disalbe Right click

Friday, April 10, 2015

பொதுச்சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்

பொதுச்சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்
*****************************************************
 மேல் முறையீட்டு அதிகாரியிடம்  சிவில் நீதிமன்றத்தில் உள்ளது போல அலுவலர்களை அழைப்பது, கோப்புகளை கேட்பது போன்ற உரிமைகள் இச்சட்டத்தில் உண்டு. இந்த RPSA சட்டத்தை செயல்படுத்த ஒரு குறிப்பட்ட அரசுத் துறை நியமிக்கப்படும். அதேபோல் விண்ணப்பதாரர் கேட்ட பொது சேவை கொடுக்கப்படாதபோது, அதற்கான நஷ்டஈடும் சட்டத்தில் குறிப்பிடப்படும்.
RPSA சட்டத்தில் சாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நிலம் தொடர்பான சான்றிதழ்கள் என்ற பல பொது சேவைகளை பெறுவது இந்த RPSA கீழ் வருகிறது.

RPSA அவசியம்
***********************
பொதுவாக அரசு அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட சான்றிதழைப் பெறு வதில் பொதுமக்களுக்கு  பல சிக்கல்கள் உள்ளன. யாரிடம் முறையிடுவது என்பதில் தொடங்கி, என்னென்ன சான்றிதழ்களை வழங்கவேண்டும், எவ்வளவு காலம் ஆகும், என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். அரசு செயல்பாடுகளில் எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும்  இல்லாமல் இருப்பதும் மற்றுமொரு சிக்கல்.
இவை யெல்லாம் ஊழல் விளைவுக்கும், சேவையை உரியகாலத்தில் பெறமுடியாமல் தவிப்பதற்கும் இருக்கும் காரணங்கள். இவற்றை களைவதே RPSAவின் நோக்கமாகும். ஒருவர் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றதாலேயே அவருக்கு அரசு செய்யவேண்டிய சேவைகள் பல உண்டு.
 எவ்வித செலவும் இல்லாமல் குடிமக்களுக்கு, குறித்த நேரத்தில் அச்சேவைகளை கொடுப்பது அரசின் கடமை, அச்சேவைகளை பெறுவது குடிமகனின் உரிமை. நமது தேர்தலில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் உரிமை, இந்த உரிமை நம் எல்ேலாருக்கும் சமமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பொது சேவையை பெறுவதும் நமது உரிமை அதனை RPSA நிறைவேற்றுகிறது.
RPSA மேலும் செய்யவேண்டியது என்ன?
**********************************************************
இதுவரை RPSA அமலில் உள்ள மாநிலங் களில் எல்லாம் எல்லா அடிப்படை சேவைகளும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட வில்லை. இங்குள்ள அட்டவணையில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் RPSAயின் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழைகள் அதிக சிரமப்பட்டு பெற வேண்டிய நிலம் தொடர்பான சான்றிதழ்கள் இந்த சட்டத்தில் சேர்க்கப்படுவதில்லை.
அப்படி சேர்த்தால் நிலம் தொடர்பான எல்லா அரசு ஆவணங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு பல சிக்கல்கள் தீர்க்கப்படும். மேல்முறையீட்டு அதிகாரிகள் மாவட்ட தலைமை அலுவலகத்திலோ அல்லது மாநில தலைமை அலுவலகத்திலோ இருப்பதால் ஏழைகள் தங்கள் குறைகளைத் தீர்க்க சிரமப்படவேண்டியுள்ளது.
இதற்கு கம்ப்யூட்டர்-இணையம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேல்முறையீட்டை எளிமைப்படுத்தவேண்டும். RPSA வந்த பிறகு பல அரசு அலுவலகங்கள் சீராக செயல்படத் துவங்கியுள்ளன. ஆனாலும் இவை மேலும் வளர வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற சட்டத்தை எப்போது கொண்டுவரும்?
ஒரு குறிப்பிட்ட சான்றிதழைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. யாரிடம் முறையிடுவது? என்பதில் தொடங்கி, என்னென்ன சான்றிதழ்களை வழங்கவேண்டும், எவ்வளவு காலம் ஆகும், என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதும் மற்றுமொரு சிக்கல். இவையெல்லாம் ஊழலுக்கும், சேவையை உரியகாலத்தில் பெறமுடியாமல் இருப்பதற்கு காரணங்கள்.
(நன்றி திரு இராம. சீனுவாசன் அவர்களுக்கு)
தி இந்து நாளிதழ் செய்திகள், 09.02.2015

No comments:

Post a Comment