disalbe Right click

Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Tuesday, May 30, 2017

புதைக்கவோ, எரிக்கவோ வேண்டாம் : இது பசுமை தகனம்

புதைக்கவோ, எரிக்கவோ வேண்டாம் : இது பசுமை தகனம்

இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று.இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.
பசுமை தகனம்
அறிவியல் ரீதியாக அதற்கு 'அல்கலைன் ஹைட்ரோலிசிஸ்' என்று பெயர். ஆனால் சுலபமாகப் புரிந்துகொள்வது என்றால் பசுமை தகனம்.
தீயிலிட்டு தகனம் செய்வதைவிட, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மென்மையான முறையில் இந்த தகனம் நடைபெறும் என்று அதற்கான விளக்கக் குறிப்பு கூறுகிறது.
பொட்டாசியம் ஹைட்ராக்சைட் கொண்ட காரத்தன்மையுள்ள திரவத்தில் உடல் வைக்கப்படும்போது, எலும்புகளைத் தவிர அனைத்தும் கரைந்து, எலும்புக்கூடு மட்டுமே எஞ்சும்.
சுற்றுச்சூழல் மாசடையும் பிரச்சினை
அமெரிக்கா போன்ற நாடுகளில் உடல் புதைக்கப்படும்போது, அது சவப்பெட்டியில் வைத்தே புதைக்கப்படுகிறது. சில சமயம் சவக்குழிகளின் பகுதிகள் சிமெண்ட் கலவையால் பூசப்படுகின்றன. பல சமயங்களில் சவப்பெட்டிகள் உலோகத்தால் செய்யப்படுகின்றன.
மரணம், அடக்கம்
சவப்பெட்டிக்கான செலவு சில சமயம் மலைக்க வைக்கும்
அப்படி செய்யும்போது அவை மக்கிப்போவதில்லை.
சரி தகனம் செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் ஒரு உடலை தகனம் செய்யத் தேவைப்படும் வெப்பத்தை வைத்து, மிகவும் கடுங்குளிர் நிலவும் அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டை, குளிர்காலத்தில் ஒரு வாரத்துக்கு கதகதப்பாக வைத்திருக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அறிவியல் சிந்தனை கொண்டவர்களுக்கு அப்பாற்பட்டு, உணர்வுபூர்மாக எவ்வளவுபேர் இரசாயன தகனத்தை விரும்புவார்கள் எனும் கேள்வியும் இதில் உள்ளது.
முற்போக்கு சிந்தனையும், சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த எண்ணத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், பொருளாதாரம் இடம் கொடுக்குமா?
ரசாயன தகனத்துக்கான கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்கு 7.5 லட்சம் டாலர்கள்-அதாவது சுமார் ஐந்து கோடி இந்திய ரூபாய்- செலவாகிறது என்று அதை அமைத்துள்ளவர்கள் கூறுகின்றனர்.
கரைத்து கரையேற்றும் முறை
இதற்கு பயன்படுத்தப்படும் உலோகப் பெட்டி எஃகால் செய்யப்பட்டது. 6 அடி உயரம், 4 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் கொண்ட அந்தப் பெட்டி பாதுகாப்பு பெட்டகம் போலவுள்ள அறையில் பொருத்தப்பட வேண்டும்.
மரணம், அடக்கம்
இரசாயனக் கரைப்புக்காக எடுத்த்துச் செல்லப்படும் உடல்
உடல் முழுவதும் கருப்புத் துணியால் மூடப்பட்ட நிலையில் கொண்டுவரப்படும் சடலம், எஃகுத் தகடில் வைத்து மெல்ல அந்த கரைசல் இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிறது.
மரணம், அடக்கம்
முதல் நிலையில் உடல் இயந்திரத்தினுள் செலுத்தப்படும்
பின்னர் கணினி உதவியுடன் உடல் வைக்கப்பட்டுள்ள அந்தத் தகடு நகராதவாறு பூட்டப்படுகிறது.
அடுத்த கட்டமாக அந்த உடல் எடை போடப்படும். பிறகு அந்த உடல் மூழ்கும் அளவும், அதற்கு எவ்வளவு தண்ணீரும் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடும் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது.
மரணம், அடக்கம்
இரண்டாவது நிலையில் நீருடன் இரசாயனம் கலக்கப்படுகிறது
மிகவும் காரத்தன்மை வாய்ந்த அந்தக்கரைசல் 152 செண்டிகிரேட் அளவுக்கு சூடாக்கப்படும். ஆனால் அந்த இரசாயன திரவம் கொதிநிலைக்கு உள்ளாவதில்லை. அழுத்தம் மூலமாகவே உடல் கரைக்கப்படுகிறது.
விரைவாக உருக்குலையும்
புதைக்கப்படும் உடல் என்னவாகுமோ அதேதான் இந்த முறையிலும் நடைபெறுகிறது. ஆனால் ஒரே வித்தியாசம் புதைத்தால் உடல் உருக்குலைந்து போவதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம்.
மரணம், அடக்கம்
மூன்றாவது நிலையில், இரசாயனக் கலவை சூடாக்கப்படுகிறது
ஆனால் இந்த முறையில் 90 நிமிடங்களிலேயே அது நடந்து முடிந்துவிடுகிறது. பின்னர் பல முறை நீரில் அலசப்படும். அதற்கு மீண்டும் அதே அளவு நேரம் பிடிக்கிறது.
மூன்று அல்லது நான்கு மணி நேரங்களுக்கு பிறகு, மூடிய கதவு திறக்கும். உடலுடன் உள்ளே தள்ளப்பட்ட எஃகுத்தகடு வெளியே இழுக்கப்படும்.
சிதறிய ஈர எலும்புகளும், உடலில் ஏதாவது மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தால், அவையும், அந்தத் தகடில் எஞ்சி இருக்கும். ரசாயன திரவத்தில் கரைந்த இதர பகுதிகள் வடித்தெடுக்கப்படும்.
மரணம், அடக்கம்
நான்கவது நிலையில், உடலின் தசைப்பகுதிகள் கரைந்து போயிருக்கும்
வடித்தெடுக்கப்பட்ட திரவம் சோப்பு வாடையுடன் இருக்கும். அதில் உப்பும் சர்க்கரையும் கலந்திருக்கும். கழிவாக வெளியேறும் திரவம் சோதிக்கப்படுகிறது.
வெள்ளை சாம்பல்
மனித மரபணுக்கள் ஏதும் இல்லாத அந்த திரவம் பின்னர், மாசு நீர் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு போன்ற ஒன்றின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, வடிகட்டப்படுகிறது. எஞ்சியுள்ளவை நுண்துகள்களாக மாற்றப்படுகின்றன.
மரணம், அடக்கம்
கடைசியாக பையில் அள்ளப்படும் சாம்பல்
மரபுரீதியான தகனத்தின் பின்னர் கிடைக்கும் சாம்பல் போலன்றி, பளிச்சென்று வெண்மை நிறத்தில் மாவு போல் இந்த நுண்துகள்கள் இருக்கும்.
இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஈர எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு உலர்ந்த பிறகு அலங்காரமான குடுவையில் அடைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இடப்பிரச்சினை
சரி இதனால் என்ன பலன்? முதலாவதாக இறந்தோரை புதைப்பதற்கான இடுகாடுகள் நிலப்பரப்பில் குறைந்து வருகின்றன. அவற்றை பராமரிக்கும் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
ஆகவே இடப்பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது.
மரணம், அடக்கம்
பல இடங்களில் சடலங்களை ஒன்றின் மேல் அல்லது கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது
இதனால் பல நாடுகளில் இடுகாடுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மேலும் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டு, ஒன்றன் கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது.
புதைப்பதில் இப்படியான பிரச்சினைகள் என்றால், எரிப்பதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. எரிபொருள் செலவு, அதனால் சுற்றுச்சூழல் மீதான தாக்கம். ஒவ்வொரு தகனத்தின் போதும் 320 கிலோகிராம் கரியமில வாயு வெளியேறுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி கரியமில வாயுவைவிட நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் தகனம் செய்யப்படும்போது வெளியேறுகின்றன. இப்படியான காற்றை கோடிக்கணக்கான மக்கள் தினமும் சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், பொருளாதாரம் போன்ற 18 அளவுகோல்களின்படி, மற்ற எவ்வகையான இறுதிக்கிரியைவிட இராசயன தகனமே சிறந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செலவு?
இரசாயன தகனத்துக்கான செலவு மற்ற இருவகைகளுக்கு ஆகும் செலவில் ஒரு சிறுதுளி மட்டுமே எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
சடலம் ஒன்றை புதைப்பதற்கு நிகர செலவு -இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படும்போது 4500ம், அதை எரிப்பதற்கு 3500ம் ஆகின்றன அதை இரசாயன முறையில் கரைப்பதற்கு 300 ரூபாய் மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், மரபுகளை அறிவியல் எண்ணங்கள் மாற்றுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
Thanks to : BBC News - 28.05.2017


Friday, April 21, 2017

விஞ்ஞானிகள் வியக்கும் ஹோமம் தெரபி

Image may contain: one or more people, text and food
விஞ்ஞானிகள் வியக்கும் ஹோமம் தெரபி
'சூர்யாய ஸ்வாஹா
சூர்யாய இதம் நமஹ
பிரஜாபதேய ஸ்வாஹா
பிரஜாபதேய இதம் நமஹ'
- இவை அக்னிஹோத்ர மந்திரத்தின் எளிய சொற்களாக விளங்குபவை. வேதங்களில் கூறப்பட்டுள்ள யக்ஞங்களில் மிகவும் எளியது இதுதான். அக்னி ஹோத்ரம் வானிலையை மாற்றுகிறது. அதில் ஈடுபடுபவர்களின் மனத்தையும், பக்குவப்படுத்துகிறது.
அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் இந்தப் பயன்களை அடைய முடியுமா என்பதை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிவபுரி என்ற ஊரில் இதற்காக ஓர் ஆராய்ச்சி நிலையமே நிறுவப்பட்டிருக்கிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சக்தி, வம்ச அடிப்படை, மருத்துவம், விவசாயம் போன்றவை வளம் பெறுவதற்குக் கூறப்பட்டிருக்கும் குறிப்புக்களை இங்கே விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்கிறார்கள்.
ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் பிரெடரிக் மாக்ஸ்முல்லர், இப்படி குறிப்பிட்டார்:
'அக்னிம் இதே புரோசிதம் -
யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம்
ஹோதாரம்
ரத்னதாதமம்
உலகத்தின் பழம்பெரும் நூலான ரிக்வேதத்தில் வரும் முதல் வாசகம் இது.
'அக்னியை நான் வணங்குகிறேன். யாகத்தின் முதல் தலைவனும், தெய்வீகம் நிறைந்த முதல்வனும், சக்தியைத் தூண்டுபவனும், எல்லாச் செல்வங்களையும் அருளுபவனும் ஆகிற அக்னியை நான் வணங்குகிறேன்.''
ஹோமம் என்பது சாதாரண நெருப்பல்ல. விதிப்படி அதை தயார் செய்ய, குறிப்பிட்ட பொருட்களை உபயோகிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சக்தியைப் பெற, குறிப்பிட்ட மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
சிவபுரியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 2,500 ஆண்டுகளுக்குப்பிறகு, முதன்முறையாக அகல்கோட் மடத்தைச் சேர்ந்த கஜானன் மகராஜ் என்ற பெரியவரால் சோமயக்ஞம் முறைப்படி செய்யப்பட்டது. அந்த யாகத்தில், கூடவே ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. விஞ்ஞான ரீதியாகப் பல முடிவுகள் அதிலிருந்து வகைப்படுத்தப்பட்டன.
ஹோமங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறியதும் எளியதுமான ஒன்று அக்னிஹோத்ரம். இது இயற்கையின் விஞ்ஞான வழியில் மனிதனின் மனத்தைப் பண்படுத்துகிறது. இதனால் உடலுக்கும், சில அடிப்படையான பக்குவங்கள் கிடைக்கின்றன. இவை ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
அக்னிஹோத்ரம் ஒருநாளைக்கு இரண்டு முறைகள் செய்யப்படவேண்டும். சரியாக சூரியன் உதிக்கும்போதும் சூரியன் மறையும்போதும் செய்யவேண்டும். இயற்கையின் சுழற்சியை ஒட்டி இது செய்யப்படுவதால் சூரியனின் தோற்றமும் மறைவும் இதற்கு உரிய கால அளவுகளாக இருக்கின்றன.
இதைப் பற்றி வாஷிங்டனில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது 'சூரியோதயத்தின்போது சக்தி மிகுந்த மின்னணுக்கள், நெருப்பு மின்னல்கள் பூமியை நோக்கி வருகின்றன. இந்த ஒளிவெள்ளத்தின் ஆற்றல் அபாரமானது. தீய பொருட்கள் அந்த உதயத்தில் கருகி அழிந்துவிடுகின்றன. உயிர் கொடுக்கும் சக்தி ஓங்குகிறது. அந்த வேளையில் அக்னிஹோத்ர மந்திரங்களை இசையுடன் கூறுவது அந்தச் சக்தியை தூண்டுகிறது. மாலையில் சூரியன் மறையும் வேளையில் இந்தச் சக்தி மெள்ள மெள்ள சுருங்கி அடங்குகிறது. அப்போதும் இந்த மந்திரம் அதன் இயக்கத்துக்கு ஏற்றபடி அமைகிறது' என்று கண்டறியப்பட்டது.
சூரியனின் சக்தியைப் பொறுத்தே வானிலை அமைந்திருக்கிறது. வானத்தில் பரவி இருக்கும் பல்வேறு மண்டலங்களிலும் அந்தச் சக்தி இயங்குகிறது. வெள்ளம்போல் எலெக்ட்ரான் அணுக்கள் பூமியின் காந்த மண்டலத்தை நோக்கி வந்து சேருகின்றன.
பூமியைச் சுற்றி உள்ள மின்காந்த மண்டலமும் நம் எண்ணங்களையும் உணர்ச்சி அலைகளையும் ஏந்தி நிற்கிறது. மிதமான நிலையில் இதன் வேகம் ஏழு சுழற்சிகள் ஆகும். நாம் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியான நிலையில் தியானத்தில் அமரும்போது, நம் மூளையில் எழும் அலைகளும் அப்போது ஒரு வினாடிக்கு ஏழு சுழற்சிகள் வீதமே இயங்குகிறது. ஆகவே, தியான நிலையில் நாம் இயற்கையான சூழ்நிலைக்குப் பொருந்தி விடுவோம்.
அக்னிஹோத்ரம் செய்ய கூர் உருளை வடிவம் கொண்ட செப்புப் பாத்திரம், காய்ந்த பசுஞ்சாண வறட்டிகள், சுத்தமான நெய், நவதானியங்கள் ஆகும். ரசாயன முறைப்படி புரதச் சத்து மிகுந்த அரிசி, முட்கள் நிறைந்திருக்கும் மரங்களின் சுள்ளிகள் ஆகியவையே ஹோமத்துக்கு உரியவை. காலையும் மாலையும் அக்னி மூட்டப்பட்டு ஹோமம் நிகழ்த்தப்படுகிறது.
வறட்டித் துண்டுகளும், அரிசியும், நெய்யும் அக்னியில் சேர்க்கப்படுகின்றன. விரல் நுனியில் மட்டுமே எடுக்கக் கூடிய அளவு அரிசியை எடுத்து, 'சூர்யாய ஸ்வாஹா, சூர்யாய இதம் நமஹ' என்று முதல் மந்திரம் உச்சரிக்கப்படுகிறது. தொடர்ந்து, 'பிரஜாபதயே ஸ்வாஹா, பிரஜாபதயே இதம் நமஹ' என்று இரண்டாவது மந்திரம் கூறப்படுகிறது. இது உதய காலத்தில் செய்யப்படும் தொடக்கம்.
இதேபோல்
'அக்னயே ஸ்வாஹா,
அக்னயே இதம் நமஹ'
'
பிரஜாபதயே ஸ்வாஹா
பிரஜாபதயே இதம் நமஹ'
என்று சந்தியா காலத்தில் உச்சரிக்கப்படுகிறது. அப்போது அக்னிஹோத்திர பாத்திரத்தைச் சுற்றி அபரிமிதமான சக்தி அலைகள் உருவாகின்றன. காந்த சக்தி மிகுந்த மண்டலம் உருவாகி, அழிவுச் சக்திகளைத் தடுத்து வளர்ச்சி சக்திகளை அமைக்க உதவி செய்கின்றன. இவ்வாறு அக்னி ஹோத்திரம் வளர்ச்சியையும், செழுமையையும் தூண்டுகிறது. இவை அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் விஞ்ஞான அடிப்படையில் எடுக்கப்பட்ட அளவுகளாகும்.
பூனாவில் உள்ள ஆராய்ச்சிக் கழகத்தில் பாரி ராத்னர், அர்விந்த் மாண்ட்தர் ஆகிய விஞ்ஞானிகள், அக்னிஹோத்ரம் செய்யப்படும் இடத்தில், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்திருப்பதையும், ஹோமப் புகையில் பார்மல்-டி, ஹைட் என்ற உயிரணுக்களுக்கு செழுமையை ஊட்டும் பொருள் நிறைந்திருப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க விஞ்ஞானி ஆன்மெக்ளிப்ஸ், ''இன்றைய தொழில் வளர்ச்சியினால் காற்று, மண், நீர் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவை மூன்றையும் தூய்மைப் படுத்தவேண்டியது மனித குலம் உயிர் பிழைக்க மிகவும் அவசியம். இதற்கு அக்னிஹோத்திரம் உதவுகின்றது" என்று சொல்லி இருக்கிறார்.
அக்னிஹோத்ரம் செய்யப்படுவதற்கு முன்பும் செய்த பின்பும் வானிலையில் உள்ள பண்புகளை 'எலோப்டிக்' சக்தி அளவுமானியின் மூலம் பகுத்து அறிந்திருக்கிறார்கள். அக்னிஹோத்திரம் செய்த பிறகு இந்த சக்தி கணிசமான அளவு உயர்ந்திருப்பதை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
சரும நோய்கள், மூச்சு வியாதிகள், இருதய பாதிப்புகள், தொண்டை வியாதிகள் ஆகிய நோய்களில் இருந்து நிவாரணம் தரக்கூடிய மருந்துகள் அக்னிஹோத்திரம் நிகழ்த்தி அந்தச் சூழலிலேயே தயாரிக்கப்படுவதாகவும், இந்த மருந்துகளைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக விளங்குவது அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் இருந்து திரட்டப்படும் சாம்பலே ஆகும் என்றும் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர், மோனிகா ஜெஹ்லே கூறி இருக்கிறார்.
அக்னிஹோத்திரம் ஹோமாதெரபியைப் போல் செயல்பட்டு, உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்திருக்கிறது. மனம் அமைதிப்படுவதால் ரத்தத்தின் பண்பும் துடிப்பும் மேம்படுகின்றன. வியாதிகளால் வரும் பாதிப்புகள் குறைகிறது. மனதைத் தூய்மைப்படுத்தி.. தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் வளப்படுத்த உதவுகிறது. அக்னியின் மூலம் வானமண்டலமும் தூய்மை அடைகிறது. அதனால் இயற்கையின் இயக்கத்துக்கு ஏற்ற அளவில் மனமும் இயங்கி அமைதி அடைகிறது.
அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் ஒரு சக்திமண்டலம் உருவாகிறது. இந்த நிலையில் அங்கே வளரும் தாவரங்கள் செழுமையுடன் சத்துக்களையும் பெறுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பே மஹாராஷ்டிராவில் உள்ள, திராட்சைப் பயிர் பெருக்கத் துறையின் விஞ்ஞானிகள் இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். நாசிக் மாவட்டத்தில் பஸ்வந்த் என்ற கிராமத்தில், திராட்சைப் பயிர்கள் ஆறுமாதத்தில் பெறக்கூடிய வளர்ச்சியையும் செழுமையையும் மூன்று வாரங்களிலேயே அடைந்திருக்கின்றன.
உலகமெங்கும் வானிலை, நீர், மண் ஆகியவற்றை வளப்படுத்தி, மனிதனின் மனதையும் பண்படுத்தி உயிர்கள் வளர உதவி, தாவரங்களையும் செழுமைப்படுத்தும் அக்னிஹோத்திரத்தை வாழ்வளிக்கும் மகாசக்தியாகப் போற்றுவது முற்றிலும் சரிதான்.
- எஸ்.கண்ணன்கோபாலன்
விகடன் செய்திகள் - 20.04.2016

Friday, July 15, 2016

பாசிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி பெற


பாசிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி பெற என்ன செய்ய வேண்டும்?

ஒரு அறிவியல் பூர்வமான அலசல்

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம்.

இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.