disalbe Right click

Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Monday, December 4, 2017

ஆசிரியர் பணிக்கு தகுதிப்படிப்பு அவசியம்!

கோவை: ”ஆசிரியப்பணியை தொடர விரும்புவோர், மத்திய அரசின், தகுதிப்படிப்பில், வெற்றி பெறுவது அவசியம். இதில் சேர, எவ்வித திணிப்பும் அளிக்கப்படவில்லை,” என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப்யாதவ் தெரிவித்தார்.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில், ஆசிரியர்களுக்கான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், தொடக்க வகுப்புகளுக்கு பாடம் எடுப்பவர்கள், ஆசிரியர் பட்டய படிப்புடன், ’டெட்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். உயர்நிலை வகுப்பில் பாடம் எடுப்பவர்கள், பட்டப்படிப்புடன், பி.எட்., முடித்திருப்பதோடு, ’டெட்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவோர், பள்ளிக்கல்வி இறுதித்தேர்வில், 50 சதவீத மதிப்பெண் இல்லாமலும், ’டெட்தேர்வில் தேர்ச்சி பெறாமலும் இருப்பின், மத்திய அரசின், என்...எஸ்., எனப்படும் தேசிய திறந்தவெளி பள்ளியில், இரண்டாண்டு டிப்ளமோ, ஆசிரியர் பட்டய படிப்பில் சேர, வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படிப்பை, வரும் மார்ச் 2019 க்குள் முடிக்க, கால அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம் முழுக்க, 26 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுசார்ந்து, கோவையில் நடந்த, தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற, பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ்விடம், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் முறையிட்டனர்.
இதற்கு விளக்கம் அளித்த, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மத்திய அரசு, ஆசிரியர்களுக்கான தகுதியை மேம்படுத்தி கொள்ள, 2010ல் அறிவுறுத்தியது. ஐந்து ஆண்டு கால அவகாசம் அளித்தும், பலரும் தகுதியை மேம்படுத்தி கொள்ளாததால், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது, கடைசி பஸ் ஏறுவது போன்றது. வாய்ப்பை தவறவிட்டால், வீட்டுக்கு திரும்புவது உறுதி என தெரிவித்தார். இது, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் கூறுகையில்,”மத்திய அரசின், என்...எஸ்., தகுதிப்படிப்புக்கு, மாவட்ட அளவில் மையங்கள் அமைத்து, பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடக்க வகுப்புகளுக்கு பாடம் நடத்த, ஆசிரியர் பட்டய கல்வி முடித்திருப்பது அவசியம்.
இப்படிப்பு முடிக்காமல், அதிக கல்வித் தகுதி இருந்தாலும், வகுப்பு நடத்தக் கூடாது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, தகுதிப்படிப்பில் சேர, எவ்வித திணிப்பும் அளிக்கப்படவில்லை. ஆசிரியப்பணியை தொடர விரும்புவோர், உரிய கல்வித்தகுதி பெறுவது அவசியம்,” என்றார்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) நாளிதழ் - 05.12.201

Monday, October 9, 2017

தனியார் பள்ளி ஆசிரியர்களும் டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்

தனியார் பள்ளி ஆசிரியர்களும், 2019க்குள், ’டெட்என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 2011 முதல், அனைத்து புதிய ஆசிரியர்களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்என, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.
மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், 2010ல், வெளியிட்ட அறிவிப்பில், ’புதிய நியமனங்களிலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும்என, தெரிவித்தது. ’தகுதி தேர்வால், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படும்என, சிறுபான்மை நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
கூடுதல் அவகாசம்:
இந்த வழக்கில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சிறுபான்மை நிறுவனங்கள் தவிர, மற்ற கல்வி நிறுவனங்களில், 2010க்கு பின், பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, 2014 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதிலும், பலர் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து, இன்னும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு, 2019 வரை கூடுதல் அவகாசம் நீடிக்கப்பட்டது.
இதனிடையே, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தகுதி தேர்வு:
அதில், ’மத்திய அரசின் கல்வியியல் கவுன்சில் மற்றும் தமிழக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்து பள்ளிகளின் ஆசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ’இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், 2019, மார்ச், 31க்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்என, கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் - கல்விமலர் - 09.10.2017

Friday, February 3, 2017

’டெட்’ தேர்ச்சி பெறாதவர்களை பள்ளிகளில் நியமிக்க தடை

Image may contain: 1 person, text

டெட்’ தேர்ச்சி பெறாதவர்களை பள்ளிகளில் நியமிக்க தடை
ஆசிரியர் தகுதிக்கான, ’டெட்’ தேர்வு முடிக்காதவர்களை, தனியார் பள்ளிகளில் நியமனம் செய்ய, தமிழக பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது.
ஆசிரியர் தகுதிக்கான, ’டெட்’ தேர்வு முடிக்காதவர்களை, தனியார் பள்ளிகளில் நியமனம் செய்ய, தமிழக பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில், அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர் பணி நியமனத்துக்கு, 2011 முதல், ’டெட்’ தேர்வு கட்டாயமானது. ஆனால், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ’டெட்’ தேர்வு முடிக்காதவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ’டெட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். மற்ற பள்ளிகளில், ’டெட்’ தேர்வு முடிக்காதோருக்கு, சம்பளம் நிறுத்தப்பட்டு உள்ளது. ’இனி டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது’ என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழக அரசு உத்தரவுப்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளில், ஆசிரியர் பணிக்கு, ’டெட்’ கட்டாயம். 2012, 2013ல், ’டெட்’ தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனாலும், பல பள்ளிகளில், ’டெட்’ தேர்ச்சி பெறாதவர்களை, ஆசிரியர் பணிக்கு சேர்த்துள்ளனர்.
இது குறித்த ஆய்வில், 159 பேர், ’டெட்’ தேர்ச்சி இன்றி, பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களில், 113 பேர் வழக்கு மூலம் சம்பளம் பெறுகின்றனர். மீதம், 43 பேருக்கு இதுவரை சம்பளம் தரவில்லை. அவர்களுக்கு, அரசின் மானியம் பெற்று, சம்பளம் வழங்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.
எதிர்காலத்தில், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, தனியார் பள்ளிகள், ’டெட்’ தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. அரசு அனுமதி பெற்றே, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) 03.02.2017