disalbe Right click

Showing posts with label புகார். Show all posts
Showing posts with label புகார். Show all posts

Saturday, March 21, 2020

பொது தகவல் அலுவலர் மீது ஓர் புகார் மனு

பொது தகவல் அலுவலர் மீது ஓர் புகார் மனு
மதுரையில் உள்ள சார்பதிவாளர், தனது கடமையை சரியாக செய்யவில்லை என்று அது  சம்பந்தப்பட்ட எனது நண்பர் ஒருவருக்கு கோபம். இதனை ஆர்.டி.ஐ. மூலமாக கேட்க வேண்டும். டைப் அடித்து தாருங்கள் என்று சென்ற மாதத்தில் ஓர் நாள் என்னிடம் வந்திருந்தார். நானும் டைப் செய்து கொடுத்தேன்.
பதிவுத்துறைத்தலைவர் சுற்றறிக்கை 
அதாவது, சொத்துக்களை சார்பதிவாளர் பதிவு செய்யும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று  சுற்றறிக்கை மூலமாக பதிவுத்துறைத்தலைவர் அறிவுறுத்தி உள்ளார். ஆனால், மதுரையில் உள்ள சார்பதிவாளர் ஒருவர் அதனை செய்யவில்லை. அது குறித்து சில தகவல்களை எனது நண்பர் தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 6(1)ன் கீழ் மதுரை பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களிடம் கேட்டிருந்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 7(1) என்ன சொல்கிறது?
ஒரு மனுதாரர் உரிய முறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்கும்போது, அதனை பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தகவல்களை அளிக்க வேண்டும்; அல்லது சட்டப்பிரிவு 8 மற்றும் 9-ல் குறிப்பிட்டுள்ளபடி தகவல்களை வழங்க மறுக்க வேண்டும் என்று உள்ளது.  
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 7(3) என்ன சொல்கிறது?
மனுதாரர் கோருகின்ற தகவல்களை நகல் எடுத்து வழங்க வேண்டியது இருந்தால், அதற்குரிய  கட்டணத்தை தெரிவிக்க வேண்டும் என்று பிரிவு 7(3)ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது தகவல் அலுவலர் அளித்த தகவல்
பதிவுத்துறை இணையதளத்தை குறிப்பிட்டு நீங்கள் கேட்ட தகவல் அதில் இருக்கிறது.  அதனை ஓப்பன் செய்து டவுண்லோடு செய்து கொள்ளுங்கள் என்று  பொது தகவல் அலுவலர் தகவல் அளித்திருந்தார். 


இது சட்டப்படி தவறான தகவல் ஆகும். பிரிவு 7(3)ன்படி அவர் அதனை நகல் எடுத்து, அதற்குரிய கட்டணத்தை பெற்று  மனுதாரருக்கு  வழங்கி இருக்க வேண்டும். 
இவர்களை ஒன்றுமே செய்ய முடியாதா?
எனது நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. இப்படி பொறுப்பில்லாமல் பதில் அளிக்கிறார்களே,  இவர்களை ஒன்றுமே செய்ய முடியாதா? என்று என்னிடம் மிகவும் ஆதங்கப்பட்டார். என்னிடம் இருந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட புத்தகத்தை எடுத்து கொடுத்தேன். வாசித்து பார்த்தார். முகம் மலர்ச்சி அடைந்தார். எனக்கு தகவலே வேண்டாம். முதலில் புகார்மனு டைப் அடியுங்கள் என்றார். அடித்து கொடுத்தேன்.  
மன்னிக்கவும். இன்னும் அந்த கடிதம் அனுப்பப்படாததால் அதன் நகலை   பிரசுரிக்க இயலவில்லை. இரண்டு நாட்கள் பொறுங்கள்.
************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 21.03.2020. 

Sunday, February 23, 2020

புகார் அளித்திட காலவரையறை இருக்கிறது, தெரியுமா?

புகார் அளித்திட காலவரையறை இருக்கிறது, தெரியுமா?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
இந்தியன் லிமிடேஷன் ஆக்ட் எனப்படுகின்ற இந்திய வரைமுறைச் சட்டத்தில் குற்றம் நடந்ததாக ஒருவர் புகார் தெரிவிக்கவோ அல்லது அது சம்பந்தமான வழக்கு பதிவு செய்யவோ காலவரையறை எதுவும் குறிப்பிடவில்லை.
புகார் தெரிவிக்கவில்லை என்றால்......
சம்பவம் நடந்து பல நாட்கள் ஆனபிறகும்கூட, ஒருவர் தமக்கு குற்றம் செய்தவர் மீது புகார் தெரிவிக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்டவர் அந்த குற்றத்தை மன்னித்து விட்டதாக கருதப்படும்.
புகார் தெரிவிக்கும்போது......
புகார் தெரிவிக்க கால தாமதம் ஆனால், அது சட்டப்படி குற்றம் என்பது இவ்வளவு நாட்களாக தனக்குத் தெரியாது என்பதையோ அல்லது தாமதமாக புகார் அளிப்பதற்கான காரணத்தையோ குற்றம் சாட்டுபவர் தனது புகாரில் குறிப்பிட்டு அதனை நிரூபிப்பது நல்லது. அவ்வாறு புகார்தாரர் அதனை தெளிவுபடுத்தவில்லை என்றால், வேண்டுமென்றே புகார் அளிக்க தாமதம் செய்ததாக கருதப்படும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 468
சிறைத்தண்டணை எதுவும் இல்லாமல் அபராதம் மட்டுமே விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு கால வரம்பு ஆறு மாத காலம் எனவும், ஓரு வருடம் சிறைத்தண்டணை உடைய குற்றங்களுக்கு கால வரம்பு ஓர் ஆண்டு எனவும், ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை தண்டனைக் காலம் உடைய குற்றங்களுக்கு கால வரம்பு மூன்று ஆண்டுகள் எனவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 468 கூறுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 469
குற்றம் நடந்த நாள், குற்றம் நடந்தது எப்போது என்று அக்குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கோ அல்லது காவல்துறையின் அதிகாரிக்கோ தெரிந்த நாள் முதல் காலவரம்பானது கணக்கிடப்படும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 469 கூறுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 469()
குற்றத்தை செய்தது யார் என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரியாவிட்டால் அதனை செய்தது யார் என்று பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ எப்போது தெரிய வருகின்றதோ அந்த நாள் முதல் காலவரம்பு கணக்கிடப்படும் என்றும் பிரிவு 469 () கூறுகிறது.
Image result for thinking emoji
பெரும்பாலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உடைய குற்றங்களுக்கு, தாமதமாக புகார் கொடுத்தாலும் குற்றத்தன்மையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது, அதே நேரத்தில் மிகவும் தாமதமாக அளிக்கப்படும் புகார்கள் மீது, (அந்தப் புகாரில் தீய நோக்கங்கள் இருக்கலாம். என்பதால்) வழக்குப் பதிவு உடனடியாக செய்யப்படுவதில்லை. இது போன்ற நேரங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 21இல் வழங்கப்பட்டுள்ள தனிமனித வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கான உரிமைகளும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 23.02.2020 

Thursday, June 27, 2019

உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற....


உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற....
உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முதலில் துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல் நடவடிக்கையாக, அதற்கு உரிய அரசு அலுவலகத்தில் எழுத்து மூலமாக புகார் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அகற்றிவிட வேண்டும். சகித்துக் கொள்ளக்கூடாது. அதிகமாக ஆக்கிரமிப்பு செய்ய அனுமதித்தால் அதனை அகற்ற அதிக சக்தியை செலவழிக்க நேரிடும்.

புகார் அளிப்பதற்கு முன்னர் என்ன செய்ய வேண்டும்?
புகார் அளிப்பதற்கு முன்பாக தங்களுடைய தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியின் வரைபடத்தை வைத்து அந்த தெருவின் அகலம் ஏற்கனவே எவ்வளவு இருந்தது என்பதை அறிந்து கொண்டால் புகாரை தெளிவாக எழுத முடியும். கிராமப்புறமாக இருந்தால் இதற்கான பகுதி வரைபடத்தை (FMB SKETCH) கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதைக்கொண்டு தங்களுடைய தெருவின் உண்மையான அகலம் எவ்வளவு என்பதை அறிந்து அதற்கேற்ப உங்களது புகார் மனுவைத் நீங்கள் தயாரிக்கலாம்.

யாரிடத்தில் புகார் அளிக்க வேண்டும்?
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்டதாக இருந்தால் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பேரூராட்சி அல்லது நகராட்சியாக இருந்தால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி அலுவலகத்திலுள்ள நகரமைப்புப் பிரிவிலும் எழுத்து மூலமாக உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வேண்டும். நேரில் சென்று கொடுப்பதைவிட பதிவுத்தபால் மூலமாக புகாரை அனுப்புவது நல்லது. அதன் மூலம் புகார் அளித்ததற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கும்.
மாநகராட்சிப் பகுதியாக இருந்தால்..?
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் அந்தப் பகுதியைச் சேர்ந்த வார்டு எந்த மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து, அந்த மண்டல அலுவலகத்திலுள்ள உதவி ஆணையர் அல்லது உதவி நகரமைப்பு அலுவலர் அவர்களிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கலாம். அதில் ஏதும் நடவடிக்கை இல்லாதபட்சத்தில் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் புகார் தெரிவிக்கலாம். எங்குமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கலாம். அங்கு புகார் பெறப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்குவார்கள்.
நீதிமன்றத்திற்கு எப்போது செல்ல வேண்டும்?
அரசு அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையுமே இல்லையென்றால் மட்டுமே நீதிமன்றம் செல்ல வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நீதிமன்றம் செல்லக்கூடாது. அரசு அதிகாரிகளிடம்  புகார் அளித்ததற்கான அனைத்து ஆதாரங்களுடன் உயர்நீதி மன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யலாம்.
Image result for poclain machine job doing
பொதுநல வழக்குகளை தனிநபர் தாக்கல் செய்யலாமா?
செலவு, பாதுகாப்பு மற்றும் வழக்கை வலுப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக. ஆக்கிரமிப்பு சார்ந்த பொதுநல மனுக்களை நீதிமன்றத்தில்  தனிநபராகத் தாக்கல் செய்வதைவிட, ஏதேனும் ஓர் அமைப்பு சார்ந்தோ, குடியிருப்போர் சங்கங்கள் சார்ந்தோ தாக்கல் செய்வது நல்லது.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 27.06.2019