disalbe Right click

Showing posts with label காவல்துறை. Show all posts
Showing posts with label காவல்துறை. Show all posts

Saturday, April 4, 2020

ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க ....?

                 ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க ....?   
                 
பொதுமக்கள் வாழ்க்கையில் அதிகமாக அங்கம் வகிப்பது காவல்துறை என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு, பொதுமக்கள் சந்திக்கும் அதிகப்படியான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் அரசுத் துறையில், காவல்துறை பெரும்பங்கு வகித்து வருகிறது.
ஆனால், இந்தத்துறையில் சாதாரண மக்கள் புகார் அளிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. நமது நாட்டில் உள்ள நீதிமன்றங்களில், ஒரு வழக்கை பதிவு செய்வதைவிட, காவல் நிலையங்களில் ஒரு புகாரை பதிவு செய்வது மிக கடினமாக இருக்கிறது.
நடைமுறை என்ன?
புகார்தாரர் ஒருவர் காவல்துறையில் தருகின்ற புகாரை பெற்றுக் கொண்டு, அதற்கு ஒப்புதலாக CSR என்று சுருக்கமாக சொல்லக்கூடியபுகார் மனு ஏற்புச் சான்றிதழ்(Community Service Register) என்ற ஒன்றை உடனடியாக அவரிடம் காவல்துறையினர் வழங்கவேண்டும். அதன்பிறகு, அவர்கள் அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளவற்றை படித்துப் பார்த்து குற்றம் நடந்துள்ளதா? என்பதை அறிந்துகொள்ள, இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்க வேண்டும். அவர்கள் இருதரப்பினரும் தருகின்ற ஆவணங்களை, சாட்சியங்களை ஆய்வு செய்ய வேண்டும். குற்றம் நடந்தது விசாரனையில் தெரிந்தவுடன், ”முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட வேண்டும். குற்றம் நடக்கவில்லை என்றால், புகார் மனு ஏற்புச் சான்றிதழ் ரத்து செய்யப்படவேண்டும். அளிக்கப்பட்டது பொய்ப்புகார் ஆக இருந்தால், அதனை அளித்தவர் காவல்துறையால் முதல் தடவை மட்டும் எச்சரிக்கப்படுவார்.
காவல் நிலையங்களில் நடப்பது என்ன?
ஆனால், பெரும்பாலும் புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்வதே இல்லை. படித்துப் பார்த்துவிட்டு நமது கையிலேயே கொடுத்து விடுகிறார்கள். அதிகாரி இல்லை, பிறகு வாருங்கள் என்பார்கள். அல்லது என்ன நடந்தது என்பதை நம்மிடம் வாய்மொழியாக கேட்டுவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்து பேசுகிறார்கள். நமது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதே இல்லை. எனக்கு இதில் அனுபவம் நிறைய இருக்கிறது.
ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்
இப்போது இந்த பிரச்சனையை ஒழிக்க, அரசு ஆன்லைன் மூலமாக, காவல்துறையில் புகார் அளிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதனால நமக்கு அலைச்சல் கிடையாது. செலவு கிடையாது. வீட்டில் இருந்தபடியே, நாம் இருக்கும் இடத்தில் இருந்தே புகார் அளிக்க முடியும். புகார் செய்ததற்கு ஆதாரமும் நமக்கு உடனே கிடைத்துவிடுகிறது.
எப்படி புகார் அளிப்பது?
இதற்கு முதலில் https://eservices.tnpolice.gov.in/ என்ற இணையதளத்திற்குச் நீங்கள் செல்லவேண்டும். அதில் இடமிருந்து வலமாக 3வதாக தெரிகின்ற Citizen Services (Free) என்ற வார்த்தையின் மீது கிளிக் செய்ய வேண்டும். அதனுள் இருகின்ற 10 சேவைகளைப் பற்றிய தலைப்புகள் தெரிகின்ற இன்பாக்ஸ் ஒன்று உருவாகும்.
அதில் முதலாவது இருக்கின்ற Register Online Complaint என்ற வார்த்தையை கிளிக் செய்தால் கீழ்காணும் ஒரு பெரிய பாக்ஸ் உருவாகும்.

அதில் முதல் பாதியில் கேட்கப்பட்ட எந்த மாவட்டம், உங்களது பெயர், இனம், பிறந்த நாள், வயது, முழு முகவரி, செல்போன் எண் மற்றும் -மெயில் முகவரி ஆகிய விபரங்களை ஆங்கிலத்தில் நிரப்ப வேண்டும்.  அதற்கு அடுத்த பாதியில் முதலில் உள்ள Box-ல் குற்றம் பற்றிய விபரங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் பொருத்தமான குற்றத்தை மட்டும்டிக்செய்யவேண்டும். அதன் பிறகு உள்ள பாக்ஸில் எந்த நாளில் குற்றம் நடந்தது என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு உள்ள பாக்ஸில் எந்த இடத்தில் குற்றம் நடந்தது என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு உள்ள பெரிய பாக்ஸில் குற்றத்தை பற்றி சுருக்கமாக (2000 எழுத்துகள்) டைப் செய்ய வேண்டும்.
ஆவணங்கள் இணைத்தல்
அதற்கு கீழே  நடைபெற்ற குற்றம் சம்பந்தமான ஆவணங்கள் இருந்தால், அவற்றை பதிவேற்றலாம். அதற்கு YES என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும். ஆவணங்கள் ஏதும் இல்லை என்றால் NO என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும். உள்ளே செலுத்துகின்ற அந்த ஆவணங்கள் பி.டி.எப், பி.என்.ஜி அல்லது ஜேப்பக் பைலாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் அவற்றை பதிவு செய்ய முடியும். 500 KB வரை பதிவேற்றலாம். ஒவ்வொரு ஆவணத்தையும்  உங்களது கைபேசி அல்லது கம்ப்யூட்டரில் இருந்து அதனுள் செலுத்தியவுடன் UPLOAD என்ற வார்த்தையை கிளிக் செய்துவிட்டு அடுத்த ஆவணத்தை அதனுள் செலுத்த வேண்டும்.                 
அவ்வளவுதான். வேலை முடிந்தது. இறுதியாக கீழே தெரிகின்ற செக்யூரிட்டி கோடு எண்ணை பதிவிட்டு    REGISTER  என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும். 
உங்களது புகார் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என்ற அர்த்தத்தை கொண்ட ஆங்கில வார்த்தைகள் தோன்றும். அதற்கு கீழே உங்களது புகாரைப் பற்றிய சிறு குறிப்புடன் ஒரு ஒப்புதல் சீட்டு திரையில் தோன்றும் அதனை டவுண்லோடு செய்து பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். Citizen Services (Free)  என்று முதலில் பார்த்த பாக்ஸை கிளிக் செய்தால் தோன்றுகின்ற இன்பாக்ஸில்  2வதாக தெரிகின்ற Online Complaint Status என்ற வார்த்தையை கிளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும்.  உங்களது புகாருக்கு கொடுக்கப்பட்ட எண்ணை (புகார் அளிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து)  அந்த பக்கத்தில் உங்களது புகார் எண்ணை பதிவிட்டால், உங்களது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியும். இதனை நீங்கள் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள். அடுத்து சில நாட்களில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு உங்களது புகார் அனுப்பப்படும். அவர்கள் உங்களை அழைத்து, புகார் விளக்கமாக பெற்றுக் கொண்டு, அதனை கையாண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதற்குப் பிறகும் உங்களது புகாரின் நிலையை மேற்கூறியவாறு தொடர்ந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களது புகார் தள்ளுபடி செய்யப்பட்டால் Disposed என்று அதில் தெரியும்.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.04.2020 

Sunday, February 16, 2020

காவல்துறை நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்குமா?

காவல்துறை நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்குமா?
காவல் ஆய்வாளர் தயாரித்த பொய்யான அறிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கல் காவல் ஆய்வாளர் திரு இராஜா அவர்கள் பொய்யான அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக, என்னால் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஒருதலைப்பட்சமான விசாரணை
விருதுநகர் மாவட்ட ADSP அவர்களும், SP அவர்களும் நடத்திய விசாரணையானது, முறையாக நடத்தப்படாமல், குற்றஞ்சாட்டப்பட்ட ஆய்வாளருக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக முடிவுரை எழுதப்பட்டது.
மதுரை மண்டல காவல் துணைத்தலைவருக்கு புகார்!
இதனை ஆட்சேபித்து, புகாரை விசாரித்த விருதுநகர் மாவட்ட ADSP அவர்கள் மீதும், SP அவர்கள் மீதும் குற்றம் சுமத்தி, துரை மண்டல DIG அவர்களே இதனை நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று DIG அவர்களுக்கு ஒரு புகார் அனுப்பியிருந்தேன்.
டி..ஜி. எடுத்த நடவடிக்கை!
ஆனால், மீண்டும் எனது புகார் விருதுநகர் மாவட்ட SP அவர்களுக்கே மதுரையில் இருந்து அனுப்பப்பட்டது.
எஸ்.பி. மீண்டும் அளித்த அறிக்கை!
விருதுநகர் மாவட்ட SP அவர்களும் வழக்கம் போல அந்த புகாரில் உண்மையில்லை என்று நிராகரித்துவிட்டனர்.
எனது முதல் மேல்முறையீடு
அதனால், மீண்டும் மதுரை மண்டல DIG அவர்களுக்கு புகார் (முதல் மேல்முறையீடு) அனுப்பினேன்.
மீண்டும் அந்தப் புகார் விருதுநகர் மாவட்ட SP அவர்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சிவகாசி DSP அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக படத்தில் கண்ட கடிதம் தெரிவிக்கிறது.


ஒரு அதிகாரி மீதான புகாரை அவருக்கு கீழ் பணி புரிகின்ற ஒரு அலுவலர் விசாரித்தால் எனக்கு என்ன நீதி கிடைக்கும்?

போகிற போக்கைப் பார்த்தால், விருதுநகர் மாவட்ட SP மீதான புகாரை, திருத்தங்கல் காவல் நிலையத்தில் பணிபுரிகின்ற ஒரு ஏட்டு விசாரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
காவல்துறையினர் பின்பற்றும் இந்த நடைமுறையை நீதிமன்றங்களும் பின்பற்றினால், உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் ஏதும் நிலுவையில் இருக்காது.

******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 17.02.2020