disalbe Right click

Wednesday, February 28, 2018

நடிகையின் உடலுக்கு அரசு மரியாதை!

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் - சிவகாசி தாலுகாவிலுள்ள மீனம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர். தெற்கிலிருந்து வடக்கே சென்று திரையிலகில் வெற்றிக் கொடி நாட்டிய நடிகைகளான பத்மினி, வைஜெயந்திமாலா, ஹேமாமாலினி ஆகியோர்கள் வரிசையில் இணைந்தவர். ஏற்கனவே மணமான போனிகபூரை மணந்த இவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருக்கின்றனர். 
அரசு மரியாதையுடன் தகனம்
ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக  துபாய் நாட்டிற்குச் சென்ற இவர் கடந்த 24ம் தேதி குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டார்.  பல தடைகளைக் கடந்து இந்தியா வந்த அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் இறந்த ஒரு நடிகைக்கு இதுபோல அரசு மரியாதை செய்வது சரிதான? என்று பலரும் புருவத்தை உயர்த்துகிறார்கள். நாட்டுக்காக அவர் என்ன செய்துவிட்டார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழத்தான் செய்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
நமது நாட்டில் உள்ள முக்கியமானவர்களில் குடியரசுத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் இறந்தால் மட்டுமே அவர்களுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.  முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு தற்போது மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டு உள்ளது. அதனால் இப்போது யாருக்கு முழு அரசு மரியாதை தரவேண்டும் என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம்
கலைத்துறையில் செய்த சேவையினால்தான்!
மறைந்து போன ஒருவருக்குஇருக்கின்ற புகழ் மற்றும் அவர் சமுதாயத்துக்கோ அல்லது அவர் சார்ந்த துறைக்கோ ஆற்றிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முழு அரசு மரியாதை தரலாம் என விதிகள் சட்டத்தில் ஏற்டுத்தப்பட்டுள்ளது.. இது போன்ற சூழ்நிலையில் ஒருவர் இறக்கும்போது அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கலாமா? அளிக்கக்கூடாதா? என்பது பற்றி அந்த மாநிலத்தின் முதல்வர், தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம்
காவல்துறையின் பொறுப்பு
முடிவெடுத்த பின்னர் இறந்தவருக்கு  முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு அந்த மாநிலத்தின் காவல்துறைக்கு வழங்கப்படும். அவர்கள் அதனை நிறைவேற்றுவார்கள். 
அதுபோன்றுதான் நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.
************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.03.2018

Tuesday, February 27, 2018

தேசிய தகுதித் தேர்வு 2018

நாடெங்கும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test) பற்றிய அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) தற்போது வெளியிட்டுள்ளது. இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய தகுதித் தேர்வு: 
2018ம் ஆண்டுக்குரிய இந்தத் தேர்வு ஜூலை 8ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை மூன்று தாள்கள் கொண்ட தேர்வானது இந்த முறையிலிருந்து இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்ட முதல் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரையிலும் (மொத்தம் 1 மணி நேரம் மட்டும்) நடத்தப்படும். இதில் மொத்தம் 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதேபோல 100 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாள் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
தேர்வை எழுத பொதுப் பிரிவினருக்கு 1000 ரூபாய் கட்டணமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.,) 500 ரூபாய் கட்டணமும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு 250 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்..
வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற தேசிய தகுதித் தேர்வை எழுதுபவர்களுக்கு வயது உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை. ஆனால், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்காக தேசிய தகுதித் தேர்வை எழுதுபவர்களுக்கு இதற்குமுன் அதிகபட்சமாக 28 வயது, உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்ச வரம்பை இப்போது 30 வயதாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது..
விண்ணப்பிக்கும் நாள்
கல்லூரி ஆசிரியர் பணிக்கு  தேசிய தகுதித்  தேர்வுக்கான முழுமையான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education)  வெளியிட்டுள்ளது. இதற்கு மார்ச் மாதம் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 5 ம் தேதி கடைசி நாளாகும்.
Website : https://cbsenet.nic.in/
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.02.2018 

நன்றி!

உங்களது பேராதரவோடு
www.selvampalanisamy.com

நன்றி, நன்றி, நன்றி!
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Monday, February 26, 2018

நன்றி, நன்றி, நன்றி!




நன்றி, நன்றி, நன்றி!
தங்களின் பேராதரவோடு
www.selvampalanisamy.com

போலீஸ் தாக்கியதால் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு

 ரூ.10 லட்சம் தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பஞ்சவர்ணம், இவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில்,
கோவையில் உள்ள ஒரு தோட்டத்தில், நாங்கள் பணியாற்றினோம். எனது கணவரின் பெயர் ஜெயபாண்டி. கடந்த  2008-ம் ஆண்டில், துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவரது சொந்த ஊருக்கு என் கணவர் ஜெயபாண்டி சென்றிருந்தார். அப்போது, அவர் தோட்ட உரிமையாளர் அனுமதியுடன், ஆழ்துளை கிணற்றுக்கு பயன்படுத்தப்படும், மின் ஒயரையும் உடன் எடுத்து சென்றார்.
வத்தல்பட்டி என்ற ஊருக்கு ஆட்டோவில் சென்ற போது, விருவீடு காவல் நிலையத்தின்  இன்ஸ்பெக்டர் திரு சக்கரை, எஸ்.., பாண்டியம்மாள், ஏட்டு ஜெயபிரகாஷ் ஆகியோர், என் கணவரை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் எடுத்துச் சென்றிருந்த மின் ஒயரை, திருடியதாக ஏற்றுக்கொள்ளுபடி கூறி, அவரைத் தாக்கியுள்ளனர்.  அவர் அதனை திருடவில்லை என்ற உண்மை தெரிந்த பிறகு, எனது கணவரை காவல்துரையினர்  விடுவித்தனர். கோவைக்கு வந்த எனது கணவர் மறுநாள் இறந்து விட்டார். போலீசார் கடுமையாக தாக்கியதால்தான், எனது கணவர் இறந்துவிட்டார் எனவே, போலீசார் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனை விசாரித்த ஆணைய நீதிபதி, டி.ஜெயச்சந்திரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேரும் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் பஞ்சவர்ணத்திற்கு, நான்கு வாரத்திற்குள், 10 லட்சம் ரூபாயை, தமிழக அரசு, வழங்க வேண்டும்
இந்த தொகையை, இன்ஸ்பெக்டர் சக்கரை உட்பட, காவல்துறைஉயைச் சேர்ந்த மூவரிடமும் இருந்துதான் வசூலிக்க வேண்டும்மேலும், அந்த மூவர் மீதும், துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்கள் மீது, கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கும் பதிவு செய்ய வேண்டும். மனுதாரருக்கு, அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 ************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.02.2018 

பதிவு செய்யப்படாத உயிலுக்கான நடைமுறை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத உயிலுக்கான  நடைமுறை :
உயிலை எழுதி வைத்தவர் இறந்து விட்ட பிறகு, அதை செல்லுபடியாக்க உயில் யாருக்கு எழுதப்பட்டதோ அந்த நபர் அந்த உயிலின் நகலை எடுத்துக் கொண்டு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். மேலும் உயில் எழுதியவரின் இறப்புச் சான்றிதழ் அவசியம்.
அத்துடன் உங்களுக்கு தான் உயில் எழுதி வைத்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக அரசு ஆவணமான "ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை" போன்ற முகவரி மற்றும் புகைப்படச் சான்றுகளையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
நீங்கள் தான் இன்னார் என சார்பதிவாளர் விசாரணை நடத்தி உறுதி செய்வார். அதன்பிறகு அந்த பதிவு செய்யப்படாத உயிலை பதிவு செய்வார். பிறகு சார்பதிவாளர் தன்னுடைய கையெழுத்து போட்டு அந்த உயிலின் நகலை தருவார். அந்த உயிலை வாங்கி கொண்டு வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று பட்டா மாறுதல் செய்து கொள்ள வேண்டும்.
உயிலை எழுதி வைத்தவர் பதிவு செய்யும் முன் இறந்து விட்டால், அதனை உயிலின் படி நிறைவேற்றுபவராக அல்லது வேறு வகையாகவோ உரிமை உடையவர் அதனை எந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுக்கு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு பதிவு விதி 69 மற்றும் பதிவுச் சட்டம் பிரிவு 40 கூறுகிறது.
பதிவு செய்யாமல் இறந்து விட்டார் என்ற காரணத்திற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். மனு அளிப்பவரின் வாக்குமூலத்தை சார்பதிவாளர் பெற்று தமிழ்நாடு பதிவு விதி 69-ன் படி விசாரணை நடத்துவார்.
உயிலின் படியும், மனுதாரரின் வாக்குமூலத்தின் படியும் யார் யாருக்கு விசாரணை பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட வேண்டுமோ அவர்கள் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்பப்படும்.
உயில் எழுதி வைத்தவர் குடியிருந்த கிராமம், சொத்து இருக்கும் கிராமம், உயில் சம்பந்தப்பட்டவர்கள் குடியிருக்கும் கிராமம் ஆகிய இடங்களில் விசாரணை பற்றி அறிவிப்பு செய்யப்படும்.
உயில் எழுதி வைத்தவர் இருந்த மாவட்டம், அவரது சொத்து இருக்கும் மாவட்டம் ஆகிய குறித்து அரசிதழில் விசாரணை அறிவிப்பு செய்யப்படும். நிலை ஆணை எண் 603-ல் கண்டபடி கட்டணம் வசூலிக்கப்பட்டு அறிவிப்பு அனுப்பப்படும்.
உண்மையாகவே இறந்தவர் தான் உயில் எழுதி வைத்துள்ளாரா? இன்னாருக்கு தான் எழுதி வைத்துள்ளாரா? என்பதை தீர்மானிக்கவே அறிவிப்புகள் செய்யப்படுகிறது.
உயிலை பதிவு செய்யாமல் இறந்து விட்ட ஒருவரின் உயிலை பதிவு செய்ய அவரது ஏஜென்ட் யாரும் மனுத்தாக்கல் செய்ய முடியாது. பதிவுச் சட்டம் 41(2)ன்படி யாருக்கு உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதோ அவர் தான் சார்பதிவாளர் முன்பு ஆஜராகி மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட அந்த உயிலால் பயன்பெறுவர் மைனராக இருந்தால் அவரது கார்டியன் அவருக்காக உயிலை சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யலாம். (நிலை ஆணை எண் 598)
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயில் எழுதலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால் உயில் எழுதி பதிவு செய்யாமல் இறந்து விட்டவர் மைனராக இருந்தாலும் அந்த உயிலையும் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். (நிலை ஆணை எண் 619).
உயில் எழுதி வைத்தவர் வசித்த இடம், உயிலில் கையொப்பம் செய்த இடம், இதற்கான அதிகார வரம்பு எல்லை ஆகியவை பரிசீலனை செய்யப்படும்.
ஒருவேளை இதெல்லாம் இல்லாத நிலையில் சார்பதிவாளர் அது குறித்து மாவட்ட பதிவாளருக்கு அறிக்கை அனுப்புவார். (நிலை ஆணை எண் 599)
பதிவு செய்யப்படாத உயில் எழுதி வைத்து இறந்த ஒருவருடைய உயிலை ஓராண்டுக்கு பிறகு தாக்கல் செய்தாலும் மாவட்ட பதிவாளருக்கு, சார்பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும். (நிலை ஆணை எண் 599)... 
நன்றி : Thiruvarur raja nandhini
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.02.2018