disalbe Right click

Showing posts with label உயில். Show all posts
Showing posts with label உயில். Show all posts

Wednesday, March 27, 2019

ப்ரோபேட் என்றால் என்ன?

ப்ரோபேட் (Probate) என்றால் என்ன?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
ப்ரோபேட் என்றால் என்ன?
உயில் எழுதியவர் இறந்துவிட்டார்; அந்த உயில் மூலம் உங்களுக்கும், வேறு சிலருக்கும் சில சொத்துக்கள் சொந்தமாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த குறிப்பிட்ட சொத்தானது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் இருந்தால், அந்த சொத்தை வேறு ஒருவருக்கு நீங்கள் உடனே நேரடியாக விற்க முடியாது. அப்படி வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்த (அசல்) உயிலையும், வாரிசு சான்றிதழையும், உங்கள் அடையாள அட்டையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தங்கள் பெயருக்கு அந்த சொத்துக்களை மாற்ற உத்தரவிட விண்ணப்பிக்க வேண்டும். 
நீதிமன்றம் என்ன செய்யும்?
நீதிமன்றம் அந்த உயிலை ஆராய்ந்து,
➽   உண்மையிலேயே இந்த உயில் இறந்தவரால் எழுதப்பட்டதுதானா?
➽  இறந்தவரால் கடைசியாக இந்த உயில் எழுதப்பட்டதுதானா?
➽  இறந்தவர், யாரும் வற்புறுத்தாமல் தனது சுயநினைவுடன்தான் அந்த உயிலை  
   எழுதினாரா?
➽  இறந்தவருக்கு அந்த சொத்து சொந்தமானதுதானா? எப்படிச் சொந்தமானது?
➽  உயிலை சமர்ப்பித்துள்ளவர்கள், உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்தானா?
என்ற விஷயங்களில் திருப்தியடைந்த பின்னர், அந்த உயிலின்படி யார் யாருக்கு எந்தெந்த சொத்து சொந்தமானது! என்று ஒரு அறிக்கையை வழங்கும். அந்த அறிக்கைக்கு பெயர்தான் ப்ரோபேட் என்பதாகும். அந்த ப்ரோபேட்டை வைத்துக் கொண்டுதான் உயிலில் குறிப்பிட்டுள்ள சொத்துக்களை சம்பந்தப்பட்டவர்கள் தங்களது பெயருக்கு பதிவு அலுவலகத்தில் தனித்தனியாக விண்ணப்பித்து மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்திய வாரிசுச்சட்டம், பிரிவு 57ன்படி உயில் அவசியம் ப்ரோபேட் செய்ய வேண்டும்.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சொத்துக்கள் இல்லையென்றால், உயிலில் குறிப்பிட்டுள்ள சொத்துக்களை சம்பந்தப்பட்டவர்கள்  உயிலின் அசல், வாரிசு சான்றிதழ் நகல் மற்றும் தங்களின் அடையாள (ஆதார்) அட்டை நகல் இணைத்து நேரடியாக பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து தங்களது பெயருக்கு, மாற்றிக் கொள்ளலாம்.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.03.2019 

Monday, February 26, 2018

பதிவு செய்யப்படாத உயிலுக்கான நடைமுறை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத உயிலுக்கான  நடைமுறை :
உயிலை எழுதி வைத்தவர் இறந்து விட்ட பிறகு, அதை செல்லுபடியாக்க உயில் யாருக்கு எழுதப்பட்டதோ அந்த நபர் அந்த உயிலின் நகலை எடுத்துக் கொண்டு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். மேலும் உயில் எழுதியவரின் இறப்புச் சான்றிதழ் அவசியம்.
அத்துடன் உங்களுக்கு தான் உயில் எழுதி வைத்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக அரசு ஆவணமான "ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை" போன்ற முகவரி மற்றும் புகைப்படச் சான்றுகளையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
நீங்கள் தான் இன்னார் என சார்பதிவாளர் விசாரணை நடத்தி உறுதி செய்வார். அதன்பிறகு அந்த பதிவு செய்யப்படாத உயிலை பதிவு செய்வார். பிறகு சார்பதிவாளர் தன்னுடைய கையெழுத்து போட்டு அந்த உயிலின் நகலை தருவார். அந்த உயிலை வாங்கி கொண்டு வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று பட்டா மாறுதல் செய்து கொள்ள வேண்டும்.
உயிலை எழுதி வைத்தவர் பதிவு செய்யும் முன் இறந்து விட்டால், அதனை உயிலின் படி நிறைவேற்றுபவராக அல்லது வேறு வகையாகவோ உரிமை உடையவர் அதனை எந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுக்கு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு பதிவு விதி 69 மற்றும் பதிவுச் சட்டம் பிரிவு 40 கூறுகிறது.
பதிவு செய்யாமல் இறந்து விட்டார் என்ற காரணத்திற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். மனு அளிப்பவரின் வாக்குமூலத்தை சார்பதிவாளர் பெற்று தமிழ்நாடு பதிவு விதி 69-ன் படி விசாரணை நடத்துவார்.
உயிலின் படியும், மனுதாரரின் வாக்குமூலத்தின் படியும் யார் யாருக்கு விசாரணை பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட வேண்டுமோ அவர்கள் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்பப்படும்.
உயில் எழுதி வைத்தவர் குடியிருந்த கிராமம், சொத்து இருக்கும் கிராமம், உயில் சம்பந்தப்பட்டவர்கள் குடியிருக்கும் கிராமம் ஆகிய இடங்களில் விசாரணை பற்றி அறிவிப்பு செய்யப்படும்.
உயில் எழுதி வைத்தவர் இருந்த மாவட்டம், அவரது சொத்து இருக்கும் மாவட்டம் ஆகிய குறித்து அரசிதழில் விசாரணை அறிவிப்பு செய்யப்படும். நிலை ஆணை எண் 603-ல் கண்டபடி கட்டணம் வசூலிக்கப்பட்டு அறிவிப்பு அனுப்பப்படும்.
உண்மையாகவே இறந்தவர் தான் உயில் எழுதி வைத்துள்ளாரா? இன்னாருக்கு தான் எழுதி வைத்துள்ளாரா? என்பதை தீர்மானிக்கவே அறிவிப்புகள் செய்யப்படுகிறது.
உயிலை பதிவு செய்யாமல் இறந்து விட்ட ஒருவரின் உயிலை பதிவு செய்ய அவரது ஏஜென்ட் யாரும் மனுத்தாக்கல் செய்ய முடியாது. பதிவுச் சட்டம் 41(2)ன்படி யாருக்கு உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதோ அவர் தான் சார்பதிவாளர் முன்பு ஆஜராகி மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட அந்த உயிலால் பயன்பெறுவர் மைனராக இருந்தால் அவரது கார்டியன் அவருக்காக உயிலை சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யலாம். (நிலை ஆணை எண் 598)
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயில் எழுதலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால் உயில் எழுதி பதிவு செய்யாமல் இறந்து விட்டவர் மைனராக இருந்தாலும் அந்த உயிலையும் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். (நிலை ஆணை எண் 619).
உயில் எழுதி வைத்தவர் வசித்த இடம், உயிலில் கையொப்பம் செய்த இடம், இதற்கான அதிகார வரம்பு எல்லை ஆகியவை பரிசீலனை செய்யப்படும்.
ஒருவேளை இதெல்லாம் இல்லாத நிலையில் சார்பதிவாளர் அது குறித்து மாவட்ட பதிவாளருக்கு அறிக்கை அனுப்புவார். (நிலை ஆணை எண் 599)
பதிவு செய்யப்படாத உயில் எழுதி வைத்து இறந்த ஒருவருடைய உயிலை ஓராண்டுக்கு பிறகு தாக்கல் செய்தாலும் மாவட்ட பதிவாளருக்கு, சார்பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும். (நிலை ஆணை எண் 599)... 
நன்றி : Thiruvarur raja nandhini
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.02.2018

Friday, January 5, 2018

உயில் சம்பந்தமான தீர்ப்புகள்

1) உயிலை நிரூபிப்பதற்கு, உயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது
(AIR-2001-SC-3522)&(1996-1-MLJ-481)

2) உயிலில் சாட்சியாக கையொப்பம் போடுபவர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் தங்களது கையெழுத்தை, உயிலை எழுதி வைப்பவரின் முன்பாக போடுதல் வேண்டும். இதுவே போதுமானதாகும். இவ்வாறு நிலைகள் சந்தேகத்தை ஏற்படுத்தாது. சாதாரண முரண்பாடுகள் எல்லாம் சந்தேக சூழ்நிலைகளை ஏற்படுத்தாது

(AIR-1997-SC-127)

3) உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை, உயில் எழுதி வைத்தவர் பார்க்கவில்லை. அதேபோன்று உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை உயிலை தயாரித்தவரும் பார்க்கவில்லை. அதனால் உயிலில் சாட்சி கையெழுத்து போட்டது நிரூபிக்கப்படவில்லை
(AIR-1998-M. P - 46)

4) உயிலானது, உயிலை எழுதி வைத்தவரின் சுதந்திரமான போக்கில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் திருப்தியடைந்திருத்தல் வேண்டும்
(1998-2-MLJ-SC-128)

5) ஒரே ஒரு சாட்சியை மட்டும் உயிலை நிரூபிக்க விசாரித்தது போதுமானதாகும். (ஆனால் மனநிறைவு அடையாவிட்டால் வெறும் ஒரு சாட்சியை விசாரித்தது மட்டுமே போதுமானதாகாது
(AIR-2003-SC-761)

6) உயில் பதிவு செய்யப்பட்டது என்ற காரணத்தால் மட்டுமே அந்த உயிலின் மீதான சந்தேக சூழ்நிலைகள் அகன்று விடாது. பதிவு செய்யப்பட்ட உயில் என்றாலும் அதனை சாட்சிகளை கொண்டு நிரூபிக்கவேண்டும்
(1999-2-MLJ-609)

7) Indian Evidence Act - sec 68 - உயிலை எழுதி வைத்தவர் உயிலில் கண்ட சொத்து விவரத்தின் கீழ் கையொப்பமிட்டார். மற்றபடி ஒரு பக்கத்தை தவிர மற்ற பக்கங்களில் கையொப்பம் செய்திருந்தார். எனவே இந்த உயில் செல்லக்கூடியதாகும். 

(AIR-1999-KER-274)

8) உயிலை எழுதி வைத்தவர் உயிலில் பெருவிரல் ரேகையைப் பதித்திருந்தார். உயிலை எழுதி வைத்தவருக்கு கையெழுத்து போட தெரியும். எனினும் கையெழுத்து போடததற்கு என்ன காரணம் என்று உயிலில் குறிப்பிடப்படவில்லை . அதற்கான காரணத்தை அறிய சார்பதிவாளர் விசாரிக்கப்பட்டார். ஆனால் அது போதுமானதாக இல்லை. உயில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
(1999-3-MLJ-608)

9) அசல் உயில் ஒப்படைக்கப்படவில்லை. உயிலின் சான்றிட்ட நகல் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அது இரண்டாம் நிலை சாட்சியமாகும். அது சான்றாவணமாக அனுமதிக்கப்பட்டது. அசல் உயிலை ஒப்படைக்காதது பாதிப்பை ஏற்படுத்தாது
(1999-3-MLJ-651)

10) உயில் எழுதப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் மற்றும் உயிலை தயாரித்தவர் என அனைவரும் இறந்து விட்டார்கள். இந்த உயிலில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்த உயிலை உண்மையானது என்று ஊகிக்கலாம்
(AIR-2002-A. P - 164-NOC)
(1999-3-MLJ-577)... Courtesy... Arivu sundar anbu
நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan அவர்கள்
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.01.2018