disalbe Right click

Tuesday, April 28, 2015

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-1


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************
நாம் தினமும் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒரு செய்தியை அடிக்கடி காணலாம்.

"வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி"



"மலேசியாவில் தொழிலாளர்கள் தவிப்பு"

"சவூதி அரேபியாவில் பல மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தமிழர்கள் அவதி"

இதுபோன்ற  செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஏமாந்தவர்கள் உள்ளவரை, ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.

ஏமாறாமல் இருக்க  என்ன வழி?

இதற்கு விடை காண என்னால் முயன்றவரை, என் அனுபவத்தில் இருந்து சில வழிகளை சொல்லி உள்ளேன்.
அதுமட்டுமல்லாமல் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு எடுப்பது முதல் நமது பணி ஒப்பந்தம் முடிந்து இந்தியா வருவதுவரை என்ன செய்ய வேண்டும் என இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கும், ஏற்கனவே வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும் சில வழிமுறைகளும் கூறி உள்ளேன்.
சுமார் பன்னிரண்டு வருடங்களாக, ஐந்து முறை தேர்வில் வெற்றி பெற்று, சவூதி அரேபியாவில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரும் நான், எவ்வாறு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று, முறையாக மற்றவர்களிடம் ஏமாறாமல் பொருள் ஈட்டுவது பற்றி இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் காணலாம்.

(1) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறும் வழி:

முன்பு எல்லாம் கடவுச்சீட்டு பெற சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சென்று பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.
தற்போது மாவட்டந்தோறும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெற தனியாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கடவுச்சீட்டு அலுவலகம் சென்று பதிவு செய்தால், ஒன்று அல்லது இரண்டு மாதத்தில். காவல் துறை விசாரிப்புக்குப் பிறகு, கடவுச்சீட்டு நம் வீடு தேடி வந்துவிடும்.

அலுவலகம் செல்லும் போது நாம் மறக்காமல் எடுத்துச் செல்லவேண்டியவை;

1) ரூ.1,000-க்கான காசோலை
2) குடும்ப அடையாள அட்டை
3) பத்து பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
4) கல்விச் சான்றிதழ்

நாம் பதிவு செய்த பிறகு, நமக்கு ஒரு அடையாள எண் தருவார்கள்.
அந்த அடையாள எண் மூலம் இணையத்தின் மூலம் நம் கடவுச்சீட்டின் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது, மற்றும் நமக்கு கடவுச்சீட்டு எப்போது கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
தற்சமயம் கோவையிலும் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(2) இணையதளத்தில் செல்லும் வழிமுறை:
முதலில் www.tn.nic.in என்ற இணைய தளத்தில் நுழைந்து, ரீஜினல் பாஸ்போர்ட் ஆபீஸ் என்ற வலையின் மூலம், 'know your passport status' - மூலம் நமது அடையாள எண், பதிவு செய்த மாதம் வருடத்தை பதிவு செய்தால், நம் கடவுச் சீட்டின் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது என அறியலாம்.
கடவுச் சீட்டு நம் கைக்கு கிடைத்தவுடன் நாம் வெளிநாடு செல்ல தயாராகி விட்டோ ம்.
அடுத்த நாம் தெரிய வேண்டியது, எந்த வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்லலாம் என்பது.
தினசரிகளில் "வெளிநாடு பணிகளுக்கு ஆட்கள் தேவை" - என்ற விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி காணலாம்.
முக்கியமாக நாம் அந்த விளம்பரத்தில் கவனிக்க வேண்டியது, அந்த அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அரசாங்கத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டதா, பதிவு எண் உள்ளதா என அறிய வேண்டும்.
முறையாக பதிவு செய்யாத நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டால், நாம் உழைத்து சேர்த்த பணம் அவ்வளவுதான்.
இதற்கும் நமது அரசாங்கம் வழி செய்துள்ளது.
சென்னையில் 'அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நமது தமிழக அரசின் கீழ் இயங்கி வருகிறது.

(3) அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்.

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் 
எண்: 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை,
வீட்டுவசதி வாரிய வளாகம் முதல்தளம்
 எல் பி ரோடு, அடையாறு, 
சென்னை - 600 020.

தொலைபேசி எண்கள்
044- 244 64268  & 044- 24464269

இணைய தள முகவரி
www.tn.gov.in     
    www.southindia.com
மேற்கண்ட இணைய தள முகவரியிலும் தற்போதைய நேர்முகத் தேர்வு பற்றிய தகவல்களைப் பெறலாம்.

அரசு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய கடவுச்சீட்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஐந்து மற்றும் கல்வித் சான்றிதழ், பணிச் சான்றிதழ் வேண்டும்.

நமது தொழிற்சார்ந்த வேலைகளுக்குத் தகுந்தவாறு பதிவுக் கட்டணம் வசூல் செய்வார்கள்.

இந்நிறுவனம் மூலம் மூன்று முறை நமக்கு நேர்முகத் தேர்வுக்கு உதவி செய்வார்கள்.

நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று தகுதி பெற்றுவிட்டால், மருத்துவ சோதனை முடித்து வெளிநாடு செல்ல தயாராகி விடலாம்.

இதற்கு முறையான, சரியான கட்டணம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். கட்டணத்திற்கான ரசீதும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு சமயம் நம்மால் குறிப்பிட்ட நேரத்தில் வெளிநாடு செல்ல முடியாமல் நேரிட்டாலோ அல்லது நம்மை தேர்வு செய்த வெளிநாட்டு நிறுவனம்  யாதொரு காரணத்தாலோ நம்மை அழைக்க முடியாமல் போனாலோ நாம் கட்டிய கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

                                                                                                                                    - இன்னும் இருக்கிறது-

நன்றி :திரு முத்துரத்தினம் அவர்களுக்கு

1 comment:

  1. பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
    தயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete