disalbe Right click

Monday, April 6, 2015

நீதிமன்றத்தில் ப்ரைவேட் கம்ப்ளைண்ட்

நீதிமன்றத்தில் ப்ரைவேட் கம்ப்ளைண்ட் கொடுப்பது எப்படி?
ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தின் வழக்கு ஒன்றை நாம் தாக்கல் செய்யும் முன் அந்த வழக்கில் நியாமம் இருக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
வழக்கு தொடர்பான குற்றம் எங்கு நடந்துள்ளதோ, அந்த பகுதியிலுள்ள குற்றவியல் மன்றத்தில் தான்  நாம் வழக்கை தாக்கல்  செய்ய முடியும்.
ஆகவே. குற்றம் எந்த எல்லைக்குள் நடந்துள்ளதோ அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.
எந்த நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்வது?
குற்றவியல் நீதிமன்றங்கள் ஒரே ஊரில் பல இருக்கின்றது.. அவைகள் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் மன்றம் என்றும். இரண்டாவது வகுப்பு நீதித்துறை நடுவர் மன்றம் என்றும் கூட இருக்கலாம். நமது வழக்கில் உள்ள குற்ற அளவின் தன்மையைப் பொருத்தும், குற்றம் சாட்டப்பட்டவரைப் பொருத்தும்  எங்கே வழக்கை தாக்கல் செய்வது என்று நாம் முடிவு செய்ய வேண்டும்.
தவறாக வேறு நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தால் என்ன நடக்கும்?
தவறாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தால் தவறு ஏதும் இல்லை.  நமது வழக்கின். மனு அந்த நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டு, நம்மிடம் திருப்பியளிக்கப்படும். அதே நேரத்தில் ஏன் திருப்பி அளிக்கப்பட்டது என்பதற்கான காரணமும் எழுதப்பட்டிருக்கும். அதை படித்துத் தெரிந்து கொண்டு அதற்குரிய நீதிமன்றத்தில் நமது வழக்கை நாம் தாக்கல் செய்யலாம்.
வழக்கு மனுவை தயார் செய்வது எப்படி?
மனு தயார் செய்யும் போது தலைப்பில் பேப்பரின் நடுவில் கொஞ்சம் பெரிய எழுத்தில், நீதித்துறை நடுவர் மன்றம் என மனு எழுதி அதன் கீழே அந்த நீதிமன்றம் இருக்கின்ற ஊரின் பெயரை எழுத வேண்டும். அதற்குக் கீழே மையத்தில் ஆண்டுப்பட்டிகை வழக்கு எண் அல்லது (Calendar Case) சி.சி.எண்.. என்று எழுதி கொஞ்சம் இடம் விட்டு அதாவது சி.சி. எண்…….2019 என்று வருடத்தைக் குறிப்பிட வேண்டும். நமது வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதும் வழக்கிற்கு ஒரு எண் வழங்கப்படும். அந்த எண்ணை எழுதுவதற்கு வசதியாகவே மேற்கூறிய இடைவெளியை நாம் முதலிலேயே விட்டுவிடவேண்டும்..
அடுத்து நமது பெயர்தந்தையார் பெயர்- நமது வயது மற்றும் முகவரியை இடது பக்கத்தில் எழுதி. மனுதாரர் / புகார்தாரர் / வாதி என்று அதற்கு நேராக வலது புறத்தில் எழுத வேண்டும். அதற்குக் கீழே தன் வழக்கில் தானே ஆஜராகிறார் அல்லது ஆங்கிலத்தில் Party in Person என்று எழுதவேண்டும்
அவ்வாறு எழுதப்பட்டிருந்தால் மனுதாரர் வழக்கறிஞர் இல்லாமல், தன் வழக்கில் தானே வாதாடப் போகிறார் என்பதை நடுவர் முதலிலேயே புரிந்து கொள்வார்.
அடுத்து இடது பக்கத்தில் எதிர்மனுதாரர்களின் பெயர், அவர்களின் தந்தையார் பெயர் மற்றும் வயது (வயது தெரியவில்லை என்றால் சுமாரான வயது) மற்றும் முகவரி எழுதவேண்டும். எதிர்மனுதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் நம்பரிட்டு வரிசையாக எழுத வேண்டும். அவர்களின் பெயருக்கு நேராக வலது பக்கத்தில் எதிர்மனுதாரர்கள் / பிரதிவாதிகள் என்று குறிப்பிடவேண்டும்.
நீதிமன்ற கட்டணம். 
குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்ய கட்டணமாக 20 ரூபாய்க்குக் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் வாங்கி ஓரத்தில் ஓட்டிவிடவேண்டும். இதுவே வழக்கு தொடுக்க நீதிமன்றத்தில் நீங்கள் செலுத்தும் கட்டணமாகும்.
இந்த கோர்ட் ஃபீ ஸ்டாம்ப்-ஐ இடதுபுறம் தான் ஒட்ட வேண்டும். என்பதில்லை தலைப்பிலோ வலது புறத்திலோ எங்கு வேண்டுமானாலும் ஒட்டலாம்.
குற்ற விசாரணைமுறைச் சட்டம், பிரிவு -  200
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இதுபோல் தனியாக ஒருவர் புகார் கொடுப்பது பற்றி குற்ற விசாரணைமுறைச் சட்டம், பிரிவு 200-ல் குறிப்படப்பட்டுள்ளது. எனவே கீழே மையத்தில் கு.வி.மு.ச. பிரிவு  200-ன் கீழ் மனு என்று குறிப்பிட்டு அடிக்கோடு இடவேண்டும்.
ஒரு குற்றம் பற்றி சரியாகப் புலனாகாத நிலையில் கு.வி.மு.ச. பிரிவு 190(1)()-ன் கீழும் இந்த மனுவை ஒரு முறையீடாக நாம் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.
பொதுநல வழக்காக இருந்தால் எப்படி எழுத வேண்டும்?
பொது சுகாதாரக் கேடுகள். பொது வழிக்கு இடையூறு ஏற்படுத்துதல் அமைதியைக் குலைத்தல் போன்ற பொது நல வழக்காக இருந்தால் கு.வி.மு.. 133-ன் கீழ் முறையீடு என்று குறிப்பிடடு தாக்கல் செய்ய வேண்டும்.
புகாரின் தன்மை பற்றி எழுத வேண்டும்
அடுத்து புகாரின் தன்மையைச் சுருக்கமாகப் பத்தி பத்தியாக எழுதி, ஒவ்வொரு பத்திக்கும் வரிசையாக எண்கள் கொடுக்க வேண்டும். உங்கள் மனுவை படிக்கும் போது படிப்பவருக்கு வழக்கின் தன்மை தெளிவாக தெரிய வேண்டும். உங்கள் மனுவை வைத்தே உங்கள் திறமையை நடுவர் எடை போட்டுவிடலாம்.
இறுதியில் ஆகவே கனம் கோர்ட்டார் அவர்கள் எதிர்மனுதாரர்/எதிர்மனுதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் பிரார்த்திக்கப்படுகிறது என்று மனுவை முடிக்க வேண்டும். வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தில், எந்தப் பிரிவின் கீழ்  அடங்கும் என்ற விபரம் தெரிவிக்கலாம். தெரிவித்தால் மனுதார் சட்டம் தெரிந்தவர் என்பதை நடுவர் புரிந்து கொண்டு நியாயமாக விசாரரணயை நடத்த எண்ணலாம். கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
கடைசியில் வலது பக்கம் கையெழுத்து செய்துமனுதாரர்/புகார்தாரர்/வாதி என்று எழுத வேண்டும்.
மனுவை  பச்சை கலர் கேங்கர் பேப்பரில்தான் எழுத வேண்டும். மனு எழுதும் போது ஒவ்வொரு வரிகளுக்கும் இடையே நன்கு இடைவெளிவிட்டு எழுத வேண்டும். நமக்காக ஒரு பிரதி கண்டிப்பாக ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்மனுதாரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை நகல்களை அவர்களுக்கு அளிப்பதற்காக ஒரிஜினல் மனுவுடன்  சேர்த்து நீதிமன்றத்தில் கொடுக் வேண்டும்.
பொதுவாக வழக்கின் மனுவானது டைப் செய்து தாக்கல் செய்வதே நடைமுறையில் இருந்து வருகிறது. அதுவே வசதியாகவும் உள்ளது. அப்படியே செய்வது நல்லது. 
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனுவானது வழக்கு முடியும் வரையில் பாதுகாப்பட வேண்டியுள்ளதால் திக் பேப்பரில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், பச்சை கலர் கேங்கர் பேப்பரில்  வழக்கின் மனுக்கள் அனைவராலும் தயார் செய்யப்படுகிறது.
டாக்கெட் சீட் (Docket Sheet)
வேறு ஒரு முழுத்தாளை எடுத்து அதனை. பாதியாக மடித்து வலப்பக்கத்தில் மேலே நீதிமன்றத்தின் பெயரும். ஊரின் பெயரும் கீழே எழுத வேண்டும். அதற்கடுத்து (C.C.No…./2019) என்று எழுதவேண்டும். இது காலண்டர் கேஸ் எண். (CALENDAR CASE NUMBER) என்பதன் சுருக்கமாகும். தமிழில் ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்……../2019 என்றும் குறிப்பிடலாம்.
சற்று கீழே மனுதாரின் பெயர் எழுதி-மனுதார் என்று எழுத வேண்டும். அதற்குக் கீழ் கொஞ்சம் இடம்விட்டு எதிர்மனுதாரின் பெயரை எழுத வேண்டும். எதிர்மனுதாரர்கள் பலர் இருந்தால் முதல் எதிர் மனுதாரர் ஒருவரின் பெயரை மட்டும் எழுதி மற்றும் பிறர் என்று குறிப்பிட்டால் போதும்.
மையப்பகுதியில் குற்றவிசாரணை முறைச்சட்டம் அல்லது கு.வி.மு.. 200கீழ் மனு என்று குறிப்பிட்டு மேலும் கீழும் கோடிட்டுத் தனியாகக் காட்ட வேண்டும். அல்லது நீங்கள் எந்தப் சட்டப்பிரிவின் கீழ் உள்ளே வழக்கை குறிப்பிட்டுள்ளீர்களோ அதை இங்கே குறிப்பிடவேண்டும்.
கடைசியில் உங்கள் பெயரை எழுதி மனுதாரர்- தன் வழக்கில் தானே ஆஜராகிறார் என்று அவசியம் எழுத வேண்டும்.  இந்த பேப்பருக்குள் உங்கள் மனுவை வைத்து மூலையில் தைக்க வேண்டும். இதே போன்ற பேப்பரை தனித்தனியாக தயாரித்து அதன் நடுப்பகுதியில் உள்ளே இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தின் பெயரை குறிப்பிட்டு, ஒவ்வொரு ஆவணத்தின் நகலையும் உள்ளே வைத்து தைக்க வேண்டும். 
இந்த மனுவுடன் உரிய சான்றாவணங்கள் இருந்தால் கூடிய மட்டும் ஒரிஜினலோ அல்லது ஜெராக்ஸ் காபியோ இணைக்க வேண்டும். ஒரிஜினல் சான்றாவணம் இணைத்தால்  கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டியது இல்லை. ஜெராக்ஸ் காப்பி இணைத்தால் கண்டிப்பாக ஒவ்வொரு ஆவணத்திற்கும், 5 ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஃபீ ஸ்டாம்ப்  கண்டிப்பாக ஒட்ட வேண்டும்.
அபிடவிட் இணைக்க வேண்டும் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. எனவே தங்களது அபிடவிட் ஒன்றை இணைக்க வேண்டும்.


******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.07.2019

2 comments:

  1. திருமிகு. நீதித்துறை நடுவர் அவர்கள் முன்னிலையில்
    நீதித்துறை நடுவர் மன்றம் உத்தம்பளையம்-625533

    S.முகமது ரபீக் (வயது 42).த/பெ.சம்சுதீன்
    59/13 சுங்கம் தெரு,
    கம்பம்-625516 nnnன்ன்ன்
    தேனி மாவட்டம் CELL NO.9976798914 – மனுதாரர்
    எதிர்

    மணிமாறன் காவல் ஆய்வாளர் அவர்கள்,
    கம்பம் தெற்கு காவல் நிலையம்
    கம்பம் தேனி மாவட்டம் - எதிர்மனுதாரர்



    குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு-2(4) மற்றும் 156(3) - இன் கீழ் நடவடிக்கை எடுக்க கோரும் மனு.......



    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அஞ்சல், 59/13, சுங்கம் தெருவில் வசிக்கும் S.முகமது ரபீக் (வயது 42), த/பெ. M.சம்சுதீன், முஸ்லிம், ஆகிய நான் இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 70 - இன் கீழ் ஏற்புரை செய்து, இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 57(1) படி நாட்டில் அமலிலுள்ள சட்டங்களை நீதிமுறையில் கவனத்தில் எந்த வழக்கிறகும் குந்தகமின்றி தகவலாக இம்மனு தாக்கல் செய்வது யாதெனில்,

    1. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 57(1) படி நாட்டில் அமலிலுள்ள சட்டங்களை கடைபிடித்து வரும் இந்திய குடிமகன் ஆவேன்.

    2.இந்திய அரசமைப்பு 1950 - இன் கோட்பாடு 375-இன் படி “இந்திய அரசமைப்பில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு கட்டுபட்டு உரிமையியல் குற்றவியல் மற்றும் வருவாய்த்துறை ஆகிவற்றிற்கான அதிகாரவரம்புள்ள நீதிமன்றங்களும் மற்றும் நீதித்துறை செயல்துறை நிர்வாகத்துறை அலுவலர்களும் அவர்களுடைய அலுவல்களைத் தொடர்ந்து நடத்தி வரவேண்டும்” என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

    3.ஒரு குற்றம் நடக்க இருக்கிறது என்பதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பும் அதற்கான சட்டபடியான வழிகளை கையாள வேண்டிய கடமையும்,அதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் சட்டபடி செயல்படாமல் இருப்பது இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 2-இன் கீழ் குற்றமாகும் அதன் அடிப்படையில் இப்புகார் மனு சமர்பிக்கப்படுகிறது.


    4. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். கம்பம் மெட்டு ரோட்டில் உள்ள சிங்கப்பூர் பிளாசா கே.கே. பில்டிங் என்ற முகவரியில் 2007 முதல் பத்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் மற்றும் மாத வாடகை 3000 செலுத்தி கடை நடத்தி வந்தேன்

    5.எனது கடையை காலி பண்ண சொல்லி எதிர் மனுதாரர் 2 மற்றும் 3 வது நபர்கள் கட்டாயபடுத்தி வந்தார்கள். நான் மாற்று கடை கிடைக்கும் வரை எனக்கு டயம் கொடுங்கள் என்று கேட்டு வந்தேன்.

    6. இந்நிலையில் என்னை சட்ட விரோதாமாக கடையை காலி பண்ண வைக்க வேண்டும் என்று நினைத்து, எனது கடை வாடகை ஒப்பந்தம் பத்திரம் போன்றே முன் தேதியிட்ட 20 ரூபாய் பத்திரம் ஒன்றை எதிர்மனுதார் 4 (முபாரக் அலி) மற்றும் 6 (சையதுஅபுதாகிர்) ஆகிய நபர்கள் சின்னமனூர் பத்திரம் விற்பனையாளரிடம் வாங்கி முன் தேதியிட்டு எதிர்மனுதாரர்-5(சக்திவேல்)ஆகிய பத்திரம் எழுத்தர் அவர்கள் துணையுடன் கம்பம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் டைப் அடித்து போலியாக எனது கையொப்பமிட்டு கடை அட்வான்ஸ் 10000 (பத்தாயிரம் மட்டும்)கொடுத்ததாக போலிபத்திரம் தயாரித்து என்னை கடையை காலி பண்ண முயற்சி செய்தார்கள் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    7.மேற்கண்ட போலி பத்திரம் சம்பந்தமாக எதிர்மனுதாரர் 5 ஆகிய சக்திவேல் பத்திர எழுத்தரை 17/6/2014 அன்று சுமார் மாலை 4-00 மணியளவில் நான் கேட்ட போது அவர், “ ஆமாம் நான் தான் போலிபத்திரம் தயாரித்து கொடுத்தேன், கம்பத்தில் கேகே குடும்பத்திற்கு நான் குடும்ப பத்திர எழுத்தர், அவருடைய புரப்பஸர் மருமகன் மற்றும் சிபியூ பள்ளி வாத்தியார் இருவரும் தான் பத்திரம் வாங்கி கொடுத்தார்கள் அவர்களை மீறி, நீ கம்பத்தில் கடை வைக்க முடியாது, மீறினால் நீ உயிரோடு இருக்கமுடியாது அதுனால இது சம்பந்தமாக இனி என்னை கேட்டால் நானே இந்த கத்தியால் ஒன்னை கொன்னுபுடுவேன். கேகே குடும்பத்தார்கள் என்னை வழக்கு இல்லாமல் காப்பாத்துவார்கள்,”என்று மிரட்டினார்

    8.மேற்கண்ட சம்பவம் தொடர்பாக 17-6-2014 அன்று கம்பம் தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்களிடம் எனது புகார் மனுவை கொடுத்தேன் . எனது மனுவை படித்து பார்த்து ஆய்வாளர் அவர்கள் நீ கம்பம் வடக்கு ஸ்டேசனில் புகார் பண்ணு என்று எனது மனுவை திருப்பி கொடுத்தார். நான் மனுவை வாங்கமறுத்துவிட்டேன். ஆய்வாளர் அவர்கள் எனது மனுவுக்கு புகார் மனு ஏற்பு ரசீது கூட தரவில்லை என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.புகார் மனுவின் நகல் மாண்பமை நீதிமன்றத்திற்கு தபால் மூலம் சார்பு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. 9.எதிர்மனுதாரர் நடவடிக்கை எடுக்க மறுத்தகாரணத்தினால் எனது புகார்மனு மீது தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 154(3)-இன் கீழ் 20-06-2014 அன்று நேரில் சமர்பித்தேன்.அம்மனுவின் நகல் மாண்பமை நீதிமன்றத்திற்கு தபால் மூலம் சார்பு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது நாள் வரை எதிர்மனுதாரர் எனது புகார் மனுமீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

    மனுதாரர் காவல்துறையிடம் சமர்பித்த புகார் மனுவானது இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு,120(பி)467,468,471 மற்றும் 506(2) –இன் கீழ் இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்குரிய மற்றும் குற்ற விசாரணைமுறை சட்டம் 1973 பிரிவு 2(3) கைதுசெய்வதற்குரிய குற்றமாகும் மற்றும் குற்ற விசாரணைமுறை சட்டம் 1973 பிரிவு 2(23) –இன் படி பிடியாணை வேண்டா வழக்குக்குரிய குற்றமாகும் என்பதையும் எதிர்மனுதாரர் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டியது அவருடைய சட்டப்படியான கடமை என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

    10.எனது புகார் மனுவின் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய எதிர்மனுதாரர் மறுத்தது, காவல் துறை இயக்குனர் அலுவலகம் குறிப்பாணை C.NO.1909/215713/AP-I(3)/92 DATED 7/10/1992 மற்றும் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 154(1) மற்றும் தமிழ் நாடு காவல் சட்டம் 1859 பிரிவு 21 மற்றும் காவல் நிலை ஆணைகள் 110க்கு விரோதமாகும் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

    11.தமிழ் நாடு காவல்துறை இயக்குனர் ஆர்சி எண்:62868/குற்றம்/1(2)/2001, நாள்: 31-03-2001 பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில் கீழ்கண்ட அறிவுரைகளை வழங்கியுள்ளார்
    பார்வை: 1.அரசாணைபல்வகை எண்.865 உள்(காவல்-1)துறை நாள் 9- 6-1997
    2.தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம்-1(1)/97 நாள்: 17-06-1997.....
    காவல்நிலைய பொறுப்பு அலுவலர் பெற்றுக்கொண்ட புகாரில், அதன் விபரங்கள் “பிடியாணைவேண்டாக் குற்றத்தை” கொண்டிருந்தால். அந்த காவல் அலுவலர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவரின் சட்டப்படியான கடமையாகும்....................................................................................................
    காவல் அலுவலர் முதல் தகவல் அறிக்கை பதிய தவருவது சட்டவிரோதமட்டுமில்லை எப்போதும் மிக கடுமையாக கருதப்பட்டு,ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

    12.ஒரு முதல் தகவல் அறிக்கை சாட்சியத்தின் முழுவிபரத்தையும் தெரிவிக்கக்கூடியதாக இருக்க தேவையில்லை. அரசுதரப்பிற்குத் தேவையான அடிப்படை விபரங்கள் மட்டும் கூறப்பட்டிருந்தால் போதுமானது. ஆதாரம் (மனோஜ் –எதிர்-மகாராஷ்டிரா அரசு (1999) 4 SCC(CRIME)533,AIR1999SC1620,1999CRIME LJ 2284)என்ற வழக்கில் தீர்வு காணப்பட்டது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

    13.காவல்கண்காணிப்பாளர் சிபிஐ-எதிர்-தபன்குமார்சிங்,2003 குற்ற்ம் எல்ஜெ2322-ஏஐஆர்2003 எஸ்சி4140 என்ற வழக்கில் மாண்பமை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து, “பிடியாணைவேண்டாக் குற்றம்” பற்றிய தகவல் கிடைத்தவுடன் காவல் அலுவலர் அந்த தகவலை பதிவுசெய்து,புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவரது கடமையாகும்.இந்நிலையில் காவல் அலுவலர் அந்ததகவலின் உண்மை தன்மையைப்பற்றி கவலைபட தேவையில்லை

    14.புலன்விசாரணை அலுவலர், தனது அதிகார எல்லைக்குள் குற்றம் நடைபெறவில்லை என்று கருதினால், அவர் அந்த முதல் தகவல் அறிக்கையை,சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பிடவேண்டும்...................ஆதாரம்: சாத்விந்தர் கௌர்-எதிர்-டெல்லி(என்சிடி)அரசு(1999)8 SCC 728, 1999 SCC(CRIME)1503

    15. WP(crl)NO.68 of 2008 – (லலிதாகுமாரி எதிர் உ.பி.மா நிலம் மற்றும் பலர்) என்ற வழக்கில், “பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது வழக்கு பதிவு செய்ய மறுக்கும் காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாண்பமை தலைமை நீதித்துறை நடுவர்கள் உயரதிகாரிகளுக்கு உத்திரவிடவேண்டும்.மேலும் காவல் அதிகாரி முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யாததற்கு தெரிவிக்கப்படும் காரணம் திருப்தியில்லாமல் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை சிறையில் அடைக்கும் தண்டனை நடவடிக்கையையும் மாண்பமை தலைமை நீதித்துறை நடுவர்கள் மேற்கொள்ளவேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது என்பதையும், உச்ச நீதிமன்ற உத்திரவுக்கு எதிராக எதிர்மனுதாரர் செயல்பட்டிருக்கிறார் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

    எனவே மரியாதைக்குரிய நீதித்துறை நடுவர் அவர்கள் இப்புகார் மனுவை பரிசீலனை செய்து,

    எதிர்மனுதாரர் அவர்கள் எனது புகார் மனுமீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும்

    ReplyDelete