disalbe Right click

Thursday, June 28, 2018

போக்குவரத்து போலீசாரின், 'இ - சலான்' திட்டம்;


 போக்குவரத்து போலீசாரின், ' - சலான்' திட்டம்;
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், பணமில்லா பரிவர்த்தனை முறையில் அபராதம் வசூலிக்க, தமிழக  போக்குவரத்து காவல் துறைஅறிமுகம் செய்துள்ள ' - சலான்' திட்டமானது தமிழகம், முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
 1992க்கு முன் தமிழ்நாட்டில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, , போலீசார், அபராதம் விதித்து, ரசீது வழங்குவார்கள்வாகன ஓட்டிகள், அந்த ரசீதை நீதிமன்றத்தில் காட்டி, அபராதம் செலுத்தி வந்தனர். அதற்குப் பின்னர்,  'ஸ்பாட் பைன்' முறை நடைமுறைக்கு வந்தது. ஆனால், இதன் மூலம், பல்வேறு முறைகேடுகள் போக்குவரத்து காவலர்களால் நடந்தது.  
இதனை முடிவுக்குக் கொண்டு வர, தமிழக காவல் துறை, பணமில்லா பரிவர்த்தனை முறையில் அபராதம் வசூலிக்கும், - சலான் திட்டத்தை அறிமுகம் செய்தது
சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்
இந்த இசான் திட்டம், முதன்முதலாக சென்னை மாநகர போலீசில், மே, 10ல், அமல்படுத்தப் பட்டது.இதற்காக, கேமரா மற்றும் ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்யும், ஸ்வைப்பிங் வசதியுடன் கூடிய, 300 கையடக்க மின்னணு கருவிகள் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப் பட்டது.
இதன் மூலம் தரப்படும் ரசீது வாயிலாக, கடன் மற்றும் பற்று (Gredit & Debit) அட்டைகளை பயன்படுத்தி அபராதம் செலுத்தலாம்பாரத ஸ்டேட் வங்கியின், www.onlinesbi.com என்ற இணையதள முகவரியிலும், துரித குறியீடு எனும், கியூ.ஆர்., கோடு, பேடிஎம், தமிழக அரசின்
- சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்களிலும், பணமில்லா பரிவர்த்தனை வழியாக அபராதத்தை, இரண்டு நாட்களில் செலுத்த வேண்டும்.
இந்த வசதியை பயன்படுத்த முடியாதவர்கள், இந்த ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அபராதத்தை ரொக்கமாக செலுத்தலாம்.
அபராதம் செலுத்தியதற்கான ரசீதை, அருகில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம், அபராதம் செலுத்தியவர் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்போக்குவரத்து விதிகளை மீறுகின்ற வாகன ஓட்டிகளின் விபரம், மின்னணு கருவி வழியாக, உடனடியாக, ஆர்.டி..,விற்கும் சென்று விடும்.
போலீசார், எந்த வகையிலாவது, வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கினால், லஞ்சமாக கருதப்பட்டுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டு உள்ளது. 
இந்தக் கருவியின் செயல்பாடுகள் எப்படி?
போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ள, மின்னணு கருவியின் செயல்பாடுகள் அனைத்தும், கணினிமயமாக்கப் பட்டுள்ளது. அந்த கருவி மூலமாக, ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்ய முடியும். விதிமீறலில் ஈடுபட்டோரின் வாகன எண்ணை போக்குவரத்துக் காவலர் அந்த கருவியில் பதிவு செய்ததும், அவரது பெயர், வீட்டு முகவரி, மொபைல் போன் எண், இதற்கு முன் எத்தனை முறை விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என்ற விபரங்கள் அனைத்தும், திரையில் தெரியும்.
கருவியில் உள்ள வசதிகள் என்ன?
மேலும், அந்த கருவியில், 75 வகையான போக்குவரத்து விதிமீறல், அதற்கான அபராத தொகை ஆகிய விபரங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதை, 'கிளிக்' செய்ததும், அபராதம் வசூலிக்கும் போலீசார், அபராதம் செலுத்தும் வாகன ஓட்டிகள் ஆகிய இருவரும், மின்னணு கருவியிலேயே கையெழுத்திட வசதி உள்ளது. கையெழுத்து போட தெரியாதவர்கள் தங்க்ளது விரல் கைரே கையை பதிவு செய்யலாம்.
போக்குவரத்து விதி மீறல்கள் நடக்கும் இடம், அபராதம் விதிக்கும் நடைமுறைகள், போலீசார் மற்றும் வாகன ஓட்டிகளின் செயல்பாடுகள் அனைத்தையும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, கண்காணிக்கும் வகையில் இந்தக் கருவி அதிக தொழில் நுட்ப வசதியுடன் உள்ளது.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 29.06.2018 


Wednesday, June 27, 2018

டாஸ்மாக் பக்கம் ஒதுங்குகிறவர்களின் கவனத்துக்கு..!

டாஸ்மாக் பக்கம் ஒதுங்குகிறவர்களின் கவனத்துக்கு..!
நலம் நல்லது-52
டாலர் மதிப்பு சரிந்தாலும், .டி.எம் வாசல்களில் வரிசையில் நிற்பது தொடர்ந்தாலும் ஆண்டுக்கு 20 சதவிகித வியாபார வளர்ச்சியுடன் கொடிகட்டிப் பறக்கிறது அரசு நடத்தும் மது வணிகம்... டாஸ்மாக்
குடிப்பவர்களில் 40-50 சதவிகிதம் பேர்களை கிட்டத்தட்ட நிரந்தரக் குடி அடிமைகளாக மாற்றிவரும் இந்தத் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான், அரசு பல நலத் திட்டங்களை நடத்துவதாகச் சொல்கிறது. இந்த அவலம், உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
கொஞ்சமாக் குடிச்சா தப்பில்லையாமே...’, 
`இதயத்துக்கு நல்லதாமே...’, 
`ஹார்ட் அட்டாக் வராதாமே...’, 
`கொஞ்சமே கொஞ்சமா ஆல்கஹால் இருக்கும் பீர், ஒயின் சாபிடலாம்ல?’... 
என சப்பைக்கட்டு கட்டி ஆல்கஹால் சுவைக்கும் சகோதர-சகோதரிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி... ஆல்கஹால் விகிதம் 40 சதவிகிதத்துக்கு அதிகமான விஸ்கி, பிராந்தி போன்ற ஹாட் டிரிங்க்ஸ் என்றால் `பெக்கணக்கு, 6.8 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள பீர்/ஒயின் என்றால் `மக்கணக்கு... இதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வயிற்றுக்குள் செல்லும் ஆல்கஹாலுக்கும் அது நடத்தும் அட்டூழியத்தும் எந்த வித்தியாசமும் இல்லை.
`திராட்சை ஒயினில் நிறைய பாலிஃபீனால் இருக்கிறது... அது இதயத்துக்கு நல்லதாமேஎன படித்தவர்கள்கூட சில வாதத்தை முன்வைப்பார்கள். சில உணவியல் வல்லுநர்கள் இதை ஆதரிக்கவும் செய்யலாம். ஆனால், அவர்களுக்கு எல்லாம் அதே பாலிஃபீனால்கள் பச்சைத் தேயிலையில் இருந்து கத்திரிக்காய் வரைக்கும் எத்தனையோ பொருட்களில் இருக்கிறது என்பதும் தெரியும்தானே? அதற்கெல்லாம் குரல் கொடுக்காதவர்கள், ஒயின் மீது காட்டும் கரிசனத்துக்கு, இதயம் மீதான அக்கறையா காரணம்?
ஒயினை உணவுப் பட்டியலோடு சேர்க்க வேண்டும். உயர்தர சைவ உணவகம் தொடங்கி, கையேந்தி பவன் வரைக்கும் அனைத்து உணவகங்களிலும் அதை வழங்க அனுமதி வேண்டும்என ஒரு பெரும் வணிகக் கூட்டம் தொடர்ந்து அரசை வற்புறுத்திவருகிறது. அதாவது, பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவித்தால், குடும்பத்தோடு குடிக்கவைத்து, மாதாந்திர மளிகைக்கடைப் பட்டியலில் ஒயினையும் இடம்பெறச் செய்யலாம் என்கிற சந்தை உத்தி. அது சரிதான் என்பதுபோல நகர்ப்புற இளம் பெண்களில் குடிப்பழக்கம் கணிசமாகப் பெருகிவருவதும் வருத்தம்தரக்கூடிய ஒன்று. ஆண்களைவிட பெண்களுக்கு மதுவினால் வரும் நோய்க் கூட்டம் 100 சதவிகிதம் அதிகம்.
`கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் ஈரல் சிர்ரோசிஸ் (Liver Cirrhosis) நோயாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்என்கிறது சமீபத்திய நடத்தப்பட்ட ஓர் ஆய்வு விவரம். இதற்கு முக்கியக் காரணம் குடி. சில பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஈரல் (கல்லீரல்) துறைக்காகத் தனிப் பிரிவுகளையே உருவாக்கிவைத்திருக்கின்றன. ஏனெனில், ஈரல் பாதிப்படைந்தவர்களில் சரி பாதிப்பேர் ஈரல் புற்றுநோய்க்கும் ஆளாவார்களாம். தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், சிர்ரோசிஸ் நோய்க்கு `காத்திருப்பு நிலையில் உள்ளவர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் குடிப் பழக்கம் உள்ளவராக இருப்பதால், உங்கள் பிள்ளை ஈரல் வியாதியாலோ அல்லது வேறு புற்றுநோய்க்கோ அல்லது சர்க்கரை முதலான பல வியாதிகளுக்கோ ஆளாகலாம்என எச்சரிக்கிறது எபிஜெனிடிக்ஸ் (Epigenetics) துறையின் ஆய்வு ஒன்று. குடி போதையில் ஒரு நபர் தள்ளாடுவதுபோல, அந்த நபரின் மரபணுக்களும் தள்ளாடி, மரபணுத் தகவல்களை மிகத் துல்லியமாகப் பிரதியெடுக்கவேண்டிய பணியை மறந்துவிடுகின்றன. தன் செல்களைப் படியெடுக்கும்போது, சந்திப் பிழை, கமா, ஃபுல்ஸ்டாப் எல்லாம் வைப்பதற்கு மறந்ததில் `டி.என். டிமெத்திலேஷன் (DNA Demonetization) நடந்து, அது குடித்தவருக்கோ, குடித்தவரின் பிள்ளைகளுக்கோ சிர்ரோசிஸ் முதல் பல வியாதிகளை வரவழைக்கக்கூடும்என்கிறது எபிஜெனிடிக்ஸ் துறை ஆய்வு.
சங்ககாலத்திலேயே கள் அருந்தியிருக்கிறார்களே!’ எனச் சிலர் கேட்கலாம். கள் வேறு; எத்தனால் கலந்து விற்கப்படும் சாராயம் வேறு. கள்ளைவிட நவீன சாராயத்தில் 10 மடங்கு எத்தனால் அதிகம். அதற்காக அந்த காலக் கள் குடிக்கலாமா என நினைப்பதும் தவறு. சங்க காலத்தில் கல் தூக்கி, காதலித்து, குமரியில் இருந்து மதுரைக்கு குதிரையில் பயணிக்க உடல் வலிமை தேவையாக இருந்தது. இப்போது பஸ்ஸில் போகவே, `ஸ்லீப்பர் ஸீட் இருக்கா?’ எனக் கேட்கும், சொகுசு தேடுபவர்களுக்கு கள் அவசியமே இல்லை.
இன்றைக்கு, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு ஆகும் செலவு பல லட்ச ரூபாய். பழுதடைந்த ஈரலைப் பராமரிக்க ஆகும் செலவு பல பத்தாயிரங்கள். குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி, மரணத் தறுவாயில் பெரிய மருத்துவமனைக்குள் நுழையவே முடியாத பாமர, ஏழை மக்கள் கூட்டம்தான் 98 சதவிகிதம். எனவே நினைவில் கொள்வோம்... 
குடி குடியை மட்டுமல்ல... குலத்தையே கெடுக்கும்!
நன்றி : விகடன் செய்திகள் - 18.01.201