disalbe Right click

Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Thursday, April 18, 2019

தேர்தல் விதிகள் – தெரிந்து கொள்வோம்!

தேர்தல் விதிகள் – தெரிந்து கொள்வோம்!
விதி எண்: 49 - M
வாக்கு அளிக்கின்ற அனைத்து வாக்காளரும் 'நான் வாக்களிக்கும் ரகசியத்தை கண்டிப்பாக பின்பற்றுவேன்' என '17 ' படிவத்தில் கையொப்பமிட வேண்டும். இவ்வாறு கையெழுத்திட்டபின் மற்ற நடைமுறையை பின்பற்ற மறுத்தால் அவர் ஓட்டு போட பிரிவு '49 M' கீழ் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறான இனங்களில் '17 ' பதிவேட்டில் குறிப்பு பகுதியில் வாக்கு அளிக்க அனுமதிக்கப்படவில்லை; ஓட்டுப்பதிவு நடைமுறை மீறப்பட்டது என குறிப்பிட வேண்டும். அந்தப் பதிவின் கீழ் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் தனது முழு கையொப்பமிட வேண்டும்.
விதி எண்: 49 – N  உதவியாளருடன் செல்லலாம்!
பார்வையற்றோர் மற்றும் உடல் நலிவடைந்தோர் விதி எண்  '49 - N' ன்படி உதவியாளர் ஒருவர் உதவியுடன் வருகை தந்து வாக்கு அளிக்கலாம்.  ஆனால், அந்த உதவியாளர் 18 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும். அவரிடம் அவர் அழைத்து வந்த வாக்காளர் சார்பில் பதிவு செய்த ஓட்டின் ரகசியத்தை நான் காப்பாற்றுவேன்! என்றும், அந்த நாளில் வேறு ஓட்டுச் சாவடிகளில் வேறு யாருக்கும் உதவியாளராக நான் செயல்படவில்லை என்றும் உறுதிமொழி பெற வேண்டும்.
விதி எண் : '49 -O'  ஓட்டளிக்காவிட்டால் ?
ஒவ்வொரு வாக்காளர்களும் அடையாளம் சரிபார்க்கப்பட்டு 17 ஏ பதிவேட்டில் கையெழுத்திட அழைக்கப்படுவார்கள். கையெழுத்திட்ட பின்னர் அந்த வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். அடையாளம் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒரு வாக்காளர் '17 ' பதிவேட்டில் கையொப்பமிட்ட பின் வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்தால் வாக்குப்பதிவு செய்யும்படி அவரை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக 17பதிவேட்டில் அவரது வரிசை எண்ணுக்கு எதிரே குறிப்புரையில் வாக்களிக்க மறுத்தார்; வாக்களிக்காமல் சென்றார் என பதிவு செய்து அதில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அவரது முழு கையெழுத்திட வேண்டும்.

Image result for வாக்குச்சாவடி
'டெண்டர்டு' ஓட்டு என்றால் என்ன?
ஓட்டுச்சாவடியில் ஒருவர் வாக்கை மற்றொருவர் தவறுதலாக போட்டுவிட்டு சென்றிருந்தால் வாக்களிக்க வந்த வாக்காளரின் அடையாளச் சான்றுகளை சரி பார்த்த பின் ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு வழியே அவரை வாக்களிக்க அனுமதிக்கவேண்டும். ஆனால், அவரை ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. அந்த வாக்காளர் ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டை பெற்று ரப்பர் முத்திரையை பயன்படுத்தி வாக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குச்சீட்டை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் வாக்கு ஆய்வுக்குரிய வாக்கு அல்லது 'டெண்டர்டு ஓட்டு' எனப்படுகிறது.
'சேலஞ்ச்' ஓட் என்றால் என்ன?
வாக்குச்சாவடியில் இருக்கின்ற வேட்பாளர்களின் முகவர்கள் யாராவது வாக்களிக்க வரும் வாக்காளர்களின் அடையாளம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தால், எதிர்ப்பு தெரிவித்த முகவர் தேர்தல் அலுவலரிடம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த முகவரின் எதிர்ப்பு குறித்து வாக்குச்சாவரி அதிகாரியால் முழு விசாரணை நடத்த வேண்டும். எதிர்ப்பு நிரூபிக்கப்படவில்லை என்றால் அந்த வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஆள் மாறாட்டம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அந்த மோசடி நபரை காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
'டெஸ்ட் ஓட்டு' என்றால் என்ன?
வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் வாக்களித்த சின்னம் தெரியாமல் வேறு ஒரு சின்னமும் பெயரும் தெரிவதாக ஒரு வாக்காளர் கூறினால் அவரிடம் தேர்தல் நடத்தை விதி '49 M - ' துணை விதியின் கீழ் உரிய படிவத்தில் உறுதிமொழியை பெற்றுக் கொள்ள வேண்டும்.அதன்பின் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குச்சாவடி அலுவலர்களுடன்  வாக்களிப்பு பகுதிக்கு சென்று அந்த வாக்காளரை மீண்டும் முகவர்கள் முன் ஒரு வாக்கை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

Image result for வாக்குச்சாவடி

அந்த வாக்காளர் எந்த வேட்பாளருக்கு, எந்த சின்னத்தில் வாக்களித்தார் என்பதை '17 - ' மற்றும் '17 - சி' பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். ஒரு வேளை அவர் பதிவு செய்த ஓட்டு சரியாக பதிவாகி இருந்தால், வாக்காளர் வேண்டுமென்றே தவறான புகார் கொடுத்ததாக இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 182ன்படி அவர் தண்டனைக்குரியவராவார். அந்த வாக்காளரை உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.
வாக்காளர்  புகார் அளித்தது போல் ஓட்டளித்த சின்னம் மற்றும் நபர் விபரங்கள் ஒளிராமல் வேறு சின்னங்களும் வேட்பாளரும் இயந்திரத்தில் ஒளிர்ந்தால் வாக்குச்சாவடி அலுவலர் ஓட்டுப்பதிவை உடனே நிறுத்த வேண்டும். உடனடியாக மண்டல தேர்தல் அலுவலருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்.
 *********************************************** செல்வம் பழனிச்சாமி, 18.04.2019 

Wednesday, April 10, 2019

பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?

தேர்தலில் போட்டியிடுவோரின் தகுதியின்மைகள்
பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் (Representation of the People Act 1951)-ல் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பாகம் -II அத்தியாயம் -III ல் பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிக் கேடுகள், அதாவது யார் யார் தேர்தலில் போட்டியிட முடியாது எனப் பார்ப்போம்
அத்தியாயம்-III
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினராக தகுதியின்மைகள்
Disqualifications for membership of Parliament and State Legislatures
பிரிவு 7. பொருள் வரையறைகள் : இந்த அத்தியாயத்தில்உரிய அரசுஎன்பது பாராளுமன்றத்தின் ஈரவைகளில் ஒன்றுக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது இருப்பதற்கு மத்திய அரசு மற்றும் அல்லது மாநிலம் ஒன்றின் சட்டமன்றம் அல்லது சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது இருப்பதற்கு மாநில அரசு எனப்பொருள்படும்.
தகுதியின்மைஎன்பது பாராளுமன்றத்தின் ஈரவைகளில் ஒன்றுக்கு அல்லது மாநில சட்டமன்றத்திற்கு அல்லது சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது இருப்பதற்கு தகுதியிழந்தவர் எனப் பொருள்படும்
சில குற்றங்களில் தீர்ப்பு குற்றவாளியின் தகுதியின்மை [பிரிவு8]
Disqualification on conviction for certain offences
(1) பின்வரும் குற்றங்களில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருநபர்;
இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் படி
பிரிவு 153 A (மதச்சார்பாக, இனம், பிறந்தஇடம், குடியிருப்பு, மொழி மற்ற பிற வகையில் பகைமையை வளர்ப்பவராக மேலும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவராக அல்லது;
பிரிவு171-E லஞ்சம் பெற்ற குற்றவாளியாக அல்லது;
பிரிவு171-F தகாத செல்வாக்கு உடையவராக அல்லது தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்தவராக இருந்தால் அல்லது;
பிரிவு 376 உட்பிரிவு (1) அல்லது (2) அல்லது 376 அல்லது 376-Aஇல் 376-B இல் அல்லது 376 C இல் அல்லது 376-D இல் அல்லது;
பிரிவு 498-A இல் பெண்ணுக்கு கணவனால் கொடுமை செய்த அல்லது கணவனின் உறவினரால் கொடுமை செய்த குற்றத்திற்காக அல்லது;
பிரிவு 505 உட்பிரிவு (2) அல்லது உட்பிரிவு (3) பகைமையை தோற்றுவித்தல் அல்லது தூண்டுதல், வகுப்புகளுக்குள் வெறுப்பு அல்லது தீயஎண்ணத்தை, வழிபாடு நடக்கும் இடங்களில் அல்லது தெய்வவழிபாடு நடக்கும் கூட்டங்களில் அல்லது மதச்சார்பான விழாக்களில் தோற்றுவிக்கும் வகையில் அல்லது;
குடிமுறை உரிமைகள் சட்டம்,1955 [Protection of Civil Rights Act, 1955] இல் தீண்டாமை போதிப்பதற்கும் நடைமுறைபடுத்துவதற்கும் மேலும் அதனை கட்டாயப்படுத்துவதற்கும் தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன; அல்லது
சுங்கச்சட்டம்,1962 [The Customs Act, 1962] பிரிவு 11இன் கீழ்தடை செய்யப்பட்ட பொருள்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதற்கான குற்றம்; அல்லது
சட்டபுறம்பான செயல்கள்(தடுப்புச்) சட்டம்,1967 [Unlawful Activities (Prevention) Act, 1967] பிரிவு 10 முதல் 12 ( சட்டத்திற்கு புறம்பான சங்கத்தில் உறுப்பினராக இருத்தல், சட்டத்திற்கு புறம்பான சங்கத்தின் நிதியை கையாளும் குற்றம், அல்லது குறிப்பிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட இடத்தை மீறும் குற்றத்திற்காக; அல்லது;
வெளிநாட்டு செலாவணி (ஒழுங்குமுறை) சட்டம, 1973 [Foreign Exchange (Regulation) Act, 1973] அல்லது
போதை மருந்து மற்றும் மயக்கம் தரும் பொருட்கள் சட்டம், 1985 [Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985] அல்லது
தீவிரவாத மற்றும் குழைக்கும் செயல்கள் (தடுக்கும்) சட்டம்,1987 {Terrorist and Disruptive Activities (Prevention) Act, 1987 ] பிரிவு 3 (தீவிரவாத செயல்கள் புரியும் குற்றம்) அல்லது பிரிவு 4 (குலைக்கும் செயல்கள் புரியும் குற்றம்) அல்லது;
மத சார்பான நிறுவனங்கள் (தவறான பயன்பாட்டைத் தடுத்தல்) சட்டம்,1988 {the Religious Institutions (Prevention of Misuse) Act, 1988] பிரிவு 7 (பிரிவுகள் 3 லிருந்து 6 வரை உள்ள வழிவகை மீறுகை குற்றத்திற்காக
அல்லதுமக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்,1951 இன்பிரிவு 125 (தேர்தல் சம்பந்தமாக இனங்களுக்குள் பகைமையை வளர்த்தல் குற்றத்திற்காக 
அல்லது  பிரிவு 135 (வாக்குச் சாவடிகளில் வாக்குச் சீட்டுகளை பறிமுதல் செய்த குற்றத்திற்காக 
அல்லது 135A வாக்குச்சாவடிகளை கைப்பற்றிய குற்றத்திற்காக
அல்லது பிரிவு 136 உட்பிரிவு (2) கூறு (a) வஞ்சகமாக வேட்புமனுக்களை தெளிவற்றதாக்குதல் அல்லது அழித்தல் குற்றத்திற்காக
அல்லது வழிபாடு செய்யும் இடங்கள் (சிறப்புகூறுகள்) சட்டம்,1991[Places of Worship (Special Provisions) Act, 1991] பிரிவு 2 (வழிபாடு செய்யும் இடங்களை மாற்றியமைத்த குற்றத்திற்காக) அல்லது தேசிய நன்மதிப்பை அவமதிப்பைத் தடுக்கும்சட்டம்,1971 [Prevention of Insults to National Honour Act, 1971] பிரிவு 2 (இந்திய கொடியை அவமதிக்கும் அல்லது இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் குற்றத்திற்காக) அல்லது பிரிவு 3 (தேசிய கீதம் பாடுவதைத் தடுக்கும் குற்றதிற்காக) 
அல்லது உடன்கட்டை ஏறுதல் தடுப்புச் சட்டம்,1987 [Commission of Sati (Prevention) Act, 1987] 
அல்லதுஊழல்தடுப்புச்சட்டம்,1988 
அல்லது தீவிரவாதத் தடுப்புச்சட்டம்,2002 [Prevention of Terrorism Act, 2002] 
அல்லதுகுற்றத் தீர்ப்புக்குள்ளான நபர், குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும். அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருக்கும் போது, குற்றத் தீர்ப்பு அளித்த நாளிலிருந்து ஆறாண்டுகளுக்கும் அபராதம் மட்டும்அத்தகைய குற்றத்திற்காக சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அவர் விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து ஆறாண்டுகளுக்குத் தகுதியின்மையுடையவராகிறார்
(2) பதுக்கல் அல்லது கொள்ளை இலாபத்தை [hoarding or profiteering] தடுக்கும் தொடர்பான எந்தச் சட்டமாயினும்
அல்லது உணவு அல்லது மருந்துகளில் கலப்படம் தொடர்பான எந்தச் சட்டமாயினும்; அல்லது வரதட்சணைதடுப்புச்சட்டம்,1961-இல் எந்தக் கூறாக இருந்தாலும் குற்றவாளியாகத் தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் (3) உட்பிரிவு (1) அல்லது (2) இல் குறிப்பிட்டுள்ள எந்தவொரு குற்றத்தையும், தவிர்த்து, எந்தவொரு நபருக்கும் ஏதேனும் குற்றத்திற்காக 2 வருடங்களுக்கு குறையாமல் சிறைதண்டனை விதிக்கப்படிருந்தால், அவர் தண்டனை விதிக்கப்படிருந்த நாளிலிருந்து தேர்தலுக்கு நிற்க தகுதியின்மை உடையவராகிறார். மேலும், விடுதலையான நாளிலிருந்து ஆறாண்டுகளுக்குத் தகுதியின்மையடைகிறார்.
(4) உட்பிரிவு (1) அல்லது (2) எவ்வாறு இருப்பினும், எந்தவொரு உட்பிரிவின் கீழான தகுதியின்மையானது, நபர் ஒருவர், குற்றத் தீர்ப்புத் தேதியில் மக்களவை அல்லது மாநிலங்களவை மாநிலசட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது, அந்தத் தேதியிலிருந்து 3 மாதங்கள், கடந்தபின்னர் செயலுக்குவரும் அல்லது அந்தக் காலஅளவிற்குள் குற்றத் தீர்ப்பு அல்லது தண்டனை பொறுத்து மேல்முறையீடு அல்லது சீராய்வு விண்ணப்பம் செய்யப்பட்டு இருப்பின், அந்த மேல்முறையீடு அல்லது சீராய்வு நீதிமன்றத்தால் முடிவு அல்லது தீர்வு செய்யப்படும் வரை செயல் விளைவுக்கு வராது.
விளக்கம்;இந்தஉட்பிரிவில் பதுக்கல் அல்லது கொள்ளை இலாபத்தைத் தடுத்தல் தொடர்பான சட்டம் என்பது எந்த ஒரு சட்டம் அல்லது , ஆணை, விதி அல்லது அறிவிக்கை[ notification] கீழ்க்காணும் கூறுக்களுக்கான சட்டத்திற்குண்டான அதிகாரத்தையுடையது.
அத்தியாவசியப் பொருள்களைத் தயாரித்தல் அல்லது உற்பத்தியை ஒழுங்கு முறைப்படுத்துதல்;
அத்தியாவசியப் பொருட்களின் வாங்கும் மற்றும் விற்கும் விலையைக் கட்டுப்படுத்துதல்;
அத்தியாவசியப் பொருள்களைக் கைப்பற்றுதல் வைத்துக்கொள்ளுதல், சேர்த்துவைத்தல், கொண்டுசெல்லுதல், விநியோகம், தீர்வுசெய்தல், நுகர்தல் அல்லது பயன்படுத்துதல் ஆகியவற்றை ஒழுங்கு முறைப்படுத்துதல்;
சாதாரணமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை விற்காமல் தடுத்து நிறுத்துவதைத் தடுத்தல்;
சாதாரணமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை விற்காமல் தடுத்து நிறுத்துவதை தடுத்தல்;
மருந்துஎன்பது மருந்து மற்றும் ஒப்பனைப் பொருள் சட்டம்,1940 [Durgs and Cosmetics Act, 1940] குறிப்பிட்டுள்ள படி;
அத்தியாவசியப் பொருள் என்பதன் பொருள் அத்தியாவசியப் பொருள் சட்டம்,1955 [Essential Commodity Act, 1955] குறிப்பிட்டுள்ள படி;
உணவுஎன்பதன் பொருள் உணவு கலப்படம் தடுப்பு சட்டம், 1954 [Prevention of Food Adulteration Act, 1954]இல் அதற்கென குறிப்பிட்டுள்ள படி;
By வழக்கறிஞர் சி.பி. சரவணன்
நன்றி : தினமணி நாளிதழ் - 13.02.2019 https://www.dinamani.com