disalbe Right click

Showing posts with label மூலிகை. Show all posts
Showing posts with label மூலிகை. Show all posts

Tuesday, January 9, 2018

சீரகத்தின் மகத்துவம்

நமது வீட்டின் சமையலறையில் இருக்கும் சீரகத்தின் மகத்துவம் அளவிடமுடியாதது. அகம் என்று சொல்லக்கூடிய உடலின் உட்புறத்தை சீராக்குவதாலேயே இதனை நமது முன்னோர்கள் சீரகம் என்றனர்.
அதன் பயன்களை கீழே காணலாம்.
சீரகத்தை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால், தலைச் சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன், சீரகத்தை கலந்து பருகி வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்து வந்தால், மன நோய் குணமாகும்.
சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, பிசைந்து புளியங்கொட்டை அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து காயவைத்து, அதனை துாளாக இடித்து, ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை, தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் எடுத்து சாப்பிட்டு, அதன்பிறகு மோர் குடித்து வந்தால், மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி கலந்து, சிறிது உப்பு சேர்த்து பருகினால், வாயுத் தொல்லை நீங்கும்.
சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சைப் பழச் சாற்றில் கலந்து, ஒருநாள் ஊற வைத்துக் கொண்டு அதனை, தினம் இருவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் குறையும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடியாக இடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால், உடலிலுள்ள எல்லா உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். மனித உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, தேகத்தை பளபளப்பாக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து அதனை வாயில் போட்டு மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி இலைகளை சேர்த்து வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சீரகத்தை லேசாக பொன்னிறமாக வறுத்து, அத்துடன், கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்தை அரைத்து பவுடராக்கி. அதனை தேனுடன் கலந்து லேகியமாக சாப்பிட்டால் ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாக மாறுவார்கள்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.01.2018

Tuesday, November 28, 2017

கற்பக மூலிகை - தூதுவளை

No automatic alt text available.
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.
காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல்கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்துநரைதிரைமூப்புபிணிநீக்கிவயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்.
இந்த கற்பமானது உடம்பை கல்போல் ஆக்கும்கல்லினால் செதுக்கப்பட்ட சிலைஎப்படி பன்னெடுங் காலமாக அப்படியே உள்ளதோ அதுபோல் நரைதிரைமூப்புபிணிகளை நீக்கினால் உடலும் கல்போல் ஆகும்.
சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோஅல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பிணியில்லாபெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.
அதுபோல் இந்த கற்ப மருந்தை சாப்பிடும் காலத்தில் தூய்மையான மனதுடன்இருக்க வேண்டும்.தெய்வ சிந்தனை வேண்டும்மனம் தூய்மையானால் கற்ப மருந்துசிறந்த பலனைத் தரும் என்பதில் ஐயமில்லைபொதுவாக கற்ப மருந்தை நல்ல நாள்பார்த்து சாப்பிட வேண்டும்ஆரம்பத்தில் சிறியதாக உட் கொள்ளும் மருந்தைநாட் செல்லச் செல்ல அதிகரிக்க வேண்டும்ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள்சாப்பிட வேண்டும்.
இக்காலங்களில் புளியை நீக்குவது நல்லதுமேலும் அகப் பத்தியம் என்றுஅழைக்கப்படும் ஆண் பெண் சேர்க்கையை தவிர்க்க வேண்டும்மதுபுகைபோதைப்பொருட்களை அறவே தொடக் கூடாது.
இப்படிப்பட்ட மூலிகைளின் மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்து வருகிறோம்கற்ப மூலிகைகளில் சிறந்ததான தூதுவளைபற்றி தெரிந்து கொள்வோம்.
தூதுவளை
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்றுஇதற்கு தூதுவளைசிங்கவல்லிஅளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டுஇந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும்இதன் இலைபூகாய்வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய
வேதையா நொயெலா மெய்யைவிட் டகலுமே
(தேரையர் காண்டம்)
தூதுவளைக் கற்பம்
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகுசின்னவெங்காயம்பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல்இரைப்புசளிமுதலியவை நீங்கும்.
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும்அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வாதபித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின்தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலைமாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல்இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்ஜீரண சக்தியைத் தூண்டும்தாதுவை பலப்படுத்தும்.
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும்இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.
காது மந்தம்இருமல்நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.
மூக்கில் நீர் வடிதல்வாயில் அதிக நீர் சுரப்புபல் ஈறுகளில் நீர்சுரத்தல்சூலை நீர்போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.
தூதுவளை காயை சமைத்தோஅல்லது வற்றல்ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்புகண் நோய்நீங்கும்.
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளிஇருமல்முக்குற்றங்கள் நீங்கும்பாம்பின் விஷத்தைமுறிக்கும்நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும்.
தூதுவளைக் கீரைவேர்காய்இவற்றை வற்றல்ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.
தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல்இரைப்பு நோய் அணுகாது.
மேற்கண்ட கற்ப முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்றுஇதற்கு தூதுவளைசிங்கவல்லிஅளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டுஇந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும்இதன் இலைபூகாய்வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோசட்னியாகவோபச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால்மேற்கண்ட நோய்கள் குணமாகும்இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலைமதியம்இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும்இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும்நோய் தீர்க்கவும் பயன்படும்இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும்ஆஸ்துமாஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும்வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறதுதூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றனஇதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில்எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும்நுரையீரல் வலுவடையும்.
தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்
இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை
தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததுஇது சயரோகம்பிரைமரி காம்ளக்ஸ்ஆஸ்துமாடான்சிலிட் டீஸ்தைராய்டு கட்டிகள்வாயில்கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறதுசளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறதுதைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்துபதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்துஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால்பூரண குணம் ஏற்படும்முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும்பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால்இருமல்இரைப்புசளியுடன் கூடிய காய்ச்சல்சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோசட்னியாகவோபச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால்மேற்கண்ட நோய்கள் குணமாகும்இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலைமதியம்இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும்இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும்நோய் தீர்க்கவும் பயன்படும்இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும்ஆஸ்துமாஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும்வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறதுதூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றனஇதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில்எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும்நுரையீரல் வலுவடையும்.
தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்இப்பொடியை உபயோகிப்பதால் சளிஇருமல் நீங்குகிறதுபசியை உண்டாக்குகிறதுஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்நீரிழிவு கட்டுப்படும்இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால்இருமல் உடனே நின்று விடும்.
பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும்இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கிதுவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும்உடல் வலிமை ஏற்படும்மூலரோகப் பிணிகள் குறையும்தாம்பத்ய உறவு மேம்படும்.
ஆஸ்துமா நோயாளிகள்காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால்ஆஸ்துமாவினால் ஏற்படும் சளிஇருமல் கபத்தைப் போக்கும்.
தூதுவளை இலைச்சாறு 100 மில்லிபசு நெய் 30 மில்லிஇரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டுஇதில் ஒரு தேக்கரண்டியளவுதினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும்குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்பத்தியமில்லை.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்தொண்டைப் புற்றுகருப்பை புற்றுவாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளதுஆய்வு மூலம் தொண்டைப்புற்றுவாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம்மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்திபூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறதுதூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால்எலும்புருக்கி நோய்கள்ஈளை இருமல்கபநோய்கள்மேக நோய்கள்வெப்பு நோய்கள்இரைப்புஇளைப்பு இருமல் நோய்கள்வாய்வுகுண்டல வாயு முதலியன தீரும்.
தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.
இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால்கப ரோகம் தீரும்பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.
தூதுவளை - ரசம்
தூதுவளை இலை - ஒரு கையளவு ( குட்டி கையாத்தானே இருக்கும்எண்ணி பார்த்தா 40 - 50 இலை வர வேண்டும் )
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்க்ரன்டி
பூண்டு - 5 - 6 பல் ( பெரிய பூண்டு )
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
புளி - பெரு நெல்லியளவு ( தக்காளி வேணாம்ங்க)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - ஒரு கையளவு
செய்முறை:
வானலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகுசீரகம்பூண்டு போட்டு தாளிக்கவும்
.பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அம்மி என்றால் சாலவும் நன்று )
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகுகறிவேப்பிலைமிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம்புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .
தூதுவளை இலைகுழம்பு
தூதுவளை இலை - 2 கப்
2. வாழைக்காய் அல்லது கிழங்கு - 1
3. பூண்டு - 5 பல்லு
4. பம்பாய் வெங்காயம் - 1
5. பச்சை மிளகாய் - 1
6. தேங்காய்ப்பால் - ¼ கப்
7. கடுகு - சிறிதளவு
8. வெந்தயம் - 1 ரீஸ்பூன்
9. எண்ணை - ¼ லீட்டர்
10. மிளகாய்ப் பொடி - 2 ரீஸ்பூன்
11. தனியா பொடி - 1 ரீஸ்பூன்
12. மஞ்சள்பொடி - சிறிதளவு
13. உப்பு தேவைக்கு எற்ப
14. புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
செய்து கொள்வோம்
இலையை பாதியாக மடித்து வெளிப்புறத் தண்டை முள்ளுடன் கிழித்து எடுத்துவிடுங்கள். (கத்தரிக்கோல் உபயோகித்து வெட்டிக் கொள்ளலாம்)
பின்பு இலையைக் கழுவி நன்கு நீர் வடிய விட்டுவிடுங்கள்.
வாழைக்காயை சிறிய துண்டங்களாக வெட்டுங்கள்.
வெங்காயம்பூண்டுபச்சை மிளகாய் தனித்தனியாக வெட்டி வையுங்கள்.
ஒன்றரைக் கப் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.
எண்ணையை விட்டு கொதிக்கவாழைக்காயை பொரித்து எடுத்து வையுங்கள்.
இலையையும்பொரித்து எடுத்து பேப்பர் ரிசூவில் போடுங்கள்.
சிறிதளவு எண்ணையில் கடுகுபூண்டுவெங்காயம்பச்சை மிளகாய் என்ற நிரையில் தாளித்து இறுதியாக வெந்தயம் சேர்த்துபுளிக் கரைசல் விடுங்கள்.
இத்துடன் மிளகாய்ப் பொடிதனியாப் பொடிமஞ்சள்உப்பு சேர்த்து வாழைக்காய்பொரித்த இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.
ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்து வர இறக்கி வையுங்கள்.
பொரித்த இலை வாசத்துடன் குழம்பு கமழும்.
பூண்டு வெங்காய வாசமும் தூக்கி நிற்கும்.
சாதம்பிட்டுஇடியாப்பம்பிரட்டுக்கு இக் குழம்பு சுவை கொடுக்கும்.
கடையல்:
இந்த கீரை மிகவும் முள் நிறைந்ததுமுதலில் அதில் உள்ள முட்களை நீக்கி நீரில் போட்டு கழுவி அதன் இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்பிறகு அதில் சிறிதளவு நெய்விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்அதனுடன் பின் துவரம் பருப்பு அல்லது பாசி பருப்புவெங்காயம்பூண்டுதக்காளி அல்லது தேசிக்காய்பச்சை மிளகாய் சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும் பின்பு கடுகுஉளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
துவையல்சுத்தபடுத்திய கீரைகடுகுதோல் நீக்கிய முழு உளுத்தம் பருப்புகடலைப் பருப்புகொத்தமல்லிகொத்தமல்லி தழைஇஞ்சிபூண்டுகாய்ந்த மிளகாய்புளிஉப்பு அனைத்தையும் எண்ணையில் வதக்கி அரைத்து துவையல் செய்து சாப்பிடலாம்.
தூதுவளை தோசை
பச்சரிசி 1 கப்புழுங்கல் அரிசி 1 கப்துவரம் பருப்புகடலைப்பருப்பு இரண்டும் 1மேஜைக்கரண்டிதூதுவளை (இலைகள் மட்டும்) 1 கப்பச்சை மிளகாய் 6 அல்லது காய்ந்த மிளகாய் 8, உப்புஎண்ணெய் தேவைக்கு.
செய்முறை 
(1) அரிசி பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
(2) இதனுடன் சுத்தம் செய்த கீரைமிளகாய்சேர்த்து நைஸாக அரைத்தெடுத்துஉப்பு சேர்த்துகரைத்து 3 மணி நேரம் வைத்திருங்கள்புளித்துவிடும்குளிர் காலத்தில் அதிக நேரம் தேவைப்படலாம்
(3) சற்று கனமான தோசைகளாக ஊற்றிசுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்தேங்காய் சட்னிகார சட்னிபூண்டு சட்னிஇவற்றோடு சாப்பிட சுவை கூடும்.