disalbe Right click

Showing posts with label பதிவுத்துறை. Show all posts
Showing posts with label பதிவுத்துறை. Show all posts

Saturday, July 25, 2020

பத்திரப்பதிவு பிழை திருத்தத்திற்கு கட்டணம்

பத்திரப்பதிவு பிழை திருத்தத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை!
நாம் செய்கின்ற பத்திரப்பதிவுகளில் நம்மையும் அறியாமல் ஏற்படுகின்ற பிழைகளால், அல்லது ஏற்கனவே நமது முன்னோர்களால் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களில் உள்ள பிழைகளால் சம்பந்தப்பட்ட பத்திரத்தில் உள்ள சொத்தை அடமானம் வைக்க முடியாமல், விற்க முடியாமல் நாம் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறோம். அதனை திருத்தம் செய்யலாம் என்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றால் அவர்கள் அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள். 
கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
திருத்தங்கள் செய்யப்படுகின்ற பத்திரங்களால், அந்த பத்திரத்தில் உள்ள அளவு மற்றும் அதன் சொத்து மதிப்பை மாற்றாது என்றும், திருத்தங்கள் செய்வதற்கு முத்திரை வரி விதிப்பது என்பது சட்டவிரோதமானது என்றும் அதன் அடிப்படையில் பெறப்பட்ட ரூ.16,920ஐ, உத்தரவு கிடைத்த ஆறு வார காலத்திற்குள் மனுதாரரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சென்னை பதிவுத்துறைத்தலைவர் அவர்களுக்கும், சென்னை நீலாங்கரை சார்பதிவாளர் அவர்களுக்கும் எதிராக அனிருத்ர ரகுவீர் என்பவர் தொடர்ந்த வழக்கில் W.P. No.8585 of 2016 Annirrutha Raghuveer vs The Inspector General Of ... on 15 March, 2019) உத்தரவிட்டுள்ளது. அதன் சாராம்சத்தை கீழே காணலாம்.
Madras High Court

Annirrutha Raghuveer vs The Inspector General Of ... on 15 March, 2019
                                                         1

                                IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

                                                 DATED 15.03.2019

                                                      CORAM

                          THE HONOURABLE Mrs. JUSTICE PUSHPA SATHYANARAYANA

                                                W.P. No.8585 of 2016


                   Annirrutha Raghuveer                                     .. Petitioner

                                                        Vs.


                   1.The Inspector General of Registration,
                     No.100, Santhome High Road,
                     Chennai – 600 028.

                   2.The Sub Registrar,
                     O/o. Sub Registrar,
                     Neelangarai,
                     Chennai.                                               .. Respondents


                   PRAYER : Writ Petitions filed Under Article 226 of the Constitution of
                   India praying to issue a Writ of Mandamus directing the respondents to
                   refund the Stamp Duty of Rs.16,920/- and Registration Fee of
                   Rs.2,570/- collected from the petitioner for registering the Rectification
                   Deed dated 19.10.2015 in Doc.7822/2015 forthwith.


                               For Petitioner     : Mr.Babu Rangasamy
                                                    for M/s.Babu Rangasamy Associates

                               For Respondents    : Mr.T.M.Pappiah
                                                    Special Government Pleader




http://www.judis.nic.in
                                                        2

                                                  ORDER
The petitioner has filed this writ petition seeking a direction to the respondents to refund the excess stamp duty of Rs.16,920/- and registration fees paid on 19.02.2015 for registering the rectification deed.
2. The facts of the case is that the petitioner has purchased a vacant house site measuring an extent of 2416 sq.ft. out of 4983 sq.ft bearing Plot No.4/2, Singaravelan Salai, North Street, Neelangarai, Chennai in S.No.75/1 by virtue of sale deed dated 04.09.2014. When the petitioner intended to construct a house in the subject property and applied for a housing loan with the bank, it was found that an inadvertent error had crept in in the sale deed dated 04.09.2014 that in the schedule of property, the Plot Number was mentioned as “Plot No.42/2” instead of “Plot No.4/2”. As it was a registered instrument, the same has to be corrected only by a rectification deed. The above said mistake was only a typographical error. Hence, the petitioner along with his vendor executed a rectification deed dated 19.10.2015 and presented before the second respondent. The second respondent insisted for payment of the stamp duty of Rs.16,920/- and also collected the registration charge of Rs.2,570/-. As the petitioner was in a hurry to get the loan sanctioned, he had paid the said stamp duty and http://www.judis.nic.in the registration charges and got the rectification deed registered. In fact, it is stated that the stamp duty was demanded by the second respondent only based on Circular No.40756/N1/2014, dated 03.09.2014. The said circular mentions that if there is only a change in the Survey Number, which would include/substitute a different property altogether, then the additional stamp duty has to be paid, whereas, in this case, admittedly, it is only a typographical error, where instead of “Plot No.4/2” it was mentioned as “Plot No.42/2”, which is an inadvertent mistake. Other than this, there is no change in Survey Number, boundaries or even extent of the land.
3. When there is no alteration in the basic nature of the document, especially in the extent and valuation of the property and the rectification is only of a typographical error, there is no question of application of Schedule I or application of Section 47-A of the Indian Stamp Act, 1899.
4. The learned counsel for the petitioner also produces a judgment of this Court reported in 2010-3-L.W. 252 (P.Uthamaraj vs. The District Registrar, Chennai South & others) in support of this case. The relevant portion of the said judgment is extracted hereunder:
http://www.judis.nic.in
11. It is no doubt true that section 47-A of the Act which is as follows:
"47-A. Instruments of conveyance etc., under-valued how to be dealt with.-
.......
... a reading of section 47-B it is clear that chargeability under Schedule I would be applicable only in cases where in the rectification deeds by making change in description of property from the previous instrument, the valuation is sought to be altered. It may arise in cases where by rectification the extent of the property is sought to be increased or altered by which the value of the property or superstructure may get increased. In those cases, certainly by applying section 47-B of the Act, the difference in stamp duty can be recovered by making calculation as per Schedule I. In cases where by rectification, there is no alteration in the basic nature of the document, especially in the extent and valuation of the property or where the rectification is only in respect of technical aspect such as typographical error or where the rectification is in respect of extent of property while the actual measurement remains unchanged, there is no question of application of Schedule I or application of section 47-A of the Act.
5. In as much as the rectification deed does not alter the survey number, extent or value and it is only a typographical error, imposing stamp duty on the rectification deed is illegal. In view of the above, the stamp duty of Rs.16,920/- collected has to be refunded to the petitioner. Accordingly, the first respondent is directed to refund the said amount within a period of six weeks from the date of receipt of a copy of this order.
http://www.judis.nic.in
6. With the above directions, the writ petition is allowed. No costs.
                                                                              15.03.2019

                   Index    : Yes / No
                   Internet : Yes / No

                   rsi

                   To

1.The Inspector General of Registration, No.100, Santhome High Road, Chennai – 600 028.
2.The Sub Registrar, O/o. Sub Registrar, Neelangarai, Chennai.
http://www.judis.nic.in PUSHPA SATHYANARAYANA, J.
rsi W.P. No.8585 of 2016 15.03.2019 http://www.judis.nic.in  

இணையத்திலிருந்து திரட்டிய தகவல் இது

அன்புடன்
செல்வம் பழனிச்சாமி 26.07.2020 ******************************************

Friday, April 10, 2020

முத்திரைத்தாள் விற்பனையாளரின் தகுதிகள்

முத்திரைத்தாள் விற்பனையாளரின் தகுதிகள்
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
இன்று முகநூலில் ஒரு நண்பர் முத்திரைத்தாள் விற்பனையாளராக என்ன செய்ய வேண்டும்? என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். எனக்கு அதுபற்றி தெரியவில்லை. அதனால் கூகுள் இணையதளத்தில் அதுபற்றிய தகவல்களை திரட்டி இந்த பதிவை நான் உங்களுக்கு தந்துள்ளேன்.
பதிவுத்துறை
முத்திரைத்தாள் விற்பனையாளர்களை பதிவுத்துறையே தேர்ந்தெடுக்கின்றது. இவர்களுக்கான தேவைகள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தின் விளம்பரப்பலகையில் பதிவுத்துறையினர் விளம்பரம் செய்வார்கள். அதனைப் பார்த்து நீங்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 
முத்திரை சட்ட விதி 25 (1) (சி)
முத்திரை சட்ட விதி 25 (1) (சி)ன்படி முத்திரைத்தாள் விற்பனையாளருக்கான தகுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.
  1. எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்ச வயது 18 ஆகியிருக்க வேண்டும்.
  3. முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழ்
  4. தாசில்தார் வழங்கிய இருப்பிடச்சான்று.
  5. மருத்துவர் வழங்கிய உடல்தகுதி, கண்பார்வை சான்றிதழ்கள்
  6. தாசில்தாரிடம் பெற்ற சொத்து மீதான செல்வநிலைச் (Solvency) சான்றிதழ் 
  7. பிணையமாக காட்டப்படுகின்ற சொத்து மீதான வில்லங்க சான்றிதழ்
முன்னாள் ராணுவத்தினர், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர், விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால், அந்த முன்னுரிமையைப் பெற, அதற்குரிய சான்றிதழை தாசில்தாரிடம் இருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைத்திருக்க வேண்டும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 11.04.2020 

Wednesday, March 4, 2020

பவர் பத்திரம் மூலம் சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு.....

பவர் பத்திரம் மூலம் சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு.....
முதலில் என்ன செய்ய வேண்டும்?
  1. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் அந்த பத்திரத்தை ரத்து செய்துள்ளாரா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
  2. அந்த பவர் பத்திரத்தை எழுதுவதற்கு அவர் தகுதியானவர்தானா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
  3. அதற்கு அந்த சொத்தின் தாய்பத்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
  4. அந்த சொத்து பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் பெயரில் மட்டும் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.
  5. வேறு யாருக்காவது அந்த சொத்து விற்கப்பட்டுள்ளதா? என்பதை வில்லங்கம் போட்டு பார்க்க வேண்டும்.
  6. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறாரா? என்று பார்க்க வேண்டும்.
  7. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர்  இறந்து எத்தனை நாளாயிற்று? என்பதையும் பார்க்க வேண்டும்.
மேலும், இது சம்பந்தமாக கடந்த 09.10.2018 அன்று பதிவுத்துறைத்தலைவர் அவர்கள் பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளையும் சொத்து வாங்குபவர்கள் பின்பற்ற வேண்டும்.
பதிவுத்தலைவர் அவர்களின் சுற்றறிக்கை என்ன சொல்கிறது?
பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர்கள் சம்பந்தமாக பதிவுத்துறைத் தலைவர் அவர்கள் சில அறிவுரைகளை பதிவாளர்களுக்கு வழங்கியுள்ளார். அவற்றை கீழே காணலாம்.
  1. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்ததன்படி ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட பதிவாளர் அவர்களிடம் தாக்கல் செய்யப்படுகின்றபோது அதை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழும் இணைத்து தாக்கல் செய்யப்பட வேண்டும். 
  2. அந்த பத்திரம் பதிவு செய்யப்படுவதற்கு முன் உள்ள முப்பது நாட்களுக்குள் அந்த சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும்.
  3. அதற்கு முன்பாக அந்த சான்றிதழ் பெறப்பட்டு இருந்தால் கண்டிப்பாக செல்லாது. அதனால் அந்த பத்திரத்தை பதிவு செய்யக்கூடாது.
  4. அதே நேரத்தில் பவர் பத்திரம் எழுதப்பட்டு முப்பது நாட்களுக்குள் அந்த சொத்தை வேறு ஒருவருக்கு முகவர் விற்பதாக இருந்தால் மேற்கண்ட சான்றை இணைக்க வேண்டியது இல்லை.
  5. பவர் பத்திரங்கள் மூலம் விற்கப்படுகின்ற சொத்துக்களுக்குத்தான் மேற்கண்ட நிபந்தனைகள் பொருந்தும். 
  6. பவர் பத்திரங்கள் மூலம் வாங்கப்படுகின்ற சொத்துக்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகள் பொருந்தாது. 
பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கையின் நகலை கீழே காணலாம்.



*********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.03.2020 

Sunday, February 23, 2020

சாட்சி கையெழுத்து போடுபவர்களுக்கு

சாட்சி கையெழுத்து போடுபவர்களுக்கு பதிவுத்துறை விதித்துள்ள புதிய நிபந்தனை
பத்திரப்பதிவு சாட்சிகள் 24.02.2020 முதல் புது கட்டுப்பாடு
சார் பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்யும் போது, சாட்சியாக வருபவர்களுக்கு பதிவுத்துறையால் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுவரையில் நடந்துவந்த நடைமுறை என்ன?
  • பத்திரப் பதிவின் போது, விற்பவர் தரப்பில் மற்றும் வாங்குபவர் தரப்பில், தலா ஒருவர் சாட்சியாக அந்த பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும் என்பது விதி.
  • சில நேரங்களில் விற்பவர் தரப்பில் அல்லது வாங்குபவர் தரப்பில் சாட்சியாக யாரும் வராத நிலையில், இதற்கு முன்பு ஆவண எழுத்தர், அலுவலக ஊழியர்கள் யாராவது, சாட்சியாக கையெழுத்திடுவார்கள்
  • அந்த சமயத்தில் அங்கு இருக்கின்ற வீடு, மனை விற்பனை செய்கின்ற புரோக்கர்களும் சாட்சியாக கையெழுத்து போடுவதுண்டு.
  • சார் பதிவாளர் இதனை கண்டு கொள்வதில்லை.
நடக்கும் முறைகேடு என்ன?

  • சார் - பதிவாளர் அலுவலகங்களில், சாட்சி கையெழுத்து போடுவதற்கென்றே, சிலர்  அங்கு  வலம்    வருகின்றனர்
  • தொடர்ந்து ஒரே நபர்  பல பத்திரங்களில் சாட்சி கையெழுத்து போட்டு  வருவது   அங்கு   வாடிக்கையாகி விட்டது
  • இது, மோசடிக்கு வழி வகுப்பதாக உணர்ந்து, பத்திரப் பதிவுக்கான சாட்சிகள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய, புதிய கட்டுப்பாடுகளை, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் விபரம்
  • சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்யும் போதுசாட்சியாக வருவோரின் புகைப்படத்தையும், கைரேகையையும் அங்குள்ள அலுவலர்கள் பதிவு செய்ய வேண்டும்
  • சாட்சியாக கையொப்பம் இடுவோரின்  அடையாள ஆவணத்தையும், அவர்கள்   தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து ஆறு பத்திரங்களுக்கு மேல் ஒரே நபர், சாட்சி கையெழுத்திட, சார் - பதிவாளர் அனுமதிக்கக் கூடாது.
  • அப்படி ஒருவேளை அவசியம் ஏற்பட்டால், மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்ற பின், சம்பந்தப்பட்ட பத்திரத்தை சார் பதிவாளர் பதிவு செய்ய வேண்டும்.

இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 24.02.2020 

Thursday, February 13, 2020

சங்கங்கள் பதிவு சம்பந்தமான கட்டணங்கள்

சங்கங்கள் பதிவு சம்பந்தமான கட்டணங்கள் 
நமது தமிழ்நாட்டில் சங்கம் என்று ஓண்ரு ஆரம்பிக்கப்பட்டால் அதனை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில்   பதிவு செய்து அதனை பராமரித்து வரவேண்டும். இதற்காக அதன் ஒவ்வொரு செயலுக்கும், பதிவுத்துறையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி கீழே காணலாம்.


********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 14.02.2020

Tuesday, August 6, 2019

நில அளவை, எல்லைக் கல், குறியீடுகள்

நில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!
சொத்தினை வாங்குவதோடு மட்டுமின்றி சரியான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அளவுகள் சரியாக உள்ளதா என அளந்து எல்லைக் கல்லை நட்டு, அதனை பாதுகாப்பதே சொத்தினை முழுமையாக அனுபவிக்க இயலும். அதன்படி நில அளவை பற்றி தெரிந்து கொள்வோம்
முதல் இந்திய நில அளவை :
தற்போதைய தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வடக்கு ஆற்காடு ஆகியவை பாரா மகால் என்று அழைக்கப்பட்டன. சேலம் மற்றும் பாரா மகாலின் மேற்பார்வையாளரான கார்டினல் அலெக்சாண்டர் ரீடு என்பார் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் சமூகப்பொருளாதார ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த ஆய்வு 1793 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டபிள்யு. மாதர் தலைமையின்கீழ் ஆரம்பிக்கப்பட்டு 1796 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்யப்பட்டது. 04.10.1797 தேதியிட்ட கடிதத்தில், பிரிட்டீஷ் அரசால் கார்டினல் அலெக்சாண்டர் ரீடு பாராட்டப்பட்டார்.
) பெரிய இந்திய நெடுவரை வில் (Great Trigonometrical Survey)
பெரிய இந்திய நெடுவரைவில் ஆய்வு 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் பிரிட்டீஷ் நில அளவையாளர் கார்டினல் வில்லியம் லாம்டனால் தொடங்கப்பட்டது. இது சென்னையில் புனித தோமையார் மலையில் (St.Thomas mount) இருந்து இமயமலை அடிவாரம் வரை நடத்தப்பட்டது. 12 கி.மீ. அடிப்படை கோடு அளவிட 57 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
36 அங்குல பெரிய ½ டன் எடைகொண்ட தியோடோலைட்டு அளவிடப் பயன்படுத்தப்பட்டது. இந்த 5-பத்தாண்டுகள் திட்டம் சர்வே ஜெனரல் லெப்டினண்ட் ஜார்ஜ் எவரெஸ்டால் 1852 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. நில அளவையாளர் ராதாநாத் சிக்தார் 1852 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை 29,002 அடி உயரம் என்று அளந்தார். நவீன அளவீடுகள் உயரம் 29,037 அடி குறிக்கிறது. இது இந்தியாவில் திட்டமிடப்பட்ட நிலப்பரப்பு வரைபடத்தின் தொடக்கமாகவும், உலகின் பழமையான கணக்கெடுப்பு மற்றும் வரைபட முகமையாகவும் கருதப்படுகிறது.
சிறப்பான முறையில் பணிபுரிந்தவர்களை கௌரவிப்பது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் நடைமுறை. அந்த வகையில் எவரெஸ்ட் அவர்களின் பெயரை இமய மலையின் குன்றுக்கு எவரெஸ்ட் என பெயரிட்டனர், அதே போல் லாம்டன் சேவையை பாராட்டி கௌசிகா நதி உற்பத்தி ஆகும் குருடி மலையில் உள்ள ஒரு குன்றுக்குலாம்டன் ஹில்என்று பெயரிட்டனர்.
நில அளவை கற்கள் (Survey Stones)
“A” கிளாஸ் கற்கள் ( “A” Class Stones)
முதலில் நில அளவையில் “A”கற்கள் மூன்று கிராமங்கள் சந்திக்கும் இடங்களிலும் அதற்கு அடுத்து இரண்டு பக்கங்களிலும் “A”கற்கள் நடப்படுகின்றன.
“A” கிளாஸ் கற்கள் அளவு: 90cm × 25cm × 25cm
“B” கிளாஸ் கற்கள் ( “B” Class Stones)
ஒவ்வொரு முச்சந்தியிலும், “G” லயன் எனப்படும் Giometrival Line ஆரம்பிக்குமிடத்திலும் நடப்படும்.
“B” கிளாஸ் கற்கள் அளவு: 60cm × 15cm × 15cm
நில அளவை கற்கள் நடப்படும் இடங்கள்
1. Open Block–களில் நில அளவை கற்கள் “A” கிளாஸ் கற்கள் (90cm × 25cm × 25cm) டவுன் நில அளவை எல்லையிலும், கோணமானி கொண்டு அளக்கக் கூடிய இடங்களில் கற்கள் நடப்பட வேண்டும்.
Medium-பிளாக்குகளில் கோணமானி கொண்டு அளக்கக்கூடிய இடங்களில் அதாவது 3 அல்லது 4 தெரு சந்திக்கும் இடங்களில் பூமிக்கு அடியில் “A” கிளாஸ் கற்கள் அளவு: 90cm × 25cm × 25cm நடப்பட வேண்டும். தலையில் அம்புக்குறியும் குழியும் இருக்க வேண்டும்.
“B” கிளாஸ் கற்கள் அளவு: 60cm × 15cm × 15cm நில அளவை புலங்கள் காலியிடமாக இருந்தால் நடப்பட வேண்டும் அல்லது சுவராக இருந்தால் தார் மார்க் போட வேண்டும். டவுன் நில அளவை எல்லையில் “B” கிளாஸ் கற்கள் நடப்பட வேண்டும்.
சங்கிலி நில அளவை கல் (Chain Survey Stone) 30cm × 15cm × 15cm, இந்த கற்கள், இரண்டு கோணமானி கொண்டு நடப்படும் கற்களில் லயனில் இடையில் நடப்பட வேண்டும். கோணமானி நில அளவை செய்ய வேண்டியதில்லை. தலையில் “+” மார்க் அடிக்க வேண்டும்.
நில அளவை மற்றும் எல்லைகள் நிர்ணயச் சட்டம், 1923 இன் படி,
ஒவ்வொரு நிலச்சுவான்களும் அவசியம், நில அளவை கற்களை பராமரிக்கப்பட வேண்டும். அவர்களே நில அலவை கற்களை சொந்த செலவில் புதுப்பித்துக் கொண்டும், ரிப்பேர் செய்து கொண்டும், வரலாம். அப்படி அவர்கள் நில அளவை கற்களை எதுவும் செய்யாது இருந்தால், அரசே கற்களை புதுப்பித்து நில அளவை கற்களின் கிரயம், நடப்பட்ட கல்லின் கூலித் தொகையையும் சேர்த்து செலவு தொகைகளை விகிதாசாரப்படி பிடித்தம் செய்யப்படும். [பிரிவு 15(1)]
நில அளவை கற்களை யாராவது, சேதப்படுத்தினாலும், காணாமற்போனாலும், அப்புறப்படுத்தி இருந்தாலும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாச்சியருக்கு அறிக்கை கொடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. [பிரிவு 16(c)]
நில அளவை கற்கள் சேமிப்புக் கிடங்கு (Survey Stone Depot Register)
காணாமல் போன நில அளவை கற்களை வேறு கற்கள் நடுவதற்காக நில அளவை கல் காண்ட்ராக்டரிடம் வாங்கக் கூடிய கற்கள், நில அளவை கற்கள் சேமிப்புக் கிடங்கு கணக்குப் பதிவேட்டில் இருக்கும்.
நில அளவை சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்
1. அரசால் கொடுக்கப்பட்ட நில அளவுப் புத்தகம், கிராமபதிவேடு, சிட்ட, மற்றும் புதிதாக தயாரிக்கும் அடங்க்ஜல், புதிய சிட்ட, நில அளவை கற்கள் சேமிப்புக் கிடங்கு பதிவேடு, நில அளவை கற்கள் படம், கற்கள், நில அளவை கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
2. நில அளவை கற்கள், பராமரிக்க வேண்டிய கற்களை 1000 கற்கள் வரும்படி பிரித்து தணிக்கை மாதாமாதம் முன்னேற்ற அறிக்கை தயாரித்து, வருவாய் ஆய்வாளர் மூலமாக நில அளவருக்கு அனுப்ப வேண்டும்
3. நில அளவை கற்கல் கிடங்கில் உள்ள இருப்பு கற்களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும்.
4. கல் தணிக்கையின் போது கற்கள் காணாமற் போனால் அதனை புதுப்பிக்க 15 (2) அறிவிப்பை சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு கொடுக்கப்பட வேண்டும். அறிக்கையில் பிக்கா வட்ட நில அளவையர் கையெழுத்து வாங்கி இருக்க வேண்டும்.
5. கிராமத்தில் பராமரிக்க வேண்டிய நில அளவை கற்களை யாராவது அப்புறப்படுத்தியிருந்தால், வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
6. வாய்க்கால், சாலை, இதர விவரங்கள் அழிக்கப்பட்டால் உடனே அறிக்கை கொடுக்க வேண்டும்.
7. கல் டிப்போவிலிருந்து நில அளவை கற்கள் விலைக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் மனைப்பிரிவுக்கு கற்கள் கிரயம் செய்யக் கூடாது.
நில அளவை கணக்கீடுகள்
ஏக்கர்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 .அடி
1 ஏக்கர் – 4046 மீ
செண்ட்
1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 .அடி
1 செண்ட் – 40.46 மீ
ஹெக்டேர்
1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 .அடி
1 ஹெக்டேர் – 10,000 மீ
ஏர்ஸ்
1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 .மீ
1 ஏர் – 1076 .அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை
• 10 கோண் = 1 நுண்ணணு
• 10 நுண்ணணு = 1 அணு
• 8 அணு = 1 கதிர்த்துகள்
• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
• 8 துசும்பு = 1 மயிர்நுனி
• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
• 8 சிறு கடுகு = 1 எள்
• 8 எள் = 1 நெல்
• 8 நெல் = 1 விரல்
•12 விரல் = 1 சாண்
•2 சாண் = 1 முழம்
•4 முழம் = 1 பாகம்
•6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
•4 காதம் = 1 யோசனை
வழியளவை
• 8 தோரை(நெல்) = 1 விரல்
• 12 விரல் = 1 சாண்
• 2 சாண் = 1 முழம்
• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
• 4 குரோசம் = 1 யோசனை
• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)
நிலவளவை குழிக்கணக்கு வருமாறு
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
கன்வெர்ஷன்
1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்
1 ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்
1 கிரவுண்ட் = 2400 சதுர அடி
B. நீள அளவைகள்
1 கிலோமீட்டர் = 0.621 மைல்
1 மைல் = 1.609 கிலோமீட்டர்
1 கிலோமீட்டர் = 1000 மீட்டர்
1 மீட்டர் = 39.37 அடி
Image may contain: 1 person, smiling, indoor

நன்றி : எஸ்.பாஸ்கர் மதுரம் 
மதுரம் சட்ட மையம் முகநூல் குழு