disalbe Right click

Showing posts with label அரசு உதவி. Show all posts
Showing posts with label அரசு உதவி. Show all posts

Tuesday, November 1, 2016

அன்னை தெரசா நினைவு திருமண நிதியுதவி திட்டம்


அன்னை தெரசா நினைவு திருமண நிதியுதவித் திட்டம்
என்ன செய்ய வேண்டும்? 
பெண்களுக்கு அரசு திருமண நிதி உதவி திட்டங்களை செய்து வருகிறது. ஆதரவற்ற பெண்களுக்கு அரசு வழங்கும் அன்னை தெரசா நினைவு திருமண நிதிஉதவி திட்டத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து பயன் பெறுங்கள்.
விண்ணப்பம்
அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம் என்ற விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
நிதி விபரம்
ஆதரவற்ற படிக்காதப் பெண் என்றால் ரூபாய் 25000க்கான காசோலையும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். படித்தப் பெண் என்றால் ரூபாய் 50,000க்கான காசோலையும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பெற்றோரை இழந்து, திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்கள் விண்ணப்பிக்க முடியும். திருமணத்தன்று நிதியுதவி பெறும் பெண்ணுக்கு 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டுமானால் குறிக்கப்பட்ட திருமண தேதிக்கு 40 நாளுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். திருமணத் தேதியன்றோ அல்லது திருமணம் முடிந்த பின்போ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது.
தகுதி
பட்டதாரிப் பெண்களுக்கான திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றால் விண்ணப்பிக்கும் பெண் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியிலோ, பல்கலைக் கழகத்திலோ, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிக்காத ஆதரவற்ற பெண்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை.
இணைக்க வேண்டியவை
சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட ஆதரவற்ற பெண் என்பதற்கான சான்று. திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் வயதுச்சான்று. தாய் தந்தையின் இறப்புச்சான்று. விண்ணப்பிக்கும் பெண்ணின் வருமானச்சான்று அல்லது பாதுகாவலரின் வருமானச்சான்று.
குறிப்பு
நீங்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். இது தொடர்பான மேலும் அதிக தகவலுக்கு உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூகநலத்துறையையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையோ அணுகுங்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------- சூரியா கோமதி.

நன்றி : விகடன் செய்திகள் – 02.11.2016



தொகுப்பு வீடுகள் - விபரங்கள்


தொகுப்பு வீடுகள் - விபரங்கள் - என்ன செய்ய வேண்டும்?
மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துகிறார்கள். அந்த திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்று செல்கிறதா? என்றால் முழுமையாக இல்லை என்ற பதில் கிடைக்கிறது. இதற்கு காரணம் திட்டம் தொடர்பான தகவல் மக்களுக்கு தெரியவில்லை.
அதை தெரிவிக்க வேண்டிய அதிகாரவர்க்கத்தினரும் மெத்தனம் காட்டுகிறார்கள். தேவையில்லாத பிரச்னைக்கெல்லாம் தெருவில் இறங்கி போராட்டம் நடத்ததும் அமைப்பினர் மக்களுக்கு தேவையான தகவல்களை கொண்டு சேர்ப்பதில் அக்கரை எடுத்து கொள்வதில்லை.
இந்நிலையில் அரசாங்கத்தின் திட்டங்களை மக்கள் முன் கொண்டு செல்லும் நோக்கத்தில் சமூக கண்ணோட்டத்துடன் நமது தினகரன் நாளிதழில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை அன்று சட்டம் ஒரு எட்டும் கனி என்ற பெயரில் சிறப்பு கட்டுரை வெளியிடுகிறோம். அதன்படி இவ்வாரம் மாநிலத்தில் வாழும் ஏழை குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் ‘‘தொகுப்பு வீடு’’ திட்டம் தொடர்பாக தகவல் கொடுக்கப்படுகிறது.
தார்மீக உரிமை:
நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நாட்டில் குடிமகனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம் ஆகிய மூன்றும் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு அரசாங்கம் அதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் 40 சதவீதம் பேர் மட்டுமே சொந்த வீட்டில் வாழ்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பலர் வாடகை வீடுகளிலும், சிலர் பாழடைந்த கட்டிடங்கள், திறந்த வெளியில் டெண்ட் அமைத்து வாழ்கிறார்கள்.
மாநகரங்கள், நகர பகுதியில் கண்நோக்கி பார்க்கும் இடமெல்லாமல் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் வீடில்லாத ஏழைகளுக்கு படிப்படியாக வீடு கட்டி கொடுக்கும் தொகுப்பு வீடு திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதன்படி மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் பல்வேறு பெயர்களில் தொகுப்பு வீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒவ்வொரு கிராமத்தில், 20 வீடு என்ற வகையில் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலமோ அல்லது தனியார் நிலத்தை வாங்கி அதில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளை கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்து அதை மாவட்ட பஞ்சாயத்துக்கு சிபாரிசு செய்யும், அதை தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகள் பரிசீலனை செய்து பின் ஆன்லைன் மூலம் மாநில வீட்டு வசதி வாரியத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
அவற்றை பரிசீலனை செய்து வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து வீடு கட்டும் பொறுப்பை குத்தகைதாரர்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள், வீடு கட்டி முடித்தபின் பயனாளிகளுக்கு காண்பித்து அவர்கள் கட்டியுள்ள வீடு வாழ வசதியாக உள்ளது என்பதை உறுதி செய்து ஒப்புதல் சான்றிதழ் வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து குத்தகை எடுத்தவர்கள் வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்ற சான்றிதழை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பார்கள். இப்பணிகள் மேற்கொண்டபின் வீடுகளை அரசாங்கம் பயனாளிகளிடம் ஒப்படைக்கும்.அதன்பின் வீடுகள் பராமரிப்புச்செலவை மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்.
பயனாளிகள் தேர்வு எப்படி?:
தொகுப்பு வீடு திட்டத்தில் மத்திய அரசு ராஜீவ்காந்தி வீட்டு வசதி திட்டம் அடல்பிகாரி வாஜ்பாய் வீட்டுவசதி திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. கர்நாடக அரசு இந்திராகாந்தி, வாஜ்பாய், வால்மீகி ஆகிய பெயர்களில் வீட்டு வசதி தி்ட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. எந்த வீட்டுவசதி திட்டமாயிருந்தாலும் மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி தொகுப்பு வீட்டு திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கிராம பஞ்சாயத்துகள் கூடி தங்கள் பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமங்களில் எத்தனை பேர் சொந்தமாக வீடுகள் இல்லாமல் உள்ளனர் என்ற பட்டியல் தயாரிக்க வேண்டும்

மேலும் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நிலம் உள்ளதா என்ற விவரங்களை தயார் செய்து பொதுமக்கள் கருத்துகேட்புகள் வெளியிட வேண்டும்.

அதில், ஆட்சேபனை ஏதாவது இருக்குமாயின் அதனை சரிசெய்து உரிய பயனாளிகள் பட்டியல் தயாரித்து அவை பஞ்சாயத்து அலுவலக பெயர் பலகையில் அறிவித்து ஜனவரி 31க்குள் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து தயாரித்துள்ள பட்டியலுக்கு தகராறில்லாமல் ஒப்புதல் கேட்டால் கிராம சபை கூட்டி அதற்கு அனுமதி பெற்று பின் தொகுதி எம்.எல்.ஏ. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆஷ்ராய கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

அக்கமிட்டி பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும்படி தாலுகா பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிக்கு சிபாரிசு செய்யும். அவர் பரிசீலனை செய்த பின் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்.

தொகுப்பு வீடு திட்டத்தில் மொத்த வீடுகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் 10 சதவீதம் பழங்குடியினத்தவருக்கும் மீதி 10 சதவீதம் சிறுபான்மை பிரிவினருக்கும் கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கொடுக்க வேண்டிய ஆவணங்கள்: சொந்தமாக வீடு இல்லாத ஏழைகள் அரசின் பல்வேறு திட்டங்களில் வீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பயனாளிகள் விண்ணப்பப் படிவத்துடன் ரேஷன் கார்டு, தேர்தல் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பேங்க் பாஸ்புக் ஆகியவற்றின் நகல்கள் கொடுக்க வேண்டும் இது தவிர சாதி மற்றும் வருமானச் சான்றிதழ் இணைக்க வேண்டும்.

மேலும் மத்திய மாநில அரசுகளின் எந்த வீட்டு வசதி திட்டத்தின் கீ்ழ் இதுவரை எந்த வீடு அல்லது நிலம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் கொடுக்க வேண்டும்.

மேலும் சொந்தமாக வீடு வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மட்டுமே இத்திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்படுவார்கள்.

கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.34,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். நகரப்பகுதியில் உள்ள ஏழைகளாக இருப்பின் அவரது ஆண்டு வருமானம் ரூ.87,600 ஆக இருக்க வேண்டும். பயனாளிகள் மாநிலத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் தாங்கள் வசிக்கும் நகரம் அல்லது கிராமப்பகுதியில் தனக்கு சொந்தமாக வீடு இல்லை அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறையிடம் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் தனித்தனி பெயரில் வீட்டுமனை பெற வாய்ப்பில்லை.

அதே போல் ஒரே ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு தனித்தனியாக வீடு கட்டித்தர முடியாது. இத்திட்டத்தில் சொந்த வீடு இல்லாதவர்கள் அல்லது வசிக்க தகுதியில்லாத பாழடைந்த வீட்டில் வசித்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

இத்திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குத்தகை ஒப்படைத்தபின் ஓராண்டுக்குள் வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். பயனாளிகள் கிராமப் பஞ்சாயத்து தாலுகா, மாவட்ட, பஞ்சாயத்து அலுவலகங்களில் இவற்றுக்கான விண்ணப்பம் பெறலாம் அல்லது ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பம் செலுத்தலாம். ஜனவரி மாதம் பயனாளிகள் தேர்வு தொடங்கி 3 மாதங்கள் முடித்துவிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வீடு கட்டும் திட்டத்தை தொடங்க வேண்டும்.

இத்திட்டத்தில் பொய்த்தகவல் கொடுத்து யாராவது வீடு அல்லது நிலம் பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக விவரம் வேண்டுவோர்
ராஜீவ் காந்தி ஊரக வீட்டு வசதிக் கழகம்
பிளாட் நம்பர் 1-4,
2வது மாடி ஐடி பார்க்,
இன்டஸ்டிரியல் எஸ்டேட்,
ராஜாஜி நகர்,
பெங்களூரு 560044
தொலை பேசி எண் 808-23118888,
இ.மெயில் rgrhel@rediff mail.com
அல்லது
இணையதளம். ashraya.kar.nic.in தொடர்பு கொள்ளலாம்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 20.09.2016

Wednesday, October 26, 2016

விதவை மறுமண நிதி உதவி


விதவை மறுமண நிதி உதவி - என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்காக அரசு தரப்பில் பெண்களுக்காக பல்வேறு நிதிஉதவி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கனவனை இழந்த பெண்களுக்கு அரசு வழங்கும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண   நிதி உதவியைப் பெறுவதற்கு தேவையான அடிப்படையான தகவல்களைத் தெரிந்து இங்கு கொள்ளலாம்.

1. விண்ணப்பம்:

 உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கிடைக்கும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் என்ற படிவத்தைப் பூர்த்திசெய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்திலோ கொடுக்க வேண்டும்.

2. நிதி விபரம்: 

 பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்கும் விதவைப் பெண் என்றால் ரூபாய் 30,000-க்கான காசோலையும், ரூபாய் 20,000-க்கு தேசிய சேமிப்பு பத்திரமும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். படிக்காத விதவைப் பெண் என்றால் ரூபாய் 15,000-க்கான காசோலையும், ரூபாய் 10,000-க்கு தேசிய சேமிப்பு பத்திரமும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

கணவனை இழந்த விதவைப் பெண்கள் விண்ணப்பிக்க முடியும். திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிற்கு 20 வயதிற்கு மேலும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணுக்கு 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

4.எப்போது விண்ணப்பிக்க வேண்டும்

விதவை என்பதற்கான சான்று, மறுமண பத்திரிக்கை, மணமக்களின் வயதுச்சான்று, கல்விச் சான்றிதழ்.

5. தகுதி

இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டுமானால் குறிக்கப்பட்ட திருமணம் நடந்து முடிந்த ஆறுமாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

6. இணைக்க வேண்டியவை

படித்த விதவைப் பெண்ணுக்கான நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பட்டப் படிப்போ, பட்டயப் படிப்போ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. குறிப்பு

நீங்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

 இது தொடர்பான மேலும் அதிக தகவல்களுக்கு உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நலத்துறையை அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகவும்.

--------------------------------------------------------------------------------------------- சு.சூர்யா கோமதி

நன்றி : விகடன் செய்திகள் - 26.10.2016

Thursday, October 20, 2016

பெண்குழந்தை - ரூ.50,000/- பெற


பெண்குழந்தை - ரூ.50,000/- பெற என்ன செய்ய வேண்டும்?

பெண் குழந்தை பிறந்தால் கொண்டாடும் பெற்றோருக்கு மத்தியில், `‘பொண்ணு பொறந்திருக்கா… இப்பவே அவளோட கல்யாணத்துக்கு காசு சேர்க்கணும்; படிக்க வைக்கணும்… கொஞ்சம் பயமா இருக்கு” என்று பதறுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அதனாலேயே பிறந்த பெண் குழந்தைகளைக் கொண்டாட வைக்கும் ஒரு முயற்சியாக தமிழ்நாடு அரசு, ‘சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

இந்தத் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப் பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுகுவது என்பது போன்ற A to Z தகவல்களை சமூக நலத்துறை சார்பாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இதோ…

 விண்ணப்பம்

ஒவ்வொரு மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்களைப் பெறலாம். அல்லது 

http://cms.tn.gov.in/sites/default/files/forms/socialwelfareschemes.pdf 

என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ளலாம் 

(தரவிறக்கம் செய்யும்போது பெண்கள் தொடர்பான அனைத்து திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் வரும். 
அதில் நீங்கள் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்).

 தரவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அப்படிவத்தில் இருக்கும் உறுதிமொழிச்சான்றிதழை இணைத்து உங்கள் மாவட்டத்தில் இருக்கும் சமூக நல அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.

நிதி விவரம்

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பீடாக ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் எனில், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யப்படும்.

நீங்கள் தரவிறக்கம் செய்யும்போது இங்கே சொல்லப்பட்டிருக்கும் தொகையைவிட குறைவாக அதில் சொல்லப்பட்டிருக்கும். அவை பழைய தகவல். தற்போது சலுகைகளை அரசு உயர்த்தியிருக்கிறது.

இணைக்க வேண்டியவை…

  *குடும்ப அட்டை

  *வருமானச் சான்று

  * சாதிச் சான்று

  *பெற்றோரின் வயதுச் சான்று

  * கருத்தடை அறுவை சிகிச்சை சான்று

  * குழந்தைகளின் பிறப்புச்சான்று (பெயர்களுடன்)

  * குடும்பப் புகைப்படம் – 1

  * ஆண் வாரிசு இல்லை என வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று

  * இருப்பிடச் சான்று (விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்று வட்டாட்சியர் குறிப்பிட்டு வழங்குவது)


தகுதி

1.8.2011-க்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.

எப்போது விண்ணப்பிப்பது?

குழந்தை பிறந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.


உங்கள் குழந்தைகளில் யார் பெயருக்கு நீங்கள் விண்ணப்பித்தீர்களோ, அவர்களுக்கான தொகை அந்த குழந்தை 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த பிறகே அரசு முதிர்வுத் தொகையாக வழங்கும். அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம்

பெண் குழந்தை நலத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.

தரகர்களைத் தவிர்க்கலாம்

இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பதில் இருந்து அந்த தொகை முதிர்வுபெற்று பெறும்வரை நீங்களே அனைத்து வேலைகளையும் மேற்பார்வையிடுவது நல்லது. இடைத் தரகர்களை நம்பி வீணாக பணத்தை இழக்க வேண்டாம்.

மேலும் அதிக தகவல் பெற…

இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள உங்கள் மாவட்ட சமூகநலத் துறையை அணுகவும்.

நன்றி : அவள்விகடன் - 01.11.2016

Friday, September 30, 2016

பெண்குழந்தை - அரசு நிதியுதவி பெற


பெண்குழந்தை - அரசு நிதியுதவி பெற என்ன செய்ய வேண்டும்?

பெண் குழந்தைக்கு அரசு நிதியுதவி - A- Z தகவல்கள்!

பெண் குழந்தை பிறந்தால் அதை சுணக்கத்தோடு வரவேற்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். படிப்பு, கல்யாண செலவு என்று உடனே மனதில் பெரிய லிஸ்ட் போட ஆரம்பித்துவிடுவார்கள்.  

இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்துவிட்டால், பெற்றோர் கலங்கித்தான் போய்விடுகிறார்கள். 

பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. 

அதில் முக்கியமானது சிவகாமி அம்மையார் நினைவுப் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். இதன் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப்  பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுக வேண்டும்?

விண்ணப்பம்

சிவகாமி அம்மையார் நினைவு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான, விண்ணப்பம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெறலாம். 

அல்லது

http://cms.tn.gov.in/sites/default/files/forms/socialwelfareschemes.pdf 

என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்படிவத்தை பூர்த்தி செய்து, மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும். 

நிதி விவரம்

ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பீடாக 50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் எனில் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூபாய் 25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யப்படும்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பெண் குழந்தைகள், 1.8.2011 க்கு பிறகு பிறந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 

குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். 

ஆண் குழந்தை இருக்கக் கூடாது. 

பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவும் கூடாது. 

பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

இணைக்க வேண்டியவை

குடும்ப அட்டை, 

வருமானச் சான்று, 

சாதி சான்று, 

பெற்றோரின் வயதுச்சான்று, 

கருத்தடை அறுவை சிகிச்சை சான்று, 

குழந்தைகளின் பிறப்புச்சான்று (பெயர்களுடன்), 

குடும்பப் புகைப்படம்- 1, 

ஆண் வாரிசு இல்லை என, வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று, 

இருப்பிடச் சான்று 
(விண்ணப்பத்தாரர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்று, வட்டாட்சியர் குறிப்பிட்டு வழங்குவது)

குறிப்பு

எந்தக் குழந்தையின் பெயரில் அரசு, தொகையை முதலீடு செய்ததோ அந்தக் குழந்தை 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே இறுதி முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும். 

அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

தகுதி

விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

மேலும் அதிக தகவலுக்கு

மேலதிக தகவல்களுக்கு உங்கள் மாவட்ட சமூகநலத் துறையை அணுகவும்.

- -----------------------------------------------------------------------------------------சு.சூர்யா கோமதி.

நன்றி : விகடன் செய்திகள் - 29.09.2016

Saturday, September 17, 2016

இலவச கேஸ் இணைப்பு


இலவச கேஸ் இணைப்பு - என்ன செய்ய வேண்டும்?

4 லட்சம் இலவச காஸ் இணைப்புகள் வழங்கும் பணி தமிழகத்தில் துவக்கம்

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, தமிழகத்தில், நான்கு லட்சம் இலவச காஸ் இணைப்பு வினியோகம் துவங்கியது; காஸ் ஏஜன்சி அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர்.

பிரதமர் மோடியின், 'உஜ்வாலா' திட்டத்தில், நாடு முழுவதும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு, ஐந்து கோடி இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில், நான்கு லட்சம் இணைப்புகள் வழங்கும் பணி நேற்று துவங்கியது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ் ஏஜன்சிகள், இலவச சிலிண்டருடன் கூடிய காஸ் இணைப்பு வினியோகத்தைதுவங்கின.

இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு, சிலிண்டர் டிபாசிட், 1,250 ரூபாய், ரெகுலேட்டர், 150, கேஸ் புக், 25, அட்மிஷன் சார்ஜ், 75, டியூப், 100, ஸ்டவ் 1,000, சிலிண்டர் தொகை, 568 என, மொத்தம், 3,168 ரூபாயில், ஸ்டவ், சிலிண்டர் தொகை கடனாக வும், மற்றவை மானியமாகவும் வழங்கப்படுகிறது.

இந்த கடன் தொகை, மத்திய அரசு, சிலிண்டருக்கு வழங்கும் மானியத்தில் இருந்து பிடித்தம் செய்யப் படும். கடன்முழுவதும் கழிக்கப்பட்டதும், மானிய தொகை, பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இதில் பயன் பெறுவோர், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை (ரேஷன் கார்டில் பெயர் உடைய அனைவருக்கும் தேவை), வங்கி பாஸ் புத்தகம், புகைப்படம் இரண்டு வழங்க வேண்டும். இத் திட்டத்தில் இணைய, நேற்று தமிழகம் முழுவதும் உள்ள, காஸ் ஏஜன்சி அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. 

இதுகுறித்து, காஸ் ஏஜன்சி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 'பாரத் பெட்ரோலியம் சார்பில், தமிழகம் முழுவதும், 1.25 லட்சம் இணைப்புகளும், சேலத்தில், 3,000 இணைப்பு களும் இலவசமாக வழங்கப் படுகின்றன' என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.09.2016

Wednesday, April 22, 2015

முதியோர் உதவித்தொகை பெற


முதியோர் உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?
*******************************************************************

                       சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகள் கணவரால் கைவிடப்பட்டோமற்றும் விதவைகளுக்கு  மாதாந்திர உதவியாக ரூ.1000/- வீதம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 
                   ஆதரவு ஏதும் இல்லாமல் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசினுடைய  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர். 
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
                  இத் திட்டத்தில் ஆதரவற்ற தகுதியுடைய முதியோர்களான ஆண், பெண்  அனைவரும் சேரலாம்.  இதற்குரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன், குடும்ப அட்டை நகல், அரசு மருத்துவமனை அல்லது அரசு பதிவுபெற்ற டாக்டரால் வழங்கப்பட்ட வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ்  மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
                        வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதன்பிறகு அதனை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.
                         கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் நேரில் விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கு  வந்து விண்ணப்பத்தில் தெரிவிக்கப் பட்ட தகவல்கள் உண்மைதானா? என்று ஆய்வு செய்வார்கள். உண்மைதான் என்று தெரிந்தால், விண்ணப்பதாரருக்கு உதவித்தொகை வழங்கலாம் என்று வருவாய் வட்டாட்சியருக்கு, கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்வார்.
                             வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பதாரருக்கு  பணவிடை (Money Order)  மூலமாக  மாதந்தோறும் ரூ.1000/- வழங்க உத்தரவிடுவார்கள். விண்ணப்பதாரர் தனது ஆயுட்காலம் முழுவதும் இதனை பெற முடியும்.
                              தற்போது (2015) இந்த திட்டத்தில் சில மாறுதல்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
 * வருமான வரம்பு, 5,000 ரூபாய்க்குள் என்று இருந்ததை, 50 ஆயிரம் ரூபாய்க்குள் என, 10 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தாலும் பயன்பெறலாம்.
* வாரிசுகள் இருந்தாலும், அவர்களால் பயனில்லை என்றால், மாதாந்திர உதவி பெற, முதியோர் தகுதி பெறுவர்.
* எல்லா விதமான உதவித்தொகை திட்டத்திலும், 'ஆதரவற்றோர்' என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கான விதிமுறைகளில், 'வேலை செய்ய முடியாத தன்மை' என்ற பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. 60 சதவீத பாதிப்பு உள்ள, அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும்.
* உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்டோர் மாதாந்திர உதவி பெற, 'மகன், மகள் ஆதரவு இல்லாமல் இருந்தால்...' என்ற விதிமுறையும் நீக்கப்பட்டு உள்ளது. இதற்கான, அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
                                                                                  நன்றி: தினமலர் நாளிதழ் - 22.04.2015
               

Friday, April 10, 2015

ஏழைப் பெண்களுக்கு அரசு - திருமண நிதியுதவி


ஏழைப் பெண்களுக்கு அரசு தருகின்ற திருமண நிதியுதவி
*********************************************************************
திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு
நிதியுதவித் திட்டம்
வழங்கப்படும் உதவி:
*********************************

திட்டம் 1: 
25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2:
50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
இதனைப் பெறுவதற்கு தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
****************************************************************************************

திட்டம் 1:

1) மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம்.
2) தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.
5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்
திட்டம் 2:

1) பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
2) பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.
5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்
திட்டம் 1க்கு தேவையான சான்றுகள்:
***********************************************************

* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
திட்டம் 2க்கு தேவையான சான்றுகள்:
**********************************************************

* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று
யாரை அணுகுவது?
*******************************

*மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், 
நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், 
ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுக வேண்டும்.
*தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.

Monday, April 6, 2015

குடும்பத்தின் முதல் பட்டதாரி - அரசு தரும் சலுகை!


குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு தரும் சலுகை!
************************************************************
2010-11ம் கல்வியாண்டு முதல், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது

பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும்.

கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும்.

யார் யாருக்கு இது பொருந்தும்?
***********************************

கவுன்சிலிங் முறையில் அரசு தொழிற்கல்லூரி மற்றும்
அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் இத்திட்டம் பொருந்தும்.

முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

இதனை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
*************************************************

1.தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும்.

2. மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.

சான்றிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

3. மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

4. ‘குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை’ என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.

இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

. மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப் படும்.

உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும்.

விதவை மறுமணம் - அரசு நிதியுதவி


விதவை மறுமணத்திற்கு அரசு தருகின்ற நிதியுதவி
************************************************************

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு  விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’


விதவைகளுக்குப் புதுவாழ்வளிக்க, அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

2 திட்டங்கள் மூலமாக வழங்கப்படும் உதவிகள்
**********************************************************************

திட்டம் 1:
**************

25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 
4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2:
*************** 

50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும்
4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
*************************************************

திட்டம் 1:
***************

1) இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

2)வருமான வரம்பு எதுவும் இல்லை.

3) மணமகளுக்கு குறைந்தபட்சம் 20 வயதாவது இருக்க வேண்டும். மணமகனுக்கு 40வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

4) திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திட்டம் 2:
***************

1) இதற்கு கல்வித் தகுதி தேவை.

பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2)வருமான வரம்பு எதுவும் இல்லை.

3) மணமகளுக்கு குறைந்தபட்சம் 20 வயதாவது இருக்க வேண்டும். மணமகனுக்கு 40வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

4) திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்:
***********************************

* விதவைச் சான்று
* மறுமணப் பத்திரிகை
* மணமகன் அல்லது மணமகளின் வயதுச் சான்று
* திருமணப் புகைப்படம்
* பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று.
(திட்டம் 2-இல் பயன்பெறுவதாக இருந்தால் மட்டும்).

ஏழைப்பெண்கள் திருமணம் - அரசு உதவி!


ஏழைப்பெண்களுக்கு அரசு தருகின்ற திருமண உதவி!
*****************************************************************************
திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம். 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு
நிதியுதவித் திட்டம்

வழங்கப்படும் உதவி:
*******************************

திட்டம் 1: 
25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2: 
50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

இதனைப் பெறுவதற்கு தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
*********************************************************************************

திட்டம் 1: 
1) மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம்.

2) தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்

திட்டம் 2: 
1) பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

2) பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்

திட்டம் 1க்கு தேவையான சான்றுகள்:
******************************************************

* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் 

திட்டம் 2க்கு தேவையான சான்றுகள்:
******************************************************

* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று

யாரை அணுகுவது?
*****************************

*மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், 
நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், 
ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுக வேண்டும்.

*தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.

கலப்புமணம்-அரசு தருகின்ற நிதியுதவி


கலப்புமணம்-அரசு தருகின்ற நிதியுதவி
***********************************************

கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான ஜாதி, இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் பெயர் ”டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்” ஆகும்.
(இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியும், தமிழக சட்ட மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்பட்டது.
வழங்கப்படும் உதவி:
*******************************

திட்டம் 1:
‘’’’’’’’’’’’’’’’’’’

25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2:
‘’’’’’’’’’’’’’’’’’’

50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
*************************************************

இதில் இரண்டு பிரிவுகள் உள்ளது.
1)பிரிவு 1- புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து, பிற இனத்தவரை மணந்துகொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.
2)பிரிவு 2- புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.
3)திட்டம் 1-க்கு கல்வித் தகுதி தேவை இல்லை.
4)திட்டம் 2-க்கு பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பட்டயப் படிப்பு, எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
5)வருமான வரம்பு இல்லை
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:
********************************************************

திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான சான்றுகள்:
*************************************

* திருமணப் பத்திரிகை அல்லது திருமணப் பதிவுச் சான்று
* மணமகன் அல்லது மணமகளின் ஜாதிச் சான்று
* மணப்பெண்ணின் வயதுச் சான்று
* பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).
குறிப்பு :
************

அனைத்துத் திட்டங்களுக்கும் மாவட்ட சமூகநல அலுவலர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகவும்.