disalbe Right click

Monday, April 6, 2015

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986
**************************************************

இச்சட்டம் 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது.

ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. 

சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பும், செயல்பாடும்:

கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி - மாவட்ட அளவில் " மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்", மாநில அளவில் "மாநில ஆணையம்", தேசிய அளவில் " தேசிய ஆணையம்" அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள்படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.


லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-


1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-


5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-


10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-


வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?



1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.

உதாரணம்:
மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் - பைக் - கார் - லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.

2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.

உதாரணம்:

மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது. 

வில்லங்க சான்றிதழால் வந்த வில்லங்கம்!

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முfடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல" என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.

வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே " குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்" என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங் கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்?

விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.

தரம் சம்பந்த பிரச்சனை என்றால்?

அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்?

நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்?
 சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

2007-ல்ஒரு ரூபாய்க்காக ஒரு வழக்கு!
கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் திரு. A.S. ரவி எனபவர் தொடர்ந்த வழக்கை பற்றி இப்பொழுது பார்க்கலாம். 

இவர் 22-1-2007 ல் கண்ணன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் ஒரு லைன் டெஸ்டர் ( LINE TESTER ) ஒன்றை வாங்கினார். அதன் விலை ரூபாய் 33 /- என கூறி பணத்தை பெற்றுக கொண்டு ள்ளனர். அதற்கான ரசீதும் பெறப்பட்டது. ஆனால் அதன் அட்டை பெட்டியில் " Maximum Retail Price Rs. 32 /- including all taxes ) " என அச்சிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியும் அதிகப்படியாக வசூலித்த் ஒரு ரூபாயை திருப்பியளிக்கவில்லை

தன்னிடம் அதிகப்படியாக வாங்கிய ஒரு ரூபாயை திருப்பி தருமாறு 31-1-2007 மற்றும் 11-2-2007 ஆகிய தேதிகளில் கடிதங்களை அனுப்பியுள்ளார். மேற்படி கடையினர் ஒரு ரூபாயை திருப்பியளிக்கவும் இல்லை. கடிதத்திற்கு பதிலும் அளிக்கவில்லை.

பாக்கிங்கில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லரை விலைக்கு அதிகமாக எந்த ஒருபொருளையும் விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம்.

இதை கண்காணிக்கும் பொறுப்பு மாநில தொழிலாளர் நலத்துறைக்கு என்பதால், அப்பகுதியிலுள்ள தொழிலாளர் நலத்துறையின் ஆய்வாளருக்கு 22-2-2007 ல் புகார் செய்துள்ளார். அதன் பின் 19-3-2007 ல் நினைவூட்டல் கடிதமும் அனுப்பி யுள்ளார். நடவடிக்கை விபரம் எதுவும் ஆய்வாளரால் தெரியப்படுத்தப்பட வில்லை.

எனவே தொழிலாளர் நலத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரி விண்ணப்பித்தார். மேற்படி கண்ணன் டிபார்ட் மெண்டல் ஸ்டோரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 1800 /- அபராதம் விதிக்கப்பட்டதாக, தகவல் அளிக்கப்பட்ட்து. 

இருப்பினும் ஒரு ரூபாய் கடைக்காரரால் திருப்பி கொடுக்கப்படவில்லை.
எனவே திரு. ரவி தன்னிடம் பெறப்பட்ட அதிகப்படியான தொகையான ரூபாய் ஒன்றை திருப்பியளிக்கவும், நஷ்ட ஈடு மற்றும் வழ்க்குக்கான தொகையை வழங்ககோரியும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
விசாரணை க்குப்பின் கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

1. அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட தொகையான ரூபாய் ஒன்றை மனுதாரருக்கு திருப்பியளிக்கவேண்டும்.
2. வழக்கு செலவுத்தொகையாக 1000 /- வழங்கவேண்டும்.
3. நுகவோர் நல நிதிக்கு 5,000 /- வழங்கவேண்டும் என கண்ணன் டிபார்ட் மெண்டல் ஸ்டோருக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

நன்றி, சட்டம் என் கையில்

No comments:

Post a Comment