disalbe Right click

Saturday, December 7, 2019

வெளிநாட்டில் வேலை பார்க்க ஆசையா?


வெளிநாட்டில் வேலை பார்க்க ஆசையா? என்ன செய்ய வேண்டும்?
நமது நாட்டில் நல்ல வேலையில் இருந்தாலும், வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும்! என்ற ஆகையில் இன்றைய இளைய தலை முறையினர் ஆசைப்படுகின்றனர். அதில் தவறு ஒன்றும் இல்லை. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! என்று நமது முன்னோர்கள் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆனால், தவறான நபர்களையும், மோசடி செய்கின்ற ஏஜன்சிகளையும் நம்பி கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கொடுத்துவிட்டு ஏமாந்து தவிப்பவர்கள் அதிகம் நமது நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.
எனக்குத் தெரிஞ்ச ஏஜன்சி ஒன்று இருக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்களை வெளிநாட்டுக்கு அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வாருங்கள் நானே அங்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று சிலை உங்களை அணுகலாம். உங்களது சிறிய ஆசைக்கு தூபம் போட்டு அதனை பெரிதாக வளர்த்து உங்களை ஏமாற்றலாம். அளவுக்கு அதிகமான ஆசை மற்றவர்களின் எச்சரிக்கையை உதாசினம் செய்யும்.  
ஏஜன்சி உண்மையானதுதானா?
வேலை வாங்கித்தருகின்ற ஏஜன்சி உண்மையானதுதானா? நமது நட்டில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொண்டால் உங்களை ஏமாற்ர அவர்களால் முடியாது. எந்த ஏஜன்சி உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம் என்று உங்களை அணுகுகிறதோ, அதனை சேர்ந்தவர்களிடம் உங்களது ஆர்.ஏ. நம்பர் என்ன? என்று கேளுங்கள். மோசடி செய்ய நினைப்பவர்கள் என்றால், உங்களை மறுபடி அணுகவே மாட்டார்கள். 
ஆர். ஏ. நம்பர் என்றால் என்ன?
நமது இந்திய அரசு இது போன்று வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகின்ற முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகளுக்கு என்று நம்பர் வழங்கியுள்ளது. இதற்கு Recruiting Agency number என்று பெயர். இதனையே சுருக்கி ஆர்.ஏ. நம்பர் என்று சொல்கிறோம். டுபாக்கூர் ஏஜன்சி என்றால் இந்த எண் இருக்காது. நாம் எச்சரிக்கையாக தப்பித்துவிடலாம்.
இந்திய அரசின் இணையதளம்
இதற்கென்றே நமது இந்திய அரசு ஓர் இணையதளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.  அந்த இணையதளத்தினைப் பார்வையிட கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
மேற்கண்ட இணையதளத்தில் உங்களுக்கு வேலை வேண்டும் என்ற விபரத்தை பதிவு செய்யலாம். அந்தப் பதிவு மூலம் உங்களது விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உங்களது பணிகளை நீங்கள் செய்து கொள்ளலாம். 
பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகள் பட்டியல்
இந்திய அரசிடம் முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகளைப் பற்றி தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற நேரடி நிறுவனங்களிடம் மட்டுமே அணுகுங்கள்.  மேற்கண்ட பி.டி.எஃப் பைலை ஓப்பன் செய்து, உங்களுக்கு அருகாமையில் உள்ள பதிவு செய்யப்பட்ட ஏஜன்சியை நீங்கள் அணுகினால், நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள். உங்கள் தகுதிக்கு தகுந்த சிறந்த வேலையையும் நீங்கள் தேர்வு செய்யலாம். பதட்டப்பட வேண்டியதில்லை. நெருக்கடியும் தர மாட்டார்கள். 
நல்ல வேலை தங்களுக்கு கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்!
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 07.12.2019 

Friday, December 6, 2019

தமிழ்நாடு அரசு - சமூக நலத்துறை


தமிழ்நாடு அரசு - சமூக நலத்துறை
சமுக நலத்துறை பின்வரும் திட்டங்களை செயல்படுத்திவருகிறது:
  • மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்
  • .வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்
  • அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம்
  • டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
  • டாக்கடா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம்
  • முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்
  • சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம்
1. மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்:
பயன் மதிப்பு :
ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பத்தாம் வகுப்பு இறுதி தோ்வு எழுதியிருக்க வேண்டும்.
ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பட்டப் படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பயனாளி : மணமகளின் பெற்றோர்
தகுதிகள் :
18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
2. .வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்:
பயன் மதிப்பு :
ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் பழத்திருந்தால் போதுமானது.
ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் 
பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயனாளி: விதவை தாயார்
தகுதிகள் :
18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
3. அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம் :
பயன் மதிப்பு :
ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது.
ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயனாளி : தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்.
தகுதிகள் :
18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள் இருத்தல் வேண்டும்
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
தாய், தந்தை இறப்பு சான்று சமா்பிக்க வேண்டும்.
4. டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் :
பயன் மதிப்பு :
ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது 
(ரூ. 15,000/- காசோலை & ரூ. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
(ரூ. 20,000/- காசோலை & ரூ. 30,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
பயனாளி : கலப்புத் திருமண தம்பதியா்.
தகுதிகள் :
18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
திருமண வகை கீழ்கண்டவாறு இருத்தல் வேண்டும் FC- BC,SC/ST- BC, SC/ST-FC
குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.
திருமண நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மனு செய்ய வேண்டும்.
வயது வரம்பு இல்லை.
5. டாக்டா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம் :
பயன் மதிப்பு :
ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம்
மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது
(ரூ. 15,000/- காசோலை, ரூ. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
(ரூ. 20,000/- காசோலை, ரூ. 30,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
பயனாளி : விதவை மறுமண தம்பதியா்
தகுதிகள் :
குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் வரம்பு இல்லை.
திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விதவைச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.
6. முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம் :
பயன் மதிப்பு :
திட்டம் I : ரூ. 50,000/-
திட்டம் II : ரூ. 25,000/- (01.08.2011 அன்றோ அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு)
தகுதிகள் :
திட்டம் I :
குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
திட்டம் II :
குடும்பத்தில் இரு பெண் குழந்தை மட்டும் இருந்து, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
பொது :
ஆண்/பெண் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
2வது குழந்தை பிறந்த 3 வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
7. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம் :
பயன் மதிப்பு : தையல் இயந்திரம்.
பயனாளி : விதவை/கணவரால் கைவிடப்பட்டோர் நலிவுற்ற ஏழைப்பெண்/மாற்றுதிறனாளி ஆண்/பெண்
தகுதிகள் :
20 வயதிலிருந்து 40க்குள் இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 24,000/-க்குள் இருக்க வேண்டும்.
தையல் தொிந்திருக்க வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி வழங்குதல்
அடையாள அட்டை
சுய தொழில் செய்ய பயிற்சி
40 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு ஓய்வூதியம்
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2017
நேரடியாகவோ, தீா்ப்பாயத்தின் மூலமாகவோ பெறப்படும் பாதிக்கப்பட்டோாின் மனுக்கள் சமரச அலுவலா் (மாவட்ட சமூகநல அலுவலா்) விசாரணை செய்து தீா்ப்பாயத்திற்கு அறிக்கை அளிப்பார்
தன்னை பராமரித்துக் கொள்ள வாய்ப்பு இல்லாத பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் இச்சட்டத்தின் கீழ் நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு கோட்டாட்சியா் தலைமையிலும் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையிலும் மேல்முறையீட்டு தீா்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006
18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிரைவடையாத ஆணும் செய்யும் திருமணமே குழந்தை திருமணம் ஆகும். இது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய திருமணம் செய்யும் பெற்றோர்களும், உறவினா்களும், உடந்தையாக இருப்பவா்களும் தண்டனைக்கு உரியவா்கள்.
காவல் துறை
மாவட்ட சமூகநல அலுவலா்
நீதித் துறை
வட்டாட்சியா்
குழந்தைகள் நலம் குழுமம்
பஞ்சாயத்து கண்காணிப்பு குழு உறுப்பினா்கள் (ஊராட்சி தலைவா், சமூக நல விரிவாக்க அலுவலா், கிராம உதவிக் குழு செயலா், பள்ளித் தலைமையாசிாியா், பெண் வாா்டு உறுப்பினா், கிராம நிர்வாக அலுவலா்)
குழந்தைகளுக்காக 24×7 செயல்படும் அவசர உதவி எண்1098
அரசு சேவை இல்லம் மேல்நிலைப் பள்ளி
சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு சேவை இல்ல மேல் நிலைப்பள்ளியில் மாணவிகள் சோ்த்து கொள்வதற்க்கு
தகுதிகள் :
14 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்
விதவை மகள்
ஆதரவற்ற பெண்கள்
இல்லத்திலேயே தங்கி கல்வி பயில வேண்டும்.
a) மேல் நிலை படிப்பு முடிந்த பிறகு கல்லூரியில் தொடா்ந்து பயில ஆண்டிற்கு ரூ. 33,000/- வழங்கப்படுகிறது.
b) தொடா்ந்து சேவை இல்லத்திலேயே தங்கி ஆசிரியா் பயிற்சி, இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் வசதி.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005.
உடல் ரீதியான
பாலியல் ரீதியான
பொருளாதார
வார்த்தை மற்றும் மன ரீதியான வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
பெண்கள் தன்னுடைய கணவனாலோ அல்லது கணவரின் உறவினா்களாலோ ஏற்படுகின்ற கொடுமைகளுக்கு எதிராக தீா்வு மற்றும் நிவாரணம் கிடைக்க இச்சட்டம் வகை செய்கிறது.
வரதட்சனைத் தடுப்புச் சட்டம் 1961 :
திருமணத்திற்கு முன்போ () பின்போ திருமணத்திற்கென்று பெண் வீட்டாரிடமிருந்து நேரடியாகவோ () மறைமுகமாகவோ நிதி மற்றும் பொருள் கொடுப்பதோ () கொடுப்பதாகச் சம்மதிப்பதோ வரதட்சனை ஆகும்.
மணமகள்/மணமகனின் பெற்றோர்/உறவினா்கள் வரதட்சனை கேட்டு நேரடியாகவோ () மறைமுகமாகவோ வற்புறுத்துவார்களேயானால் அவா்களுக்கு 6 மாதத்திற்கு குறையாமலும் 2 வருடம் வரை நீட்டித்து சிறை தண்டனையும் ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்படும்.
வரதட்சனை தடுப்புச் சட்டம் பிாிவு 8 B ன் படி அரசு வரதட்சனை தடுப்பு அலுவலா்களை நியமிக்கலாம் என்பதன் பேரில் மாவட்ட சமூகநல அலுவலா்களை வரதட்சனைத் தடுப்பு அலுவலா்களாக அரசு நியமித்துள்ளது.

இணையதளத்திலிருந்து திரட்டியவை : அன்புடன் செல்வம் பழனிச்சாமி , 07.12.2019