போக்குவரத்து கட்டணம் மற்றும் கல்வி ஆதாரங்களுக்கான கட்டணம் உள்ளிட்ட முக்கிய கட்டணங்கள், இந்த உதவித்தொகைக்குள் அடங்கும்.
இதைப்பற்றிய விபரங்களுக்கு www.cscuk.dfid.gov.uk
அமெரிக்கா
USA FULBRIGHT SCHOLARSHIPS
சர்வதேச மாணவர்களுக்காக, அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை இது. படிப்பு காலத்தில், ஒரு மாணவருக்கு ஆகும் அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த உதவித்தொகை.
இதுபற்றிய முழு விபரங்களுக்கு www.iie.org/en/Fulbright
ROTARY FOUNDATIONS AMBASSADORIAL SCHOLARSHIPS
தனியார் பங்களிப்பின் மூலமாக, இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்வி மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும்.
விரிவான விபரங்களுக்கு www.rotary.org/en/studentsandyouth/educationalprograms/
ambassadorialscholarships/Pages/ridefault.aspx
ஆஸ்திரேலியா
AUSTRALIA AWARDS SCHOLARSHIPS
திறமையும், தகுதியும் வாய்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு AusAID -ஆல் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விரிவான விபரங்களுக்கு www.australiaawards.gov.au
இதர உதவித்தொகை திட்டங்கள்
IELTS SCHOLARSHIPS
ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை ரூ.3 லட்சம் மதிப்பிலானது மற்றும் டியூஷன் கட்டணத்தை ஈடுசெய்வதற்கானது இது.
மேலதிக விபரங்களுக்கு www.britishcouncil.in/exam/ielts/scholarships
TOEFL SCHOLARSHIPS
நல்ல அகடமிக் செயல்பாடும், சிறந்த ஆங்கில புலமையும் உடையவர்களுக்காக, ETS -ஆல் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிற்காக 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 20 உதவித்தொகைகளும், 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
விரிவான விபரங்களை அறிய www.ets.org/toefl/scholarships.

நன்றி : தினமலர் - கல்வி மலர் - 03.06.2016

Monday, March 14, 2016

வெளிநாட்டில் படிக்க


வெளிநாட்டில் படிக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவர்கள் ஐ.ஐ.டி-க்களையும் ஐ.ஐ. எம்-களையும் எல்லை இலக்காக நினைத்துப் படித்த காலம் மாறி, இன்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் படிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்வதேச தரத்திலான கல்வி, புதுப்புது அனுபவங்கள் மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகள் என இதில் அட்வான்டேஜ்கள் நிறைய இருப்பதால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா எனக் கிளம்புகிறார்கள் பலரும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் பெறுவதில் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், கல்வி ஆலோசகர் போர்ஷியா ரிச்சர்ட்.

நாடு, பல்கலைக்கழகம்!
‘‘நண்பர்கள் படிக்கிறார்கள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் தாண்டி, ஒரு நாட்டில் கிடைக்கக் கூடிய அனுபவங்கள் மற்றும் வாழ்க்கைச் சூழலின் அடிப்படையில், எந்த நாட்டில் படிக்கச் செல்லலாம் என்பதை முடிவெடுங்கள். அடுத்ததாக, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ரேங்க் பட்டியலை இணையம் அல்லது ஏதேனும் ஒரு கன்சல்டன்ஸியிடம் பெற்று, நீங்கள் படிக்கவிருக்கும் துறையில் டாப் ரேங்கில் இருக்கும் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்யுங்கள். சில நேரம், ஒட்டுமொத்தமாக ஒரு பல்கலைக்கழகம் தரவரிசையில் முன்னணியில் இருக்கும். ஆனாலும், உங்கள் துறையில் அது பின்தங்கியே இருக்கும். எனவே, துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்வு செய்திருக்கும் பல்கலைக்கழகம் கோரும் மாணவர் தகுதியை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை செக் செய்துகொள்ளுங்கள்.
இதன் பின்னர் பாஸ்போர்ட் வேலைகளை ஆரம்பிக்கலாம். நீங்களாகவே அப்ளை செய்து பாஸ்போர்ட் பெறுவது ஒரு வழி. இதற்கென பிரத்யேகமாக இருக்கும் ஏஜென்சி மூலம் பாஸ்போர்ட் பெறுவது இன்னொரு வழி. தகுந்த சான்றிதழ்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் வாங்கிய உடனே நீங்கள் செல்லவிருக்கும் நாட்டுக்கான விசா வேலைகளையும் முடித்துக்கொள்ளலாம். அமெரிக்கா, கனடா போன்ற சில நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போதே பாஸ்போர்ட் ஹோல்டராக இருக்க வேண்டியது கட்டாயமாதலால் இது மிக முக்கியமான வேலை.
IELTS
TOEFL தேர்வு கடினம் என்று நினைப்பவர்களின் ஆல்டர்நேட்டிவ் ஆப்ஷன், IELTS தேர்வு. இதில் வாங்கும் மதிப்பெண்களையும் பல பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இது சற்றே எளிமையான தேர்வாதலால் ஒரு சில மாதங்கள் தயார் செய்தால் நல்ல ஸ்கோர் பெறலாம். பிரிட்டிஷ் கவுன்சிலால் நடத்தப்படும் இந்தத் தேர்வில் படித்தல், கவனித்தல், பேசுதல், எழுதுதல் என நான்கு வகையான திறன்கள் சோதிக்கப்படும். தேர்வு எழுதி முடித்த 12, 13 நாட்களில் முடிவுகள் தெரிந்துவிடும். உடனடியாக அந்த மதிப்பெண்களை வைத்து விண்ணப்பிக்கலாம்.
படிப்பும், பார்ட் டைம் வேலையும்!
இந்த மொழித்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதி, நல்ல மதிப்பெண்களோடு விண்ணப்பித்தால், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இடம் கிடைப்பதோடு அங்கே சென்ற பிறகு பகுதி நேர வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கும் உதவியாக இருக்கும். சில பல்கலைக்கழகங்கள் விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரிக் காலங்களில் நல்ல மதிப்பெண்களோடு தேர்வாகியிருந்தாலே அட்மிஷன் கொடுத்துவிட்டாலும், அவர் ஏதேனும் ஒரு மொழித்தேர்வை எழுதி கிளியர் ஆகும் வரை ‘கண்டிஷனல் ஆஃபர்’ மட்டுமே கொடுப்பார்கள். எனவே, இந்தத் தேர்வு மிக அவசியம். மொத்தத்தில், முறையான திட்டமிடல், தகுந்த பயிற்சி, தெளிவான வழிகாட்டுதலோடு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தால், ரூட் க்ளியர்!
TOEFL
மாணவர்களின் ஆங்கிலத் திறனை மதிப்பிட்டு சர்வதேச பல்கலைக்கழகங்களில் இடம் பெறுவதற்கு உதவும் தேர்வுகளில் முதன்மையானது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒரு குறிப்பிட்ட TOEFL ஸ்கோரை நிர்ணயித்து இருப்பார்கள். அதற்கு மேல் வாங்கும் மாணவர்களின் விண்ணப்பங்களையே பரிசீலிப்பார்கள். படித்தல், கவனித்தல், பேசுதல், எழுதுதல் - இந்த நான்கு திறன்களையும் சோதிக்கும் இந்தத் தேர்வு வருடத்தில் கிட்டத்தட்ட 50 தடவைக்கு மேல் நடத்தப்படும். மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை நடத்தப்படும் ஆன்லைன் தேர்வு இது. இதில் வாங்கும் மதிப்பெண்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மட்டுமே செல்லும். எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
மொழித் தேர்வுகள்!
பல வெளிநாட்டுப் பல்கலை கழகங்கள், ஆங்கிலம் தாய்மொழி அல்லாத நாடுகளில் இருந்து தங்களிடம் விண்ணப்பிப்பவர்களை TOEFL, IELTS, Pearson போன்ற ஏதாவதொரு ஆங்கில மொழித்திறன் தேர்வை எழுதி, அதன் மதிப்பெண்களோடு விண்ணப்பிக்கச் சொல்வார்கள்.
Pearson Test
பிரபலமாகி வரும் மொழித்தேர்வு இது. TOEFL, IELTS, தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலாதவர்கள், அவற்றைவிட எளிமையான இதை முயற்சிக்கலாம். ஆனால், பலருக்கு இதைப் பற்றிய விழிப்பு உணர்வு இல்லை. பலர் இத்தேர்வெழுதி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோ.இராகவிஜயா
நன்றி : அவள்விகடன் - 09.02.2016