disalbe Right click

Showing posts with label வீடு. Show all posts
Showing posts with label வீடு. Show all posts

Monday, October 15, 2018

புது வீடு… வாஸ்து ரகசியங்கள்!

புது வீடுவாஸ்து ரகசியங்கள்!
நம் உடலுக்கு எந்தக் கேடும் வராமல் நூறு வயதுக்கு மேலும் நல்லபடியாக வாழவேண்டும் என்று விரும்புகிறோம். ஆரோக்கியம் சிறக்கவும் ஐஸ்வரியம் மேலோங்கவும் அயராமல் பாடுபடுகிறோம். அதேபோல், நாம் நிரந்தரமாக வசிக்க விரும்பும் வீடும் ஸ்திரமானதாகவும் அங்கே நாம் வாழும் வாழ்க்கை சுபிட்சமாகவும் இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின்படி முறைதவறாமல் நமது வீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும்.
நிலையான ஒரு வாழ்க்கைக்கு வீட்டின் அமைதியான பங்கும் அவசியம். ஓர் இடத்தை அதாவது காலி இடத்தை விலைக்கு வாங்குவதற்கு வாஸ்துவின் பங்கு பெருமளவில் தேவையில்லை. அதேநேரம், அந்த இடத்தில் நாம் என்ன கட்டப்போகிறோம் என்பதைப் பொறுத்து வாஸ்துவுக்கான பரிகாரங்கள் மாறுபடும். அங்கே கட்டடம் கட்டத் துவங்குவதற்குமுன், முதல் செங்கலை எடுத்துவைக்கும்போதே நாள், நட்சத்திரம், கிரகநிலை போன்ற அனைத்தையும் பார்த்து ஆரம்பிக்கவேண்டும். இந்த நிகழ்வைஆதான லக்னம்என்கிறது சாஸ்திரம்.
அடிக்கல் நாட்டுதல் குறித்து அறிவீர்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தில் தங்கப்போகும் நபர்களுக்கு அல்லது தொடங்கப்போகும் வியாபாரத்துக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படும் வைபவம் இது. இப்படி, உத்தமமான முறையில் துவங்கிச் செய்யப்படும் எந்த ஒரு செயலும் நன்மையை மட்டுமே விளைவிக்கும். இதுபோன்று இன்னும்பல விரிவான நியதிகளைச் சொல்கிறது வாஸ்து சாஸ்திரம்.
எந்த நட்சத்திரம் உகந்தது?
ரோகிணி, மிருகசீரிடம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதமம். அவற்றில் வீடுகட்ட ஆரம்பிக்கக் கூடாது.
அதேபோன்று கிரகப்பிரவேசம் செய்வதற்கு உத்திரம், உத்திராடம், ரோகிணி, சித்திரை, ரேவதி, அனுஷம், மிருகசீரிடம் ஆகியவை விசேஷமானவை. அஸ்தம், அசுவினி, பூசம், அவிட்டம், சதயம், சுவாதி, திருவோணம், புனர்பூசம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்களைத் தவிர்த்துவிடலாம்.
`அஷ்டம சித்திஎன்று ஒன்று உண்டு. அதாவது, எந்த லக்னத்தில் வீடு கட்ட ஆரம்பிக்கிறோமோ, அதற்கு எட்டாவது இடத்தில் சூரியன், செவ்வாய் ஆகியவை இருக்கக்கூடாது. புதன் தனித்திருந்தால் தப்பில்லை; ஆனால், சூரியன் அல்லது செவ்வாயோடு சேர்ந்திருக்கக்கூடாது. ராகு, கேது ஆகியவையும் இருக்கக்கூடாது. எட்டாம் இடத்தில் சுப கிரகங்கள் இருக்கவேண்டும்.
வீடு கட்டும் பணியை எப்போது தொடங்கலாம்?
கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும்.
மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் வேலையை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்யவேண்டும்.
வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத் தொடங்குவது சிறப்பு.
தெற்கு திசை பார்த்த வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் தொடங்குவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்களைத் தவிர்த்து ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் வாஸ்து பகவான் தூங்கிக்கொண்டிருப்பார். அவரை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. இவற்றை கோண மாதங்கள் என்பார்கள். இந்த மாதங்களில் கட்டடம் கட்டத் தொடங்குவதைத் தவிர்க்கவேண்டும். அதேநேரம், இடம் வாங்குவது போன்ற செயல்களில் தாராளமாக ஈடுபடலாம்.
திருமணம் முதலான சுபகாரியங்களுக்கு ஜாதகம் பார்ப்பது போன்று, வீடு கட்டும் விஷயத்திலும் ஜாதகம் பார்த்து, கிரக நிலைகளை ஆராய்ந்து, வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கான வேளை வந்துவிட்டதா என்பதில் தொடங்கி, பல விவரங்களையும் தெரிந்துகொண்டு அதில் ஈடுபடுவது சிறப்பு.
அதேபோன்று வீட்டுக்காக வாங்கும் நிலத்தையும் உத்தமமானதாக தேர்வு செய்ய வேண்டும். உண்டு புசிக்கத் தகுந்த காய், கனிகளைத் தரக்கூடியதும், நல்ல காற்றோட்டம் தரக்கூடியதுமான செடி-கொடிகளும் வீடு வாங்கும் பகுதியில் இருக்கவேண்டும். வேம்பு மாதிரியான பால் சுரக்கும் விருட்சங்கள் அங்கு இருப்பது கூடுதல் விசேஷம்.
என்னென்ன இருக்கக் கூடாது?
நாம் வாங்கப்போகும் வீட்டுக்கு பக்கத்தில் என்னென்ன இருக்கக் கூடாது என்பது குறித்தும் வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
நெல் வயல்கள், ஓங்கி உயர்ந்த மலைகள், சமுத்திரம், ஆசிரமம், மயானம் போன்றவற்றை ஒட்டிய பகுதிகளில் வீடு வாங்கக் கூடாது. அதேபோன்று வீட்டு மனை அதாவது வீடு கட்டப்படவுள்ள நிலங்கள் எப்படியிருக்க வேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
வீடுகட்ட உகந்த மனைகள் எவை?
கோ வீதி: கிழக்கு மூலை தாழ்ந்து மேற்கு உயர்ந்திருக்கும் நிலப் பகுதி கோ வீதி எனப்படும். இதில் வீடு கட்டினால் அபிவிருத்தி ஏற்படும்; வளம் பெருகும்.
ஜல வீதி: கிழக்கு மூலை உயர்ந்து மேற்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி ஜல வீதி எனப்படும். இந்த நிலத்தில் வீடு கட்டும் முயற்சியில் இறங்கக்கூடாது.
யம வீதி: வடக்கு மூலை உயர்ந்திருந்து, தெற்கு மூலை தாழ்ந்திருக்கும் பகுதி யம வீதி எனப்படும். இந்த நிலமும் வீடு கட்ட உகந்ததல்ல.
கஜ வீதி: தெற்கு மூலை உயந்திருந்து, வடக்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி, கஜ வீதி ஆகும். இங்கு வீடுகட்டுவது விசேஷம்.
பூத வீதி: வடகிழக்கு மூலை சற்று உயர்ந்திருந்தாலும், தென்மேற்கு மூலை தாழ்ந்திருந்தாலும் அந்த நிலம் பூத வீதி ஆகும். இது, வீடுகட்டுவதற்கு உசிதமானது அல்ல.
நாக வீதி: தென்கிழக்கு மூலை உயர்ந்திருந்தாலும், வடமேற்கு மூலை தாழ்ந்திருந்தாலும் அங்கே வீடு கட்டுவது கூடாது. இதை நாக வீதி என்பார்கள்.
அக்னி வீதி: வடமேற்கு மூலை உயர்ந்திருந்து, தென்கிழக்கு பகுதி தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதி வீடுகட்ட சிறப்பானது. இதை அக்னி வீதி என்பார்கள்.
தான்ய வீதி: நிருதி மூலை உயர்ந்தும், ஈசான்யம் தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதியை தான்ய வீதி என்பார்கள். இதுவும் வீடுகட்ட உகந்ததாகும்.
வாங்கியிருக்கும் நிலம் அல்லது மனை வாஸ்து சாஸ்திரம் தவிர்க்கச் சொல்லும் அமைப்புப்படி இருந்தால், உரிய பரிகாரங்கள் மற்றும் ஹோமங்களைச் செய்துவிட்டு கட்டடப் பணிகளைத் தொடங்கலாம்
.
***************************************************************************
சந்திராஷ்டமம்
ஒருவர் பிறந்த நட்சத்திரம் இருக்கும் ராசிக்கு, 8-வது ராசியில் அமையும் நட்சத்திரங்கள் சந்திராஷ்டமம் உள்ளவை. அந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைப்பதைத் தவிர்க்கவேண்டும். புதிய காரியங்கள் தொடங்குவதையும் தவிர்க்கவேண்டும். உதாரணமாக அசுவினி நட்சத்திரம் உள்ள மேஷத்துக்கு எட்டாவது ராசி விருச்சிகம். அதற்குரிய நட்சத்திரங்கள் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகியவை. ஆகவே, அசுவினி நட்சத்திரக்காரருக்கு இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமணம் வைக்காமல் இருத்தல் நலம். இந்த லக்னத்திலும் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
சந்திராஷ்டம நாட்களில் தொடங்கும் புதிய காரியங்கள் கலகத்திலும் தாமதத்திலும் முடியலாம். மிக முக்கியமான நிகழ்வுகளுக்காக நாள் பார்க்கும்போது, சந்திராஷ்டமம் பார்க்கவேண்டும். திருமணம் பற்றித் தீர்மானிக்கும்போது மணமகன், மணமகள் இருவருக்கும் சந்திராஷ்டமம் பார்க்கவேண்டும். அதேநேரம், குடும்பத்தில் உள்ள எல்லோரது நட்சத்திரத்துக்கும் சந்திராஷ்டமம் பார்த்து நாள் நிர்ணயிக்க வேண்டுமென்றால், எந்த நாளும் கிடைக்காது; அது தேவையில்லை. ஒரு நிகழ்வுக்கு உரிய முக்கிய கர்த்தாவுக்கு மட்டுமே சந்திராஷ்டமம் பார்க்கவேண்டும். சந்திராஷ்டம நாள்களைத் தெரிந்துகொள்ள எளிய அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
குறிப்பு: அட்டவணையின் முதல் பாகத்தில் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் கீழ் உள்ள எண், இரண்டாம் பாகத்தில் அதாவது சந்திராஷ்டம நட்சத்திரங்களுக்கான அட்டவணையில், எந்த நட்சத்திரத்தின் கீழ் உள்ளதோ, அதுவே சந்திராஷ்டம நட்சத்திரம் ஆகும். உதாரணம்: அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு விசாகம் சந்திராஷ்டம நட்சத்திரம் ஆகும். மக நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டம நட்சத்திரம் பூரட்டாதி. நட்சத்திரங்களுக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் உள்ள எண்கள் நட்சத்திரப் பாதங்களைக் குறிக்கும்.

**********************************************நன்றி : விகடன் செய்திகள் - 09.10.2018