disalbe Right click

Showing posts with label முதலீடுகள். Show all posts
Showing posts with label முதலீடுகள். Show all posts

Friday, January 12, 2018

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
பலபேரிடம் பணத்தை வசூல் செய்து, அதை எதில் முதலீடு செஞ்சா நிறைய லாபம் கிடைக்குமோ அதுல பணத்தைப் போட்டு அவர்களுக்கு சம்பாதித்துக் கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இதில் முதலீட்டாளர்களுக்கும் இதனை நடத்துகின்ற நிதி நிறுவனங்களுக்கும் லாபம் கிடைக்கும். இருதரப்புக்கும் லாபம்ங்கிற அர்த்தத்தில்-தான் ‘மியூச்சுவல் ஃபண்ட்னு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யத் தெரியாத முதலீட்டாளர்கள் இதனை தெர்வு செய்கிறார்கள். இதனை  பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள்  மட்டுமல்ல, வங்கிகளும் நடத்துகின்றன.
நிறுவனங்கள் என்ன செய்கின்றன?
முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைப் பிரிச்சு பல திட்டங்கள்ல அவங்க முதலீடு செய்கிறார்கள். ஏதாவது ஒன்றில் லாபம் குறைஞ்சாலும் மற்றோரு திட்டத்தில் செய்த முதலீடு நமக்கு லாபத்தை தந்துவிடும்.  ஆகையால் முதலுக்கு மோசம் என்ற கவலை நமக்கு  வராது. நாம் முதளிடு செய்த  பணம் எப்படிப் பெருகிக் கொண்டு இருக்கிறது என்பதை பார்க்கும் வசதியும் உண்டு. 
இதில் ரிஸ்க் உண்டா?
யாரோ ஒருவரின் தவறான வழிகாட்டுதலினால் ஷேர் மார்க்கெட்டில் நேரடியாக நுழைஞ்சு  திறமையின்மை காரணமாக நஷ்டம் என்பது இதில் ஏற்படாது. முதலில், நமக்குப் பிடிச்ச திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. 
நமது இருப்புத் தொகை எவ்வளவு? எவ்வளவு முதலீடு செய்யலாம்? என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். முதலீடு செய்த திட்டத்தில் திருப்தி இல்லை என்றால் அதிலிருந்து விலகியும் கொள்ளலாம். 
கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாம்
ரியல் எஸ்டேட்டில் போடுவது போல அதிகமான தொகையை  மொத்தமா முதலீடு செய்ய வேண்டும் என்பது இதில் இல்லை.  மாசா மாசம் ஒரு தொகையை முதலீடு செய்யலாம். மாதாமாதம் 1000/- ரூபாயைக்கூட நாம் முதலீடு செய்யலாம்.  Equity Linked Saving Schemes (ELSS) என்று சொல்லக்கூடிய சில திட்டங்களில்  நாம் செய்யும் முதலீட்டுக்கு வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் வரி விலக்கும் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்டு இரண்டு விதம்.
Open ended, Closed ended என்று  இரண்டு விதமாக மியூச்சுவல் ஃபண்டுகளைப் பிரித்துக் கொள்ளலாம்.
Open endedல் எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் போடலாம், எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் எடுக்கலாம்.
Closed endedல்  ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், அது முதிர்ச்சி அடைந்த பிறகுதான் எடுக்க முடியும். சில நிறுவனங்கள் மட்டும், இடையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முதலீட்டை எடுத்துக் கொள்ள வாய்ப்புகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.   Closeended   திட்டத்தில் போட்ட முதலீட்டை பொதுவாக மூணு   வருஷத்துக்கு  எடுக்க முடியாது
லாபத்தில் நமக்கு கிடைக்கும் பங்கு
மியூச்சுவல் ஃபண்டில் நாம முதலீடு செய்த தொகை வளரும்போது, கிடைக்கின்ற லாபத்தை  நமக்குப் பிரித்துக் கொடுப்பார்கள். இதில் Dividend, Growth என்று இரண்டு முறைகள் இருக்கு. முதலீடு செய்த தொகை முதிர்ச்சியடையும் காலத்திற்குள் நமக்குத் பணம் தேவை என்று  நினைக்கிறவர்கள் Dividend  முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த  முதலீடு வேகமாக வளர்ந்தால்தான் உங்களுக்கு டிவிடெண்ட் தொகை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்Dividend வருமானத்துக்கு வரி எதுவும் கிடையாது.
மொத்தமாக கடைசியில் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் Growth  முறையை  தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
முதலீட்டுக் காலம் எவ்வளவு?
அது நமது இஷ்டம்தான். முதலீட்டுக் காலம் எவ்வளவு என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.
Systematic Investment Plan' (SIP)
மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில், எஸ்..பி., (Systematic Investment Plan) எனப்­படும், தவணை முறை­யில் முத­லீடு செய்­யும் திட்­டத்­திற்கு, தற்போது வர­வேற்பு அதி­­ரித்து வரு­கிறது. இத்­திட்­டத்­தில் இணைந்து நீங்கள் வாரம், மாதம், காலாண்­டு­களில் குறைந்­­பட்­சம், 500 ரூபாய் முத­லீடு செய்­­லாம்.
அன்­றாட பங்­குச் சந்­தை­யினுடைய ஏற்ற, இறக்­கத்தை நாம் கவ­னிக்க தேவை­யின்றி, முத­லீட்­டில் ஒழுங்­கு­மு­றையை ஏற்­­டுத்த, இந்த எஸ்..பி., திட்­டம் நமக்கு உத­வு­கிறது. 2017 அக்­டோ­­ர் வரை இத்­திட்­டத்­தில், 5,600 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.01.2018 

Tuesday, March 14, 2017

என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!


என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!


என்ஆர்ஐ-கள் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் பொழுது அவர் இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் (Non-resident Indian -NRI) என்று அழைக்கப்படுகின்றார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act - FEMA) ன் கீழ் பரிந்துரைக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வெளிநாடுகளுக்குத் திரும்ப எடுத்துச் செல்லக்கூடிய அல்லது இயலாத வகைகளில், இந்தியாவில் உள்ள பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. 

 விண்ணப்பப் படிவம் 
என்.ஆர்.ஐக்களால் பூர்த்திச் செய்யப்பட்ட ஒப்பந்த விண்ணப்பப் படிவம் உத்தியோகபூர்வ புள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதோடு அந்தத் திட்டத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட வரையோலை அல்லது வேறு ஏதேனும் உத்யோகப்பூர்வ வடிவத்தில் பணம் செலுத்தப்பட வேண்டும். 

விண்ணப்பதாரர் முதலீடு செய்யும் பொழுது அவர் அந்தத் திட்டத்தின் முதிர்வு தொகையை வெளிநாட்டிற்குத் திரும்ப எடுத்துச் செல்லப் போகின்றாரா அல்லது இந்தியாவிலேயே வைத்திருக்கப்போகின்றாரா என்பதைக் குறிப்பிட வேண்டும். 

KYC  (Know your customer) சார்ந்த ஆவணங்கள் மற்றும் பான் கார்ட் நகல் கொடுக்கப்பட வேண்டும்.   

என்ஆர்ஐ-களுக்குப் பதிலாக வேறு யாராவது முதலீடுகளை நிர்வகிக்க முடியுமா? 

என்ஆர்ஐ-களுக்குப் பதில் அவருடைய பவர் ஆப் அட்டர்னி பெற்ற மற்றொருவர், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். எனினும், பவர் ஆப் அட்டர்னி வைத்திருப்பவர், பரஸ்பர நிதியில் தன்னுடைய விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 

என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
பவர் ஆப் அட்டர்னி வைத்திருப்பவர் அதனுடைய மூலப் பிரதி அல்லது நோட்டரி பப்ளிக்கினால் கையொப்பம் இட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும். பவர் ஆப் அட்டர்னியில், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் அவருடைய இந்தியப் பிரதிநிதி ஆகிய இருவரும் கையொப்பம் இட வேண்டும். அதன் பின்னர் அது முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.  

பணத்தை எப்படித்திரும்பப் பெறுவது? 
ஒரு வேளை வெளிநாடு வாழ் இந்தியர், முதலீட்டைத் திரும்ப வெளிநாட்டிற்கே எடுத்துச் செல்லும் முறையில் முதலீடு செய்திருந்தால், முதலீட்டிற்கான பணம், அவருடைய என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 

அவ்வாறு இல்லாத பட்சத்தில், முதலீட்டாளர், முதலீட்டிற்கான பணத்தைத் தனது NRE / FCNR / NRO கணக்கில் இருந்து செலுத்தலாம்.   

முதிர்வு தொகை எப்படி வழங்கப்படும்? 
முதிர்வு தொகை (வரிப் பிடித்தம் போக) இந்திய ரூபாயாக, முதலீட்டாளர் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கு எண்ணிற்குக் காசோலையாக வழங்கப்படும். சில வங்கிகள் NRE / NRO கணக்கிற்கு நேரிடையாகப் பணத்தைச் செலுத்துகின்றன. 

ஒரு வேளை முதலீட்டாளர், வெளிநாட்டிற்குத் திரும்ப எடுத்துச் செல்ல இயலாத அடிப்படையில் முதலீடு செய்திருந்தால், முதிர்வு தொகை அவருடைய NRO கணக்கில் செலுத்தப்படும்.

வரிப் பிடித்தம் உண்டா? 
வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடுகளுக்கு மூலதன ஆதாயங்கள் மீது வரி பிடிக்கப்படும். ஒருவேளை அவர் பங்கு நிதிகளில் ஒரு ஆண்டிற்கு மேல் முதலீடு செய்திருந்தால் அவருக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய டிடிஎஸ் சான்றிதழ் முதிர்வு தொகையுடன் இணைத்து அனுப்பப்படும்.   

கட்டுப்பாடுகள் 
முதலீட்டாளர் ஒரு என்ஆர்ஐ அக இருக்கும் வரை மட்டுமே அவருடைய மூலதனம், மற்றும் மூலதன மதிப்பு உயர்வு ஆகியவை திரும்ப வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். 
இதற்கான விண்ணப்பப் படிவத்தில் வெளிநாட்டு முகவரி ஒரு கட்டாயமான புலமாகும். 

எனவே ஒரு என்.ஆர்.ஐ பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் பொழுது தன்னுடைய வெளிநாடு முகவரியைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

Written by: Mr. Batri krishnan 

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள் - 14.03.2017


Monday, October 10, 2016

லாபகரமான முதலீடு


லாபகரமான முதலீடு - என்ன செய்ய வேண்டும்?

லாபகரமான முதலீட்டுக்கு… 
கட்டாயம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்!

எந்தவொரு திட்டத்தில் முதலீடு செய்யும் முன்பும் முக்கியமான 10 கேள்விகளை முதலீட்டு ஆலோசகர்களிடமோ, விவரம் தெரிந்தவர்களிடமோ கேட்டு அதற்கான தெளிவான பதிலைத் தெரிந்துகொள்வது லாபகரமான முதலீட்டுக்கு கைகொடுக்கும். 

அந்த 10 கேள்விகள்…

1. குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?

2. வருமானம் எவ்வளவு?

3. வருமானத்துக்கு உத்தரவாதம் இருக்கிறதா?

4. எவ்வளவு காலம் கழித்து முதலீட்டை எடுக்க முடியும்?

5. இடைப்பட்ட காலத்தில் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஏதாவது அபராதம் இருக்கிறதா?

6. முதலீட்டு திட்டத்தில் உள்ள ரிஸ்க்குகள் என்னென்ன?

7. முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறதா?

8. வட்டி அல்லது வருமானத்துக்கு வரி கட்ட வேண்டுமா?

9. வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டும்?

10. குறுகிய கால / நீண்ட கால மூலதன ஆதாய வரி எவ்வளவு?

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016