disalbe Right click

Showing posts with label தடை. Show all posts
Showing posts with label தடை. Show all posts

Friday, December 1, 2017

பள்ளி, கல்லூரிகளில் பொருட்காட்சி நடத்த தடை

சென்னை: பள்ளி, கல்லுாரிகளில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் பொருட்காட்சி நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல், எம்.காம்., மாணவர், உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். அதில், ’திருப்பூரில் உள்ள, சிக்கன்னா அரசு கலை கல்லுாரியில், டிச., 3 முதல், 45 நாட்களுக்குபொருட்காட்சி நடைபெற உள்ளது. இது, வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும்.
எனவே, கல்லுாரி வளாகத்தில், பொருட்காட்சி நடத்த தடை விதிக்க வேண்டும்; வேறு இடத்தில் நடத்த உத்தரவிட வேண்டும்என, கோரி இருந்தார்.
வழக்கை நீதிபதி, கிருபாகரன் விசாரித்தார். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயண்பொருட்காட்சி நடத்துவதற்கு, 90 சதவீத ஏற்பாடுகள் முடிந்து விட்டது. அதனால், பொருட்காட்சியை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது,” என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு
கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, திருப்பூர், கலை கல்லுாரியில் பொருட்காட்சி நடத்த தடை விதிக்க முடியாது. வரும் காலங்களில், அரசு பள்ளி, கல்லுாரிகளில் பொருட்காட்சி நடத்த, தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து, அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.12.2017 

Saturday, September 16, 2017

ஸ்டிரைக்கா பண்றீங்க ஸ்டிரைக்கு!

ஸ்டிரைக்கா பண்றீங்க ஸ்டிரைக்கு!
அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை
அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், 'டியூஷன்' என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.
மாத சம்பளம்
சில ஆசிரியர்கள், தனியார் நடத்தும், 'டியூஷன் சென்டர்'களில், காலை மற்றும் மாலை நேரங்களில், மாதசம்பளம் பெற்று பாடம் நடத்துகின்றனர். அதனால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களும், 10ம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களும், தங்கள் வகுப்புகளில்அரசு நிர்ணயித்தபடி, பாடங்கள் நடத்துவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.
தங்கள் வகுப்பு மாணவர்களை, டியூஷனுக்கு வரவழைத்து, அங்கு கற்றுத் தருவதாக கூறப்படுகிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, தங்கள் ஆசிரியர்களின் டியூஷன் வகுப்புக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எச்சரிக்கை
இதற்காக, மாதந்தோறும், 1,000 - 2,000 ரூபாய் வரை கட்டணம் தேவைப்படுவதால், பண வசதியின்றி அவதிப்படுகின்றனர். இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, சில பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 'அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,டியூஷன் எடுக்கக் கூடாது' என, தடை விதிக்கப்பட்டு உள்ளது. 'கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, டியூஷன் எடுக்க தடை உள்ளதால், ஆசிரியர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்' என, மாவட்டக் கல்விஅதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 17.09.2017 

Tuesday, May 9, 2017

தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை

தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை
சென்னை: தமிழகத்தில் கீழ் இயங்கும் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
1994ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிக்கையில் தமிழகம் முழுவதும் உள்ள கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிவிக்கையை ரத்து செய்து விட்டு தமிழில் மட்டுமே தீர்ப்புகளை எழுத வேண்டும் என்று உத்தரவிடக் கோரி 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


நன்றி : தி்னமலர் நாளிதழ் - 10.05.2017