disalbe Right click

Showing posts with label வர்த்தகம். Show all posts
Showing posts with label வர்த்தகம். Show all posts

Tuesday, November 15, 2016

தங்கம் வாங்குபவர்கள் கவனிக்க


இந்த சூழ்நிலையில் தங்கம் வாங்குபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
500,1000  ரூபாய்  நோட்டுகள்  செல்லாது என்று அறிவித்த இரவு மக்கள்  முதலில் தேடி  ஓடிய  இடம் தங்க நகை கடைகள் தான். இதுபோன்ற அவசர காலத்தில் தங்கம் வாங்கும் போது மிகவும்  கவனமாக இருக்க  வேண்டும். அன்று இரவு 12 மணி வரை நகை கடைகளில் கூட்டம்  அலைமோதியது. வழக்கமாக தங்கத்தை பலமுறை  சோதிப்பவர்கள் கூட எதுவும் பார்க்காமல் நகைகளை வாங்கி வந்துள்ளனர். கிராம் ஒன்று 4000 ரூபாய் வரை விற்கபட்டிருக்கிறது.

உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 880 டன் தங்கம்  இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் என்பது இங்கு வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்க படுவது இல்லை. சேமிப்பாகவும் இருக்கிறது. அதனால் எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் நகை வாங்குவது இந்தியர்களின்  வாடிக்கை. தற்போது உள்ள நிலைமையில் நகைக்களை வாங்குவது எப்படி ?

ஹால்மார்க்
தென்இந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். மக்கள் நகைக்கடைகளால் அதிகம் ஏமாற்றப்படுவதும் இங்குதான். ‘ஹால்மார்க்’ முத்திரை என்பது தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்தும் முத்திரை. இந்த முத்திரையுள்ள தங்கத்தை வாங்கும்போதும்கூட பல கடைகளில ஏமாற்று வேலை நடப்பதுதான் வேதனை! 

ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்கம் அல்லது வெள்ளி நகைகள் தரமானவை என்று கூறப்படுகிறது.  வாடிக்கையாளர்கள், தரமற்றவற்றை வாங்காமல் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட முத்திரை (BIS) என்பதால், ஹால்மார்க் முத்திரை நம்பகமாகக் கருதப்படுகிறது. 

ஆனால், இந்த முத்திரையானது நாம் வாங்கும் ஒவ்வொரு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணத்துக்கும்  சரிவர வாங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது அத்தனை சுலபமான காரியமல்ல. 

இந்தியாவில் ஹால்மார்க் முத்திரை வழங்கக்கூடிய சென்டர்கள் 324 இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு சென்டரில் 500 ஆபரணங்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஆக, 324 சென்டர்களிலும் ஒரு நாளில் 1,62,000 ஆபரணங்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். 

ஒரு நகையின் எடை சராசரியாக 10 கிராம் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு 1.62 டன் நகைகள் வரை மட்டுமே ஹால்மார்க் முத்திரை கொடுக்கமுடியும். ஓர் ஆண்டுக்கு 591 டன் அளவு நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும். 

ஆனால், இந்தியாவின் தங்க நகை இறக்குமதி அளவு ஆண்டுக்கு, 880 டன். இந்நிலையில், ஹால் மார்க் முத்திரை என்பது நூறு சதவிகிதம் எப்படி சாத்தியம் ?

ஹால்மார்க் நகைகளை எப்படிக் கண்டுபிடிப்பது?
நகைகளில் BIS என்ற குறியீடு முக்கோண வடிவில் இருக்க வேண்டும். எவ்வளவு சுத்தமான தங்கம் என்ற அளவு இருக்க வேண்டும். 
உதாரணமாக.. 958 என்று இருந்தால் அது 23 காரட் தங்கம் என அர்த்தம். 
916 - 22 காரட் தங்கம், 
875 - 21 காரட் தங்கம், 
750 - 18 காரட் தங்கம், 
708 - 17 காரட் தங்கம், 
585 - 14  காரட் தங்கம், 
375 - 9 காரட் தங்கம்.

தங்கத்தின் மதிப்பீடும், ஹால்மார்க் சென்டரின் அடையாள குறியீடும் இருக்க வேண்டும். எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிட்டிருக்க வேண்டும். 
உதாரணமாக.. ‘A’ என இருந்தால், அந்த தங்கம் 2000-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என அர்த்தம்.
 ‘B’ - 2001,
 ‘C’ - 2002, 
‘D’ - 2003, 
‘E’ - 2004,
‘F’ - 2005, 
‘G’  - 2006,
‘H’ - 2007, 
‘J’ - 2008. 
இது போல் தொடர்ந்து கணக்கிட்டுக்கொள்ளவும்.
‘Q’ - 2015,
'R'-2016 

தங்கத்தில் தொடரும் கலப்படம்!
22 காரட் (916) தங்கமாக இருந்தாலும், 8 கிராம் (8,000 மில்லி கிராம்) ஆபரணத்தில், 7,328 மில்லி கிராம்தான் தூய்மையான தங்கம் இருக்கிறது. மீதம் 672 மில்லி கிராம் செப்பு அல்லது வேறு உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இது தங்கத்தை ஆபரணங்களாக மாற்றுவதற்காக செய்யப்படுவது. ஹால்மார்க் முத்திரை பெறாத மற்றும் மக்களை ஏமாற்றுவதற்கென்றே இருக்கும் கடைகளில் விற்கப்படும் நகைகளில் இந்தக் கலப்படத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். இத்தகைய கலப்பட தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களும், `916 தங்கம்’ எனப்படும் தங்கத்துக்கு தரும் பணத்தையே கொடுக்கிறார்கள். ஆண்டுதோறும் இப்படி சுமார் 480 டன் தங்கம் வரை இங்கே ஏமாற்றி விற்கப் படுகிறது.

 தங்க நகை சேதாரம்
இந்தியாவில் தங்கத்தை, ஆபரணங்களாக மாற்றும்போது நகைக்கடைக்காரர், தரகர், இடைத்தரகர் என ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் சுரண்டப்படுகிறது. தங்க நகை சேதாரம் மூலமாகவும் பெரும் கொள்ளை நடக்கிறது. இறக்குமதியாகும் 880 டன் தங்கம், ஆபரணங்களாக மாற்றப்படும்போது மொத்தம் 2.6 டன் வரை சேதாரம் இருக்கலாம். ஆனால், மக்களிடம் விற்கும்போது, ஒவ்வொரு நகைக்கும் அதிகமான தங்கம் சேதாரமாகக் கணக்கிடப்படுகிறது. 

இதுதவிர, நகைகள் வாங்கும்போது 6.78 கிராம் எடை இருந்தால், ரவுண்டாக 7 கிராம் என்று சொல்வார்கள். நகை எடை பார்க்கும் மெஷினில் ஸ்பெஷல் கீ எனப்படும் சாம்பிள் பட்டனை அழுத்தியவுடன் எடையை ரவுண்டாக மாற்றிவிடும். இப்படி பெரும்பாலான கடைகளில் மில்லி கிராம் தங்க அளவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட, சிறுதுளி பெருவெள்ளமாக கடையின் முதலாளிகளுக்கு தங்க மழை பொழிகிறது! 

தங்கத்தில் என்னவெல்லாம் கலக்கப்படுகிறது?
ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளில் 31 பர்சன்ட் அளவுக்கு அலாய் எனப்படும் வொயிட் மெட்டல் கலக்கப்பட்டிருக்கும். நீங்கள் 8 கிராம் நகை வாங்குகிறீர்கள் என்றால், அதில் கிட்டத்தட்ட 2.5 கிராம் அளவுக்கு இந்த வொயிட் மெட்டல் கலந்திருக்கும். மீதி 5.5 கிராம் மட்டுமே தங்கம். 

உதாரணத்துக்கு, நீங்கள் 8 கிராம் நகையை 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள். ஆனால், இதிலிருக்கும் 5.5 கிராம் தங்கத்தின் உண்மையான மதிப்பு 13,750 ரூபாய். மீதி 6,250 ரூபாய் உங்களிடம் சுரண்டப்பட்டு, அதற்குப் பதிலாக, 2.5 கிராமுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள வொயிட் மெட்டல் கலக்கப்படுகிறது. கடைக்காரர்கள் பெறும் லாபத்தையும், உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'

கல் நகை... உஷார்!
மிக முக்கியமாக.. நகைக்கு பில் போடும்போது ஆபரணத்தில் எவ்வளவு தங்கம் இருக்கிறது, பிற உலோகங்கள் எவ்வளவு சேர்க்கப்பட்டுள்ளன போன்றவற்றை பதிவிடவேண்டும். கல் ஒட்டுவது போன்றவற்றுக்கு தனியாகவும், தங்கத்துக்கு தனியாகவும் கட்டணம் வாங்க வேண்டும். 

பெரும்பாலும் இன்றைக்கு அப்படி செய்வது கிடையாது. மாறாக, கல்லுடன் சேர்த்து 20 கிராம் எடை என்றால், 20 கிராம் தங்கம் என்று சொல்லி மொத்தமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். உண்மையில் அதில் 15 கிராம்தான் தங்கம் இருக்கும். மீதமுள்ள 5 கிராம் கல் (வெகு சொற்ப மதிப்புள்ளது) இருக்கும்.

இது குறித்து பேசிய நகை கடை உரிமையாளர் சங்க பொது செயலாளர் சாந்தகுமார்  கேட்டோம்

இது போன்ற நேரங்களில்  மக்கள் விழிப்புணர்வுடன் நகைகளை வாங்கவேண்டும். எங்களுக்கு இது குறித்து எந்த புகாரும் இது வரை வரவில்லை.பொதுவாக நகை வாங்குபவர்கள் முதலீடு, தேவை இரண்டு காரணங்களுக்காக வாங்குகின்றனர். முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்க ட்டிகளாகவும்,நாணயங்களாகவும் வாங்குவார்கள் .தேவைக்கு வாங்குபவர்கள் நகைகளாக வாங்குகின்றனர்.

இப்போது  உள்ள சூழலில் பான் கார்டு கொடுத்து  நகைகளை  வாங்குவது தான்' சிறந்தது.அதுவே  100 சதவிகித  பலனை தரும் நீங்கள் பான் கார்டு  மூலம் வாங்குவதால் அரசு நிர்ணயித்த விலையில் நகைகளை வாங்கலாம். இல்லை என்றால் முதலில்  நகைக்கடைக்கு சென்று தேர்வு  செய்துவிட்டு பின்னர் காசோலைகள்  மூலம் நகைகளை வாங்குவதே  சிறந்தது. 

சிலர் செல்லாத பணத்தை வாங்கி கொண்டு நகையின் விலையை இரட்டிப்பு ஆக்கி விற்பதாக கூறுகின்றனர்.அது போன்றவர்களிடம் ஏமாற வேண்டாம்.அதில்  நீங்கள் எந்த கேள்வியும் அவர்களிடம் கேட்க  முடியாமல் அவர்கள் கொடுக்கும்  நகையை வாங்கி வரவேண்டி  இருக்கும் 

எங்கு புகார் செய்வது?
தங்க நகை வாங்கும்போதோ, வாங்கிய பின்னரோ தரத்திலோ, எடையிலோ, வேறு எந்தக் குறைபாடோ வாடிக்கையாளருக்கு ஏற்பட்டால், 

இந்தியத் தர நிர்ணய ஆணையம், 
சி.ஐ.டி வளாகம், 4-வது குறுக்குத் தெரு, 
தரமணி, சென்னை-113 
என்ற முகவரி அல்லது 

044-22541988, 
044-22541216, 
9380082849 என்ற தொலைபேசி எண் 
மற்றும் 
meenu@bis.org.inஎன்ற இ-மெயில் முகவரியில் புகார் செய்யலாம். 

நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், அருகில் உள்ள நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.

தங்கத்தின் தன்மையை ஆராய பல்வேறு வழிமுறைகள் பின்பற்றுகின்றனர். 

அதில் ஒன்று எக்ஸ்ஆர்எஃப் (XRF: x-ray-fluorescence). இதன் மூலமாக ஆபரணத்தில் எவ்வளவு சதவிகிதம் தங்கம், காப்பர், சில்வர் உள்ளது என்பது போன்ற அனைத்து தகவல்களும் துல்லியமாகக் கிடைக்கும். 

இதற்கான கருவியின் விலை 10 முதல் 29 லட்ச ரூபாய். பெரிய கடைகளில் இந்த மெஷின் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மக்களுக்குத் தெரிவதில்லை, சொல்லப்படுவதுமில்லை.

நன்றி : விகடன் செய்திகள் – 16.11.2016


Saturday, July 9, 2016

யாருக்கெல்லாம் வருமானவரி பொருந்தும்?


யாருக்கெல்லாம் வருமானவரி பொருந்தும் - என்ன செய்ய வேண்டும்?

யாருக்கெல்லாம் வருமான வரி பொருந்தும்? 
எத்தனைச் சதவீதம் வரி கட்ட வேண்டும்?

வருமான வரி நான் கட்ட வேண்டுமா, இல்லையா என்று சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு யாருக்கெல்லாம் வருமான வரி பொருந்தும்? எத்தனைச் சதவீதம் வரி கட்ட வேண்டும்? என்பதைப் பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.

வயதுக்கேற்ற பிரிவுகள் 

வருமான வரி செலுத்துபவர்களை வயதுக்கு ஏற்றவாறு மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். 

பொதுப் பிரிவினர்கள் - ஆண்/பெண் 60 வயதுக்குள் 

மூத்த குடிமக்கள் - 60 முதல் 80 வயதுக்குள்

மிகவும் மூத்த குடிமக்கள் - 80 வயதுக்கு மேல்.

அடிப்படை வருமான வரி விலக்கு 

பொதுப் பிரிவினர்களுக்கு ரூ.2,50,000 வரையும், 
மூத்த குடிமக்களுக்கு 3,00,000 வரியும், 
மிகவும் மூத்த குடிமக்களுக்கு - 5,00,000 வரியும் 

வரிவிலக்கு உண்டு.

10% வரி யாருக்குப் பொருந்தும் ?

 பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 2,50,001 முதல் 5,00,000 வரை இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 3,00,001 முதல் 5,00,000 வரை இருந்தால் நீங்கள் 10% வரி கட்ட வேண்டும். மிகவும் மூத்த குடிமக்களுக்கு வரி இல்லை.

20% வரி யாருக்குப் பொருந்தும் ?

 பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால், மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால் நீங்கள் 20% வரி கட்ட வேண்டும்.

30% வரி யாருக்குப் பொருந்தும்? 

பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரு.10,00,000 மேல் இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரு.10,00,000 மேல் இருந்தால், மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரு.10,00,000 மேல் இருந்தால் நீங்கள் 30% வரி கட்ட வேண்டும்.

1 கோடிக்கும் மேல் வருமானம் இருந்தால்... 

உங்கள் வருமானம் 1 கோடிக்கும் மேல் இருந்தால் கூடுதல் கட்டணமாக 15% வரி மற்றும் கல்வி தீர்வையாக 3% வரி என மொத்தம் 18% கூடுதல் வரி நீங்கள் வரியாகச் செலுத்த வேண்டும்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » பர்சனல் - 09.07.2016




Tuesday, June 21, 2016

தங்கநகை வாங்கும்முன்


தங்கநகை வாங்கும்முன் என்ன செய்ய வேண்டும்?
தங்க நகை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை, , சென்னை, ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதன் வழங்குகிறார்…

1.சேதாரம்

வாங்கும் நகைகளின் வடிவமைப்புக்கு ஏற்ப சேதாரம் இருக்கும். பொதுவாக டிசைன் குறைவான நகைகளுக்கு சேதாரம் குறைவாக இருக்கும், அதிக வேலைப்பாடுகள் கொண்ட நகைகளுக்கு சேதாரம் அதிகமாக இருக்கும். இது நகைக்கடைகளுக்கு ஏற்ப மாறுபடும். சில கடைகள், சேதாரம் குறைந்தபட்சம் 2%ல் இருந்து ஆரம்பிக்கும் நகைகளை விற்பனை செய்கின்றன. சில கடைகளில் குறைந்தபட்ச சேதாரமே 9%ல் இருந்துதான் ஆரம்பிக்கும்.

 2. தர முத்திரை

தங்க நகைகளில் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் தரச் சான்றிதழான `பிஐஎஸ்’ (BIS – Bureau of Indian Standards) ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கவும்.

3.ஐந்து அம்சங்கள்

`பிஐஎஸ்’ முத்திரை என்பது கீழ்க்காணும் ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது…
** பிஐஎஸ் முத்திரை.

** தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால், 91.6% தூய தங்கம் (22 காரட்). 875, 833, 792 என, தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும்.

** `பிஐஎஸ்’ முத்திரை வழங்கிய சென்டரின் முத்திரை.

** குறிப்பிட்ட நகைக்கு `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்து, 2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்து, 2002-ம் வருடத்துக்கு ‘C’ என்ற எழுத்து… என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் ஆல்ஃபபெட் வரிசை நகர்ந்துகொண்டே வரும். நடப்பு ஆண்டுக்கு, அதாவது 2016-க்கு ‘Q’ என்ற எழுத்து இருக்கும்).

**நகை விற்பனையாளரின் முத்திரை.

4.ஆன்டிக் நகைகள்

ஆன்டிக் நகைகளுக்கு  (பழங்கால) சேதாரம் 25% – 30% வரை கூட செல்லும் என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் இதைத் தவிர்ப்பது நலம். அதேபோல், கல் நகைகளும் ஒப்பீட்டளவில் தங்க நகைகளை விட விலையில் எகிறும் என்பது குறிப் பிடத்தக்கது.

5.மெஷின் செயின் வேண்டாம்

மெஷினில் செய்யப்பட்டும் செயின்கள் அறுந்துவிட வாய்ப்புள்ளது என்பதால் தவிர்க்கவும். ஆனால், எது மெஷின் கட் செயின், எது கையால் செய்யப்பட்டது என்பதை வாடிக்கையாளர்கள் கண்டறிந்துகொள்வது சிரமமே! நம்பிக்கையுள்ள நகைக்கடையில் வாங்கும்போது, அவர்களிடமே அதுபற்றி கேட்டுத் தெளிந்து கொள்ளலாம்

6.காரட், 916… விளக்கம்

தூய தங்கத்தை நகைகளாகச் செய்தால் உடைந்துவிடும். எனவே, அதன் ஸ்திரத்தன்மைக்காக மற்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன. 24 கேரட் தங்கம் என்பது, 100% தூய தங்கம். 916 தங்கம் என்பது, 91.6% தூய தங்கம். அதாவது, அதில் மீதியுள்ள சதவிகிதம் மற்ற உலோகங்களின் கலவை. 22 காரட் சுத்த தங்கமான இதில், மற்ற இரண்டு காரட் உலோகக் கலவை சேர்ந்துள்ளது. இப்படி கலந்தால்தான் தங்கத்தை நகையாக வார்க்க முடியும். இதில் 19, 18, 17 காரட் எனச் செல்லச் செல்ல, தங்கத்தின் அளவு குறைந்து, மற்ற உலோகத்தின் அளவு அதிகமாகும்.

7.எடையில் கவனம்

என்னதான் நகையில் பார் கோடு இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எடையை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. சிறிய நகைக்கடை, பெரிய நகைக்கடை என எங்கு நகை வாங்கினாலும், எடை தராசில் அதை செக் செய்துவிட வேண்டியது மிகவும் முக்கியம். மேலும், பில்லில் மொத்த தொகையை மட்டும் பார்த்துவிட்டு பணத்தைச் செலுத்தாமல், செய்கூலி, சேதாரம், கற்களுக்கான விலை என்று ஒவ்வொன்றையும் நிதானமாகப் பிரித்துப் படித்துப் பார்த்து, சந்தேகம் இருந்தால் நகைக்கடையில் கேட்டுத் தெளிவுபெற வேண்டும்.

8.விலை

சுத்த தங்கத்தின் (24 காரட்) விலையும், ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலையும் வித்தியாசப்படும். கையில் பணம் வந்தவுடன் மொத்தமாக நகைககளில் முதலீடு செய்ய நினைக்காமல், தங்கத்தின் விலை ஏற்ற, இறக்க நிலவரத்தை சிறிது நாட்கள் கவனித்து, அது குறையவிருக்கிறதா, கூடவிருக்கிறதா என்பதை துறை சார்ந்த பத்திரிகைகள், வல்லுநர்கள் மூலமாக ஆலோசனை பெற்று, பின்னரே நகைக்கடைக்குச் செல்லவும்!

9.பழைய நகைகள்

பழைய நகையை மாற்றி புது நகை வாங்கும்போது, தரத்தை காரணம் சொல்லி பழைய நகையின் எடையில் அதிக கிராம்களை கழித்துவிடுவார்கள். எனவே, எப்போதும் இதற்கு வாய்ப்பில்லாத வகையில் `916′ நகைகளை வாங்கு வதுடன், வாங்கிய கடையிலேயே அதை மாற்ற வேண்டியதும் அவசியம்.

10.கூடுதல் வரி

ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகக் கொடுத்து தங்க நகைகள் வாங்கும்போது, ஒரு சதவிகிதம் மூல வரி செலுத்த வேண்டும். அதுவே அந்த விலைக்கு தங்க காயின்கள், பார்கள் வாங்கும்போது அதற்கு வரி செலுத்தத் தேவையில்லை. 

11.`கேடிஎம்’ தவிர்க்க…

`கேடிஎம்’ (KDM) முத்திரை என்பது, நகைக்கடையால் வழங்கப்படும் உத்தரவாதம். இதன் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உரியது என்பதால், `கேடிஎம்’ என்பதை தங்கத்தின் தூய்மைக்கான சான்றாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, `பிஐஎஸ்’ முத்திரைக்கே முக்கியத்துவம் கொடுக்கவும்.

12.ரசீது அவசியம்

தங்க நகை வாங்கும்போது அதற்கு உண்டான ரசீது வாங்குவது அவசியம். ‘வரி வேண்டாம்’ என சிலர் ரசீது வாங்காமல் விட்டுவிடுவார்கள். இன்னும் சில கடைகளில் மதிப்பீட்டு ரசீதை பில் என்று சொல்லி கொடுப்பார்கள். பின்னாட்களில் நகையிலோ அல்லது அதன் தரத்திலோ ஏதேனும் பிரச்னை என்றால், ரசீதுடனேயே சம்பந்தப்பட்ட நகைக்கடையில் அதைக் கோர முடியும் என்பதால், தவறாமல் பில் கேட்டு வாங்கவும்.

நன்றி : அவள்விகடன் - 28.06.2016

Tuesday, June 14, 2016

வருமானவரி கணக்குத் தாக்கல்


வருமானவரி கணக்குத் தாக்கல் - என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி கணக்குத் தாக்கல்… புதிய மாற்றங்களை கவனியுங்கள்! 
ஏ டு இசட் டிப்ஸ்

 வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது நுணுக்கமான பல விஷயங்களை கவனிக்க வேண்டும். எனவேதான், ஒரு ஆடிட்டரின் துணையோடு இதை செய்ய முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஆனால், சிற்சில விஷயங்களை உங்களால் கவனமாக செய்ய முடியும் எனில், நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் ரீஃபண்ட் கோரிப் பெறுவதும் சுலபமாகிவிட்டது.

ஆனால், இதை ஒழுங்காக செய்ய வேண்டும் என்பது மட்டும் கட்டாயம்.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது யார் எந்தப் படிவத்தை உபயோகிக்க வேண்டும், கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உள்ள மாறுதல்கள் என்ன, பொதுவாக ஏற்படக்கூடிய தவறுகள் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில், நிதி ஆண்டு 2015-16, மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) 2016-17-க்கான விவரங்களை பார்ப்போம்.

யாருக்கு எந்தப் படிவம்?

ஐடிஆர் 1 (சகஜ்) – ITR 1 (SAHAJ)

தனிநபர்கள் – இவர்களின் வருமானம் பின்வரும் வகையைச் சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 1 படிவம்தான்.

1. பென்ஷன் அல்லது சம்பளம்.

2. வீட்டு வாடகை – முன்வருடத்திய இழப்புக்களை (carry forward loss) இவ்வாண்டுக்கு கொண்டு வரப்படாததாக இருக்க வேண்டும். ஒரே ஒரு சொந்த வீடு மட்டும் தான் இருக்க வேண்டும்.

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் போன்றவைகளிலிருந்து வருமானம் இருக்கக்கூடாது.

4. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

5. செக்‌ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணமும் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது (Double Taxation Relief).

ஐடிஆர் 2 – (ITR 2)

தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப (HUF) அமைப்புக்களும் – வருமானம் பின்வரும் வகை சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 2 படிவம்தான்.

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால். 

3. முதலீட்டு வரவு (Capital  gains)

4. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம்

5. தனிநபர்கள், இந்தியர்களாக கருதப்பட்டு வெளிநாட்டு சொத்துக்கள் இருந்தால் அல்லது வெளிநாட்டு வருமானம் வந்தால்.

ஐடிஆர் 2ஏ ( ITR 2A)

தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்களும் – வருமானம் இந்த வகை சார்ந்ததாக இருந்தால்.

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை  –  ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வந்தாலும்

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் சேர்த்து

4. செக்‌ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணம் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது

5. வெளிநாட்டில் சொத்து அல்லது வெளிநாட்டு வருமானம் இருக்கக்கூடாது

ஐடிஆர் 4 எஸ் (ITR 4S -SUGAM)

தனிநபர்கள், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்களாக இருக்கக்கூடாது

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – இதில் முன்வருடத்திய நஷ்டம் இருக்கக் கூடாது.

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் லாட்டரி குதிரைப் பந்தயம் தவிர்த்து.

4. தொழில் வருமானம் – இந்த வருமானம் செக்‌ஷன் 44 AD அல்லது செக்‌ஷன் 44 AE-ன் கீழ் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.

5. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

6. செக்‌ஷன் 90/91 அடியில் நிவாரணம் கேட்கப்பட்டிருக்கக் கூடாது.


ஐடிஆர்  3 (ITR 3)

தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்புக்கள், பார்டனர்ஷிப் நிறுவனங்களில் பார்ட்னராக இருந்து இவர்கள் வேறு தனி உரிமை (proprietorship) நிறுவனத்திலிருந்து வருமானம் இல்லாது மற்றும் இவர்களின் வருமானம், வட்டி, கமிஷன் அல்லது ஊதியம் மற்றும் போனஸ், இப்படி ஒன்றாக இருக்குமென்றால்.

ஐடிஆர் 4 (ITR 4)

இது தனி உரிமை நிபுணத்துவ வணிகம் (proprietary business profession) நடத்துபவர்களுக்கு. வருமான வரம்பு கிடையாது. சம்பளம், வீட்டு வாடகை, மற்ற எல்லாவித வருமானங்களும், குதிரைப் பந்தயம் லாட்டரி உட்பட, இந்தப் படிவத்தில் காட்டலாம்.

இதுவரை குறிப்பிட்டவை தனிநபர்களுக்கான படிவங்கள். இவை தவிர, ஐடிஆர் 5, 6, 7 படிவங்கள் இருக்கின்றன. அவை முற்றிலும் நிறுவனங் களுக்கானவை என்பதால் அவற்றை விட்டுவிடலாம். 

இந்த வருடம் என்ன மாற்றங்கள்..?

இந்த வருடம் என்ன வகை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன என்று பார்ப்போம்.

1.  வரி செலுத்துபவரின் வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்குமானால், 
ஷெட்யூல் ஏஎல் (AL) பூர்த்தி செய்யவேண்டும். இந்த ஷெட்யூல் தனிநபரின் அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் கணக்காகும். இது ITR 1, 2, 2A, 3, 4, 4S படிவங்களுக்கும் பொருந்தும். அதாவது, 31.3.2016 நிலவரப்படி இருக்கும் நிலம், வீடு, கையிருப்பு பணம், நகை, தங்கம், வாகனம் (படகு, விமானம்) தவிர, இந்தப் பொருட்களின் மீதான கடன்.

ஏஎல் ஷெட்யூலில்  தரப்பட வேண்டிய சொத்துக்கள் அவை வாங்கப்பட்ட விலையில் காண் பிக்கப்படவேண்டும். அவை வெகுமதியால் அல்லது மரபுரிமை யால் பெற்றிருந்தால் அதன் முன் உரிமையாளரின் வாங்கப்பட்ட விலையைக் குறிப்பிட வேண்டும்.

2. வணிக அறக்கட்டளை அல்லது முதலீட்டு நிதியிலிருந்து (Business Trust or investment fund) பெறப்பட்ட வருமானம். 
ஷெட் யூல் பி.டி1-ல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது ஐடிஆர் 1, 2, 2ஏ, 3, 4-க்கு பொருந்தும்.

3. மூலத்தில் வரிப் பிடித்தம் (Tax Collected at Source – TCS): 
இந்த விவரங்கள் ஷெட்யூல் டிசிஎஸ்-ல் கொடுக்கலாம். ஐடிஆர் 1, 2, 2 ஏ-க்கு பொருந்தும். ரூ. 2 லட்சத்திற்கு மேல் தங்கம் அல்லது ரூ. 5 லட்சத்திற்கு மேல் நகை, ரொக்கம் கொடுத்து வாங்கும்போது, விற்பவர் நம்மிடம் அந்த தங்கத்தின் மேல் வரி விதித்து அதை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார். டிடிஎஸ் போல, இது டிசிஎஸ். போன வருடம் வரை இதற்கு படிவத்தில் இடம் இல்லாதிருந்தது. இப்போது படிவம் மாறுதலால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.


4 ஐசிடிஎஸ் (ICDS – Income computation and Disclosure Statement) – 
இது ஐடிஆர்4-க்கு பொருந்தும். இதை வர்த்தகத்தில் வரும் வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்வது என சில விதிமுறைகள், சர்வதேச கணக்கியல் முறைப்படி (international accounting standard) அமைக்கப்பட்டுள்ளது. காண்பிக்கப்பட்ட வருமானக் கணக்கின்படி இதில் ஏதேனும் மாறுதல் இருப்பின், அதை இந்த ஷெட்யூலில் காண்பிக்க வேண்டும்.

ஐசிடிஎஸ் என்பது தனி மனித வருமானம் காட்டப்படும்போது வரும். உதாரணமாக, ரூ.10 லட்சம் டெபாசிட் மார்ச் மாதம் 20-ம் தேதி போடப்படுவதினால் அந்த வருட வட்டி வருமானத்தில் இந்த 11 நாட்களுக்கான வட்டி காட்டப்படாமல் அடுத்த வருடம் காண்பிக்கப்படும். ஆனால், சர்வதேச கணக்கியல் முறைப்படி, அக்குரூட் (Accrued) என்று காட்டப்பட்டு, இந்த வருட வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

செக்‌ஷன் 80 சிசிடி (1பி) {CCD(1B)}  கீழ் ரூ.50,000 வரை கூடுதல் வரிச் சலுகை உண்டு. அதாவது, தேசிய பென்ஷன் முறையில் (National Pension Scheme) இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டால். இதற்கான கூடுதல் இடமும் இந்தப் படிவத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இவை தவிர, கூட்டாண்மை நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்களுக்கான (Partnership, Trust, companies) மாறுதல்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாலும், அவை எல்லாம் நிறுவனங்களுக்கானவை என்பதால் அவற்றைப் பற்றி நாம் இங்கே விவரிக்கவில்லை. 
புதிய படிவங்களும் அவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் கவனித்து வரி கணக்குத் தாக்கல் செய்வது அவசியம்!

லதா ரகுநாதன், ஆடிட்டர், எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை.

நன்றி : நாணயம் விகடன் - 12.06.2016

Monday, May 30, 2016

வருமான வரி ரீபண்ட் பணத்தை உடனடியாக திரும்பப்பெற


வருமான வரி ரீபண்ட் பணத்தை உடனடியாக திரும்பப்பெற
என்ன செய்ய வேண்டும்?

சென்னை: எல்லாரும் வருமான வரி விவரங்களை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்து முடித்து ரீபண்ட் தொகைக்காக காத்திருக்கும் நேரம் இது. ஒரு வருடத்திற்கான வருமானத்தைச் சரியான முறையில் கணக்கிட்டு வருமான வரியைச் செலுத்தினாலும், பல்வேறு காரணங்களுக்காக வருமான வரிதுறையிடம் செலுத்திய வரிப் பணத்தில் மீதமுள்ள தொகையை திருப்பிப் பெறுவது மிகவும் சவாலான விஷயமாக தான் இன்றளவும் உள்ளது. 

சரி உங்கள் வரிப் பணத்தை உடனடியாக திரும்பப்பெற உதவும் 10 வழிகளை நாம் இப்போதும் பார்ப்போம்.

1) வருமானவரி விவரங்கள் தாக்கல் செய்வது கட்டாயம்:

 உங்களுக்கு வருமான வரி ரீஃபன்ட் அல்லது அதிக வரி திரும்பக் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் வரிவிவரங்களைத் தாக்கல் செய்திருக்க வேண்டியது அவசியம். வருமான வரித் துறை உங்கள் கணக்குகளைத் தானே செய்து உங்களுக்கான வரிப் பணத்தைத் திரும்பத் தராது.

2) வரி விவரங்களைக் கெடுவுக்குள் தாக்கல் செய்தல்: 

வருமானவரி தாக்கல் செய்யவேண்டிய கடைசி நாள் வரை காத்திருக்காமல் கூடிய வரையில் தாக்கல் செய்துவிடுங்கள். உங்கள் அதிகப் பட்ச வரியை உடனே திரும்பப் பெறும் வழிகளில் இதுவும் ஒன்று. இந்த வருடம் நிறையபேர் ஒரு வாரத்திற்குள் ரீஃபண்டுகளைப் பெற்றதாக அறிகின்றோம்.

3) ஆன்லைனில் வரிவிவரத் தாக்கல் 

நடப்பாண்டு முதல் உபரிவரியை திரும்பப் பெற விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. எனவே நேரடி விண்ணப்பங்களை நம்பிக்கொண்டு வழிமுறை சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

4) ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ் ஆகியவற்றை ஒப்பிட்டுச் சரிபார்த்தல் 

ஃபார்ம் 16-இல் (டிடிஎஸ்) மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள வருவாய் மூல வரித் தொகை சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டியது அவசியம். வருமான வரித்துறை ஃபார்ம் 26ஏஎஸ் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொகைப் படிதான் உபரிவருவாயை திரும்ப அளிக்கும். எனவே வரிவிவரத் தாக்கலுக்கு முன்னதாக இவ்விரு படிவங்களில் உள்ள தொகைகளையும் சரிபார்த்தல் மிகவும் அவசியம்

5) டான் எண்ணைச் சரியாக அளிக்க வேண்டியது அவசியம்

 டான் நம்பர் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பிரத்தியேகமாக வழங்கப்படும் வரிவிதிப்பிற்கான எண்ணாகும். எனவே ஃபார்ம் 16 படிவத்தில் உள்ள டான் எண்ணைச் சரியாக அறிந்து வரிவிவரத் தாக்கல் செய்யும்போது குறிப்பிடவேண்டும். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில் வரித்துறை உங்களுக்கு உபரி வரியைத் திரும்ப அளிக்காது அல்லது அதற்கான காரணம் கேட்டு உங்களுக்கு அறிவிப்பை அளிக்கும் (ஏனெனில் உங்கள் டான் எண் வெவ்வேறாக அல்லது தவறாக இருக்க வாய்ப்புள்ளது) 

6) சரியான வங்கி விவரங்களைத் தரவேண்டும் 

உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக உங்கள் உபரி வரித் தொகையைப் பெற நீங்கள் கோரியிருந்தால் அதற்கான சரியான வங்கி விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டியது அவசியம். இதில் தவறுகள் ஏற்பட்டால் உங்கள் பணம் திரும்பப் பெறுவதில் காலத் தாமதம் ஏற்படலாம். உங்கள் வங்கிக் கணக்கு எண் (பத்து இலக்க எண்), வங்கியின் எம்ஐசிஆர் குறியீட்டு எண் மற்றும் வங்கிக் கிளை மற்றும் தொடர்புக்கான முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.

7) சரியான முகவரியைத் தரவேண்டும் 

உங்கள் பணத்தைத் திரும்பப் பெற அஞ்சல் வழியைத் (காசோலை மூலம்) தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் முகவரியை சரியாகத் தரவேண்டியது அவசியம். இதில் தவறு ஏற்பட்டால் அனுப்பப்பட்ட காசோலை மீண்டும் வரித்துறைக்கே சென்றுவிடும். இதனால் தேவையற்ற தாமதங்கள் ஏற்படும். ஒருவேளை நீங்கள் காசோலையைத் தாமதமாகப் பெற்று அதற்கான பணம் பெறும் தேதி காலாவதி ஆகியிருந்தால் உங்கள் பகுதி கணக்கு அதிகாரியை அணுகவும். இது புதிய காசோலையைப் பெற உங்களுக்கு உதவும்

8) பான் கார்டிலுள்ள பெயரும் வங்கிக் கணக்குப் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். 
உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் பெயரும் பான் கார்டிலுள்ள பெயரும் வெவ்வேறாக இருந்தால் அது உங்கள் தொகையைப் பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும். ஒருவேளை உங்கள் தொகை கொடுக்கப் பட்டுவிட்டதாக் குறிப்பிடப்பட்டு ஆனால் நீங்கள் தொகையைப் பெறவில்லையெனில் உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள். அதில் எந்தக் குழப்பமும் இல்லாதபட்சத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையை அணுகவும். ஏனென்றால் இந்த வங்கி வருமான வரியைத் திரும்பத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. 
Cash Management Product (CMP) 
State Bank of India 
SBIFAST 
31, Mahal Industrial Estate Off Mahakali Caves Road 
Andheri (East) 
Mumbai - 400093 
Phone Number: 18004259760 
or 
email at itro@sbi.co

9) சரியான வருமான வரிப்படிவம் (ITR) தெரிவு செய்யுங்கள் 

இந்தப் படிவத்தைத் தெரிவு செய்வது மிகவும் சுலபம். ஆனாலும் இன்னும் பலர் இதனைத் தவறாகவே தெரிவு செய்கின்றனர். இந்தத் தவறு வரித் தொகையைத் திரும்பப் பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும்.

10) உங்கள் ரீஃபண்டை கவனித்து உறுதி செய்யுங்கள் 

உங்கள் ரீஃபுண்ட் திரும்பக் கிடைக்கவில்லையென்றால் அதன் நிலையினை அடிக்கடி கவனித்து அறிந்துகொள்ளுங்கள். இது ஏதாவது தடங்கல் அல்லது தடை இருப்பின் அதைக் களைந்து தாமதத்தைத் தவிர்க்க உதவும். இதைச் செய்ய வருமான வரித்துறையின் பின்வரும் இணையத் தளத்திற்குச் சென்று சரிபார்க்கலாம்

வேறு கடைசி வழி ஏதாவது இருக்கிறதா? 

உங்களுக்கு உங்கள் பணம் திரும்பக் கிடைக்க வில்லையென்றாலோ அல்லது உங்கள் புகாருக்குப் பதில் இல்லையென்றாலோ உங்களுக்கு இறுதியாக இருக்கும் வழி தகவல் பெறும் உரிமைச் சட்டம். அதற்கான எந்த ஒரு குறிப்பிட்ட படிவமும் இல்லை. நீங்கள் 10 ரூபாய் கட்டணம் அஞ்சல் ஆணை, வங்கி வரைவு அல்லது நீதிமன்ற கட்டண வில்லை (கோர்ட் ஃபீ ஸ்டாம்ப்) மூலம் செலுத்த வேண்டும். உங்கள் விண்ணப்பத்தில் உங்களைப் பற்றிய பெயர், முகவரி, வரி ஆய்வு வருடம், பான் கார்டு எண், நிலுவையிலுள்ள தொகை உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை உங்கள் பகுதி வருமான வரி ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். (பதிவுத்தபால மூலமாக அனுப்புவது நல்லது)

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 30.05.2016

Monday, April 6, 2015

டீமேட் கணக்கு (Demat Account)


DEMAT ACCOUNT
********************
பங்கு சந்தையில் வரத்தகம் செய்திட நமக்கு மின் ஆவணக் கணக்கு எனப்படும் டீமேட் கணக்கு (Demat Account) அவசியம்.

நாம் வர்த்தகம் செய்திடும் அனைத்து விதமான பதிவுகளும் இக்கணக்கில் பதிவாகி இருக்கும். இந்நிலையில் இக்கணக்கு வைத்திருப்பவர்கள் நோயின் காரணமாகவோ, உடல்நலக்குறைவின் காரணமாகவோ அல்லது வயோதிகம் காரணமாகவோ திடீரென்று இக்கணக்கிற்கு நாமினி அதாவது கணக்கிற்கு வாரிசாக யாரையும் நியமிக்காமல் மரணமடைந்தால், இக்கணக்கில் இருக்கும் பங்குகளின் நிலை என்ன??

இக்கட்டாண நிலையில் ஆவணக்கணக்கிற்கு வாரிசாக இன்னொருவரை நியமனம் செய்யாமலோ, அல்லது உயில் எழுதி வைக்காமலோ ஒருவர் இறந்து விடும் பட்சத்தில், அவருடைய மின் ஆவணக்கணக்கில் அதிக மதிப்புடைய பங்குகள் இருக்குமாயின், இறந்தவரின் மரபுவழி வழித்தோன்றல் (சட்டரீதியான வாரிசு) கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி பங்குகளை கையகப்படுத்தும் உரிமையை பெறலாம்.

1) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழின் நகல்.

2) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட வழிமுறையுரிமை (மரபுவழி வாரிசுரிமை) சான்றிதழ் நகல் அல்லது உயில் இல்லாமல் இறந்திருந்தால், தகுதிவாய்ந்த நீதிமன்றம் வழங்கும் ஆணை

3) விருப்புறுதிச் சான்றிதழ் நகல் (Probate) அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட நிருவாக உத்தரவு (Letter of Administration). மேற்கூறிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், என்ன செய்ய? இறந்தவரின் சட்டரீதியான வாரிசு கீழ்க்காணும் ஆவணங்களை சமர்ப்பித்து பங்குகளை கையகப்படுத்தும் உரிமையை பெறலாம்.

a)பங்கு மாற்று பத்திரத்தை பூர்த்தி செய்வதின் மூலம் பங்கு மாற்று உரிமை கோரலாம்.

b) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழ் நகல் கொண்டு உரிமை கோரலாம்.

c) நீதித்துறை சாரா முத்திரத்தாளில் பெறப்பட்ட காப்புறுதிக் கடிதம் (Letter of Indemnity) 

d) நீதித்துறை சாரா முத்திரத்தாளில் பெறப்பட்ட பிரமாணப் பத்திரம் (Affidavit) 

e) பங்கு மாற்று உரிமைக்கு ஒப்புதல் அளிக்கும், இறந்தவரின் சட்டரீதி வாரிசுகளின் ஒப்புதல் பெற்ற தடையில்லா சான்றிதழ்