disalbe Right click

Showing posts with label உரிமைகள். Show all posts
Showing posts with label உரிமைகள். Show all posts

Friday, May 26, 2017

வேலைக்குச் செல்லும் பெண்களின் உரிமைகள் என்ன?

வேலைக்குச் செல்லும் பெண்களின் உரிமைகள் என்ன?

பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! 

பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards

பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards 
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
நன்றி : விகடன் செய்திகள் - 27.05.2017


Tuesday, April 11, 2017

கடன் வாங்கியவரின் உரிமைகள்

Image may contain: 1 person, text

கடன் வாங்கியவரின் உரிமைகள் 

கவலைப்படாதீர்கள் கடனாளிகளே! உங்களுக்கான 10 உரிமைகள்!

கடன் வாங்கியவர்கள் அதை சரியாகக் கட்டமுடியாத நிலை ஏற்படும் பட்சத்தில், அவர்களைக் கேவலமாகப் பேசும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

அதிலும் விஜய் மல்லையா வாங்கிய ரூ.9,000 கோடி கடனை திரும்பத் தராமலே வெளிநாடு ஓடியபின்பு, கடன்காரர்கள் நிலைமை படுமோசமாக மாறியிருக்கிறது. ஆனால், எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு அசம்பாவிதத்தில் சிக்கி, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் கடனாளிகளுக்கு சில உரிமைகளை வழங்கி இருக்கிறது நம் அரசாங்கம். அந்த உரிமைகள் என்ன என்று விளக்குகிறார் கடனாளிகள் நலச் சங்கத்தின் தலைவர் எம்.எம்.கினி.

‘‘ஒரு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வருபவரைவிட, கடன் வாங்க வருபவரைத்தான் கூடுதலாக மதிக்க வேண்டும். அவர் தரும் வட்டியும் கட்டணமும்தான் வங்கிக்குக் கிடைக்கும் முக்கிய வருமானம் ஆகும். ஆகவே, கடனாளிதான் வங்கியின் ஒரு முக்கியமான கூட்டாளி என்பதை நாம் உணர வேண்டும்’’ என்றபடி கடன் வாங்கியவருக்கு உள்ள உரிமைகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

1. வங்கித் திட்டங்கள்!
வங்கியில் கடன் வாங்க வருகிறவருக்கு வங்கி தரும் கடன் திட்டங்களைப் பற்றி முழுமை யாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. கடன் தொகையை எப்படிக் கட்டினால் எளிதில் கடனைக் கட்டி முடிக்கலாம், எந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்கி னால் வட்டி குறையும் என்று முழு விவரத்தையும் கடன் வாங்கு பவருக்கு வங்கியாளர்கள் கட்டாயம் விளக்க வேண்டும்.

2. தகுதி!
ஒருவருக்கு கடன் கிடைக்குமா என்பதை வங்கியாளர் உடனடியாக அல்லது எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்ல வேண்டும். தேவை இல்லாமல் கடன் வாங்க வருபவரை இழுத்தடிக்கக் கூடாது.

3. திட்டத்தைப் பின்பற்றச் சொல்வது!
உதாரணமாக முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை எந்தப் பிணையமும் இன்றி முழுமையாக வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும். அந்தக் கடனை 7 வருடம் வரை கட்டலாம். இது போன்ற உரிமைகளை கடன் வாங்குபவர் வங்கியாளர்களிடம் இருந்து கட்டாயம் கேட்டு தெரிந்து கொண்டு கடன் வாங்கலாம். இதற்கு பிணையம் தரச் சொல்லி, கடனாளியை வங்கிகள் நிர்பந்திக்கக் கூடாது.

4. கூடுதல் கடன்! 
ஒரு நிறுவனம் அல்லது தனிநபர், கடன் வாங்கி தன் நிறுவனத்தை நிறுவி சரியாக நடத்திக் கொண்டிருக்கும்போது, குறிப்பாக வங்கியில் வாங்கியக் கடனை சரியாக காலம் தவறாமல் செலுத்தி, நல்ல லாபம் ஈட்டி தொழில் முன்னேறும் சமயத்தில் கூடுதல் கடன் கேட்டால் வங்கி கள் தேவையான மதிப்பீடுகளை செய்து கடனை வழங்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் நன்றாக செயல்பட்டு வரும் நிறுவனத்துக்கு கூடுதல் கடன் வழங்க முடியாது என்று சொல்லக்கூடாது.

5. அவமானப்படுத்தினால் இழப்பீடு!
ஒருவர் தன் சொந்தத் தேவைக்காகவோ அல்லது தன் நிறுவனத்தின் சார்பாகவோ மற்றொருவருக்கு காசோலையை கொடுக்கிறார். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகை, காசோலை வழங்கிய வங்கிக் கணக்கில் இருந்து, ஏதோ ஒரு காரணத்துக்காக காசோலையில் பணம் இல்லை என வங்கியானது அதை திருப்பி அனுப்பிவிட்டால், அதனால் ஏற்பட்ட அவமானத் துக்கு வங்கியிடம் நஷ்டஈடு கேட்கலாம்.

6. நோட்டீஸுக்கு 60-வது நாள்!
ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை 90 நாட்களுக்கு மேல் தன் தவணைகளை செலுத்த வில்லை என்றாலோ அல்லது வாராக் கடனாக வங்கியில் தீர்மானிக்கப்பட்டாலோ, கடன் வாங்கியவரின் சொத்தை விற்றுக் கடனை மீட்க வங்கிக்கு உரிமை இருக்கிறது. ஆனால், சொத்தை கையகப்படுத்தி விற்பதற்குமுன், கடனாளிக்கு தன் கடனை திருப்பிச் செலுத்த ஒரு நோட்டீஸ் அனுப்பி 60 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அப்படி 60 நாட்களில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால்தான் சொத்தை கையகப்படுத்தி விற்று கடனை மீட்டுக் கொள்ளலாம்.

7. மதிப்பீடு எவ்வளவு
கடன் வாங்கியவரால் 60 நாட்களுக்குள் பணத்தைக் கட்ட முடியவில்லை எனில், கடனாளியின் சொத்து எவ்வளவு தொகைக்கு வங்கி மதிப்பீட்டாள ரால் மதிப்பிடப்பட்டிருக்கிறது, எங்கு, எப்போது ஏலம் விடப் போகிறார்கள் என்கிற தகவல் களை கடன் வாங்கியவருக்கு தகவல் சொல்ல வேண்டும்.

8. கடன் வாங்கியவரே தன் சொத்தை விற்கலாம்!
ஒருவேளை வங்கி மதிப்பீட் டாளர் மதிப்பிட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகைக்கு கடனாளியின் சொத்து இருக்கும் என்றால் தாராளமாக வங்கியிடம் புகார் தெரிவித்து, மறு மதிப்பீடு செய்யச் சொல்லலாம். கடன் வாங்கியவரே கூட வங்கி மதிப்பீட்டைவிட கூடுதல் விலைக்கு சொத்தை வாங்கும் ஆட்களை வங்கிக்கு அறிமுகப்படுத்தலாம்.

9. கடன் போக உள்ள தொகை!
சொத்தை விற்றுவரும் பணம், வங்கியில் வாங்கிய கடன் மற்றும் ஏலம் நடத்தியதற்கான செலவுகள் போக மீதம் இருந்தால், அந்தப் பணத்தை வங்கியிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். வங்கியாளர் வழங்கும் எந்த நோட்டீஸாக இருந்தாலும், அதற்கு கடனாளி ஏதாவது மறுப்பு தெரிவித்தால், அடுத்த 7 நாட்களுக்குள் வங்கியாளர் கடனாளிக்கு பதில் சொல்ல வேண்டும்.

10. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை!
ஒரு கடனாளியை, வங்கி அதிகாரிகள் அல்லது ஏஜென்ட்டுகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே சந்தித்து கடனைப் பற்றி விசாரிக்கலாம். வங்கி அதிகாரிகளோ அல்லது ஏஜென்ட்டோ சந்திக்க வேண்டிய இடத்தை தீர்மானிக்க வில்லை என்றால் கடனாளியின் வீட்டுக்கோ அல்லது வேலை பார்க்கும் இடத்துக்கோ சென்று சந்திக்கலாம். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடனாளியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பங்கம் வரும் வகையில் வங்கியாளர்கள் நடந்து கொள்ளக்கூடாது. கடனாளியின் குடும்ப உறுப்பினர்களை கிண்டலாகவோ, அவமரியாதை யாகவோ நடத்தக் கூடாது.

இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் முதலில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் புகார் கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் அடுத்து பிராந்திய மேலாளரிடம் புகார் தரவேண்டும். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் மத்திய ரிசர்வ் வங்கியிட மும், பேங்கிங் ஆம்்புட்ஸ் மேனிடமும் புகார் தெரிவிக்க லாம். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றங்களை படிப்படியாக அணுகலாம்’’ என கடன் வாங்கியவர்களுக்கு உள்ள உரிமைகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஆனால், இத்தனை உரிமைகள் இருக்கிறதே என்று வாங்கியக் கடனை மட்டும் திரும்பக் கட்டாமல் கம்பி நீட்டிவிடா தீர்கள். நாம் கட்டத் தவறும் ஒவ்வொரு ரூபாயும், வங்கி களுக்கும், அதில் டெபாசிட் செய்தவர்களுக்கும் மட்டுமல்ல, நம் நாட்டுக்கும் நாம் செய்யும் துரோகம் ஆகும்.

நன்றி : நாணயம் விகடன் - 01.05.2016

Monday, April 3, 2017

நோயாளிகளின் உரிமைகள் என்ன?


நோயாளிகளின் உரிமைகள் என்ன?
சாதாரணக் காய்ச்சல் என்றால்கூட சிறப்பு மருத்துவர்களைத் தேடிப் போகிற காலம் இது. பல மருத்துவமனைகள், நோயாளிகளைப் பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கின்றன.
என்ன சிகிச்சை, எவ்வளவு செலவாகும், சிகிச்சை முறையின் சாதக,பாதகம் என்னென்ன என்பவற்றைப் பற்றி எல்லாம் விளக்குவது இல்லை.
ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து, கையெழுத்துப் போட்டுக்கொடுக்கச் சொல்கின்றனர். கையெழுத்துப் போட்டால்தான் சிகிச்சை என்ற நிலையில், அதில் என்ன எழுதி இருக்கிறது என்றுகூடப் படித்துப்பார்க்காமல் கையெழுத்துப் போடும் நிலைதான், பெரும்பான்மையான மருத்துவமனைகளில் உள்ளது.
ஒரு மருத்துவமனைக்கு நோயாளியாகச் செல்லும்போது, நம் உரிமைகள் என்னென்ன எனத் தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால், இல்லை.
`மனித உரிமைகளுக்கான பொதுப்பிரகடனம் – 1948’தான் நோயாளிகளின் உரிமைகளுக்கு அடிப்படை. அதற்குப் பிறகு உலக அளவில் பல நாடுகளில், நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் கொண்டுவந்தன.
இந்தியாவில், 1995-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், மருத்துவ சேவையை, நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்கொண்டுவந்து, ஆணையிட்டதுதான் இந்தியாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. `பாதிக்கப்பட்ட நோயாளிகள், இந்தச் சட்டத்தின் கீழ், சேவைக்குறைபாடு தொடர்பான வழக்குகளை, மருத்துவர் மீதும், மருத்துவமனைகள் மீதும் தொடுக்கலாம்’ என்கிறது உச்ச நீதிமன்றம்.
நோயாளியின் உரிமைகள்நோயாளிகள், தங்கள் நோய் பற்றியும், மருத்துவச் சோதனை முடிவுகள், மருந்து, மாத்திரைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையானது கண்ணியமாகவும் கனிவாகவும் இருக்க வேண்டும்.
எந்த வகையான துஷ்பிரயோகம், துன்புறுத்தல், புறக்கணிப்பு, சுரண்டல் போன்றவை இருக்கக் கூடாது.
அவரைப் பற்றிய ரகசியம், தனித்தன்மை, அவரது நம்பிக்கைகள், சமூக, கலாசார, மதரீதியான நம்பிக்கைகள் காக்கப்பட வேண்டும்.
நோயாளிக்கு இன்னென்ன உரிமைகள் உள்ளன என்பது பற்றி அவருக்கு வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் சொல்ல வேண்டும்.
சிகிச்சை பற்றியும், அதில் உள்ள அபாயங்கள், பாதிப்புகள் பற்றியும் தெரிவிக்க வேண்டும்.
மருத்துவரை, மருத்துவமனையைக் கேள்விகேட்கவும், தகுந்த விளக்கங்கள் பெறவும் உரிமை உள்ளது.
சிகிச்சை தொடர்பாக இன்னொரு மருத்துவரிடம் இரண்டாவது கருத்துரை (ஒப்பீனியன்) பெறலாம்.
அறுவைசிகிச்சையின் பலன், பாதிப்புகள், செலவு உட்பட எல்லாவற்றையும் நோயாளியும், அவரது நெருங்கிய உறவினரும் முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.
அலட்சிய சிகிச்சையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், சேவைக்குறைபாட்டுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு.
தரமற்ற மருந்து, தவறான மருத்துவ சிகிச்சை, போலி மருத்துவர்களிடம் இருந்து பாதுகாப்பு, இழப்பீடு ஆகியவற்றுக்கான உரிமை.
உடல்நிலையைப் பொறுத்து உள் நோயாளியாகவே, வெளி நோயாளியாகவோ சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும் உரிமை.
ஒரு மருத்துவரின் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் நோயாளிக்கு உரிமை உண்டு.
முறைகேடுகள் ஏதும் நடந்தால், நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் உரிமை.
தன்னுடைய பிரச்னைக்கு வேறு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்பினால், தற்போது பெறும் சிகிச்சையை நிறுத்திக்கொள்ள முழு உரிமையும் உள்ளது.
யாரிடம் புகார் செய்வது?கிரிமினல் குற்றமாக இருந்தால், காவல் துறையை அணுகலாம்.
கவனக் குறைவு, சேவைக் குறைபாடு போன்ற குற்றங்களாக இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.
சட்டத்துக்குப் புறம்பாக, ஒழுங்குநெறி தவறிய குற்றமாக இருந்தால், காவல்துறை மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை (Medical Council of India) அணுகலாம்.
கொடுக்கும் புகாரின் தன்மையைப் பொறுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நோயாளியின் கடமைகள்நோயாளிகளுக்கு எப்படி உரிமைகள் உள்ளதோ, அதேபோல சில கடமைகளும் உள்ளன. அதாவது, தன்னுடைய சிகிச்சை பற்றி தனக்குச் சொல்வார்கள் என்று காத்திருக்காமல், கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது அவரது கடமை.
டாக்டர் கேட்கும் கேள்விகளுக்கு முழுமையான, தனக்குத் தெரிந்த பதிலைச் சொல்ல வேண்டும்.
டாக்டர் பரிந்துரைத்தபடி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 10 நாள் மாத்திரை எடுக்கச் சொன்னால், ஐந்தாவது நாளிலேயே நிறுத்திவிடுவது தவறு.
தன்னைப் பற்றியும், தன்னுடைய பழக்கவழக்கம் பற்றியும், மருந்து ஒவ்வாமை ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
டாக்டர் பரிந்துரைத்த மருந்துச் சீட்டு, பரிசோதனை முடிவுகள், பணம் கட்டிய ரசீது போன்றவற்றைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டால், அவை உதவியாக இருக்கும்.
சிகிச்சை அளிக்கும் மருத்துவர், மருத்துவப் பணியாளரை மரியாதையுடன் நடத்துவதும் நோயாளியின் கடமை.
பொதுவாக, நோயாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் குறித்து மருத்துவமனைகளே போதிய விழிப்புஉணர்வு இல்லாமல்தான் இருக்கின்றன,
இந்த நிலை மாற வேண்டும் என்பது அவசியம் மட்டும் அல்ல அவசரமும்கூட.
நன்றி :டாக்டர் விகடன் - 13.03.2016

Wednesday, January 11, 2017

நோயாளிகளின் உரிமைகள்


நோயாளிகளின் உரிமைகள்

நன்றி குங்குமம் டாக்டர் (சிறப்பு கட்டுரை)
‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி... அசராம அடிக்கறது பாபா பாலிசி’ என்ற ரஜினி டயலாக் மாதிரி ‘நோயாளிகள் கொஞ்சம் அசந்தால்.. அசராமல் அடிப்பதுதான் பல மருத்துவமனைகளின் பாலிசி’யாக இருக்கிறது. நாம் ஏமாளியாக இருந்துகொண்டு  மற்றவர்களைக் குறை சொல்லிப் பயன் இல்லைதான்.

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு விழிப்புணர்வோடு இருந்தால் மருத்துவமனைகளின் மோசடிகளிலிருந்து தப்பிக்க முடியும்’ என்பதற்கான வழிமுறைகளை  விளக்குகிறார் நுகர்வோர் அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன்.

* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன்படி நோயாளிகளுக்குப் பல உரிமைகள் உள்ளன. இதன்படி மருத்துவ அஜாக்கிரதை, அலட்சியம் என்பதின் கீழ் மருத்துவ சேவை குறைபாடுகள்  குறித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் அல்லது மாநில மற்றும் தேசிய அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில்  புகார் மற்றும் மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் பெறலாம். இந்தச் சட்டத்தின்படி உள்ள உரிமைகளைப் பற்றி பார்ப்போம்.

* ஒரு மருத்துவரிடம் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு, உடல் மற்றும் மனதளவில் எந்த பாதிப்பும்  ஏற்படாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும்  நோயாளிகளைத் தாக்கவோ, காயப்படுத்தவோ, இழிவான சொற்களால் புண்படுத்திப் பேசவோ கூடாது. அவர்களது உடலை மிகுந்த  கவனத்துடன் மருத்துவ சேவையாளர்கள் கையாள வேண்டும்.

* தீ, வெள்ளம், அசுத்தமான தண்ணீர், மின்சாரக் கசிவு, தாவரக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளால் நோயாளிகளுக்கு ஆபத்து  ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும்.

மருத்துவ சாதனங்கள், மருத்துவமனை படுக்கைகள் முதல் எந்திரங்கள், மின்சார சாதனங்கள் மற்றும் ரசாயனங்களால் பாதிப்புகள்  ஏற்படாதவாறு அவற்றை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும்போது தப்பிக்க தகுந்த வழிகள் இருக்க வேண்டும்.

* மருத்துவமனையில் நோயாளியின் தேவைகளுக்கான தண்ணீ–்ர், படுக்கை போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  மருத்துவமனையில் தொற்றுநோய் கிருமிகளால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகம். அதனால்  கழிவுகளை சரியான முறையில், முழுமையாக நீக்கி மருத்துவமனை சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

*தகுதியில்லாத, போதுமான பயிற்சியில்லாத மருத்துவர்களால் நோயாளிகள் ஆபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே, மருத்துவ  சாதனங்களை இயக்குபவர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போன்றவர்களை வேலையில் திறமை  உள்ளவர்களாகவும், சேவை மனப்பான்மை உள்ளவர்களாகவும் நியமிக்க வேண்டும்.

*அவசர சிகிச்சைக்குத் தேவையான உயிரூட்டும் மாத்திரைகள், ஆக்ஸிஜன் மற்றும் உயிர் காப்பு சாதனங்கள் போன்ற எல்லா  வசதிகளும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

*நோயாளிக்கு தனது நோய் குறித்த ரகசியங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு. அவர்களுடைய உடல்நிலை, நோய்  மற்றும் தனிப்பட்ட விவரங்களை மருத்துவமனை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.  அவர்களுடைய அனுமதி பெற்ற  நபர்களிடமே எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை முடிவுகள், நோய் சம்பந்தமான பிற ஆவணங்கள் மற்றும் முடிவுகளைத் தெரிவிக்க  வேண்டும். 

*மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் அதன் பணியாளர்களுக்கும்கூட அவரது அனுமதி பெற்றே அவரது மருத்துவ சிகிச்சை  ஆவணங்களை கொடுக்க வேண்டும். உடல், மன பரிசோதனையின் போது நோயாளிகளை சங்கடப்படுத்தாமல் பரிசோதனை செய்ய  வேண்டும். பெண் நோயாளிகளின் பரிசோதனையின்போது அவரது உறவினர் அல்லது பெண் பணியாளரை அமர்த்திக் கொள்வது  அவருக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும்.

*நோயாளிகளை மரியாதையுடன் அழைக்க வேண்டும். நடத்த வேண்டும்.மருத்துவ சிகிச்சை சாதி, மத, இன, கலாச்சார மற்றும் நிற  வேறுபாடின்றி கொடுக்க வேண்டும். அவர்கள் மருத்துவமனையில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், தங்கள் நண்பர்கள்,  உறவினர்களைப் பார்க்கும் உரிமை உண்டு.

*நோயாளிக்கு தங்கள் நோய், அதற்கான சிகிச்சை, சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை மருத்துவர்கள்  மற்றும் மருத்துவமனைகளில் இருந்து பெறும் உரிமை உண்டு.

*சிகிச்சைக்கு சம்மதிப்பதைப் போல, சில சிகிச்சைகளுக்கு மறுப்பு தெரிவிக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு. மாற்று சிகிச்சை  பெறவும், மருத்துவமனையில் இருந்து வெளியேறவும் அவர்களுக்கு உரிமை உண்டு. நோயாளிகள் மனநிலை குழம்பி இருந்தால்  அவரது நெருங்கிய உறவினரை முடிவு எடுக்கச் சொல்லலாம்.

* எக்ஸ்ரே, வீடியோ, சி.டி., பயாப்சி போன்ற தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை யின் ஆவணங்களை இரண்டாவது மருத்துவக்  கருத்து (Second opinion)) கேட்பதற்காக, மருத்துவமனையிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் உரிமை உண்டு.

* மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் தகுதிகளைப் பற்றி அறிய உரிமை உண்டு.

*மருத்துவமனைகள் கொடுக்கும் கட்டண ரசீதில், மாத்திரைகள், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை மற்றும் அறை வாடகை  கட்டணங்களை தனித் தனியாக குறிப்பிட வேண்டும். மேலும், மருத்துவர் கட்டணம், மருத்துவமனையின் கட்டணத்தையும் தனித்  தனியாக குறிப்பிட வேண்டும்.

* மருத்துவ சேவை பற்றிய குறைகளை சொல்வதற்கான அதிகாரிகள் யார், எங்கே இருப்பார்கள் என்பதை மருத்துவமனை தெளிவாக  தெரிவிக்க வேண்டும்.

*மருத்துவக் காப்பீடு செய்த நோயாளிகள், தங்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையும், மருத்துவர்களும் காப்பீட்டில் இருந்து  எவ்வளவு தொகை பெற்றார்கள் என்பதை அறியும் உரிமை உண்டு.

* சிகிச்சை அளிக்கும் மருத்துவர் இல்லாத நேரங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு.  நோய் அதிகமாகாமல் இருக்க செவிலியர்கள் மற்றும் மருத்துவ மனை பணியாளர்கள் பின்பற்றும் முறைகளை தெரிந்து கொள்ளும்  உரிமை உண்டு. உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளி்ன் போதும் செலுத்தப்படும் ரத்தத்தின் தூய்மை குறித்த  தகவலை தெரிந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு.

*மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பரிசோதனைகளுக்கு நோயாளிகளை உட்படுத்தும்போது பரிசோதனைக்காகவே மருந்துகள்  கொடுக்கப்படுகிறது என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். மருத்துவப் பரிசோதனை ஆராய்ச்சிக்கு உட்படவோ,  உட்படாமல் இருப்பதற்கோ அவர்களுக்கு உரிமை உண்டு.

*நோயாளிகள் மருத்துவமனையில் இறக்கும்போது, அவரது உடலை கண்ணியமான முறையில் கொடுக்க வேண்டும். அவர் இறந்த  நேரம் குறித்த சரியான தகவலை அவரது குடும்பத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

*பிரேதப் பரிசோதனை செய்யும் முன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, சரியான நேரத்தில் பிரேதப் பரிசோதனை செய்ய  வேண்டும். சிலர் இறந்தபிறகு தங்கள் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவார்கள். அதற்கு ஏற்றார்போல் மருத்துவமனை உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். மூளைச்சாவு ஏற்பட்டபின் நன்றாக இயங்கும் மற்ற உறுப்புகளை, உறுப்பு மாற்று அறுவை  சிகிச்சைக்காக மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் அதற்கான நடவடிக்கைகளையும் மருத்துவமனை விரைந்து எடுக்க  வேண்டும்.

*நோயாளிகள் இறந்த பின்னரும், அவரது நோய் பற்றிய பல விஷயங்களை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். அவர் அனுமதி  கொடுத்தவர்களிடம் மட்டுமே மருத்துவ ஆவணங்களின் உண்மை நிலை குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும். இறந்த  நோயாளிகளின் உரிமைகளை,அவர்களது உறவினர்கள் கேட்டுப் பெறுவதற்கு உரிமை உண்டு.

நன்றி : தினகரன் நாளிதழ் - 10.01.2017