disalbe Right click

Showing posts with label போக்குவரத்து. Show all posts
Showing posts with label போக்குவரத்து. Show all posts

Sunday, September 1, 2019

திருத்தம் செய்யப்பட்ட போக்குவரத்து விதிகள்

திருத்தம் செய்யப்பட்ட போக்குவரத்து விதிகள்
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையானது பல மடங்குகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த விதிகள் இன்று (01.09.2019) முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகின்றது.
Image result for நிதின் கட்கரி
மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 63 திருத்தங்கள் நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. விபத்துகளைக் குறைப்பதற்காகவும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதைத் தடுப்பதற்காகவும் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச புதிய அபராதத் தொகை
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான பொதுவான அபராதத் தொகை ரூ.100லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Image result for two wheeler driving
ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவருக்கு ரூ.100 அபராதமாக இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தத் தொகை தற்போது ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் வரை தகுதியிழப்பு செய்யப்படும்.
Image result for two wheeler driving
இருசக்கர வாகனத்தில் இரண்டு நபருக்கு மேல் பயணித்தால், ரூ.100 அபராதமாக இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும்.
காப்பீடு (Insurance) செய்யப்படாத வாகனங்களுக்கு அபராதமாக ரூ.1,000 இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தத் தொகை தற்போது ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Related image
உரிய வயதை அடையாத சிறுவர், சிறுமியர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்களின் காப்பாளர் அல்லது அந்த வாகன உரிமையாளர் குற்றவாளியாகக் கருதப்பட்டு அவர்களிடம் ரூ.25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும். அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும், அந்த வாகனத்தின் பதிவை ரத்து செய்யவும் முடியும்.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு இதுவரை ரூ.500 அபராதத் தொகை விதிக்கப்பட்டு வந்தது. அது ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட பின்னரும், வாகனங்களைத் தொடர்ந்து இயக்குபவர்களிடம் அபராதமாக ரூ.500 இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. அது ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Image result for two wheeler minor driving
சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்களிடம் அபராதமாக ரூ.100 இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. அது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மிக வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை என்றும், இலகுரக வாகனங்களுக்கான அபராதம் ரூ.1,000 என்றும், நடுத்தரப் பயணியர் வாகனங்களுக்கான அபராதம் ரூ.2,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Image result for drunk driving
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் இனி ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும்.!
அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் வாகனங்களை ஓட்டுபவர்களிடம் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் விதிமுறைகளை மீறும் முகவர்களுக்கு ரூ.20,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குபவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.1,000-த்திலிருந்து ரூ.5000 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
Image result for Bike Race
சாலைகளில் பந்தயம் வைத்து வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Related image
அதிக அளவில் லோடு வாகனங்களில் சுமை ஏற்றி வருவோர்களிடம் அபராதம் ரூ.20,000 மற்றும் கூடுதலான ஒவ்வொரு டன் எடைக்கும் ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்படும். இதற்கு முன் இந்த அபராதத் தொகை ரூ.2,000 மற்றும் கூடுதல் ஒவ்வொரு டன் எடைக்கும் ரூ.1,000 என வசூலிக்கப்பட்டு வந்தது.
Image result for overload bus
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் பயணிகளை ஏற்றினால் ஒவ்வொரு கூடுதல் பயணிக்கும் தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்படும்.
போக்குவரத்து காவலர்கள் முறைகேடு செய்தால்....
Image result for Traffic Police received amount
போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தும் போக்குவரத்து அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்டால், அவர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையைப் போல் இருமடங்கு வசூலிக்கப்படும்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.09.2019 

Thursday, June 28, 2018

போக்குவரத்து போலீசாரின், 'இ - சலான்' திட்டம்;


 போக்குவரத்து போலீசாரின், ' - சலான்' திட்டம்;
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், பணமில்லா பரிவர்த்தனை முறையில் அபராதம் வசூலிக்க, தமிழக  போக்குவரத்து காவல் துறைஅறிமுகம் செய்துள்ள ' - சலான்' திட்டமானது தமிழகம், முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
 1992க்கு முன் தமிழ்நாட்டில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, , போலீசார், அபராதம் விதித்து, ரசீது வழங்குவார்கள்வாகன ஓட்டிகள், அந்த ரசீதை நீதிமன்றத்தில் காட்டி, அபராதம் செலுத்தி வந்தனர். அதற்குப் பின்னர்,  'ஸ்பாட் பைன்' முறை நடைமுறைக்கு வந்தது. ஆனால், இதன் மூலம், பல்வேறு முறைகேடுகள் போக்குவரத்து காவலர்களால் நடந்தது.  
இதனை முடிவுக்குக் கொண்டு வர, தமிழக காவல் துறை, பணமில்லா பரிவர்த்தனை முறையில் அபராதம் வசூலிக்கும், - சலான் திட்டத்தை அறிமுகம் செய்தது
சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்
இந்த இசான் திட்டம், முதன்முதலாக சென்னை மாநகர போலீசில், மே, 10ல், அமல்படுத்தப் பட்டது.இதற்காக, கேமரா மற்றும் ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்யும், ஸ்வைப்பிங் வசதியுடன் கூடிய, 300 கையடக்க மின்னணு கருவிகள் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப் பட்டது.
இதன் மூலம் தரப்படும் ரசீது வாயிலாக, கடன் மற்றும் பற்று (Gredit & Debit) அட்டைகளை பயன்படுத்தி அபராதம் செலுத்தலாம்பாரத ஸ்டேட் வங்கியின், www.onlinesbi.com என்ற இணையதள முகவரியிலும், துரித குறியீடு எனும், கியூ.ஆர்., கோடு, பேடிஎம், தமிழக அரசின்
- சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்களிலும், பணமில்லா பரிவர்த்தனை வழியாக அபராதத்தை, இரண்டு நாட்களில் செலுத்த வேண்டும்.
இந்த வசதியை பயன்படுத்த முடியாதவர்கள், இந்த ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அபராதத்தை ரொக்கமாக செலுத்தலாம்.
அபராதம் செலுத்தியதற்கான ரசீதை, அருகில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம், அபராதம் செலுத்தியவர் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்போக்குவரத்து விதிகளை மீறுகின்ற வாகன ஓட்டிகளின் விபரம், மின்னணு கருவி வழியாக, உடனடியாக, ஆர்.டி..,விற்கும் சென்று விடும்.
போலீசார், எந்த வகையிலாவது, வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கினால், லஞ்சமாக கருதப்பட்டுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டு உள்ளது. 
இந்தக் கருவியின் செயல்பாடுகள் எப்படி?
போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ள, மின்னணு கருவியின் செயல்பாடுகள் அனைத்தும், கணினிமயமாக்கப் பட்டுள்ளது. அந்த கருவி மூலமாக, ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்ய முடியும். விதிமீறலில் ஈடுபட்டோரின் வாகன எண்ணை போக்குவரத்துக் காவலர் அந்த கருவியில் பதிவு செய்ததும், அவரது பெயர், வீட்டு முகவரி, மொபைல் போன் எண், இதற்கு முன் எத்தனை முறை விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என்ற விபரங்கள் அனைத்தும், திரையில் தெரியும்.
கருவியில் உள்ள வசதிகள் என்ன?
மேலும், அந்த கருவியில், 75 வகையான போக்குவரத்து விதிமீறல், அதற்கான அபராத தொகை ஆகிய விபரங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதை, 'கிளிக்' செய்ததும், அபராதம் வசூலிக்கும் போலீசார், அபராதம் செலுத்தும் வாகன ஓட்டிகள் ஆகிய இருவரும், மின்னணு கருவியிலேயே கையெழுத்திட வசதி உள்ளது. கையெழுத்து போட தெரியாதவர்கள் தங்க்ளது விரல் கைரே கையை பதிவு செய்யலாம்.
போக்குவரத்து விதி மீறல்கள் நடக்கும் இடம், அபராதம் விதிக்கும் நடைமுறைகள், போலீசார் மற்றும் வாகன ஓட்டிகளின் செயல்பாடுகள் அனைத்தையும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, கண்காணிக்கும் வகையில் இந்தக் கருவி அதிக தொழில் நுட்ப வசதியுடன் உள்ளது.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 29.06.2018