disalbe Right click

Showing posts with label ஸ்காலர்ஷிப். Show all posts
Showing posts with label ஸ்காலர்ஷிப். Show all posts

Sunday, December 31, 2017

பெண் கல்வி உதவித்தொகை

Universal Grants Commission என்று சொல்லப்படக்கூடிய பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அவற்றில்

பெண் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு, யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு  இந்த ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பெறுவதற்கான தகுதி என்ன?
மத்திய, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி,  பல்கலைக் கழக மானியக்குழு, 2005 --- 06ம் ஆண்டு முதல், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருந்து, முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகையினை  வழங்கி வருகிறது.
இந்தத்திட்டத்தில், தகுதியுள்ள மாணவிகள் மாதம், 3,100 ரூபாய் வீதம், 20 மாதங்கள் தொடர்ச்சியாக உதவித்தொகை பெறலாம்தொலைதுாரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவிகளுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படாது. தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவியரே இதற்கு தகுதியானவர்கள். வரும்31.01.2018  தேதிக்குள், ’ஆன் - லைன்மூலமாக  விண்ணப்பங்கள் உரிய ஆவண நகல்களுடன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இம்மாத இறுதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இம்மாதம் இறுதி (31.01.2018) வரை மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்குண்டான விபரங்களைக் காண www.ugc.ac.in என்ற இணையதளம் செல்லவும்.
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.01.2018 

Thursday, December 22, 2016

கல்லூரி மாணவ மாணவியருக்கு ஸ்காலர்ஷிப்


கல்லூரி மாணவ மாணவியருக்கு ஸ்காலர்ஷிப்

கோவை: மத்திய அரசின்,’பிரகதி’ மற்றும் ’சாக் ஷாம்’ திட்டத்தில், பாலிடெக்னிக், இன்ஜி., கல்லுாரி மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அறிவிப்பை, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) வெளியிட்டுள்ளது.

’பிரகதி’ திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முதலாமாண்டில் சேர்க்கை பெற்றுள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம். ஒற்றை பெண் குழந்தையாகவும், பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியாக கருதப்படும்.

’சாக்ஷாம்’ திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவராக இருப்பதுடன், அவரது குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சத்துக்கு மிகாமலும் இருக்கவேண்டியது அவசியம். தகுதியுள்ள மாணவர்கள், ’ஆன்-லைன்’ மூலம், 2017, ஜன., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு www.aicte-india.org என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) – 22.12.2016