disalbe Right click

Showing posts with label மனது. Show all posts
Showing posts with label மனது. Show all posts

Saturday, September 9, 2017

ஆழ்மனதின் அற்புத சக்தி!

Image may contain: 1 person, text
ஆழ்மனதின் அற்புத சக்தி!
அன்பு தோழமைகளே நலமா? இந்த வாரம் நம் வெற்றிக்கு மிகவும் உறுதுணையான ஆழ்மன சக்தியின் மகத்துவத்தை குறித்து காணப் போகின்றோம்..
அன்பானவர்களே நம்மை கொஞ்சம் உற்று நோக்கினால் நாம் எப்பொழுதும் ஏதாவது ஒரு உணர்வுத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை அறிய முடியும.
மகிழ்ச்சியாக இருப்போம், வருத்தத்தில் இருப்போம், டென்ஷனாக இருப்போம், எனவே உணர்வுகளைக் கையாளும் திறன் நம் நிறைவான வாழ்விற்கு மிக மிக
அவசியமாகின்றது. உணர்வுகளால் தான் மனித வாழ்வே உதயமாகிறது.
உணர்வுகளுக்கு சரியான ஆங்கிலச் சொல் Emotions ஆகும். Emotions என்ற சொல் emouvoir என்ற பிரஞ்சு அடிப்படைச் சொல்லிருந்து உருவானது emouvoir என்ற பிரஞ்சு சொல்லை to stir up என்று ஆங்கிலத்தில் பொருள்படுத்தலாம்.
உணர்வு உள்ள நம் அனைவருக்கும் உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு.
நாம் நடப்பது, பேசுவது, சட்டென சில பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது, உதாரணமாக நாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நம்மை நோக்கி ஓடிவரும் எருமை மாட்டிடமிருந்து சரேலென விலகுவது என இப்படிப் பலவற்றிற்கும் நம் ஆழ் மனது நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.
தினசரி நமக்கு எழும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியன சிறிது சிறிதாக உள்மனதில் பதிவாகிப் பதிவாகி, நம்மைத் தன்னிச்சையாய் வலிமையுடன் இயக்கிக் கொண்டே இருக்கின்றன.
எந்த அளவிற்கு என்றால் நம்முடைய வெற்றி தோல்விகளின் காரணிகளை நிர்ணயிக்கும் அளவிற்கு. ஆழ்மனம் இல்லையென்றால் முழுமையாக செயல்பட முடியாது. எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றது ,வரவேற்பாளர் போல் வீற்றிருக்கும் மேல் மனம் ..செயல்படுத்த ஆழ்மனதிற்கு அழைத்து செல்கின்றது.
மேலாண்மையின் முக்கிய கடமை:
மனித உணர்வுகளையும் உறவுகளையும் முரண்பட்ட எதிரெதிர் உணர்வுகள் ஒரே இடத்தில் வெளிப்படும் வேளையில் அந்த சூழலை நிர்வாகம் செய்வது மேலாண்மையின் முக்கியமான கடமைகளில் ஒன்று தன்னுடைய மற்றும் திறனே உணர்வுகளின் மேலாண்மை ஆகும் .
பிறருடைய உணர்வுகளைப் புரிந்து உணர்ந்து ஏற்றுக் கொண்டு அதனை நெறிப்படுத்தும் நம்முடைய உணர்வு என்ன என்று தெளிவாக அறிவதே உதாரணமாக நமக்கு பிறரின் வளர்ச்சியை கண்டு பொறாமை வருகின்றது என்றால் எனக்கு பொறாமை உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
நம் எண்ணங்கள் நாம் விரும்பும் செயல்களைச் சிறப்பாகச் செய்ய உணர்வுகளை உருவாக்குதல்
நம்முடைய லட்சியத்தை அடைய அதன் மீது விருப்பம் ஆசை என்ற உணர்வுகளை வளர்த்து அதை அடைவதில் எந்தச் சவால்கள் வந்தாலும் திடமான உணர்வுகளுடன் ஏற்றுக்கொள்ளுதல். பிறர் என்ன உணர்வில் உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்தல்.உணர்ந்து கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்வதுடன் அவற்றை நமக்கும் பிறருக்கும் வளர்ச்சி தரும் வகையில் வெளிப்படுத்துவது..
நம் உணர்வுகளின் அடிப்படையில் ஏற்படும் தீய பழக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றை நீக்க வழி தேடுதல் என்ன விளைவு ஏற்பட்டாலும் திறந்த மனதுடன் இருத்தல், எதையும் தாங்கும் மனநிலையை வளர்த்தல். நம்முடைய உணர்வுகளுக்கு நேர்மையாய் நடத்தல் அகத்தில் ஒரு உணர்வும் வெளியில் மற்றோர் உணர்வையும் வெளிப்படுத்தாது இருத்தல்.
புத்தரும் சீடர்களும்:
ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்?
இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்.. மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
It will happen. It is effortless.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!
it is an effortless process!
ஆழ்மனச்சக்தி:
நாம் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், ஆழ்மனதை வரம் கொடுக்கும் தேவதை என்றே கூறலாம்,
அது ஆற்றல் மிக்க தேவதை, நமக்கு விசுவாசமான தேவதை. நாம் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு, ஆக நாம் கேட்பதை பொறுத்து செயல்கள் நடைபெறும் நம் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நாம் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும்.
ஒருவிதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும்.
விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு ஒரே நாளில் தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடிவரவில்லை, என்ன ஆயிற்று?” என்று எதிர்பார்த்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்
ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா?
இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை.
ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.
A,ரோஸ்லின் Cell: 9842073219
aaroseline@gmail.com
நன்றி : தினமலர் - 07.09.2016

Friday, February 3, 2017

உங்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறதா?

Image may contain: one or more people and text

உங்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறதா? 

அறிந்துகொள்ளலாம்..! 

உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்வோம். அவர் நம்மை நன்கு பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ``எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது... கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க போதும்’’ என்பார். சிலருக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். உண்மையில் பலருக்கு உடலில் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால், மனதில்தான் ஏகப்பட்ட கோளாறுகள் இருக்கும். தங்களுக்கு இருப்பது மனஅழுத்தம்தான் என்பதைக்கூட பலர் உணராமல் இருப்பார்கள். கவனிக்காமல் விட்டால், இது பல மோசமான விளைவுகளை வாழ்வில் ஏற்படுத்திவிடும். 

நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கிறீர்களா என்பதை 10 அறிகுறிகள் இங்கே...

எதையும் மூடி மறைப்பவர்!

'எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் மீது எந்தத் தவறும் இல்லை’ என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி கூறிக்கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் இருக்கும்போதும், பொது இடத்திலும் வலுக்கட்டாயமாக சந்தோஷமாக இருப்பதைப்போல் உங்களைக் காட்டிக்கொள்வீர்கள். ஆனால், தனிமையில் எதையோ பறிகொடுத்ததுபோல வெறுமையில் இருப்பீர்கள்.

அன்புக்குரியர்வர்கள் மீதே பாயும் கோபம்!

காரணம் என்று எதுவும் இருக்காது. ஆனால், உங்கள் மனைவியிடமோ, அம்மா-அப்பாவிடமோ அடிக்கடி கோபத்தைக் காட்டுவீர்கள். அப்படியானால், பல நாட்களாக வெளிப்படுத்த முடியாத அளவுக்குக் காயங்களையும் கோபத்தையையும் மனதிலேயே அடக்கி வைத்திருக்கிறீர்கள் என அர்த்தம். அதனால் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட அன்புக்குரியவர்களிடம் கோபத்தைக் காட்டுவீர்கள்.

சந்தேகக் கோடு:

சின்னஞ்சிறு கணக்குகளைப் போடுவதிலும், அலுவலகத்தில் நீங்கள் வழங்கும் பிரசன்டேஷன்களிலும், அடுப்பை அணைத்தோமா, வீட்டைச் சரியாகப் பூட்டினோமா என்பதிலும்கூட சந்தேகம் எழும். இதற்குக் காரணம், செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல், எண்ணங்கள் வேறு எங்கோ திசை திரும்பி இருப்பதுதான்.

முதலில் வேண்டும் இறுதியில் வேண்டாம்!

கல்யாணம், சினிமா, நண்பர்கள் வீடு, பார்ட்டி என்று பல இடங்களுக்குப் போக வேண்டும் என்று அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். `வா... போகலாம்!’ என்று யாராவது அழைத்தால், `வேண்டாம் மூட் சரியில்லை’ என்று தவிர்த்துவிடுவீர்கள்; தனிமையை விரும்புவீர்கள். 

தூக்கமின்மை 

மனஅழுத்தம் அதிகமாக இருப்பதற்கான முக்கிய அறிகுறி தூக்கமின்மை. பகலில் எந்த வேலையையும் செய்யப் பிடிக்காது. இரவில் தூக்கமும் வராது. சிலர் விடிய விடிய டி.வி-யைப் பார்த்தபடி படுத்திருப்பார்கள். ஆனால் அவர்களின் கவனம் டி.வி-யில் இருக்காது. விடிந்ததும் எதைப் பற்றி யோசித்தோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது.

உடல் வலி

அதிக மனஅழுத்தம், பதற்றம் காரணமாக அடிக்கடி உடல் வலி ஏற்படுவதுபோலத் தோன்றும். திடீர் என்று எடை கூடுவதுபோலவும், எலும்புகளில் வலி ஏற்படுவது போலவும் தோன்றும்.

அதிக உணவு வேட்கை 

மனதில் நிம்மதியில்லை என்றாலோ, உணர்வுகளைப் பகிர்வதற்கு யாரும் இல்லை என்று நினைத்தாலோ அதிக அளவில் உணவைச் சாப்பிடத் தோன்றும். இப்படிச் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதுதானா என்றுகூட யோசிக்கத் தோன்றாது.

உணவே வேண்டாம் 

சில நேரங்களில் எதிர்மறையாகவும் நடக்கும். அதிக மனஅழுத்தத்தால் சாப்பிடப் பிடிக்காது. சாப்பிடாமல் இருப்பதால், வேலை செய்வதற்கான ஆற்றல் கிடைக்காது. சோகமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் நிலை காணப்படும்.

காரணமற்ற அழுகை

காரணமின்றி அழத் தோன்றும். ஜன்னல் வழியாக எதையாவது பார்த்துக்கொண்டு இருந்தாலும், கண்களில் இருந்து தன்னையறியாமல் கண்ணீர் வரும். காரணம் கேட்டால் சொல்லத் தெரியாது. எந்தக் காரணமும் இல்லாமலேயே சோகம் ஒட்டிக்கொள்ளூம். மூளையில் ஏற்படும் ரசாயன ஏற்றத்தாழ்வுதான் இதற்கு முக்கியக் காரணம்.

மேலே குறிப்பிட்டுள்ள 9 அறிகுறிகளில் குறைந்தது நான்கு அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் மனநல ஆலோசகரை அணுக வேண்டும். மனஅழுத்தத்தைச் சரிசெய்யாமல் விட்டுவிட்டால் மற்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

நன்றி : விகடன் செய்திகள் – 03.02.2017

Wednesday, August 31, 2016

உள்ளுணர்வு - என்ன செய்ய வேண்டும்?


உள்ளுணர்வு - என்ன செய்ய வேண்டும்?
நம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு உணர்ந்து அறிதலை இ.எஸ்.பி (எக்ஸ்ட்ரா சென்செரி பிரசப்ஷன்) என்று அழைக்கிறோம். இதை 'ஏழாம் அறிவு' என்று கூட சொல்லலாம்.
இ.எஸ்.பியின் மூலம் ஒருவர் கடந்த, நிகழ், எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
இதை 1870ல் பிரிட்டனைச் சேர்ந்த சர்.ரிச்சார்ட் பர்ட்டன், டாக்டர்.ஜே.பி.ரைன் கண்டறிந்தனர். 1892ல் டாக்டர்.பால் ஜாய்ன் இதை தன் ஆராய்ச்சியில் அதிகம் உபயோகித்தார்
ஒவ்வொரு மனிதனும் இந்த இ.எஸ்.பி., யை வளர்த்துக் கொள்ள முடியும். நம் அன்றாட நடவடிக்கையில் இந்த இ.எஸ்.பி., எப்படி வேலை செய்கிறது, அதனால் நமக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்பதை நாம் உணருவதில்லை.
உதாரணமாக நாம் வெகு நாட்களாக, ஆண்டுகளாக சந்திக்காத, தொடர்பு கொள்ளாத ஒருவரைப் பற்றி கனவு கண்டிருப்போம். அடுத்த சில நாட்களில் அவரிடமிருந்து இமெயில், போன், நேரில் தொடர்பு கிடைத்திருக்கும். இது எல்லோருக்கும் இ.எஸ்.பி., சக்தி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
ஆழ்மனது : 
சிலருக்கு பிறவியிலேயே இந்த சக்தி அதிகமாக இருக்கும். தனக்கு இத்தகைய சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தும் இருப்பார்கள். நாமும் உறுதியுடன் முயற்சித்தால் இ.எஸ்.பி., சக்தி பெறலாம். ஏனென்றால் அதற்குத் தேவையான தனித்திறமை நம்முள் இருக்கிறது. இ.எஸ்.பி., விஷயங்கள் நிகழ நம் ஆழ்மனதை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இ.எஸ்.பி., சக்தியால் வாழ்வில் என்னவெல்லாம் சாத்தியமாகிறது என்று பார்ப்போம்:
டெலிபதி : 
ஒரு மனதிலிருந்து, இன்னொரு மனதுடன் தொடர்பு கொள்வது டெலிபதி எனப்படுகிறது. இது ஒருவழி, இருவழித் தொடர்பாக இருக்கலாம். இதற்கு துாரமும், நேரமும் தேவையில்லை. முனிவர்கள், யோகிகள் தங்கள் குருவிடமிருந்து டெலிபதி மூலம் அறிவும், ஞானமும் பெற்றிருக்கிறார்கள். டெலிபதிக்கு ஒளியை விட வேகம் அதிகம்.
மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் டெலிபதியைப் பயன்படுத்துகின்றன. மனிதர்களுக்கும் இந்த சக்தி இருக்கிறது.
உள்ளுணர்வு : 
காரணமில்லாமல் ஒரு விஷயத்தை சரியானது என்று தெரிந்து கொள்வதை உள்ளுணர்வு என்று சொல்லலாம். தினமும் வாழ்க்கையில் இந்த உள்ளுணர்வு நமக்கு கார் ஓட்டும் போது, நடக்கும் போது, குளிக்கும் போது, பிரார்த்தனை, தியானம் செய்யும் போது கூட வரலாம்.
கிரேக்க மேதை ஆர்க்கிமெடிஸ் குளிக்கும் போது தோன்றிய புதிய விஷயத்தை உடனே அரசரிடம் போய் சொல்ல 'யுரேகா' என்று கூவியபடி ஓடியதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நமக்கு சவாலான, கஷ்டமான நேரங்களில் பளிச்சென ஒரு எண்ணம் தோன்றி, நாம் நிலைமையை சமாளித்திருப்போம்.
இவை நம் உள்ளுணர்வின் வழிகாட்டல் தான்.
சூட்சும திருஷ்டி : நம் உடலில் இருக்கும் கண்களினால் பார்க்க முடியாத விஷயங்களைக் கூட பார்க்கக்கூடிய திறமையே சூட்சும திருஷ்டி. கண்ணுக்குத் தெரியாத இடங்கள், சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள், அவர்களுடைய ஒளி உடல், மனநிலை ஆகியவற்றைப் பார்க்க முடியும். பல சூட்சும திருஷ்டியாளர்கள் விண்வெளியில் உள்ள பல கோள்களைப் பற்றி கூறிய விஷயங்கள் ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேஜாவு : 
இந்த பிரென்ஞ் மொழி சொல்லிற்கு தமிழில் பொருள் இல்லை. நீங்கள் புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது, ஏற்கனவே அந்த இடத்தைப் பார்த்திருப்பதாகத் தோன்றினால், ஒருவருடன் பேசும் போது ஏற்கனவே இந்த பேச்சைக் கேட்டிருப்பது போல் தோன்றினாலோ, அது தான் தேஜாவு. நம்முடைய முந்தைய பல பிறவியில், ஏதோ ஒரு பிறவியில் இது போன்ற நிகழ்ச்சி நடந்திருந்தால், நம் ஆழ்மனது அதை ஞாபகப்படுத்தும்.
டெலிகைனசிஸ் : 
மனதின் சக்தியால் துாரத்திலிருக்கும் பொருட்களை அசைக்க, இயக்க முடியும். இது விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள, விளக்கம் தர முடியாத விஷயமாக இருக்கிறது.
1973ல் உரிஜெல்லர் என்பவர் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மனதின் சக்தியால் துாரத்திலிருந்தே ஒரு சாவியை வளைத்துக் காட்டினார்.
ஒரு குறிப்பிட்ட மனநிலையில் எதிர்காலத்தில் வரப்போகும் விஷயங்களை முன்னரே உணர்தல் முன்னுணர்வாகும். சிலர் தங்கள் குடும்பத்தில் வரப்போகும் விபத்து, இறப்பை கனவில் கண்டிருப்பர். சிலருக்கு இந்த முன்னுணர்வு பிரார்த்தனை, தியானத்தின் போது கிடைக்கக் கூடும்.
இ.எஸ்.பி., திறமைகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள்: 
நம் ஆழ்மனதுடன் நாம் தொடர்பு கொள்ள, பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்துதல்;
ஒருவருடைய கற்பனை சக்தியை கொண்டு ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்தும் போது நாம் வெற்றிகளைக் கவர்ந்திழுப்பவர்கள் ஆகிறோம். நம் எண்ணங்களின் சக்தியையும், உணர்வுகளின் சக்தியையும், ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தும் போது, அந்த சக்தி பிரபஞ்சத்தை எட்டி அங்கிருந்து அந்த எண்ணங்களுக்கு ஏற்ப விஷயங்களை நமக்குப் பெற்றுத்தரும்.

புதிய விஷயங்கள்:
நம் அன்றாட வாழக்கையில் பழக்க வழக்கம் காரணமாக தினசரி செய்ததையே ஒவ்வொரு நாளும் அதேபோல் மீண்டும், மீண்டும் செய்கிறோம். இதை தவிர்த்து தினமும் புதுப்புது விஷயங்கள் கற்க, கேட்க, வேண்டும்.
நம் அன்றாட வேலைகளைக் கூட புது மாதிரி செய்ய வேண்டும். இதுவும் நம் ஆழ்மனதை அணுகுவதற்கு துணைபுரியும்.
நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே நினைக்கவோ, பேசவோ செய்வது என்று உறுதியாக இருக்க வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்று செயல்பட வேண்டும்.
உங்கள் நோக்கத்திற்கும், குறிக்கோளை அடைவதற்கும் உதவும் புத்தகங்களைத் தேந்தெடுத்து, அவற்றை இரவு துாங்கும் முன் வாசியுங்கள்.
துாங்கும் முன், நாம் பெறும் தகவல்கள் நம் ஆழ்மனம் செயல்படுவதற்குத் தேவையான செய்திகளை ஆழ்மனதிற்குக் கொடுக்கும்.

மெஸ்மெரிஸம் : 
மெஸ்மெரிஸம் என்பது பிரான்ஸ் அன்டன் மெஸ்மர் என்பவரால் கண்டறியப்பட்டது. அவர் மனிதர்களின் உடலுக்குள் காந்த சக்தி மிகுந்த திரவம் ஓடுவதாக நினைத்தார். அதன் ஓட்டம் தடைபடும் போது நோய்கள் உண்டாவதாகவும், இதனால் காந்த சக்தி கொண்டு சரிப்படுத்தினால், நோய்கள் சரியாகிவிடும் என்றும் நினைத்தார். பின், காந்த சக்தியை பயன்படுத்தாமல் மனதின் சக்தி கொண்டு குணப்படுத்த முடியும் என்று கண்டார்.
ஹிப்னாடிஸத்தை மெஸ்மெரிசத்திலிருந்து வேறுபடுத்தி, பழக்கத்தில் கொண்டு வந்தவர் ஜேம்ஸ் பிரைய்டு.
இதில் சிகிச்சை அளிப்பவர் நோயாளியிடம் பேசி சில கட்டளை, யோசனைகளைக் கூறி நோயாளியின் மனதில் குறிப்பிட்ட எண்ணங்களை துாண்டிவிட்டு, ஆழ்ந்த உறக்க நிலைக்கு கொண்டு செல்கிறார். பின் நோயாளியின் ஆழ்மனதிலிருக்கும் விஷயங்களை பல கேள்விகள் கேட்பதன் மூலம் வெளிக்கொண்டு வருகிறார்.
இது போன்ற சூழ்நிலைகளில் தான் பலர் தனக்கு தெரியாத மொழியிலும், தெரியாத நபர்கள் குறித்தும் பேசுகின்றனர்.

நம் ஆழ்மனம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு அறிவு, மனம் சார்ந்த தகவல்களைப் பெறுவதால், நம்முடைய இ.எஸ்.பி., சக்தி துாண்டி விடப்பட்டு செயல்பட ஆரம்பிக்கும்.
ஆழ்மனதின் உதவியுடன் போட்டி, பொறாமை, வருத்தம், பயம், மன அழுத்தம் போன்ற எதிர்மறை விஷயங்களைக் களைந்து விட்டு, துாய்மையான மனதுடன் முயற்சியும், பயிற்சியும் செய்தால் இ.எஸ்.பி., திறமைகளை பெற்று சமூகத்திற்கு நன்மை செய்ய முடியும்.
- ஜெ. விக்னேஷ் சங்கர்
மனநல ஆலோசகர், மதுரை.
99525 40909
நன்றி : தினமலர் நாளிதழ் - 31.08.2016