disalbe Right click

Showing posts with label குடும்ப அட்டை. Show all posts
Showing posts with label குடும்ப அட்டை. Show all posts

Wednesday, February 19, 2020

ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுத் துறை வேண்டுகோள்!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுத் துறை வேண்டுகோள்!
ரேஷன் பொருட்கள் விற்பனை தொடர்பாக அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ்., விபரத்தை கவனிக்குமாறு, கார்டுதாரர்களுக்கு, உணவுத் துறை வேண்டுகோள் விடுத்துஉள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், 2.05 கோடி கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.
இதற்காக, தமிழக அரசு ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. பல அரிசி கார்டுதாரர்கள், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரேஷன் கடைகளில், காகித ரசீது இருந்தபோது, வாங்காத பொருட்களை வாங்கியது போல், பதிவேடுகளில் எழுதி, முறைகேடு செய்தனர்.
இதனால், முறைகேடு விபரம், கார்டுதாரர்களுக்கு தெரியவில்லை.
தற்போது, பொருட்கள் அனுப்புவது, விற்பனை உள்ளிட்டவை, கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
அதனால், கடைகளில் விற்கப்படும் பொருட்கள், விற்பனை கருவியில் பதியப்படுகின்றன.
பதியப்பட்டதும், அந்த விபரம், கார்டுதாரர்களின் மொபைல் போன்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும்.
இதற்காக, உணவு வழங்கல் துறையிடம், 2.04 கோடி கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்கள் உள்ளன.
எஸ்.எம்.எஸ்., விபரத்தை, கார்டுதாரர்கள் கவனிப்பதில்லை.
அவ்வாறு, வாங்காத பொருட்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வந்தால், உடனே, அதை, 97739 04050/ 99809 04040 என்ற மொபைல் எண்களுக்கு, 'பார்வேர்டு' செய்ய வேண்டும்.
நடவடிக்கை
பின், அதிகாரிகள், எஸ்.எம்.எஸ்., வந்த கார்டுதாரரை தொடர்பு கொண்டு, பொருட்கள் வாங்காததை உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பர்.
பொருட்கள் வாங்காத பலர், எஸ்.எம்.எஸ்., வந்தும் புகார் அளிப்பதில்லை.
விரைவில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
எனவே, ரேஷன் எஸ்.எம்.எஸ்., விபரத்தை, கார்டுதாரர்கள் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.12.201

Sunday, February 16, 2020

ஸ்மார்ட் கார்டு நகலை இனி எளிதாகப் பெறலாம்!

ஸ்மார்ட் கார்டு நகலை இனி எளிதாகப் பெறலாம்!
ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டாலோ, தகவல்களில் திருத்தம் செய்தாலோ, அதன்   நகலைப் பெறுவது எளிதாகியுள்ளது.
நமது மாநிலம் முழுவதும், 2.06 கோடிக்கும் அதிகமான 'ஸ்மார்ட்'  (ரேஷன்)  கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.  அந்தக் கார்டில் ஏற்கனவே இருந்த தவறான தகவல்களை திருத்தினாலோ, முகவரி மாற்றம் செய்தாலோ, நகல் கார்டு பெறும் வசதி இதற்கு முன்பு ஏற்படுத்தப்படவில்லை.  திருத்தம் செய்த பிறகு இணையதளத்தில் கிடைக்கின்ற, அதற்கான ரசீது மட்டுமே, ஆதாரமாக இருந்தது.
மேலும் கார்டு தொலைந்து விட்டாலும், (Duplicate Card) நகலைப் பெற முடியாமல் இருந்ததுகடந்த, மூன்று வருடங்களாக நிலவிய  இந்த சிக்கலுக்கு, தீர்வு காணும் வகையில், மாவட்டம் தோறும் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' நகல், 'பிரின்ட்' செய்யும் மையம் தற்போது  துவக்கப்பட்டுள்ளது.
நகல் பெற விண்ணப்பிப்பது எப்படி!
  • முதலில் '-சேவை' மையம் சென்று, ஸ்மார்ட் கார்டில், பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்ட தேவையான திருத்தங்களை  செய்து கொள்ள  வேண்டும்
  • பின் ,tnpds.gov.in என்ற அரசு இணையதள முகவரிக்கு சென்று, பொது வினியோக திட்ட பகுதிக்குள் நுழைந்து, 'நகல் ஸ்மார்ட் அட்டைக்கு விண்ணப்பிக்க' என்ற கட்டத்தை 'க்ளிக்' செய்ய வேண்டும்
  • ரேஷன் கடையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை பதிவு செய்து, கடவு எண்ணையும், 'கேப்சா' குறியீட்டு எண்ணையும் 'டைப்' செய்து, சமர்ப்பிக்க வேண்டும்
  • சமர்ப்பிக்கப்பட்ட 'ஆன்லைன்' விண்ணப்பம், நேரடியாக, நீங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தனி தாசில்தாருக்கு அல்லது வட்ட வழங்கல் அலுவலருக்கு உடனே சென்று விடும்
  • அவர் அதனை சரிபார்த்து ஒப்புதல் அளித்ததும், மாவட்ட 'எல்காட்' பிரிவு இணையத்துக்கு சென்று, அங்கு ஸ்மார்ட் கார்டு  பிரின்ட் செய்யப்படும்.
  • கார்டுதாரரின் மொபைல் எண்ணுக்கு இதுகுறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
  • அந்த செல்போனுடன் தாலுகா அலுவலகம் சென்று, பெறப்பட்ட தகவலை அங்கு காண்பித்து நகல் ஸ்மார்ட் கார்டை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 16.02.2020



Wednesday, March 13, 2019

காதல் திருமணம் - ரேஷன் கார்டு தர புது நிபந்தனை


காதல் திருமணம் - ரேஷன் கார்டு தர புது நிபந்தனை
நடைமுறை என்ன?
தமிழகத்தில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவரின் பெயர்கள், வேறு கார்டில் இருக்கக்கூடாது. புதியகார்டுக்கு விண்ணப்பிபவர்கள் யாராக இருந்தாலும், பெயர் நீக்கல் சான்று அவசியம். தங்கள் பெற்றோர்களின் ரேசன் கார்டிலிருந்து தங்களது பெயரை நீக்க, முதலில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்துடன் ஒரிஜினல் ரேசன் கார்டை இணைக்க வேண்டும். பெற்றோர்களை பகைத்துக் கொண்டு காதல் திருமணம் செய்பவர்களுக்கு பெரும்பாலும் இது சாத்தியப்படுவதில்லை. அவர்களின் பெயரை கார்டில் இருந்து நீக்க, பெற்றோர் அனுமதிப்பதில்லை.இதனால், பாதிக்கப்படுவோர், சென்னையிலுள்ள, உணவு வழங்கல் துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கின்றனர்.
என்ன நடக்கிறது?
அங்குள்ள அதிகாரிகள், பயனாளியின் பெயரை கார்டில் இருந்து நீக்கும்படி, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புவார்கள். அதன்படி வட்ட வழங்கல் அதிகாரி, பதிவேட்டில் இருந்து  பெயரை நீக்கி, தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார். அதன்பின், பெயர் நீக்கல் சான்று வழங்கப்படும்அதனை, புதிய கார்டு பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பத்துடன் இணைத்து வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் சமர்ப்பித்து, கார்டு பெறலாம்.
இதற்கு, அதிக காலதாமதம் ஆவதால், காதல் திருமணம் செய்தவர்கள், ரேஷன் கார்டு பெற மிகவும் சிரமப்படுகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
எந்த ஒரு திருமணமாக இருந்தாலும், ஆணுக்கு, 21; பெண்ணுக்கு, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த தம்பதிக்கு, பெற்றோர்  விருப்பம் இல்லாவிட்டாலும், தங்களின் குடும்ப ரேஷன் கார்டில் இருந்து, தங்களது பெயரை நீக்கிக் கொள்ள உரிமை உள்ளது. காதல் திருமணம் செய்தவர்கள், தங்களது பெற்றோரின் கார்டில் இருந்து, தங்களது பெயரை நீக்கி கொள்ள, 100 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாளில், இதனால் ஏற்படுகின்ற'சட்ட நடவடிக்கைக்கு முழுப் பொறுப்பாவோம்' என, கையொப்பமிட்ட உறுதி மொழி பத்திரம் ஒன்றை வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் அளிக்க வேண்டும். மேலும், இந்த பத்திரம், திருமண பதிவு சான்று ஆகியவற்றை, பெயர் நீக்க கோரும் மனுவுடன், தங்கள் பகுதி உணவு வழங்கல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  
*****************************************ஆதாரம் : தினமலர் செய்திகள் - 14.03.2019