disalbe Right click

Showing posts with label மோசடி குற்றங்கள். Show all posts
Showing posts with label மோசடி குற்றங்கள். Show all posts

Friday, December 1, 2017

போலி பதிவுச் சான்று தயாரித்த கணினி ஆப்பரேட்டர் டிஸ்மிஸ்

காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த கணினி ஆப்பரேட்டர் போலி ஆர்.சி. (பதிவுசான்று) தயார் செய்தது தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
காரைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட், செப்டம்பர் 29-ம் தேதி கிணற்றடி காளியம்மன் கோயில் தெருவில் மரக்கடையில் பணம் வைத்து சீட்டு விளையாடிய மாத்துார் மணக்காடை சேர்ந்த துரைப்பாண்டி உட்பட 11 பேரை கைது செய்தார். அவர்களிடமிருந்து ரூ.36 ஆயிரத்து 745 மற்றும் 10 டூவீலர்களை பறிமுதல் செய்தார். விசாரணைக்கு பின் அவற்றை காரைக்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இதில் துரைப்பாண்டி டூவீலர் அவரது உறவினர் மணிமேகலை பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
டூவீலரை திரும்ப பெறுவதற்காக மணிமேகலை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நகல் மூலம் விண்ணப்பித்ததால், ஒரிஜினல் பதிவு சான்றை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
ஒரிஜினல் பதிவு சான்று கைவசம் இல்லாததால் .தி.மு..,வை சேர்ந்த டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசனை வாகன உரிமையாளர் அணுகியுள்ளார்.
அவர் ஆர்.டி.., அலுவலகத்தில் உள்ள கணினி ஆப்பரேட்டர் கார்த்திகேயனிடம்டூப்ளிகேட் பதிவுச்சான்று ஏற்பாடு செய்து தருமாறு கூறியுள்ளார்.
கணினி ஆப்பரேட்டர் கார்த்திகேயன், தன்னிச்சையாக செயல்பட்டு, போலி ஆர்.சி.,புத்தகம் தயார் செய்து கணேசனிடம் கொடுத்துள்ளார்.
ஆர்.சி., புத்தகத்தின் நகல் 2013-ம் ஆண்டு என இருந்ததால், அப்போதைய வட்டார போக்குவரத்து ஆய்வாளரின் கையெழுத்து போலியாக போட்டுள்ளார்.
வாகன உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆர்.சி.,புத்தகத்தை தாக்கல் செய்தபோது, அதில் சந்தேகம் எழவே, அதன் உண்மைத்தன்மை குறித்து பரிசோதிக்க கூறப்பட்டது. தற்போதைய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் விசாரணைரித்து, அந்த சான்று போலியானது என அறிக்கை தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக கார்த்திகேயன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவனிடம் கேட்டபோது, கணினி ஆப்பரேட்டர் கார்த்திகேயன் குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்ததால், அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார், என்றார்.
 நன்றி : தினமலர் நாளிதழ் - 02.12.2017 

Friday, September 29, 2017

போலி ஆவணம் வாயிலாக பெயர் மாற்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்!

போலி ஆவணம் வாயிலாக பெயர் மாற்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்! 
சென்னை, மின் இணைப்பு பெயர் மாற்ற, 'போலி' ஆவணங்களை தாக்கல் செய்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது; கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்து உள்ளது
வேலுார் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவைச் சேர்ந்த, ஜெயராமன் தாக்கல் செய்த மனு:
அரக்கோணம் தாலுகா, நெடும்புலி கிராமத்தில், காசிம் சாகிப் மற்றும் அவரது மகன்களிடம் இருந்து, ஒரு பகுதி நிலம் வாங்கினேன்அதில், கிணறு, 'பம்ப் செட்' உள்ளது. நிலத்தின் மற்றொரு பகுதியை, என் தந்தை மற்றும் சகோதரர் வாங்கினார். நிலத்துக்கான மின் இணைப்பை, என் பெயருக்கு மாற்றினேன். தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்தினேன்.
இந்நிலையில், நிலம், பம்ப் செட் இருந்த நிலத்தை, தயாளன் என்பவருக்கு, காசிம் சாகிப் விற்றுள்ளார். அதனால், மின் இணைப்புக்கான ஆவணத்தில், என் பெயரை நீக்கி, தயாளன் பெயரை சேர்த்து விட்டனர். இந்த பெயர் மாற்றத்தை, ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தாக்கல் செய்த, அசல் விற்பனை பத்திரத்தில், ஆறு பக்கங்கள் உள்ளன. அதை, பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்ட போது, அசல் பத்திரத்தில் உள்ள நான்காவது பக்கம், பத்திரப்பதிவு ஆவணங்களில் இல்லை.
அசல் விற்பனை பத்திரத்தில் உள்ள, நான்காவது பக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான்காவது பக்கத்தை, இடைச்செருகல் செய்திருக்க வேண்டும்பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, விற்பனை பத்திரத்தின் முத்திரைத்தாள் மதிப்பு, 2,150 ரூபாய்; மனுதாரர் தாக்கல் செய்த, அசல் விற்பனை பத்திரத்தின் முத்திரைத்தாள் மதிப்பு, 2,200 ரூபாய். அதாவது, 50 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாளை, நான்காவது பக்கமாக இணைத்திருப்பதன் வாயிலாக , இந்த மதிப்பு வருகிறது.
அசல் விற்பனை பத்திரத்தில், ஒரு பக்கத்தை இணைத்து, மனுதாரர் மோசடி செய்திருப்பது தெரிகிறது. எனவே, மின் வாரியத்தின் உத்தரவில் குறுக்கிட முடியாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது.
அந்த தொகையை, சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள, பால குருகுலத்துக்கு அளிக்க வேண்டும். விற்பனை பத்திரத்தில் மோசடி செய்ததற்காக, மனுதாரர் மீது, கிரிமினல் புகார் கொடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.09.2017