disalbe Right click

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Monday, October 7, 2019

அறிவோம் ஐ.என்.எஸ்.டி.

அறிவோம் .என்.எஸ்.டி.
இந்தியாவில் நானோ டெக்னாலஜி மற்றும் நானோ சயின்ஸ் துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் செயல்படும் தன்னாட்சி நிறுவனம், இன்ஸ்டிடியூட் ஆப் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி - .என்.எஸ்.டி.,!
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புகழ்பெற்ற ..எஸ்..ஆர்., நிறுவனத்திற்கு அருகே இடம் பெற்றுள்ள இந்நிறுவனம் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்படத் துவங்கியது.
முக்கியத்துவம்
அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய நானோ டெக்னாலஜி, அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் மற்றும் ஆராயும் ஒரு பிரத்யேக துறை என்று சுருக்கமாக சொன்னாலும், இதன் முக்கியத்துவம் அவ்வளவு சிறியதல்ல. கடுமையான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி அங்கம் வகிக்கும் என்று விஞ்ஞானிகளாலும், நிபுணர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு பிரம்மாண்டம் என்றே சொல்ல வேண்டும்.
இது குறித்த ஆராய்ச்சிகளுக்கு உலக நாடுகளால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழலில், இந்தியாவில் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அவசியம் உணரப்பட்டே .என்.எஸ்.டி., நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை. இது குறித்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.
.என்.எஸ்.டி., யின் அம்சங்கள்
உயிரியலாளர்கள், வேதியலாளர்கள், இயற்பியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் மெட்டீரியல் சயின்ட்டிஸ்ட்ஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து நானோ தொழில்நுட்பத்தில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முன்னெடுக்கும் பணியை மேற்கொள்கிறது. விவசாயம், நாட்டின் பாதுகாப்பு, சுகாதாரம், ஆற்றல், சுற்றுச்சூழல், நீர் ஆகியவற்றின் மேம்பாட்டிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது
மேலும், சுவச் பார்த் அபியான், சுவஸ்த் பாரத், ஸ்மார்ட் சிட்டீஸ், ஸ்மார்ட் வில்லேஜ்ஸ், மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்களிலும், தொழில்நுட்ப உதவி புரிகிறது.
வழங்கப்படும் படிப்புகள்
பெரும்பாலும், ஆராய்ச்சி சார்ந்த பணிகளையே .என்.எஸ்.டி., மேற்கொள்வதால் 
நானோ டெக்னாலஜி   
 நானோ சயின்ஸ் சார்ந்த மெட்டீரியல்ஸ் பார் எனர்ஜி அப்ளிகேஷன்ஸ் 
       (போடோகேட்டலிஸ்ட்ஸ்
 எலக்ட்ரோ கேட்டலிஸ்ட்ஸ்
 சூப்பர் கெப்பாசிட்டர்ஸ்
 ஹைட்ரஜன் ஜெனரேஷன் அண்ட் ஸ்டோரேஜ்), 
 ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ் (ஆர்கானிக் / இன் ஆர்கானிக்), சென்சார்ஸ், தெரப்யூட்டிக்ஸ் ஆகிய பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி., படிப்பை வழங்குகிறது.
தகுதிகள்
உரிய பிரிவுகளில், எம்.எஸ்சி., எம்.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.பார்ம்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கேட் / சி.எஸ்..ஆர்., / நெட் / ஜெஸ்ட் / .சி.எம்.ஆர்.,-ஜே.ஆர்.எப்., / டி.பி.எட்., -ஜே.ஆர்.எப்., போன்ற தகுதித்தேர்வில் போதிய மதிப்பெண் பெறுவதும் அவசியம்.
விபரங்களுக்கு: www.inst.ac.in
நன்றி : தினமலர் (கல்வி மலர்) நாளிதழ் - 04.10.2019

Saturday, July 20, 2019

குறைந்த கட்டணத்தில் மருத்துவக்கல்வி

குறைந்த கட்டணத்தில் மருத்துவக்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு 
வங்கதேச மருத்துவ கல்லூரிகளில் சிறந்த வாய்ப்பு
வெளிநாட்டில் மருத்துவ பட்டப்படிப்பை பயில விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பான சந்தர்ப்பத்தை வங்கதேசம் தருகிறது. இந்தியாவுக்கு அருகில் அமைந்துள்ள வங்கதேசத்தில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரிகளில் படித்து, பட்டம் பெறுவதன் மூலம் இந்திய மாணவர்கள் தங்களது டாக்டர் கனவை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள இயலும்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவர்களாக பணிபுரிய இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் FMGE ( Foreign Medical Graduates Examination) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வங்கதேசத்தில் மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் இந்திய தேர்வு வாரியத்தின் தகுதி தேர்வில் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அரபு நாடுகள், நேபாளம், கஜகிஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் பயின்ற மாணவர்கள் போல, FMGE தேர்வில் கடந்த 2012-13 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளில் வங்கதேசத்தில் MBBS பட்டம் பெற்ற மாணவர்கள் அதிக சதவிகிதத்தில் தேர்வு பெற்றுள்ளனர்.
குறைந்த கட்டணத்தில் மருத்துவக்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வங்கதேச மருத்துவ கல்லூரிகளில் சிறந்த வாய்ப்பு
அதற்கான காரணம், வங்கதேச மருத்துவ கல்லூரிகளில் உள்ள சிறப்பான பாடத்திட்டம், மருத்துவம் சார்ந்த பயிற்சிகள், ஆசிரியர் அணுகுமுறைகள் மற்றும் தொடர்பு மொழியான ஆங்கிலம் ஆகிய பல விஷயங்கள் இந்தியாவைப்போலவே இருப்பதால் மாணவர்கள், அரசின் சோதனை தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுகிறார்கள். ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் படித்த மாணவர்கள் போலவே வங்கதேசத்தில் படித்தவர்களும் இந்திய அரசின் தகுதி தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்று Smile Education Consultancy-ன் தலைமை செயல் அதிகாரி ரீபா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் அமைந்துள்ள Smile கல்வி ஆலோசனை மையம் மாணவர்களிடையே நம்பிக்கை பெற்ற அமைப்பாக செயல்பட்டு, இந்திய மாணவர்கள் வங்கதேசத்தில் மருத்துவ பட்டப்படிப்பில் சேருவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை சிறந்த முறையில் அளித்து வருகிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவப்படிப்பை மேற்கொள்வதில் ஆர்வமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது போன்ற பாடத்திட்டங்கள், சுற்றுச்சூழல், இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலம் மற்றும் பண்பாடு ஆகிய நிலைகளில் இந்தியாவைப் போன்று ஒற்றுமைகளை கொண்ட வங்கதேசம் தரமான கல்விக்கான சிறந்த வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. மேலும், மருத்துவக் கல்விக்கான கட்டணங்கள் அதிகப்படியான சுமையாக மாணவர்களுக்கு இருக்காது என்றும் Smile Education Consultancy தலைமை செயல் அதிகாரி ரீபா பிஸ்வாஸ் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் MBBS படிக்க விரும்பும் மாணவர்கள் 17 வயது பூர்த்தி ஆனவர்களாக இருப்பதுடன், 12-ம் வகுப்பு இறுதி தேர்வுகளில் Physics, Chemistry, Biology ஆகிய பாடங்களில் 60 சதவிகிதத்துக்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தகுதி உள்ள மாணவர்கள் 5 ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் ஒரு ஆண்டு உள்ளிருப்பு பயிற்சி ஆகிய பாடத்திட்டத்தில் பயின்று பட்டம் பெறலாம். விருப்பம் உள்ள மாணவர்கள் இணையம் மூலமாக தங்களது GPA (Grade Point Average) பற்றிய விவரங்களை கண்டறிந்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள,
Smile Education,
4 Santoshpur Lake West Road (3rd Floor),
Arambagh Food Mart Building,
(Near Santoshpur Lake Shiv Mandir)
Kolkata - 700075,
West Bengal, India

Helpline : 9903-033-033
Skype: mbbsinbd
Phone: (+91)-91633-22022
Whatsapp/Call: (+91)-988312-3838
Dial: (+91)-903864-3838, 0983126-3838
Landline: 033-40628147
Fax: 2416 6974
Read in English : https://www.mbbsbangladesh.com/mbbs-from-bangladesh

நன்றி : தினத்தந்தி நாளிதழ் - 20.07.2019