disalbe Right click

Thursday, June 18, 2015

தேர்தல் விதிமீறலை தடுக்க'இ-நேத்ரா' திட்டம்


தேர்தல் விதிமீறலை தடுக்க'இ-நேத்ரா' திட்டம் அறிமுகம்
தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கவும் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் 'இ - நேத்ரா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து (18.06.2015) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
இந்தியாவில் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய இடங்களில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.மேலும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் புகார் அளிப்பதற்கு வசதியாகவும், அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் 'இ - நேத்ரா' திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
புகார் தெரிவிக்க ஆறு வழிகளை பின்பற்றலாம்.

* 'பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்யப்படக் கூடிய ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை https:/play.google.com/store/apps/details?id=com.uniphore.ecpublic&hl=enல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* enetra@chennaicorporation.gov.in என்ற முகவரிக்கு இ - மெயில் அனுப்பலாம்.
* 94441 23456 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்.
* '1950' என்ற டெலிபோன் எண்ணை அழைக்கலாம்.
* மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலம் புகார் அனுப்பலாம்.
* தேர்தல் உதவி மையங்களில் நேரடியாக சென்று புகார் அளிக்கலாம்; இம்மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

புகார் விவரம், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் 45 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பர்.புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் 2 முதல் 24 மணி நேரத்திற்குள், புகார்தாரருக்கு தெரிவிக்கப் படும்.

'இ - நேத்ரா' திட்டம் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதி யில் அறிமுகப்படுத்தப்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment