disalbe Right click

Sunday, April 26, 2015

கல்விக்கடன்


கல்விக்கடன் பெறுவது எப்ப‍டி?

கிடைக்குமா என்கிற கவலை ஒரு பக்கம்… அப்படி கிடைத்து விட்டால் படிப்புச்செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என் கிற கவலை இன்னொரு பக்கம் … மகன்/மகளின் கல்லூரிப் படி ப்புக்கென கொஞ்சம் பணம் சேர் த்தவர்களை விட்டு விடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்க ளுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன் தான். இந்த கல்விக்கடனை எப்படி பெறுவது? எந்த வங்கிகளை அணுகலாம்?, யார் யாருக்கு இந்த கடன் கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது, எந்தெந்த கல்விக்கு கிடைக்கும், எதன் அடிப்படையி ல் கல்விக் கடன் தருவார்கள்? கல்விக் கடன் வாங்க வங்கியில் என்னென்ன சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்?
அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுத் துறை/தேசிய அல் லது தனியார் வங்கியில் கல்விக் கடன் பெறலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான, எதிர் காலத்தில் வேலை வாய்ப்பு ள்ள கல்விப் பிரிவை தேர்வு செய் வது கல்விக் கடனை பெறுவதற்கு அடிப்படையான விஷயம்.
பிரிவைத் தேர்வு செய்வது போல, சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வதிலும் கவனம் அவசியம். கல்லூரியில் சேர்ந்த பின்னர் அருகில் இருக்கும் வங்கி மேலாள ரை அணுகி கல்விக் கடன் பெறு வதற்கான விதி முறைகள் என்னெ ன்ன என்று தெரிந்து கொண்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பின்னர் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க, கல்வி பயில சேர்ந்திருக்கும் கல்லூரியிருந்து போனோஃபைட் என்று சொல்லப் படுகிற சேர்க்கைக் கான ரசீதையு ம், ஃபீஸ் ஸ்ட்ரக்சர் என்று சொல் லப்படுகிற முழுப் படிப் புக்குமான செலவு விவரம் அடங்கிய சான்றிதழ்களையும் வாங்கி வங்கி யிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றுக் காக ரேஷன் கார்டு அட்டையின் அட்டஸ்டேட் நகல், வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பி க்கப்பட வேண்டும். கல்விக் கடன் பெற விரும்பு ம் மாணவர்கள் முடிந்த மட்டும் பிளஸ்டூ படித்து விடு முறையில் இருக்கும்போதே தங்களது இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் வங்கிகளு க்கு பெற்றோ ருடன் சென்று கல்விக் கடன் குறித்து விசாரித்து விடுவது நல்லது. ”கல்விக் கடன் பெற நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்தி ருக்கும் வங்கிகளையே முதலில் அணு கலாம். சேமிப்புக் கணக்கு இல்லாத வங்கிகளையோ, அறிமுகமே இல்லாத வங்கி களையோ நாடும் போது கல்விக் கடன் கிடைக்க, நேரம் நிறைய விரயமாகலாம். சிறிய ஊர்களில் இருப்பவர்கள் லீட் வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற லாம்.
கல்விக்கடன்: யார் யாருக்கு கிடைக்கும்?
  
இந்திய அரசாங்கம் கல்விக் கடன் பெற தகுதி உள்ள அனைத்து மாண வர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்கிற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் பிறப்பி த்திருக்கிறது. ஏழை மாணவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள் ளவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர் வாங்கிய மதிப்பெண்க ளுக்கு ஏற்ப கல்விக் கடன் கிடைக்கும்.அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் அனைத்து படிப்புகளுக்கும் கல் விக் கடன் கிடைக்கு ம்.எதிர்காலத்தில் வேலை வாய்ப்புள்ள இளங் கலை படிப்புகள் (பி.காம்., பி.எஸ்.சி., பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்பு கள்), முதுகலை படிப்புகள் (எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகள்) மற்றும் தொழிற் கல்விகள் (பொறியியல், மருத்துவம், விவசாய ம், சட்டம், மேலா ண்மை போன்ற படிப்புகள்), ஐ.ஐ.டி., என்.ஐ.எஃப். டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு கல்வி நிறுவனங்களில் இருக்கும் படிப்புக ள் மற்றும் சி.ஏ., சி.எஃப்.ஏ., ஐ.சி. டபிள்யூ.ஏ. போன்ற படிப்புகளுக்கு ம், டிப்ளமோ படிப்புகளுக்கும் கடன் கிடைக்கும்.
ஆனால், வேலை வாய்ப்பில்லாத படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங் க வங்கிகள் தயங்கவே செய்யும். அது மாதிரி தரப்படும் கடன்கள் திரும்ப வருமா என வங்கிகள் அஞ் சுவதே இதற்கு காரணம். தவிர, அங்கீகாரம் இல்லாத கல்வி நிறு வனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கண்டிப்பாக கிடைக்காது.
கல்விக்கடன் பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் அவசியமாக இருக்க வேண்டும்.
* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
* வேலை வாய்ப்பு அதி கம் உள்ள படிப்புகளாக கருதப்படும் கல்விகளைத் தேர்வு செய்தி ருக்க வேண்டும்.
* அரசின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி களில் மாணவர்கள் சேர்ந் திருக்க வே ண்டும்.
* பிளஸ்டூ மதிப்பெண்கள் கூட்டு சத விகிதத்தின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் 50%-ம், மற்ற பிரிவினரு க்கு 60%-மாகவும் இருத்தல் அவசியம்.
கல்விக் கடன்:
உத்தரவாதம் தேவையில்லை!
  
கல்விக் கடன் நான்கு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை. இன்றைய தேதியில் தமிழகத் தில் பல மாணவ, மாணவிகளின் தேவை இதற்குள் அடங்கிவிடும்என்பதால் கல்விக் கடன் வாங்கு கிற பெற்றோர்கள் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தரவேண்டிய தில்லை.நான்கு லட்சத்திலிரு ந்து 7.5 லட்சம்வரை கல்விக் கடன் என்கிறபோது பெற்றோரில் ஒருவ ரோ அல்லது மூன்றாம் நபரோ தனிநபர் உத்தரவாதம் தர வேண்டி வரும். ஏழு லட்சத்துக்கு அதிகம் என்கிற போது தன் வசம் இருக்கும் சொத்துக்களில் ஏதாவது ஒன்றை பிணையமாக வைக்க வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர் கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
எந்த செலவு அடங்கும்?
வங்கிகள் வழங்கும் கடன் தொகையில் கீழ்க்கண்ட செலவினங்கள்முழுமையாக அடங்கும்.
* கல்லூரியில் கட்ட வேண்டிய கல்வித் தொகை.
* தேர்வுக் கட்டணம், புத்தகம் மற் றும் ஆய்வகக் கட்டணம்.
* விடுதி மற்றும் சாப்பாட்டுச் செல வுகள்.
* மாணவர்களின் கல்விச் சாதனங் கள் மற்றும் சீருடைகள்.
* படிப்பிற்கான கம்யூட்டர் வசதி மற்றும் புராஜெக்ட் செலவினங்க ள்.
படிப்பில் கவனம் தேவை!
கல்விக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் படிப்பில் முழுக் கவ னம் செலுத்துவது அவசியம். ஏனெ னில், செமஸ்டர்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு இடையே வங்கி மேலாளரிடம் காட்ட வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனால், மேற்கொண்டு தர வேண்டிய கடன் தொகை நிறுத் தப்படலாம். மீண்டும் அந்த பாடத்தி ல் தேர்ச்சி பெற்ற பிறகே வங்கியி டமிருந்து கல்விக் கடனை எதிர் பார்க்க முடியும்.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத் தினாலோ, ஒழுங்கீனமாக நடந்து கொள்வதன் மூலம் கல்லூரியிலி ருந்து விலக்கப்பட்டாலோ கல்விக் கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கடனை வட்டியோடு திரும் பச் செலுத்த வேண்டியிருக் கும்.
கல்விக் கடன்: எப்படி திரும்பக் கட்டுவது?
கல்விக் கடனுக்கான அசலையோ அல்லது வட்டியையோ படிக்கிறகாலத்திலேயே கட்ட வேண்டும் என எந்த வங்கியும் சொல்வதில் லை. படித்து முடித்து ஓராண்டு ஆனதும் அல்லது வேலை கிடைத் து ஆறு மாதம் கழித்தே வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செ லுத்த ஆரம்பித்தால் போதும். முழுக் கடனையும் திருப்பிச்செலு த்த குறைந்தது ஐந்து ஆண்டுக ள் அவகாசம் தரப்படும். படித்து முடித்த பிறகு வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு, வாங்கும் சம்பளம் அடிப்படையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை அவகாசம் தரப்படும். இந்த முடிவு வங்கிக்கு வங்கி மாறுபடும்.
படிக்கும்போது வட்டி கட்ட தேவையில்லை!
கல்விக் கடன் வாங்கும் மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தா ல் அவர் களின் வருமான சான்றிதழை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருமான சான்றிதழை ஆரம்பத்தில் சம ர்ப்பித்தால் போதுமானது. ஆண்டுக்கொ ருமுறை சமர்ப்பிக்க வேண்டிய அவசிய ம் கிடையாது. இதனால் படிக்கும் காலத் தில் வாங்கும் கடனுக்கான வட்டியை பெற்றோர்கள் கட்ட வேண்டிய அவசிய ம் கிடையாது.
அந்த கடனுக்கான வட்டியை மத்திய அரசாங்கம் வங்கிகளுக்கு செலுத்திவிடும். படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்ட ஆர ம்பிக்க வேண்டும். இந்த சலுகை வெ ளிநாடுகளில் படிக்கும் மாணவர்களு க்கு கிடையாது.
கடனை சீராக கட்டினால் சலுகை!
இடைவிடாமல் சரியாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவ, மாண விகளுக்கு ஒரு சதவிகித வட்டி சலு கை தரப்படும். பொது வாகவே கல் விக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாணவிகளுக்கு 0.5 சதவிகிதம் சிற ப்பு சலுகை வழங்கப்படுகிறது. பெரும் பாலானவர்கள் கல்விக் கட னை மாதத் தவணை யாகத்தான் கட்டி வருகிறார்கள். விரைவில் கடனை அடைக்க நினைப்பவர்கள் வேலையின் மூலம் எப்போதெ ல்லாம் பணம் கைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கடனை அடைக்கலாம்.
வரிச் சலுகை என்ன?
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனுக்கு வட் டிக்கு மட்டும் 80-இ பிரிவின் கீழ் வரிச் சலு கை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு கிடையாது. யாருக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குத்தான் வரிச்சலுகை கிடைக்கும். கடனை திரும்பச் செலுத்த ஆரம்பித்து எட்டு ஆண் டுகள் வரை கல்விக்கடனுக்கான வட்டிக்கு வரிச்சலுகை பெறலாம்.
கல்விக் கடன்:
கட்டாமல் போனால்..?!
மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர் கள் மீது என்னென்ன நட வடிக்கைகள் மேற் கொள்ளப்படுமோ, அதே நடவடிக்கைகள் கல் விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக் கும் பொருந்தும். காவல் துறை நடவடிக்கை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன், கடன் திருப்பிக் கட்ட மறுப் பவர் பணி செய்யும் நிறுவ னத்தைகூட வங்கி அணுகி, கடனை கட் டச் சொல்லலாம்.
வேலை கிடைக்காவிட்டால்..!
கல்விக் கடன் வாங்கி படித்த மாணவர், படித்து முடித்தபின் வே லை கிடைக்காவிட்டால், அது தொ டர்பான விவரத்தை சம்பந்தப் பட்ட வங்கியில் தெரிவித்தால் கடனை திருப்பிச் செலுத்துவதற் கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் படும். எனவே, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கடனை கட்டாமல் விட லாம் என்று நினைக்க வேண்டாம்.
முதுகலைக்கும் கடன்!
இளநிலை படிப்பை வங்கிக் கடனில் முடிக்கும் ஒருவர் முது நிலைப் படி ப்பைத் தொடர மீண்டும் வங்கிக் கடன் கிடைக்குமா எனில், நிச்சய ம் கிடைக்கும். இது அனைத்து கல்விக்கும் பொருந் தும்.
இன்ஷூரன்ஸ் அவசியம்!
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக் கும் மாணவர்கள் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருந்தால், வங்கி முத லில் அவர்களை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி அறிவுறு த்தும்.
ஏனெனில், மாணவருக்கு திடீரென் று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந் தால் அவர்கள் வாங்கியிருக்கும் கடன் தொகையை இன்ஷூ ரன்ஸ் இழப்பீட்டுத் தொகையிலிருந்து வங்கி எடுத்துக் கொள்ளும்.
கல்விக் கடன்: மறுக்க என்ன காரணம்?
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கி யில் ஏற்கெனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலு த்தாமல் இருந்தால் (தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப் பட வாய்ப்பு அதிகம். மேலும், மாணவரின் குடும்பத்தில் ஏற் கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலு த்தாமல் இருந்தாலோ, குறை வான மதிப்பெண் எடுத்திருந்தா லோ, அங்கீகரிக்கப்படாத கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்திருந்தாலோ கல்விக் கடன் மறுக்க ப்படலாம்.
எல்லா சான்றிதழ்களையும் தந்த பிறகும் கல்விக் கடன் நிராகரிக் கப்பட்டால், அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக தரும்படி வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அந் த காரணம் நியாயமானதாக இல்லை எனில், உங்களுக்கு கல்விக் கடன் கிடை க்க நிறைய வாய்ப்புண்டு.
யாரிடம் புகார் செய்வது?
”அதிக மார்க்குகளை எடுத்திருக்கிறேன். வங்கிகள் கேட்கும் எல்லா சான்றிதழை யும் தந்துவிட்டேன். ஆனாலும், கல்விக் கடன் தர மறுக்கிறார்கள்” என்கிறவர்க ள், முதலில் அந்த வங்கியின் மண்டல மேலாளரை அணுகி பிரச் னையை எடுத்துச் சொல்லலாம். உங் கள் பிரச்னைக்கு உரிய பதி லை அவர் சொல்லவில்லை எனில், வங்கித் தலைமைக்கு மின்ன ஞ்சல், அல்லது தபால் மூலம் உங்கள் பிரச்னையை தெரியப்படுத்த லாம். அப் போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடலாம் .
எளிதில் கடன் கிடைக்க..!
கல்விக் கடன் கேட்டு தாங்கள் குடியிரு க்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கிக ளை அணுகினால் எளிதில் கல்விக் கடன் கிடைக்கலாம். அதேபோல் தாங்கள் வரவு – செலவு கணக்கு வைத்திருக் கும் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண் ணப்பித்தால் சீக்கிரம் கல்விக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கல்விக் கடன் அடைபடுவதற்கு உத்தரவாதம் இல்லை என்பதா லேயே பெரும்பாலும் தனியார் வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கி யத்துவம் கொடுப்பதில்லை. கல்விக் கடன் என்பது நம்முடைய பிறப்புரிமை! அந்த உரிமையை பறிக்கவோ, பறிகொடுக்கவோ வே ண்டாம்!
நன்றி :  நாணயம் விகடன்

2 comments:

  1. பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
    தயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. அய்யா,
    எனது பெயர் துரைராஜ்.நான் Diploma in civil engineering படித்தேன்.அதற்காக 2010 இல் SBI , Musiri branch - இல் கல்வி கடன் பெற்றிருந்தேன்.படிக்கும் காலத்தில் கடனுக்கான வட்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று எனக்கு தெரியாது.அதனால் வங்கி மேலாளர் வட்டி கேட்ட காரணத்தினால் 13.5 % வட்டி ஐ படிக்கும் காலத்திலும் கட்டி வந்தேன்.நான் எனது முழு பணத்தையும் வட்டியுடன் கட்டி முடித்து விட்டேன்.இப்போது தான் தெரிகிறது நான் ஏமாற்ற பட்டிருக்கிறேன் என்று. ஆனால் நான் படிக்கும் காலத்தில் கட்டிய என் வட்டி பணத்தை எனக்கு வங்கி திரும்ப தர நான் என்ன செய்ய வேண்டும்?

    தங்களது பதிலை durairaj242@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete