disalbe Right click

Showing posts with label மனித உரிமை ஆணையம். Show all posts
Showing posts with label மனித உரிமை ஆணையம். Show all posts

Wednesday, March 7, 2018

ஆசிரியரை தாக்கிய எஸ்.ஐ.,க்கு அபராதம்

ஆசிரியரை தாக்கிய சார்பு ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னை - விழுப்புரம் மாவட்டம், பொன் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர், மோகன்குமார்  என்பவர், கடந்த 2008ம் ஆண்டில் ஒருநாள், விழுப்புரம் நகரில் அவரது தந்தைக்குச் சொந்தமான கடையில் தனது மகளுடன் இருந்திருக்கிறார். அவர்களது கடையில் இளவரசன் என்பவர் வேலையாளாக இருந்திருக்கிறார். 
அப்போது, சீருடையில் ஒரு போலீஸ்காரரும், சீருடை இல்லாமல் ஒரு போலீஸ்காரரும் அவரது கடைக்கு வந்துள்ளனர். கடையில் பணியாற்றும் இளவரசனைப் பற்றி மோகன்குமாரிடம் விசாரித்துள்ளனர்.  உரிமம் இல்லாமல், வாகனத்தை ஓட்டியதற்காக இளவரசன், 650 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என, சீருடையில் இல்லாத போலீஸ்காரர் கூறியுள்ளார். அவர் இன்று வேலைக்கு வரவில்லை, அவர் வந்ததும், காவல் நிலையம் அனுப்பி வைக்கிறேன்' என்று மோகன்குமார் அவர்களிடம் கூறியுள்ளார். உடனே, சீருடையில் இல்லாத போலீஸ்காரர்  மோகன்குமாரை தகாத வார்த்தையால் பேசி, அங்கிருந்து காவல் நிலையம் வரை, அடித்துக் கொண்டே அழைத்துச் சென்றுள்ளார்.
காவல்துறையினரின்  செயலால், நானும், என் குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட, சார்பு ஆய்வாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுபற்றி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், மோகன்குமார் புகார்  செய்தார். 
இந்த மனுவை விசாரித்து, நீதிபதி, ஜெயச்சந்திரன் அவர்கள்,  சார்பு ஆய்வாளர் மீது, குற்றம் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. 'எனவே, பாதிக்கப்பட்ட மோகன்குமாருக்கு, இன்னும் இரண்டு மாதத்தில், தமிழக அரசு, 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை, எஸ்.., குமாரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்' என்றும் உத்தரவிட்டார்.
*************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.03.2018 

Monday, February 26, 2018

போலீஸ் தாக்கியதால் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு

 ரூ.10 லட்சம் தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பஞ்சவர்ணம், இவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில்,
கோவையில் உள்ள ஒரு தோட்டத்தில், நாங்கள் பணியாற்றினோம். எனது கணவரின் பெயர் ஜெயபாண்டி. கடந்த  2008-ம் ஆண்டில், துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவரது சொந்த ஊருக்கு என் கணவர் ஜெயபாண்டி சென்றிருந்தார். அப்போது, அவர் தோட்ட உரிமையாளர் அனுமதியுடன், ஆழ்துளை கிணற்றுக்கு பயன்படுத்தப்படும், மின் ஒயரையும் உடன் எடுத்து சென்றார்.
வத்தல்பட்டி என்ற ஊருக்கு ஆட்டோவில் சென்ற போது, விருவீடு காவல் நிலையத்தின்  இன்ஸ்பெக்டர் திரு சக்கரை, எஸ்.., பாண்டியம்மாள், ஏட்டு ஜெயபிரகாஷ் ஆகியோர், என் கணவரை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் எடுத்துச் சென்றிருந்த மின் ஒயரை, திருடியதாக ஏற்றுக்கொள்ளுபடி கூறி, அவரைத் தாக்கியுள்ளனர்.  அவர் அதனை திருடவில்லை என்ற உண்மை தெரிந்த பிறகு, எனது கணவரை காவல்துரையினர்  விடுவித்தனர். கோவைக்கு வந்த எனது கணவர் மறுநாள் இறந்து விட்டார். போலீசார் கடுமையாக தாக்கியதால்தான், எனது கணவர் இறந்துவிட்டார் எனவே, போலீசார் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனை விசாரித்த ஆணைய நீதிபதி, டி.ஜெயச்சந்திரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேரும் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் பஞ்சவர்ணத்திற்கு, நான்கு வாரத்திற்குள், 10 லட்சம் ரூபாயை, தமிழக அரசு, வழங்க வேண்டும்
இந்த தொகையை, இன்ஸ்பெக்டர் சக்கரை உட்பட, காவல்துறைஉயைச் சேர்ந்த மூவரிடமும் இருந்துதான் வசூலிக்க வேண்டும்மேலும், அந்த மூவர் மீதும், துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்கள் மீது, கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கும் பதிவு செய்ய வேண்டும். மனுதாரருக்கு, அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 ************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.02.2018 

Friday, May 19, 2017

இளம்பெண் பலி : கமிஷனருக்கு 'நோட்டீஸ்'

இளம்பெண் பலி : கமிஷனருக்கு 'நோட்டீஸ்'
சென்னை: மின் கம்பம் விழுந்து இளம்பெண் பலியானது குறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர், ஆறு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, மாநில மனித உரிமைகள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் புனிதா, 22; திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சாப்பாடு வாங்க, மங்கலம் சாலையில் உள்ள உணவகத்துக்கு சகோதரருடன் சென்றார். அப்போது, அங்கிருந்த உயர் கோபுர மின் கம்பம் முறிந்து விழுந்ததில், புனிதா உயிரிழந்தார். இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, ஆணைய தலைவர் டி.மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவில், 'புனிதாவின் மரண வழக்கு குறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர், ஆறு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர், மின் கம்பம் முறிந்து விழுந்தது குறித்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் – 19.05.2017

Saturday, January 14, 2017

மாநில மனித உரிமை ஆணையம்

மாநில மனித உரிமை ஆணையம்
அரசு அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல்  இருக்கும் அதிகாரிகளின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?
காவல்துறையில் நீங்கள் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லையென்றாலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாம். 
மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுகின்ற 80% புகார்கள் காவல்துறைக்கு எதிரானவையாகும். 
புகார் அனுப்ப என்ன செய்ய வேண்டும்?
 அதிகாரிக்கு அனுப்பப்பட்ட புகார் நகல் 
  அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.
  மேலதிகாரிக்கு அனுப்பிய மேல்முறையீட்டு நகல்.
  அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.
  புகாருடன் இணைக்கப்பட்டிருந்த ஆவண நகல்கள்.
ஆகியவற்றை இணைத்து, புகார் மனு ஒன்று எழுதி, பதிவுத் தபால் மூலமாக ஒப்புதல் அட்டை இணைத்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
ஆணையர் அவர்கள்,
மாநில மனித உரிமை ஆணையம்,
143, P.S.குமாரசாமிராஜா சாலை,
திருவரங்கம் மாளிகை,
கிரீன்வேஸ் ரோடு,
R.A.புரம்,
சென்னை-600 028.
  இந்த புகாரை சாதாரணமாகவே எழுதி அனுப்பலாம்.
  மனு ஸ்டாம்ப் ஏதும் ஒட்டத் தேவையில்லை.
  புகார் தெளிவாக, முழுமையாக எழுதப்பட வேண்டும்.
  வேறு (நீதிமன்றம்) எங்கும் புகார் அனுப்பி விசாரணை நிலுவையில்  இருக்கக்கூடாது.
 தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருந்தால் மாநில மனித உரிமை ஆணையம் அந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்காது.
 மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருந்தால் தேசிய மனித உரிமை ஆணையம் அந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்காது.
  பொது (அரசு) ஊழியருக்கு எதி்ராக இல்லாத புகார் ஏற்றுக் கொள்ளப்படாது.
 புகார் பதிவு செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் விசாரணை மேற்கொள்ளப்படும்.
  மனித உரிமை மீறலுக்கு எதி்ராக இல்லாத புகார் ஏற்றுக் கொள்ளப்படாது.
Phone : 91-44-2495 1484
Fax     : 91-44-2495 1486 
E-mail : shrc@tn.nic.in   
மேலதிக விபரங்களுக்கு......