disalbe Right click

Showing posts with label மத்திய பட்ஜெட். Show all posts
Showing posts with label மத்திய பட்ஜெட். Show all posts

Thursday, February 2, 2017

மத்திய பட்ஜெட் 2017


மத்திய பட்ஜெட் 2017 

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை: 

ரூ.5 லட்சம் வரை 5 சதவீதமாக வரி குறைப்புரூ.10 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு | ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை | அனைத்து ரயில்களிலும் பயோ கழிப்பறை | குறு, சிறு நிறுவனங்களுக்கு 5% வரி குறைப்பு | ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் | ஆன்லைன் ரயில் டிக்கெட் சேவை வரி ரத்து

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் 2017-18-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் முதல்முறை யாக ரயில்வே பட்ஜெட் இணைக் கப்பட்டுள்ளது.

 பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளி யிட்டு நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

விவசாய கடனுக்கு இலக்கு

ரூ.10 லட்சம் கோடிக்கு விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசன திட்டங்களுக்காக நபார்டு உதவியுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க 250 டிஜிட்டல் தேசிய வேளாண் சந்தைகள் செயல்படு கின்றன. இவற்றின் எண்ணிக்கை 585 ஆக அதிகரிக்கப்படும். பால் வளத்தைப் பெருக்க நபார்டு உதவியுடன் ரூ.8,000 கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும். வறட்சியை சமாளிக்க 10 லட்சம் குளங்கள் வெட்டப்படும்.

ஒரு கோடி குடும்பங்கள் மீட்பு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் 2019-ல் கொண் டாடப்பட உள்ளது. அதற்குள் அந்தி யோதயா திட்டத்தில் ஒரு கோடி ஏழை குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 2019-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். 2018, மே மாதத்துக்குள் 100 சதவீத கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கு சலுகை

ஆண்டுக்கு ரூ.50 கோடி வருவாய் ஈட்டும் குறு, சிறு நிறுவனங்களுக்கு தற்போது 30 சதவீத வரி விதிக்கப் படுகிறது. இது 5 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

ரயில் பயணிகளின் பாதுகாப் புக்காக ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் ஏற்படுத்தப்படும். 

2020-க்குள் அகல ரயில் பாதைகளில் ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அகற்றப்படும். 3500 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும். புதிதாக 25 ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும். 500 ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக மின்தூக்கி, மின் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.

7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி வசதி ஏற்படுத்தப் படும். வரும் 2019-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களிலும் பயோ கழிப்பறைகள் அமைக்கப் படும். ஆன்லைன் ரயில் டிக்கெட்டு களுக்கான சேவை வரி ரத்து செய்யப்படும். புதிய மெட்ரோ ரயில் சட்டம் வரையறுக்கப்படும்.

வரி தள்ளுபடி

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத் துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.

 வருமான வரிச் சட்டம் அத்தி யாயம் 8, பிரிவு 87ஏ-ன் கீழ் ரூ.3.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.2,500 வரி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.3 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் பல்வேறு வரிச்சலுகைகளின்படி தனிநபர்கள் ரூ.4.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரிவிலக்கு பெற முடியும்.

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 15 சதவீத கூடுதல் வரிவிதிப்பும் தொடரும்.

ஏராளமானோர் வரிஏய்ப்பு

கடந்த 2015-16-ம் ஆண்டில் 3.7 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் 99 லட்சம் பேர் தங்களது வருவாய் ரூ.2.5 லட்சத்துக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

1.95 கோடி பேர் தங்களின் வருவாய் ரூ.5 லட்சத்துக்குள்ளும் 52 லட்சம் பேர் ரூ.10 லட்சத்துக்குள்ளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 25 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ரூ.5 லட்சத்துக்கு மேலான வருவாய்க்கு வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் மாத சம்பள தாரர்கள் ஆவர். அந்த வகையில் 56 லட்சம் மாத சம்பளதாரர்கள் முறையாக வரி செலுத்துகின் றனர்.

நாடு முழுவதும் 13.94 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. 

இதில் 2.76 லட்சம் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கடந்த ஆண்டு கணக்கு தாக்கல் செய்துள்ளன. 2.85 கோடி நிறுவனங்கள் ஒரு கோடிக்கு குறைவாகவும், 28,557 நிறுவனங்கள் 10 கோடிக்கு குறை வாகவும் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளன. 7,781 நிறு வனங்கள் மட்டுமே ரூ.10 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டுவதாக கணக்கு சமர்ப்பித்துள்ளன.

நாட்டில் விற்பனையாகும் கார்கள், வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக் கையை ஒப்பிடும்போது ஏராள மானோர் வரிஏய்ப்பில் ஈடுபடுவது தெளிவாகிறது.

கறுப்புப் பணத்தைக் கட்டுப் படுத்த டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். மேலும் ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 02.02.2017