disalbe Right click

Showing posts with label RTI - தீர்ப்பு. Show all posts
Showing posts with label RTI - தீர்ப்பு. Show all posts

Thursday, July 30, 2020

தகவல் ஆணையர் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு

தகவல் ஆணையர் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்
விருதுநகர் மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்களிடம் கடந்த 23.06.2018 அன்று சில தகவல்களை நான் கேட்டிருந்தேன். அதற்கு அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(எப்)ன் கீழ் அது வரவில்லை என்று ஏதோ சில தகவல்களை மட்டும் வழங்கியிருந்தார். 
அந்த தகவல்களும் பொருத்தமானதாக இல்லாத காரணத்தால் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் 26.07.2018 அன்று  முதல் மேல்முறையீடு செய்திருந்தேன். அதற்கு அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. 
அதனால் மாநில தகவல் ஆணையத்திற்கு 01.10.2018 அன்று எனது 2வது மேல்முறையீட்டை சமர்ப்பித்தேன். வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கு SA 7248/A/2018 என்ற எண்ணும் வழங்கப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணை சென்னையில் மாநில தகவல் ஆணையத்தில் 26.02.2020 அன்று நடைபெற்றது. நான் ஆஜரானேன். தகவல் ஆணையர் திரு தட்சணாமூர்த்தி அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
பொது தகவல் அலுவலர் வந்திருந்தாலும் எனது எல்லாக் கேள்விகளுக்கும் ஆணையர் அவர்களே பதில் அளித்தார். ஒரு தலைப்பட்சமாகவே வழக்கு நடத்தப்பட்டது. முடிவில் எந்தவித தகவலும் வழங்க வேண்டியதில்லை என்று ஆணையும் பிறப்பித்தார். 
எனக்கு தபாலில் அனுப்பப்பட்ட எனது வழக்கு குறித்த ஆணை 20.03.2020 அன்று கிடைத்தது  ஆனால்,  மாநில தகவல் ஆணைய இணையதளத்தில் எனது வழக்கு குறித்த ஆணை பதிவேற்றம் செய்யப்படவில்லை. அன்றைய 26.02.2020 தினத்தில் 22 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் எனது இந்த வழக்கு (SA 7248/A/2018) ஏனோ பதிவு செய்யப்படவில்லை. ஆனால், எனது மற்றொரு வழக்கின் ஆணை  (SA 5331/2018) பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீராய்வு மனு தாக்கல் 
கோப்பில் உள்ள தகவலை வழங்க மறுத்தது தவறு என்றும் தகவல் ஆணையர் திரு தட்சணாமூர்த்தி அவர்கள் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளார் என்றும் உரிய ஆதாரங்களுடன் தலைமை தகவல் ஆணையர் திரு ஆர். ராஜகோபால் அவர்களுக்கு 24.03.2020 அன்று சீராய்வு மனுவை பதிவுத்தபால் மூலம் தாக்கல் செய்தேன். அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆ.ம. எண்:NC.991-2020 என்ற எண் வழங்கப்பட்டுள்ளதாகவும்  எனது செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலை அனைவரிடத்திலும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 30.07.2020.

Friday, May 29, 2020

ஒரு ஆணைக்கு எதிரான மற்றொரு ஆணை

ஆணை பிறப்பித்து 15 மாதங்களுக்கு மேலாகிவிட்டது! 
அந்த ஆணைக்கு எதிராக மற்றொரு ஆணை இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரியின் மீது வழக்குத்தொடர வேண்டும் என்றால், இந்திய தண்டணைச்சட்டம் பிரிவு 197-ன் கீழ் அந்த அரசு அதிகாரியின், உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. திருத்தங்கல் காவல் ஆய்வாளர் திரு சௌ.இராஜா அவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பதிவுத்தபால் மூலமாக கடந்த 08.05.2018 அன்று ஆதாரங்களை சமர்ப்பித்து அனுமதி கேட்டிருந்தேன். பதில் ஏதும் வழங்கப்படவில்லை. அதனால் குறைதீர்க்கும் நாளில் 11.06.2018   மீண்டும் அதனை நினைவூட்டி விண்ணப்பித்திருந்தேன். அந்த விண்ணப்பமானது, அங்கிருந்த மாவட்ட காவல்துறை அலுவலர் அவர்களிடம் அப்போதே நேரடியாக வழங்கப்பட்டது. அதற்கும் பதில் ஏதும் வழங்கப்படவில்லை. அதனால், (1) எனது விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுத்து திருத்தங்கல் காவல் ஆய்வாளர் மீது வழக்குத் தொடர எப்போது அனுமதி வழங்குவீர்கள் என்ற தகவலையும், (2) ஒரு அரசு பணியாளர்கள் மீது ஒருவர் வழக்கு தொடர்வதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன? என்ற தகவலையும் 
  1. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களிடம் கடந்த 06.07.2018 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தேன். 
  2. அந்தக் கடிதமானது விருதுநகர் மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்களுக்கு 11.07.2018 அன்று துறை மாற்றம் செய்யப்பட்டது.
  3. அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட காவல்துறை பொது தகவல் அலுவலர் அவர்கள், முப்பது நாட்களுக்கு மேலாகியும் எனக்கு எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை.
  4. அதனால் 18.08.2018 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு எனது முதல் மேல்முறையீட்டை பதிவுத்தபால் மூலமாக அனுப்பினேன்.
  5. அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நாற்பத்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் எனக்கு எந்தவித தகவலையும் வழங்கவில்லை.
  6. அதனால் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு எனது இரண்டாவது மேல்முறையீட்டை கடந்த 03.10.2018 அன்று அனுப்பினேன்.
  7. எனது வழக்கு தகவல் ஆணையத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு SA7331/2018 என்று எண் வழங்கப்பட்டது.
  8. அந்த வழக்கின் மீது 21.01.2019 அன்று, கனம் தகவல் ஆணையர் திரு தட்சணாமூர்த்தி அவர்களால், மனுதாரருக்கு  முப்பது நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று ஒரு ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. 
  9. அந்த ஆணையில், உத்தரவை செயல்படுத்த தவறும்பட்சத்தில் பிரிவுகள் 20(1), 20(2) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட நேரிடும்! என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
  10. அந்த ஆணையின் நகலை இணைத்து எனக்கு தகவல்களை வழங்குமாறு மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்களுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை 01.02.2019 அன்று அனுப்பினேன். 
  11. இந்த கடிதத்திற்கு பதில் அளிக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத்தகவல் அலுவலர்தான்! என்று எனது வழக்கு சம்பந்தமான கடிதங்கள் அனைத்தையும் அங்கு அனுப்பிவிட்டு அதனை மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்கள்  25.02.2019 (34 நாட்கள் கழித்து) எனக்கும் தெரிவித்திருந்தார்.
  12. அந்த கோப்பை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியரக பொதுத்தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரது 08.05.2018 & 11.06.2018 ஆகிய இரு விண்ணப்பங்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 09.05.2018 & 30.05.2018 கடிதம் மூலமாக உரிய நடவடிக்கைக்காக, மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது; ஆகவே தாங்கள் தான் அதற்கான தகவல்களை அளிக்க வேண்டும் என்று 20.03.2019 அன்று அந்த கோப்பை மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்களுக்கே திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்.
  13. நான் கோரிய தகவல்கள் எனக்கு வழங்கப்படாத காரணத்தால், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த   29.03.2019 அன்று தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினேன். 
  14. அதன்பிறகு அந்த வழக்கின் மீது மீண்டும் ஒரு ஆணையை 18.05.2020 அன்று தகவல் ஆணையர் கனம் தட்சணாமூர்த்தி அவர்கள் பிறப்பித்துள்ளார். 
  15. அதில் நான் கோரிய தகவல்கள் கிடைக்கப் பெறாதவை என்றும், அதனால் எனது மனு முடிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனை கீழே காணலாம்.

Sunday, April 12, 2020

தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளை பயன்படுத்தாத தகவல் ஆணையம்

தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளை பயன்படுத்தாத 
தகவல் ஆணையம்
தகவல் ஆணையத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் கதை
  • கடந்த மாதம் தமிழ்நாடு தகவல் ஆணையம் வழங்கிய ஒரு தீர்ப்பை காண நேர்ந்தது.  
  • அதில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், சேத்துபட் ஊராட்சியைச் சேர்ந்த திரு ரிஸ்வான் அகமத்துல்லா என்ற மனுதாரர்  தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 6(1)ன் கீழ் ஆறு தகவல்களை செய்யாறு நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் அவர்களிடம் முறைப்படி கேட்கிறார்.
  • தகவல்கள் வழங்கப்படுகிறது. 
  • மனுதாரருக்கு பொதுத் தகவல் அலுவலர்  அவர்கள் வழங்கிய தகவல்கள் திருப்தி அளிக்காத காரணத்தால் முதல் மேல்முறையீடு செய்கிறார்.
  • மீண்டும் தகவல்கள் வழங்கப்படுகிறது. 
  • ஆனால், ஐந்து தகவல்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 
  • இதனால் மனுதாரர் இரண்டாம் மேல்முறையீட்டை தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கிறார். 
  • ஆணையர் அவர்கள் விசாரணை நடத்தி பதினைந்து நாட்களுக்குள் தகவல் வழங்க உத்தரவிடுகிறார். 
  • தகவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டும் அந்த ஒரு தகவலை பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் அந்த குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் வழங்காமல், மிகவும் காலதாமதமாக ஐம்பது நாட்கள் கழித்து வழங்குகிறார். 
  • ஆகையால், பொதுத்தகவல்  அலுவலர்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் மீண்டும் தகவல் ஆணையத்திடம் முறையீடுகிறார். 
  • விசாரனை மீண்டும் நடக்கிறது. 
  • ஆனால், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் தகவல் ஆணையம் எடுக்கவில்லை வழக்கை முடித்து வைக்கிறார்கள்

  • இந்த வழக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரைமுறைகள் கனம் தகவல் ஆணையர் அவர்களால் பின்பற்றப்படவே இல்லை. 
  • மனுதாரருக்கு 15 நாட்களுக்குள் தகவலை வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது. 
  • அதுவும் ஒரே ஒரு தகவல்தான். அதையும் கூட பொது தகவல் அலுவலர் அவர்கள் ஐம்பது நாட்களுக்குப் பிறகே வழங்குகிறார். 
  • மனுதாரர் புகார் அளித்தும், தகவல் ஆணையத்தின் ஆணையை மதிக்காத பொது தகவல் அலுவலருக்கு தண்டணை ஏதும் வழங்கப்படவில்லை. 
  • இந்த விசாரணைக்கு மனுதாரர் நேரில் சென்னைக்கு அவரது சொந்த செலவில் வரவழைக்கப்பட்டிருக்கிறார். 
  • ஒப்புக்கு ஒரு விசாரணை நடத்தி வழக்கை முடித்து வைக்கிறார்கள். 
  • இன்னும் சொல்லப்போனால், தனது ஆணையை பொது தகவல் அலுவலர் அவர்கள் மதிக்காதது  பற்றி தகவல் ஆணையர் கனம் தமிழ்குமார் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. 
  • இப்படி ஒரு சட்டம்! இதற்கு ஒரு ஆணையம்! 
  • இவர்களுக்கு மாதம் இரண்டேகால் லட்ச ரூபாய் சம்பளம்!
  • மக்களது வரிப்பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கும் இந்த நாடு எப்படி உருப்படும்?
தீர்ப்புகளின் நகல்களை டவுண்லோடு செய்ய கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
,
************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 13.04.2020 

Saturday, March 21, 2020

பதிவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய முடியாது!

பதிவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய முடியாது! 
எங்களது சங்கத்தில் நடக்கின்ற மோசடி
எங்களுடைய சங்க நிர்வாகத்தில் பல மோசடிகள் நடந்துள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்ற சங்க நிர்வாகிகளுக்கு சாதகமாக விருதுநகர் மாவட்டப்பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் நல்லதொரு பாதுகாப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவர்கள் என்ன தவறு செய்து இருந்தாலும், அதனை ஆதாரபூர்வமாக நான் நிரூபித்தாலும் தீர்ப்பு என்னமோ அவர்களுக்கு சாதகமாகத்தான் வழங்கப்படுகிறது. மாவட்டப் பதிவாளர் மட்டும்தான் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார் என்று பார்த்தால் பதிவுத்துறையே அவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. 
மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் செய்த பல மோசடிகள்
நான் சங்க நிர்வாகிகள் மீது ஆதாரத்துடன் புகார் அளிப்பேன். யாராவது ஆதாரங்களுடன் புகார் அளித்தால் விசாரணை நடத்த வேண்டும் அல்லவா?  உடனே எனக்கு விசாரணை அழைப்பு விடுக்கப்படும். நானும், ஆஹா, மாவட்டப் பதிவாளர் விசாரணைக்கு நம்மை அழைத்துவிட்டார்; இதோடு சங்க நிர்வாகிகளின் மோசமான நிர்வாகத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடும்! என்று அந்த விசாரணைக்கு ஆர்வத்துடன் செல்வேன். விசாரணை நடக்கும். நான்  சங்க நிர்வாகிகளின் மீது ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுவேன். என்முன்னே அவர்களை மிரட்டுவது போல் மாவட்டப் பதிவாளர் பாசாங்கு செய்வார். அவர்கள் தலையை சொரிவார்கள். என்னை மட்டும் அனுப்பிவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்.
விசாரணையின் முடிவு அறிவிக்க மாட்டார்கள்
நடந்து முடிந்த விசாரணையின் முடிவை மாவட்ட பதிவகத்தில் இருந்து புகார்தாரரான எனக்கு வழங்கவே மாட்டார்கள். ஆனால், வழங்கியது போல ஒரு ஏற்பாட்டை செய்து கொள்வார்கள். இது சமீபத்தில்தான் எனக்கு தெரிய வந்தது. அதுபற்றிய ஆதாரமும் எனக்கு எதேச்சையாக கிடைத்தது. இதுபற்றிய செய்தியை 17.03.2020 அன்று ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து அதனை அறிந்து கொள்ளலாம். 
ஆவணங்களை ஆய்வு செய்தால் என்ன?
சங்க நிர்வாகிகளும், பதிவுத்துறையும் சேர்ந்து செய்கின்ற அத்தனை மோசடிகளையும் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தபோது, சங்க நிர்வாகிகள் பதிவுத்துறையில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்தால் என்ன? என்று ஒரு யோசணை தோன்றியது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (ஜே) ன் கீழ், விருதுநகர் மாவட்டப்பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்களுக்கு, கடந்த 2001ம் ஆண்டு முதல் கடந்த 2019ம் ஆண்டு வரை எங்களது சங்க நிர்வாகிகள் தங்களிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் தாங்கள் அவர்களுக்கு, மற்றவர்களுக்கு அனுப்பிய கடிதங்களை ஆய்வு செய்து கொள்லவும், குறிப்பெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று   ஒரு கடிதத்தை கடந்த 31.08.2019 அன்று அனுப்பினேன். 
பதிவுத்துறையின் சட்டதிட்டங்கள் வேறு
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (ஜே) ன் கீழ் பதிவுத்துறையில் உள்ள சங்க ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்றும்,  பதிவுத்துறையின் சட்டதிட்டங்கள் மூலமாகவே அவற்றை ஆய்வு செய்ய முடியும் என்றும் மாவட்டப் பதிவாளர் எனக்கு 30.09.2019 அன்று கடிதம் அனுப்பினார்.
போராளிகளின் வேகத்தை தடுக்கின்ற ஸ்பீடு பிரேக்கர்
அதனால், மதுரை - பதிவுத்துறை துணைத் தலைவருக்கு எனது முதல் மேல்முறையீட்டை சமர்ப்பித்தேன். அங்கு பதிவுத்துறை துணைத் தலைவராகவும், பொது தகவல் அலுவலராகவும் வீ.வாசுகி என்று ஒரு அம்மையார் பணியாற்றி வருகிறார்கள். எனக்கு எந்த பதிலையுமே அனுப்பவில்லை. தகவல் ஆணையமானது முதல் முறையீடு செய்யாமல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்தால் அந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறார்களே தவிர, முதல் மேல்முறையீடு செய்த மனுதாரர்களுக்கு எந்தவித பதிலையும் அளிக்காத முதல் மேல்முறையீட்டு அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை. போராளிகளின் வேகத்தை தடுக்கின்ற ஸ்பீடு பிரேக்கராகவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் முதல் மேல்முறையீடு இருக்கிறது.
இரண்டாம் மேல்முறையீடு! 
”அழுதுகிட்டு இருந்தாலும் உழுதுகிட்டு இருன்னு!’ நம்ம ஊருகளில் ஒரு பழமொழி சொல்வார்கள்.  அது சட்டப்போராளிகளின் வாழ்க்கைக்கும் நன்றாக பொருந்தும். அதனால், எனது இரண்டாம் மேல்முறையீட்டை கடந்த 21.11.2019 அன்று தகவல் ஆணையத்திற்கு அனுப்பினேன்.
ஆணையம் போட்ட உத்தரவு
தகவல் ஆணையத்தில் இருந்து எனக்கு மேற்கண்ட ஆய்வு சம்பந்தமாக, விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அவர்களுக்கு அனுப்பிய உத்தரவு நகல் ஒன்றை எனக்கு 24.02.2020 அன்று அனுப்பி வைத்திருந்தார்கள். அதில் ஆய்வு செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தண்டம் விதிக்க நேரிடும் என்றும் மாவட்டப்பதிவாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அசராத மாவட்டப் பதிவாளர்
அதற்கு 04.03.2020 அன்று அனுமதி அளிக்க வழியில்லை என்று ஒரு கடிதம் மூலமாக தகவல் ஆணையத்திற்கும் சட்டம் சொல்லித் தந்திருந்தார். ஆணையம் 19.03.2020 அன்று நேரடி விசாரணைக்கு அவரை மட்டும் அழைத்தது. நானும் பல வழிகளில் விசாரணை செய்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிவுத்துறையில் ஆய்வு செய்ய அனுமதிக்கலாம்!  என்பதை எனது 14.03.2020 கடிதத்தில் மீண்டும் தகவல் ஆணையத்தின் ஆணையாளருக்கு வலியிறுத்தி இருந்தேன்.
மாவட்டப் பதிவாளர் அனுப்பி,  எனக்கு பறந்து வந்த கடிதம்
19.03.2020 விசாரணையில் நேரடியாக ஆஜரான மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள்  எப்போது விருதுநகர் வந்தாரோ, எப்போது கடிதம் எழுதினாரோ, எப்போது அனுப்பினாரோ,  21.03.2020 அன்று எனக்கு அவர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. அதில் வருகின்ற 30.03.2020 அன்று விருதுநகர் மாவட்டப் பதிவகத்தில் ஆய்வு செய்ய எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் தங்களது பார்வைக்காக கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்தவுடன் இது சம்பந்தமான அடுத்த பதிவை என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம்.


************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 21.03.2020 

Tuesday, March 3, 2020

தகவல் ஆணையத்தின் ஆணைக்கு மதிப்பு இருக்கிறதா?

தகவல் ஆணையத்தின் ஆணைக்கு மதிப்பு இருக்கிறதா?
பொது தகவல் அலுவலர்களின் நம்பிக்கை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படுகின்ற தகவல்களை எந்த ஒரு பொது தகவல் அலுவலர்களும் தற்போது வழங்குவதே இல்லை. அதற்கு முழு முதல் காரணம் தமிழ்நாடு தகவல் ஆணையம்தான். காரணம் அந்த சட்டத்தின் ஷரத்துகளை தகவல் ஆணையர்கள் எவருமே பின்பற்றுவது இல்லை. 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(1)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1) ன் கீழ் அனுப்பப்படுகின்ற விண்ணப்பத்தில் மனுதாரரால் கேட்கப்படுகின்ற தகவல்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் அல்லது பிரிவு 8 அல்லது பிரிவு 9ல் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(2)
மேற்கண்டவாறு மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்றால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததாக கருதப்படும் என்று இந்த பிரிவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல மனுக்களுக்கு  எந்தவித தகவலையும் பொது தகவல் அலுவலர்கள் வழங்குவதே இல்லை. 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1)
மனுதாரரின் கோரிய தகவலை பொது தகவல் அலுவலர் அளிக்க  மறுத்திருந்தால், தகவல் அளிக்கின்ற நாள்வரை நாள் ஒன்றுக்கு ரூ. 250/- தண்டமாக  விதித்தல் வேண்டும் என்று இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதன்படி எத்தனை பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது? 
இந்த பிரிவின்படி தண்டம் விதிப்பதென்றால், தமிழ்நாடு தகவல் ஆணையத்திலுள்ள பொது தகவல் அலுவலர் கூட தப்ப முடியாது. 
தகவல் ஆணையர்களது ஆணைக்கு மதிப்பிருக்கிறதா?
தகவல் ஆணையர்கள் தகவலை வழங்க வேண்டும் என்று கூறி ஆணை பிறப்பித்தாலும் அந்த ஆணைக்குப் பிறகும்கூட பொது தகவல் அலுவலர்கள் தகவல்களை தருவதில்லை.  
ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதா?
  1. நாங்கள் தகவல்களை வழங்கச் சொல்லி ஆணை இடுவோம்; ஆனால், நீங்கள் வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 
  2. நீங்கள் வழங்காவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லுவோம்; ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டோம் 
என்று தகவல் ஆணையர்களுக்கும், பொது தகவல் அலுவலர்களுக்கும் வாய்மொழியாக ஏதேனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதோ  என்று அனைவரும் நம்புகின்ற  அளவிற்கு, இந்த சட்டம் ஒரு கேலிப் பொருளாகிவிட்டது. ஏனென்றால், தகவல் ஆணையர்கள் மேற்கண்ட சட்டப்பிரிவுகளை  பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதே இல்லை. அதனால், ஆணையர்களின் ஆணையை பொது தகவல் அலுவலர்கள் மதிப்பதே இல்லை.
ஆனையரின் ஆணையை மதிக்காத பொது தகவல் அலுவலருக்கு ஆணையர் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தை கீழே பதிவிட்டுள்ளேன். அதனை படித்துப் பாருங்கள். நான் சொன்னது எவ்வளவு தூரம் உண்மை என்பது உங்களுக்கு விளங்கும்.




*********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020 

தலைமை தகவல் ஆணையர் அவர்களின் எச்சரிக்கை கடிதம்

தலைமை தகவல் ஆணையர் அவர்களின் எச்சரிக்கை கடிதம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(ஜே) -ன்படி விண்ணப்பம்
கடந்த 31.08.2019 அன்று விருதுநகர் மாவட்ட பதிவாளர் அவர்களது அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(ஜே) -ன்படி எங்களது சங்க நிர்வாகிகள் தாக்கல் செய்த ஆவணங்களை நேரில் ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்தேன்.
சம்பந்தமே இல்லாத தகவல்கள்
அதற்கு பொது தகவல் அலுவலரான மாவட்டப் பதிவாளர் அவர்கள், தகவல் ஆணையம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காட்டி, சம்பந்தமே இல்லாத தகவல்களை எனக்கு வழங்கி இருந்தார்.
இணையத்தில் கிடைத்த தீர்ப்பு
அவர் குறிப்பிட்டு இருந்த தீர்ப்பை தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து தேடி எடுத்து பார்த்தேன். நான் கோரி இருந்த அனுமதிக்கும், அந்த தீர்ப்பிற்கும் சம்பந்தமே இல்லை.  
பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களுக்கு முதல் மேல்முறையீடு
மதுரை ஒத்தக்கடை பகுதியிலுள்ள, பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களுக்கு எனது முதல் மேல்முறையீட்டை சமர்ப்பித்தேன். அவர் மிகவும் உத்தமர். எந்த பதிலும் வழங்கவில்லை. 
இரண்டாம் மேல்முறையீடு
முதல் மேல்முறையீட்டை 03.10.2019 அன்று அனுப்பி எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், எனது இரண்டாம் மேல்முறையீட்டை 21.11.2019 அன்று தகவல் ஆணையத்திற்கு அனுப்பினேன். 
ஆணையத்திடம் இருந்து வந்த ஆணை 
தகவல் ஆணையத்திடம் இருந்து 28.02.2020 அன்று அனுப்பிய ஆணை எனக்கு 02.03.2020 அன்று கிடைத்தது. அதனை கீழே தங்களது பார்வைக்காக பதிவிட்டுள்ளேன். 





இதற்கு பொது தகவல் அலுவலர் பதில் அளித்தவுடன் அதனையும் பதிவேற்றுகிறேன்.

***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020 

Sunday, October 20, 2019

அரசு அலுவலகங்களில் ஆவண நகல்களை பெறுவது - உயர்நீதிமன்றம் - புதிய தீர்ப்பு


அரசு அலுவலகங்களில் ஆவண நகல்களை பெறுவது 
 உயர்நீதிமன்றம் - புதிய தீர்ப்பு 
அது குறித்து வழக்கறிஞரின் விளக்கம்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம் மற்றும் பலர். (WP No.16108 of 2019 Order dated 14.10.2019)
.ஏற்கனவே நிர்ணயக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பெறுவதற்கான நடைமுறையானது ஒரு அரசு அலுவலகத்தில் இருக்கும்போது, அங்கு சில ஆவணங்களை பெற அதற்கான கட்டணத்தை தகவல் அறியும் உரிமை சட்ட விதிகளின்படி செலுத்தி அந்த ஆவணங்களைின் நகலை கோர முடியுமா?. இந்த கேள்விக்குமுடியாதுஎன்று ராபின்சன் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம் (2017) நீதிப்பேராணையில் வழங்கப்பட்ட ஆணைக்கு ஒரு மாறுதல் ஆணையாக WP 16018 of 2019-ல் வழங்கப்பட்டுள்ளது
இந்த WP No.16108 of 2019 பற்றி விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு தேர்வின் விடைத்தாள்களை வழங்க, ஏற்கனவே ஒரு நடைமுறை இருக்கின்றது. அதன்படி மாணவர்கள் ஒரு தேர்விற்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி விடைத்தாள்களை பெற்று கொள்ளலாம். (ரூ.400-என்று இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன). 
மேலும், மேற்கண்ட நடைமுறையில் பெயில் ஆன மாணவர்கள் மட்டுமே விடைத்தாளை கோரமுடியும். ஆனால் மாணவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோருவதால், அதன் விதிகளானது பக்கத்திற்கு ரூ.2 செலுத்தி பெற்று கொள்ள வழி வகை செய்கின்றது. ஒரு மாணவனின் விடைத்தாள் மொத்தம் 45 பக்கம் என்றால், அவர் ரூ.90 செலுத்தினால் போதுமானது.
மேற்கண்ட வழக்கிற்கு முன்னால் என்ன நடந்தது?
சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், அவர்கள் எழுதிய தேர்வின் விடைத்தாளின் நகலை, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கோருகின்றார்கள். பல்கலைக்கழகம் அதை வழங்க மறுக்கின்றது. தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ததில், தகவல் ஆணையம் தேர்வின் விடைத்தாளை மாணவர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக வழங்க ஆணையிடுகின்றது. தகவல் ஆணையத்தின் ஆணையை இரத்து செய்ய கோரி பல்கலைக்கழகம் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்கின்றது.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழகமானது, மாணவர்களின் விடைத்தாளை ... சட்டத்தில் கோரியதற்கு எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை ஆனால் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக விதிகளின் படி அதற்கான கட்டணத்தை செலுத்தினால், அவற்றை வழங்க தயாராக இருப்பதாக கூறுகின்றது.
.இந்த நீதிப்பேராணையில் முதலாவதாக Central Board of Secondary Education (CBSE) and another vs. Aditya Bandopadhyaya & Others (2011) 8 SCC 497 என்ற வழக்கு மேற்கோளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அந்த வழக்கில் தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு 8(1)(e)-ன் படி விடைத்தாள் வழங்க மறுக்கப்படுகின்றது
ஆனால், திருத்தப்பட்ட விடைத்தாளானது திருத்திய ஆசிரியரின் Opinion என்பதால் அது தகவல் எனும் பதத்தில் வரும் என்று தீர்மானிக்கப்படுகின்றது.
.இந்த வழக்கில் அடுத்ததாக Institute of Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain (decided on 11.04.2019 in Civil Appeal No.5665 of 2104) என்ற மாண்புமிகு உச்சநீதிமன்ற வழக்கு மேற்கோளாக எடுத்து கொள்ளப்படுகின்றது
இந்த வழக்கில் தகவலை பெற இரண்டு வழிமுறைகள் அதாவது ... சட்டம் மற்றும் நிறுவனத்தில் நடைமுறைகள், இருக்கும்போது, மனுதாரரானவர் அவருக்கு விருப்பபட்ட வழிமுறையை தேர்ந்தெடுதது கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது.
.மேற்கண்ட Institute of Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain வழக்கின் அடிப்படையில், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள் ... சட்டத்திற்கு மேலோங்கி நிற்கமுடியாது எனவும், மேலும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வர பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்ததை மற்ற நிறுவனங்களால் இயற்றப்பட்ட நெறிமுறைகள், விதிகளால் ஒதுக்கி வைக்க முடியாது எனவும், பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமே மேலோங்கி இருக்கும் (”When the Parliament enacted the law in order to develope transperancy in public administration, undoubtedly, the other procedures or regulations formulated by any other institutions, cannot prevail over the Act of the Parliament and those Rules and Regulations of the such individual institutions can never override the purpose and object of RTI Act, 2005.) எனவும் தீர்மானித்து, அதன்படி மாணவர்கள் .. .சட்டத்தில். கோரிய விடைத்தாளை அவர்களுக்கு .. விதிகளின்படி கட்டணத்தை பெற்றுக்கொண்டு சட்டப் பல்கலைக்கழகம் வழங்க மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது.
இத்துடன் இந்த நீதிப்பேராணையின் சாரம்சம் முடிவுற்றது.
****************************************************************
மேற்கண்ட தீர்ப்பு குறித்து எனது கருத்து.


.ராபின்சன் (2017) நீதிப்பேராணையில் அலுவலக நடைமுறைகள்தான் மேலோங்கி நிற்கும் என தீர்மானிக்கப்பட்டது அதற்கு காரணம் Institute of Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain வழக்கின் தீர்ப்பானது 2019-ல்தான் பகரப்பட்டது.
.ஆனால் இனிவரும் காலங்களில், மாற்று தீர்ப்பு எதுவும் உச்சநீதிமன்றத்தால் பகரப்படும்வரை Institute of Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain வழக்கின் அடிப்படையில் தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம் மற்றும் பலர். (WP No.16108 of 2019 Order dated 14.10.2019) ஆணையானது சட்ட வலிமை உள்ள ஆணையாக திகழும்.
.தற்போது ஆவணங்களின் நகலை கோர மனுதாரருக்கு இரண்டு வழிமுறைகள் 
அலுவலகத்தில் உள்ள நடைமுறையில் உள்ள கட்டணத்தை செலுத்தி கோருவது (அல்லது) 
⧭ ... சட்ட விதிகளின்படி கட்டணத்தை செலுத்தி கோருவது.
.நடைமுறையின் உள்ள விதிகளின்படி கட்டணத்தை செலுத்தி ஆவணங்களின் நகலை கோரும்போது, ஆவணங்களின் நகலை விரைவாக பெறலாம். ஆனால், .உஅ. சட்டத்தில் கோரும்போது, பொது அதிகார அமைப்பு சொல்லும் தொகையை செலுத்தி ஆவணங்களை பெற வேண்டிய நிலை என்பதால், 30-40 நாட்கள் வரை ஆவணங்களின் நகல் கிடைக்க கால தாமதம் ஆகலாம். மேலும் இந்த முறையில் பொதுவாக மனுதாரர் அலுவலகத்திற்கு நேரில் சென்றுதான் விண்ணப்பம் செய்யும் நிலை இருக்கும்.
.... சட்டத்தின்படியும் ஆவணங்களின் நகலை கோரலாம் என்ற நிலையில், அந்த அலுவலகத்திற்கு நேரடியாக செல்லாமல், வெளியூரில் இருந்து மனு செய்தே அதற்கான கட்டணத்தை செலுத்தி பெறலாம். ஆகவே மனுதாரரின் தேவைக்கு ஏற்ப எந்த முறையில் ஆவணங்களை பெறுவது அவருக்கு வசதியாக இருக்கும் என்பதை மனுதாரர்தான் முடிவு செய்ய வேண்டும்.
.உதாரணமாக மாநகராட்சிகளில் லே அவுட் காப்பி கேட்டால் அதற்கு கட்டணமாக ரூ.1000 கோருகின்றார்கள். இனி வரும் காலங்களில் ஒருவர் அந்த லே அவுட் காப்பியை ... வாயிலாக கோரினால், அந்த லே அவுட் காப்பியின் ஒளிநகலை எடுப்பதற்கான நியாயமான செலவினங்களை மட்டுமே மனுதாரிடம் இருந்து மாநகராட்சி கோரமுடியும் ஆனால், இந்த முறையில் மனுதாரர் 30 - 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
.இதுவரை சட்டப் பல்கலைக்கழகத்தில் தோல்வி அடைந்த ஆன மாணவர்கள் மட்டுமே விடைத்தாளின் நகலை பெற முடியும். ஆனால், தற்போதை தீர்ப்பின்படியும் Central Board of Secondary Education (CBSE) and another vs. Aditya Bandopadhyaya & Others (2011) 8 SCC 497-படியும், தேர்வு எழுதி தேர்வாகி, ஆனால் பெற்ற மதிப்பெண்கள் நிறைவானதாக இல்லை என்று நினைக்கும் மாணவர்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அவர்களது விடைத்தாளின் நகலை கோருவதற்கு மேற்கண்ட தீர்ப்பு மற்றும் நீதிப்பேராணையின் ஆணை வழிவகை செய்கின்றது.
.தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம் மற்றும் பலர். (WP No.16108 of 2019 Order dated 14.10.2019) ஆணையானது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக சில அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதில் இருந்த தடைகளை தகர்தெறிந்த ஆணையாகும். இந்த சிறப்பான ஆணையை வழங்கிய மாண்புமிகு நீதியரசருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
------------------------------------------------ Leenus Leo Edwards, Advocate 
இந்தப் பதிவு  அவர்களின்  Leenus Leo Edwards, Advocate  முகநூல் பக்கத்தில் இருந்து (19.10.2019) நன்றியுடன் எடுத்து பகிரப்பட்டது ஆகும்.