disalbe Right click

Thursday, September 6, 2018

தாசில்தாருக்கு தண்டணை

தாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம்
அரியலூர்: நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை அலைகழித்த தாசில்தாருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து அரியலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 47. விவசாயியான இவர், கீழப்பழூவூர் கிராமத்தில் வாங்கி உள்ள நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்கக்கோரி, 2014 ஆகஸ்ட், 21ல் அரியலூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தார்.
ஆனால், இவரது விண்ணப்பத்தின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், பாலசுப்ரமணி பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு செலவுக்காக, 2,000 ரூபாய் பாலசுப்ரமணிக்கு வழங்கவும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அரியலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டது. இதன் பின்னரும், நடவடிக்கை இல்லை. இதை அடுத்து, மீண்டும் பாலசுப்ரமணி அரியலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நுகர்வோர் நீதிமன்ற குறைதீர்ப்பு மன்ற தலைவர், ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார்.அதில், 2014 2015ல் பணியில் இருந்த, அரியலூர் தாசில்தார் வைத்திஸ்வரனுக்கு, மூன்று மாதம் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.07.2017
வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் பிறப்பித்த ஆனை நகல்





நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்களுக்கு.

No comments:

Post a Comment