disalbe Right click

Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

Saturday, December 7, 2019

வெளிநாட்டில் வேலை பார்க்க ஆசையா?


வெளிநாட்டில் வேலை பார்க்க ஆசையா? என்ன செய்ய வேண்டும்?
நமது நாட்டில் நல்ல வேலையில் இருந்தாலும், வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும்! என்ற ஆகையில் இன்றைய இளைய தலை முறையினர் ஆசைப்படுகின்றனர். அதில் தவறு ஒன்றும் இல்லை. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! என்று நமது முன்னோர்கள் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆனால், தவறான நபர்களையும், மோசடி செய்கின்ற ஏஜன்சிகளையும் நம்பி கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கொடுத்துவிட்டு ஏமாந்து தவிப்பவர்கள் அதிகம் நமது நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.
எனக்குத் தெரிஞ்ச ஏஜன்சி ஒன்று இருக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்களை வெளிநாட்டுக்கு அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வாருங்கள் நானே அங்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று சிலை உங்களை அணுகலாம். உங்களது சிறிய ஆசைக்கு தூபம் போட்டு அதனை பெரிதாக வளர்த்து உங்களை ஏமாற்றலாம். அளவுக்கு அதிகமான ஆசை மற்றவர்களின் எச்சரிக்கையை உதாசினம் செய்யும்.  
ஏஜன்சி உண்மையானதுதானா?
வேலை வாங்கித்தருகின்ற ஏஜன்சி உண்மையானதுதானா? நமது நட்டில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொண்டால் உங்களை ஏமாற்ர அவர்களால் முடியாது. எந்த ஏஜன்சி உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம் என்று உங்களை அணுகுகிறதோ, அதனை சேர்ந்தவர்களிடம் உங்களது ஆர்.ஏ. நம்பர் என்ன? என்று கேளுங்கள். மோசடி செய்ய நினைப்பவர்கள் என்றால், உங்களை மறுபடி அணுகவே மாட்டார்கள். 
ஆர். ஏ. நம்பர் என்றால் என்ன?
நமது இந்திய அரசு இது போன்று வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகின்ற முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகளுக்கு என்று நம்பர் வழங்கியுள்ளது. இதற்கு Recruiting Agency number என்று பெயர். இதனையே சுருக்கி ஆர்.ஏ. நம்பர் என்று சொல்கிறோம். டுபாக்கூர் ஏஜன்சி என்றால் இந்த எண் இருக்காது. நாம் எச்சரிக்கையாக தப்பித்துவிடலாம்.
இந்திய அரசின் இணையதளம்
இதற்கென்றே நமது இந்திய அரசு ஓர் இணையதளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.  அந்த இணையதளத்தினைப் பார்வையிட கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
மேற்கண்ட இணையதளத்தில் உங்களுக்கு வேலை வேண்டும் என்ற விபரத்தை பதிவு செய்யலாம். அந்தப் பதிவு மூலம் உங்களது விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உங்களது பணிகளை நீங்கள் செய்து கொள்ளலாம். 
பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகள் பட்டியல்
இந்திய அரசிடம் முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகளைப் பற்றி தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற நேரடி நிறுவனங்களிடம் மட்டுமே அணுகுங்கள்.  மேற்கண்ட பி.டி.எஃப் பைலை ஓப்பன் செய்து, உங்களுக்கு அருகாமையில் உள்ள பதிவு செய்யப்பட்ட ஏஜன்சியை நீங்கள் அணுகினால், நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள். உங்கள் தகுதிக்கு தகுந்த சிறந்த வேலையையும் நீங்கள் தேர்வு செய்யலாம். பதட்டப்பட வேண்டியதில்லை. நெருக்கடியும் தர மாட்டார்கள். 
நல்ல வேலை தங்களுக்கு கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்!
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 07.12.2019 

Wednesday, August 22, 2018

மதம் மாறினாலும் ஜாதி மாறாது - தீர்ப்பு

ஹிந்துவாக மாறிய பெண்ணின் பணியை உறுதி செய்தது ஐகோர்ட்
சென்னை, 'கிறிஸ்தவ மதத்தில் இருந்து, ஹிந்து மதத்துக்கு மாறிய, ஆதிதிராவிட பெண்ணின், பணி நியமனம் சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்துவ மதத்திலிருந்து.......
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, சிக்கத்தம்பூப்பாளையத்தைச் சேர்ந்தவர், டெய்சி ப்ளோரா; கிறிஸ்தவ ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். பின், ஹிந்து மதத்துக்கு மாறி, மேகலை என, பெயர் சூட்டிக் கொண்டார்
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவரை, 1999-ல், திருமணம் செய்து கொண்டார்இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து, 2004-ல், தேர்வு எழுதினார். அதிக மதிப்பெண் எடுத்தும், தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, அவரது ஜாதி சான்றிதழ் ஏற்கப்படவில்லை என்பது தெரிய வந்தது
உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், மேகலா வழக்கு தொடுத்தார்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து2005-ல், பணியில் சேர்க்கப்பட்டார். பின், கல்வி தகுதியின் அடிப்படையில்2007-ல், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்
பிரதான இந்த வழக்கு, நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மேகலா சார்பில், வழக்கறிஞர், ஆர்.முத்துகண்ணு ஆஜரானார்.
மனுவை  விசாரித்த,  நீதிபதி  பிறப்பித்த  உத்தரவு:
  • ஹிந்து மதத்துக்கு மாறி, ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவரை, மேகலா திருமணம் செய்து கொண்டுள்ளார்
  • கிறிஸ்தவ மதத்தில் இருக்கும்போதும், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் தான். இதில், எந்த சர்ச்சையும் இல்லை.
  • ஹிந்து மதத்துக்கு மாறியதை, அந்த சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதா; அதை நிரூபிக்க ஆதாரம் உள்ளதா; மதம் மாறிய பின், ஹிந்து மத சடங்குகளை பின்பற்றுகிறாரா என்கிற, சர்ச்சைக்கு தான் தீர்வு காணப்பட வேண்டும்.
  • ஹிந்து மதத்துக்கு மாறிய நிகழ்ச்சி, அதை ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அளித்த சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது
  • மேலும், கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார், வருவாய் ஆய்வாளரின் பரிந்துரைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது
  • மதம் மாறிய பின், அரசு இதழிலும் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில், புகழ் பெற்ற அமைப்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளது. ஹிந்து மதத்தின் மகத்துவம், அதன் சடங்குகள், நடைமுறைகளை, நாடெங்கும் பரப்பி வருகிறது
  • மதம் மாற்றத்துக்கான பூஜை, 'சுத்தி சடங்கு' நடத்தப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
  • இந்த சடங்குகளை, 'பண்டிட்' ஒருவர் நடத்தி உள்ளார்.எனவே, நாடு முழுவதும் கிளைகள் கொண்ட, புகழ் பெற்ற ஹிந்து அமைப்பு, மத மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, சான்றிதழ் வழங்கி உள்ளது.
  • ஹிந்து மத சடங்குகளை மனுதாரர் பின்பற்றுவதாக, அந்தப் பகுதியில் வசிப்பவர்களும், வருவாய் அதிகாரிகளிடம், வாக்குமூலம் அளித்துள்ளனர்
  • அதனால், ஹிந்து ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என, மனுதாரர் கோருவதில், எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
  • மனுதாரரின் ஜாதி பற்றி, இன்னும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவரது ஜாதிஅந்தஸ்தின் அடிப்படையில், பணியில் தேர்வு செய்து நியமிக்கப்பட்டதை, உறுதி செய்ய வேண்டும்
  • அதன்படி தற்போது, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவது,உறுதி செய்யப்படுகிறது
  • ஜாதியை காரணம் காட்டி, இவரது நியமனத்தில் தொந்தரவு கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
********************************நன்றி : தினமலர் நாளிதழ் -22.08.2018 செய்தி 

Thursday, April 20, 2017

மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புப் பதிவு


மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புப் பதிவு
10, 12ம் வகுப்பு மாணவர்கள்... பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுசெய்ய ஏற்பாடு!
சென்னை : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளிகளிலேயே மாணவ மாணவியர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

15 நாட்கள் பதிவு
அது போலவே இந்த ஆண்டும் (2017) அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாட்களுக்கு அந்தப் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 12ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்படும் நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு பதிவு
2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மாணவ, மாணவியர் அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் வேலை வாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் பதிவு
மாணவ மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு ஏதுவாக சென்ற ஆண்டு (2016) வழங்கிய அதே படிவங்களில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்க தலைமையாசிர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Posted by: Sivasankari

நன்றி : கேரியர் இந்தியா  »தமிழ் – 20.04.2017

Tuesday, April 11, 2017

வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பமா?

வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பமா?

இன்று தமிழ்நாட்டில் இருந்து உலகம் முழுவதும் வேலைவாய்ப்புக்காகச் சென்று குடியேறி வாழ்ந்து கொண்டிருப்போர் 2.5 கோடி தமிழர்கள். ஆண்டுதோறும் பல லட்சம் டாக்டர்கள், என்ஜினீயர்கள், நர்ஸ்கள், ஆசிரியர்கள், வெல்டர், டர்னர், கொத்தனார், கம்பி கட்டுவோர் என பல தொழில்நுட்பப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.

பலர் சட்டப்படி தேவையான வேலைவாய்ப்பு விசாவில் செல்லாமல் சுற்றுலா விசாவில் சென்று அவதிப்படுகின்றனர். பலர் திரும்பி வருகின்றனர். பலர் தருவதாகச் சொன்ன சம்பளம் கிடைக்காமல், அதிக நேரம் பணியாற்றி, குறைந்த சம்பளம் பெற்று கஷ்டப்பட்டு திரும்புகின்றனர். 

இந்நிலை மாற தமிழ்நாடு அரசு 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர். இன்று பல லட்சம் பேரை சட்டப்பூர்வ விஸாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ள மிகச்சிறந்த நிறுவனமாக இது விளங்குகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு தமிழக இளைஞர்களை (ஆண் / பெண்) வெளிநாடுகளுக்கு அனுப்பும் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகச் செயல்படுகிறது.

பயண ஏற்பாடு, டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் பணிகளைச் செய்கிறது.

இன்சூரன்ஸ் செய்து தரும். தேவையான அன்னிய செலாவணிக்கு ஏற்பாடு செய்து உதவுகிறது. பாஸ்போர்ட் எடுப்பது, வேலைக்குச் செல்ல உதவுவது என எல்லா பணிகளையும் செய்து தருகிறது.

கம்ப்யூட்டர் உதவியோடு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு தகவல் வங்கி(Data Bank)யினை உருவாக்கியுள்ளது. விளம்பரம் செய்து, நேரில் பதிவு செய்தும், மாவட்டத் தலைநகர்களில் முகாம்கள் நடத்தியும் சிறந்த, நல்ல மதிப்பெண் பெற்ற, அனுபவம் மிக்கவர்களைப் பதிவு செய்கிறது.

சென்னையில் நேர்முகப் பேட்டி நடத்த ஏற்பாடு செய்கிறது. அரசுப் பணியில் இருந்தால் 5 ஆண்டு விடுமுறை பெற்றுத் தருகிறது. மருத்துவ மற்றும் உடல் பிட்னஸ் சான்றிதழ் பெற உதவுகிறது.

சௌதி அரேபியா, குவைத், U.A.E., மாலத்தீவுகள், வங்காளதேசம், சூடான், பிரான்சு, பஹ்ரைன், கனடா, மலேசியா, ஜோர்டான், ஏமன், சிங்கப்பூர், அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏராளமான பணியாளர்களை அனுப்பி வருகிறது.

டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள், டிரைவர்கள், எலக்ட்ரீஷியன், பெட்ரோலியப் பணியாளர்கள், பிளாஸ்டிக் / அச்சக வல்லுநர்கள், கோவில் பணியாளர்கள், கணக்காளர்கள், ஐடிஐ படித்தோர், ஆயில் கம்பெனி பணியாளர்கள், ஆசிரியர்கள், கட்டடப் பணியாளர்கள், ஜேசிபி, கிரேன் ஆபரேட்டர், வீட்டு பணியாளர், என்ஜினீயரிங் பணியாளர்கள், விவசாய / மீன் பிடிப்பு பணியாளர்கள், குடிநீர் திட்ட ஊழியர்கள் என பல்வேறு பணிகளுக்கு வெளிநாடுகளில் ஆட்கள் தேவை. உடனே நேரில் அணுகி, பதிவு பெற்று, சட்டப்பூர்வமாக வெளிநாட்டு வேலைக்குச் சென்று பயன் பெறுங்கள்.

நிர்வாக இயக்குநர், 
தமிழ்நாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 
42, ஆலந்தூர் ரோடு, மகளிர் ஐடிஐ காம்ப்ளக்ஸ், 
திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, 
சென்னை - 600 032.
தொலைபேசி : 044-2250 5886


www.omcmanpower.comhttp://www.mea.gov.in/
**********************************************************************
By - எம்.ஞானசேகர்

தினமணி நாளிதழ் - 22.03.2016

Sunday, March 19, 2017

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி. பேராசிரியர் வேலை கிடைக்காது!

No automatic alt text available.

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி. பேராசிரியர் வேலை கிடைக்காது!

’தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது’ என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு, முதுநிலை கல்வியுடன், பிஎச்.டி., என்ற, ஆராய்ச்சி படிப்பு பட்டம் அல்லது, ’நெட், செட்’ என்ற இரண்டு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், நெட், செட் முடிக்காதோர் மற்றும் பிஎச்.டி., பட்டம் பெறாதோர், ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்யும்படி, யு.ஜி.சி., ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், சில கல்லுாரிகள், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோரை, குறைந்த சம்பளத்தில் பேராசிரியர் பணிக்கு அமர்த்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து, யு.ஜி.சி., புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ’கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ, பிஎச்.டி., படித்து பட்டம் பெற்றவர்கள், ’ரெகுலர்’ என்ற வகையில் சேர்க்கப்படுவர். 

’ஆனால், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோருக்கு, ரெகுலர் சான்றிதழ் கிடைக்காது. எனவே, அவர்களை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர்களாக நியமிப்பதை ஏற்க முடியாது’ என, தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 20.03.2017

Monday, February 13, 2017

எச்-1பி விசா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

Image may contain: 1 person, text

எச்-1பி விசா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்க வருபவர்களைக் குறைக்கப் புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்க வருபவர்களைக் குறைக்கப் புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளார். இந்தப் புதிய விதிகளினால் இந்திய தொழில் நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்றவை கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகின்றது. 

எச்-1பி விசா என்றால் அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் மூன்று வருடத்திற்குப் பணிபுரிய வழங்கப்படும் விசா ஆகும். எச்-1பி விசா முதன் முதலாக 1990-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 

எச்-1பி விசா பிறப்பு 

எச்-1பி விசாவிற்கான சட்டம் 1990-ம் ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 1991 முதல் எச்-1பி விசா அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஹ் எச் புஷ் அவர்களால் அதிகாரப் பூர்வமான குடியேற்றத்தை 40 சதவீதம் வரை அதிகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இருந்த விதிகளின் படி 365 ரூபாய்ச் செலுத்தினால் ஆறு வருடத்திற்கு மூன்று வருட நீட்டிப்புடன் எச்-1பி விசா வழங்கப்படும். அது மட்டும் இல்லாமல் 65,000 டாலர் சம்பள இருக்க வேண்டும். இப்போது வரை இது தான் குறைந்தபட்ச சம்பளமாக உள்ளது.   

அமெரிக்காவின் போட்டித்தன்மை மற்றும் பணியாளர் மேம்பாடு சட்டம் 

1998-ம் ஆண்டு அமெரிக்காவின் போட்டித்தன்மை மற்றும் பணியாளர் மேம்பாடு சட்டம் பில் கிலிண்டன் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டது. அப்போது புதிய எச்-1பி விசா பெற 65,000 டாலரில் இருந்து 115,000 டாலராகச் சம்பளம் இருக்க வேண்டும் என்ற விதி 1999 மற்றும் 2000 நிதி ஆண்டிற்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் 365 டாலராக இருந்த அடிப்படை கட்டணம் 500 டாலராக உயர்த்தப்பட்டது. 

 சட்டம் 21 

அமெரிக்காவின் போட்டுத்தன்மை மற்றும் பணியாளர் மேம்பாடு சட்டம் 21 எச்-1பி விசா குறித்த விதிகளில் 2000 ஆண்டு மேலும் விதிகளைத் திருத்தி அமைத்தது. 

சட்டம் 21-ன் படி எச்-1பி விசா மூலம் வேலை பார்க்கும் ஊழியர்கள் எளிதாக நிறுவனங்களில் இருந்து மாற உதவியது. அதுமட்டும் இல்லாமல் 2001, 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் 195,000 டாலர்கள் வரை சம்பளம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.   

ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டுக் சட்டம் 

2005-ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் ஆட்சிக்கு வந்த போது மீண்டும் 65,000 டாலர்களாகச் சம்பளம் குறைக்கப்பட்டது. மேலும் முதுகலைப் பட்டம் உள்ளவர்களுக்கு 20,000 எச்-1பி விசாக்கள் வரை 500 பெறலாம் என்றும், 500 டாலர்கள் வரை மோசடி எதிர்ப்பு கட்டணமாகவும் விதிக்கப்பட்டது. 

எச்-1பி விசா சீர்திருத்த சட்டம் 

2013-ம் ஆண்டுப் பராக் ஒபாமா எச்-1பி விசாவை முறைகேடாகப் பயன்படுத்துவதைக் குறைக்கச் சீர்திருத்த சட்டம் ஒன்றை அமல்படுத்தியது. 

ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டுச் சட்டம் 2016-ம் ஆண்டு அமெரிக்கா எச்-1பி விசா கட்டணத்தை 50 பேருக்கும் அதிகமாக வெளிநாட்டு ஊழியர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் போது 4,000 டாலர்களாக உயர்த்தி அறிவித்தது.

 2017-ம் ஆண்டு 

அதிபர் டொனால்டு டிரம் பெரிய குடியேற்றச் சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, எச்-1பி விசா நிர்வாக உத்தரவுகளைத் தயார் செய்து வருகின்றார். இது விரைவில் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Written by: Tamilarasu

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 13.02.2017