disalbe Right click

Tuesday, January 19, 2016

கிரடிட் கார்டு - விதிமுறைகள்


கிரடிட் கார்டு - விதிமுறைகள் & புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி?

கிரடிட் கார்டு", 
இந்த வார்த்தையைக் கேட்டாலே சிலருக்குப் புன்னகையும், சிலருக்கு எரிச்சலும் வரும். 

உண்மைதான் எரிச்சல் படும் பெரும்பாலானோர் கிரேடிட் கார்டின் முழுமையான நன்மைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்தவர்கள். நாம் கிரேடிட் கார்டுகளை வாங்குவதற்கான முக்கியக் காரணம், திடீர் செலவுகளுக்காகப் பிறரிடம் கடன் கேட்கும் நிலையைத் தவிர்க்கவும், பர்ஸை பதம் பார்க்கும் செலவுகளைத் தடுக்கவும், பெற்ற கடனை செலுத்த போதுமான கடன் இருப்பதாலே கிரெடிட் கார்டுகளை வரும்பி வாங்குகிறோம்.

இது ஏறக்குறைய ஒரு ஷாப்பிங் லோனைப் போலத்தான். ஒரு குறிப்பிட்டத் தேதிக்குள் செலுத்தி விட்டால் வட்டி கூடக் கட்டத் தேவையில்லை. ஒருவேளை நிலுவையைக் கட்டத் தவறினால், நீங்கள் அதற்குண்டான வட்டியையும் அபராதத்தையும் கட்ட வேண்டியிருக்கும். 

இதை உபயோகிக்கும்போது நீங்கள் அறிந்திராத பல்வேறு விதிமுறைகள் உள்ளன. நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ள அவற்றைச் சுருக்கமாகத் தருகிறோம்.

வருடாந்திரக் கட்டணம் 
பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திரக் கட்டணங்களை வசூலிக்கின்றன. ஆனால் சில வங்கிகள் முதல் வருடத்திற்கு மட்டும் இந்தக் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கின்றன. இந்த வருடாந்திரக் கட்டணம் முழுவதும் வங்கி மற்றும் கார்டின் வகையைப் பொருத்தது.

வருடாந்திர வட்டி விகிதம் 
இது கட்டணங்கள், நிலுவைத் தொகை மீது ஏற்படும் செலவுகளை உள்ளடக்கிய வருடாந்திர வட்டி விகிதத்தைக் குறிக்கும். ஒருவர் தன்னுடைய நிலுவைத் தொகை முழுவதையும் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செலுத்திவிட்டால், இந்த வருடாந்திர வட்டி விகிதம் பொருந்தாது என்பதோடு எந்த வட்டியையும் செலுத்த தேவையில்லை.

கட்டணச் சுழற்சி (Billing cycle)
பில்லிங் சைக்கிள் என அழைக்கப்படும் இது, உங்கள் கார்டுக்கான மாதாந்திர கட்டண விவரப்பட்டியல் தரப்படும் தேதியைக் குறிக்கும். டியு-டேட் எனப்படும் இது நீங்கள் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதியாகும். இந்த இரண்டு தேதி குறித்த விவரங்களும் உங்களுக்குக் கிரெடிட் கார்டு வழங்கப்படும்போது தெரிவிக்கப்படும்.

நிலுவை மாற்றம்
ஒருவர் தன்னுடைய ஒரு கிரெடிட் கார்டிலுள்ள நிலுவைத் தொகையை மற்றொன்றிற்கு மாற்றிக் கொண்டால் அதற்குப் பாலண்ஸ் டிரான்ஸ்ஃபர் என்று பெயர். இது பொதுவாக நிலுவைத் தொகை மீதான வருடாந்திரக் கட்டணங்களைக் குறைத்துக் கொள்ளச் செய்யப்படுவதுடன் முதல் கார்டிலுள்ள வட்டிவிகிதம் இரண்டாவது கார்டிலுள்ள வட்டிவிகிதத்தை விடக் குறைவானதாக இருந்தால் மட்டுமே பயன் தரும். ஆனால் அவ்வாறு மாற்றுவதற்கும் கட்டணமுண்டு.

கடன் வரம்பு 
இது உங்கள் கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பெறக்கூடிய கடனின் உச்ச வரம்பைக் குறிக்கும். நீங்கள் இந்த அளவைப் பயன்படுத்தும் விதத்தைப் பொருத்து உங்கள் கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் பெறும் திறன் மதிப்பீடும் மாறும். கடன் வரம்பு உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனையும் பொருத்து அமையும். எனவே வரம்பு மீறிய செலவுகளைச் செய்து உங்கள் கடன் வரம்பை அதிகரிக்க முயலாதீர்கள்.

பண வரம்பு
கடன் வரம்பு மற்றும் பணவரம்பு ஆகியவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. பணவரம்பு என்பது உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி எந்த அளவு பணத்தை எடுக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. இந்த இரண்டிற்கும் வரம்பு வேறுபடுவதுடன் பண வரம்பிற்கான வட்டி விகிதம் எடுத்த நாளிலிருந்தே தொடங்கிவிடும். பணவரம்பிற்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம் என்பதால் அதை அவசரக் காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்

கார்டு சரிபார்ப்பு மதிப்பு (சிவிவி) 
உங்கள் கார்டின் பின் பகுதியில் இந்த மூன்று இலக்க எண் குறிப்பிடப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். இது இணைய அல்லது மின்னணு பரிமாற்றங்களில் செய்யப்படும் செலவுகளுக்குத் தேவைப்படும் ஒரு குறியீடு. இதன் மூலம் உங்கள் கார்டின் நம்பகத் தன்மை உறுதிசெய்யப்படும்.

தாமதக் கட்டணம்
உங்கள் நிலுவைத் தொகையில் செலுத்தவேண்டிய குறைந்த அளவையும் நிலுவைத் தேதிக்குள் கட்டத் தவறும்போது இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

கேஷ்பேக் 
இது சில சிறப்பான காலக் கட்டங்களுக்காகத் தரப்படும் சலுகை. நீங்கள் கார்டின் மூலம் செய்யும் செலவுகளைப் பொருத்துச் சலுகை புள்ளிகளாகக் கணக்கிடப்பட்டு உங்கள் கணக்கிற்குப் பணமாகக் கிடைக்கும். ஆனால் நீங்கள் நிலுவைகளைச் சரியாகச் செலுத்தினால் மட்டுமே இந்தச் சலுகைகள் கிடைக்கும்.

சிபில் ஸ்கோர் 
உங்களுடைய கடன்பெறும் நம்பகத்தன்மையை அதிகரிக்க இந்தச் சிபில் ஸ்கோர் எனப்படும் கடன் நம்பகத்தன்மை மதிப்பீட்டுப் புள்ளிகள் அவசியம். ஒருவர் பல கிரெடிட் கார்டுகளை வைத்திருந்து அவற்றில் சிலவற்றை ரத்துச் செய்ய விரும்பினால் (அவற்றின் மொத்த கடன் வரம்பு 2 லட்சம் என வைத்துக்கொண்டால்), உங்கள் கடன்வரம்பு குறைக்கப் படுவதுடன் உங்கள் சிபில் ஸ்கோரும் குறையும்.

சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்வது எப்படி?
நீங்க ஏதாவது தேவைக்காக லோன் வேண்டி விண்ணப்பிக்கும்போது ஏறத்தாழ எல்லா வங்கிகளுமே உங்களுடைய சிபில் ஸ்கோர் அதாவது கடன் பெறும் திறனைப் பற்றி உங்களுக்குக் கடனைத் தருவதற்கு முன் விசாரிக்கும். 

உங்களுடைய ஸ்கோர் அல்லது புள்ளிகள் இதில் குறைவாக இருந்தால் நீங்க இதுக்கு முன்னாடி வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் இருந்துள்ளதை என்பதைக் காட்டும். அதனால் உங்களுக்கு லோன் கிடைக்கிறது சிரமம் தான் அல்லது கிடைக்காமல் கூடப் போகலாம். 

கடனை திருப்பிச் செலுத்தாததைத் தவிரச் செலுத்துவதில் தாமதம் கடனை முன்கூடியே அடைத்துவிடுதல் போன்ற பல காரணங்கள் உங்கள் சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். 

உண்மையில், 750-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் உங்களுக்கு லோன் கிடைக்க 79 சதவிகித வாய்ப்புகள் உண்டு. எனவே ஒரு கடன் வாங்குவதற்கு முன் ஒரு முறை உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

எப்படித் தெரிந்துகொள்வது? 
அண்மையில், ஒருவர் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடனைப் பெற முயற்சித்த போது வங்கிப் பிரதிநிதி அந்த வாடிக்கையாளரின் சிபில் புள்ளிகளை ஆன்லைன் மூலமாக அறிந்து அவருக்குத் தெரிவிக்கவும் அவருடைய கடன் விண்ணப்பத்தை அனுமதியை அளிக்கவும் முடிந்தது.

ஆனால் இது எப்போதுமே சாத்தியமாகாது. ஏனென்றால் இது சரியான நடைமுறை அல்ல. நீங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இது இலவச சேவை இல்லை - நீங்கள் 500 ரூபாயை இதற்காகக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை தொடர்பு கொள்ளலாம்
https://www.cibil.com/online/credit-score-check.do 

இந்த இணையதளம் உங்களுடைய பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் தொலைபெசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கேட்கும்.. அவற்றைக் கொடுத்துப் பின்னர்க் கட்டணத்தைச் செலுத்தலாம். 

அதன் பிறகு உங்கள் சிபில் தொடர்பான விவரங்கள் உங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். இது பொதுவாக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி விரைவாகக் கிடைத்துவிடும் 

நீங்கள் ஒரு வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதற்கான ஆவணங்களைத் தயார் செய்வதிலிருந்து அதற்குண்டான விதிமுறைகளுக்கு உங்களைத் தயார் செய்வது வரை நீங்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். 

ஒருவேளை நீங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள முயலவில்லையென்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இதற்காக நீங்கள் உழைத்த உழைப்பு வீணாகலாம். 

எனவே உங்கள் சிபில் ஸ்கோரை முதலில் தெரிந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். ஒருவேளை உங்கள் ஸ்கோர் குறைவாக இருக்குமானால் உங்களுக்கு லோன் கிடைக்காது என்பதை இன்னொரு முறை தெளிவுபடுத்த விரும்புகிறோம். 

இல்லையென்றால், நீங்கள் ஒரு அதிகம் வட்டி விதிக்கும் ஒரு கடனையோ அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து கடனையோ பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சில நிறுவனங்களும் நபர்களும் கடன் தொகை பெரியதாக இருந்தால் பயந்து ஒதுங்கிவிடக்கூடும். 

முடிவாக... ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் உங்கள் சிபில் ஸ்கோரை கடன் வாங்குவதற்கு முன்பாகவே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒன்றும் அவ்வளவு சிக்கலான விஷயமல்ல. சில நிமிடங்களைச் செலவழித்தால் போதுமானது. பின்னர் வரும் சிக்கல்களைச் சமாளிக்க இது உதவியாக இருக்கும்.

நன்றி :குட்ரிட்டன்ஸ் » தமிழ் -11.01.2016


கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் 5 வழிமுறைகள்

சென்னை: மார்க்கெட் அருகில் உள்ள ஒரு பிரபலமான இடத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதை அதனை பயன்படுத்தியவர் ஒருவர் கவனித்தார். அந்த இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்து 'ஸ்கிம்மர்' என்ற அம்சம் தான் அது. 


ஸ்கிம்மர் என்றால் என்ன?

ஸ்கிம்மர் என்பது நீங்கள் ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது இந்த ஸ்கிம்மர் உங்களுடைய அட்டை பற்றிய தகவல்களை எடுத்துக் கொள்ளும். இந்த தகவல்கள் வேறொரு வடிவத்தில் உங்களுடைய பணத்தை திருட பயன்படுத்தப்படும். 

மேலே படித்த விஷயத்தில், அந்த இயந்திரத்தை பயன்படுத்தியவர் உடனடியாக சம்மந்தப்பட்ட (Market Security) அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அந்த ஸ்கிம்மர் எவ்வளவு நாட்களாக தொடர்புடைய இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது என்றோ அல்லது எத்தனை கிரெடிட் கார்டுகளை பிரதி எடுத்திருந்தது என்றோ யாருக்கும் தெரியவில்லை!! மிகவும் பாதுகாப்பு உணர்வுடன் செயல்படும் வாடிக்கையாளர்களையும் கூட இந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகள் பயப்படுத்துகின்றன. 

நீங்கள் பயன்படுத்திய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டின் எண் வேறொருவரிடம் இருப்பது தெரிய வந்தால், உங்களுக்கு கார்டு வழங்கியவர்களுக்கு போன் செய்யவும், போலீஸாரிடம் தகவல்களை கொடுக்கவும் வேண்டும். ஆனால் இதற்குள்ளாக உங்கள் கார்டை வைத்திருப்பவர் அதனை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே இங்கே தரப்பட்டுள்ள சில தவறான பயன்பாடுகளை தெரிந்து கொண்டு இது போன்ற ஏமாற்று வேலைகளிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பிக்க முயற்சி செய்யுங்கள்.

ஸ்கிம்மர்கள் இருப்பதை கண்டறியாமல் இருத்தல் 

உங்களுக்கான தனிநபர் அடையாள எண்ணை (PIN) கேட்கும் ஏடிஎம் அல்லது விற்பனை புள்ளிகளில் ஸ்கிம்மிங் கருவிகள் பொருத்தப்படுகின்றன. எனவே, நீங்கள் கார்டை தேய்க்கும் முன்னர் சற்றே கவனிப்பது நல்லது. 'ஏதாவது வெளிப்படையான அறிகுறிகள் தென்படுகிறதா என்று எப்பொழுதும் சோதித்துப் பார்ப்பது நல்லது. அதாவது பசை அல்லது உராய்வு ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளனவா என்றும் அல்லது தனிநபர் அடையாள எண்ணை அடிக்கும் இடத்தில் ஏதாவது அடையாளங்கள் உள்ளனவா என்றும் அல்லது நீங்கள் கார்டை சொருகும் இடத்தில் ஏதாவது அறிகுறிகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டியது அவசியமாகும்' என்கிறார் மனீஷா தாகோர். 



நீங்கள் அதிக ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் உள்ள ஏடிஎம்-களுக்குள் செல்லும் போது இந்த கவனத்தை சற்றே அதிகமாக காட்ட வேண்டும். ஏனெனில் இத்தகைய சூழலில் உள்ள இயந்திரங்களில் எளிதில் ஏதாவது ஒரு ஸ்கிம்மரை இணைத்து விட முடியும். உங்களுக்கு சந்தேகம் வந்தால் வேறு ஒரு ATM-ஐ பயன்படுத்துங்கள்.

இண்டர்நெட் மையங்களில் வங்கி பரிமாற்றம் செய்தல்

 நீங்கள் ஃபேவரிட்டாக சென்று வரும் இணையதள மையங்களில் வை-ஃபை வசதிகள் இருந்தாலும் கூட, அந்த இடங்களில் உங்களுடைய வங்கி பரிமாற்றங்களை செய்ய வேண்டாம். நீங்கள் ஓபன் வயர்லஸ் நெட்வொர்க்கை பயன்படுத்தினால், ஹாக்கர்ஸ் உங்களுடைய இணைய வழி பரிமாற்றங்களையும், கடவுச்சொற்களையும் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களையும் எளிதில் சேகரித்து விடுவார்கள். எனவே, 'உங்களுடைய வங்கி பரிமாற்றங்கள் அல்லது ஷாப்பிங் செய்ய இணையதள மையங்கள் சரியான இடம் இல்லை என்பதை புர்pந்து கொள்ளுங்கள்' என்று பிரபலமான பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிமான்டெக் (Symantec)-ஐ சேர்ந்த மரியான் மெர்ரிட் என்ற இணைய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிடுகிறார். 



நீங்கள் பயன்படுத்துவது HTTP மற்றும் HTTPS என எந்த வகை இணைய தளமாக இருந்தாலும், நீங்கள் பயன்படுத்தும் காஃபி ஷாப் அல்லது இணைய தள மையங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பது உங்கள் கையில் இல்லை. 'மேன் இன் தி மிடில்' என்ற வகை தாக்குதல்களின் மூலம் ஹாக்கர்கள் உங்களுடைய கடவுச் சொல், அட்டை எண் மற்றும் பிற தகவல்களை பொது நெட்வொர்க்கில் இருந்து எளிதில் எடுத்து விடுவார்கள். எனவே, காஃபி ஷாப் போனால் காஃபி மட்டும் குடியுங்கள், வங்கி கணக்கை பாதூகப்பாக வீட்டில் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிஷ்ஸிங் (Phishing) செய்திகளுக்கு பதில் அனுப்புதல் 

உங்களுடைய மொபைலுக்கு வந்துள்ள குறுஞ்செய்தியில், நீங்கள் உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கிற்கு சென்று பார்க்குமாறும், இடையில் வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தால், அங்கே உங்களுடைய பகுத்தறிவை சற்றே பயன்படுத்துங்கள். இதே போன்ற செய்திகள், முகநூல், டுவிட்டர் அல்லது பிற வகை தகவல் தொடர்பு ஊடகங்களின் வழியாகவும் வரலாம். 'அடையாளம் தெரியாத வகையில் எந்த ஒரு தொலைபேசி அழைப்போ, மின்னஞ்சலோ அல்லது சமூக வலைத்தள செய்தியோ வந்தால் அதை பிஷ்ஸிங் தாக்குதல்' என்று சொல்லலாம் என்று மாஸ்டர் கார்டு வேர்ல்டுவைடு அமைப்பின் பேமண்ட் சிஸ்டம் இன்டிகிரிட்டி பிரிவின் துணைத்தலைவர் எரிக் முய்லர் சொல்லுகிறார்.



 'இந்த செய்திகளை சந்தேகக் கண்ணுடனேயே அணுகுங்கள், குறிப்பாக அவை உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்கள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஏதாவதொரு இணைய தளத்திற்கு தொடர்பு கொள்ளச் சொல்லியோ வரும் போது' என்கிறார் அவர். ஏனெனில், இந்த பிஷ்ஸிங் தகவல்களுக்கு பதிலாக நாம் சரியான தகவல்களை அனுப்பினால், எந்த ஒரு பிஷ்ஸிங் அனுப்பிய நபரும் எளிதில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தகிடுதத்தங்கள் செய்து விடுவார். உங்களுக்கு வந்த செய்தி சரியானது என்றோ அல்லது சந்தேத்தை தூண்டுவதாகவோ, இருந்தால் உங்களுக்கு கார்டு வழங்கிய நிறுவனத்தினருடைய வாடிக்கையாளர் மைய எண்ணுக்கு (அட்டையின் பின்பகுதியில் இருக்கும் தொடர்பு எண்) உடனடியாக தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்.

உரிமைகள் மற்றும் கடமைகளை மறுத்தல்

 நீங்கள் உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டை தொலைத்து விட்டாலோ, திருடப்பட்டு விட்டதாக சந்தேகப்பட்டாலோ அல்லது உங்களுடைய அட்டை எண்ணை யாரோ ஒருவர் இணையத்திலிருந்து எடுத்து விட்டதாகவோ நீங்கள் நினைத்தால், உடனடியாக கார்டை வழங்கியவருக்கு தகவல் கொடுங்கள். 



இந்த வகை ஏமாற்று வேலைகளிலிருந்து விடுபட கிரெடிட் கார்டுகள் மிகவும் அதிகமான பாதுகாப்பை கொடுக்கின்றன. பெரும்பாலான கார்டு வழங்கும் நிறுவனங்கள் ஜீரோ-லையபிலிட்டி ஃப்ராட் பாதுகாப்புகளை (Zero-Liability Fraud Protection) வழங்குகின்றன. மேலும், உங்களுயை அட்டை தொலைந்து விட்டது அல்லது திருடப்படடு விட்டது என்று நீங்கள் ஒருமுறை தகவல் தெரிவித்து விட்டால் போதும், 

அதன் பின் அந்த கார்டு மூலம் நடக்கும் எந்தவிதமான பரிமாற்றங்களுக்கும் சட்டப்படியாகவே நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். இந்த வகையான பரிமாற்றங்களுக்கு அதிகபட்ச வரம்புகளும் சட்டப்படியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டெபிட் கார்டுகளைப் பொறுத்தவரையிலும் உங்களுடைய உரிமைகளும், கடமைகளும் மாறுபட்டிருக்கின்றன. உங்களுடைய டெபிட் கார்டுகளுக்கு ஜீரோ-லையபிலிட்டி ஃப்ராடு பாதுகாப்பு இருந்தாலும், தனிநபர் அடையாள எண் அல்லது ஏடிஎம் பரிமாற்றங்களுக்கு இந்த விதி பொருந்துவதில்லை. டெபிட் கார்டு பரிமாற்றங்களுக்காகவே சில பிரத்யோகமான சட்ட விதிகள் இயற்றப்பட்டுள்ளன. 

யாராவது ஒருவர் உங்களுடைய டெபிட் கார்டை பயன்படுத்தி, ஏமாற்று வேலையில் ஈடுபட்டு பொருட்களை வாங்கும் போது, நீங்கள் அது தொலைந்து போன தகவலை தெரிவிக்காமல் இருந்தால் முழுப்பொறுப்பும் உங்களையே சேரும். மேலும், 60 நாட்களுக்குள்ளாக நீங்கள் தகவல் அளிக்காவிட்டால் உங்கள் கதி அதோகதி தான். இது மட்டுமல்லாமல், உங்களுடைய அட்டையத் திருடியவர், உங்கள் கணக்கை முழுமையாக சுரண்டி விட்டால், உங்கள் வங்கி விதிக்கும் அபராதத்தைக் கூட உங்களால் கட்ட முடியாது.

இலவசமான ஃப்ராடு பாதுகாப்பை பயன்படுத்தாமல் இருத்தல்

 எண்ணற்ற கார்டு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இலவசமாகவே ஃப்ராடு பாதுகாப்புகளை வழங்கி வருகின்றன. இதற்கு சிறிதளவு விசாரணையோ அல்லது பதிவு செய்து கொள்ளவோ வேண்டும். 

உதாரணமாக, விஸா அட்டை வைத்திருப்பவர்கள் இணைய வழியாக வர்த்தக பரிமாற்றங்கள் செய்யும் போது, வெரிஃபைடு பை விஸா (Verified-by-Visa) என்ற திட்டத்தின் படி அவர்கள் மற்றொரு இரகசிய கடவுச் சொல்லை டைப் செய்ய வேண்டியிருக்கும். 

அதே போல தான் மாஸ்டர் கார்டு செக்யூர் கோடு (MasterCard SecureCode) என்ற கடவுச் சொல்லும் மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்காக செயல்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்துபவர், 



இணைய வழியில் வர்த்தகத்தை முடிக்கும் போதும் சரியான தனிநபர் அடையாள எண்ணை டைப் செய்ய வேண்டும் என்று கேட்கும். மற்றுமொரு வழிமுறை : சிட்டிப பேங்க் அல்லது பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்றவை இவ்வகையான இணைய வழி பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவோ 'விர்ச்சுவல்' கிரெடிட் கார்டுகள் அல்லது ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. 

இவற்றை ஒருமுறை பயன்படுத்தி விட்டால், மறுமுறை பயன்படுத்த முடியாது. எனவே, இந்த கார்டுகளை எங்கே தேய்த்தோம் அல்லது யார் எனது பணத்தை திருடுவது என்று பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. இலவசமான கணக்கு எச்சரிக்கை தகவல்கள் கொடுக்கும் வசதிகளில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகளிலிருந்து தப்பிக்க முடியும். இந்த வசதிகளில் பதிவு செய்து கொள்வதன் மூலமாக எந்தவிதமான பரிமாற்றங்கள் அல்லது மாற்றங்கள் உங்களுடைய அட்டைகளைக் கொண்டு செய்யப்பட்டாலும், அல்லது ஒரு டாருக்கும் அதிகமாகவோ அல்லது வெளிநாடுகளில் பொருட்களை வாங்கினாலோ அந்த தகவல்கள் உங்களுக்கு உடனடியாக வந்து விடும். 

உங்களுக்கு கார்டு வழங்கும் நிறுவனத்தினர் இது போன்ற திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறார்களா அல்லது பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை அவர்களுடைய இணைய தளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மார்கெட்டில் நடமாடும் ஸ்கிம்மர்கள்

 வாசகரின் வேண்டுகோள் ஏற்று, சில ஸ்கிம்மர்களை நாங்கள் கண்டறிந்தோம். .



உங்கள் பார்வைக்காக படத்தில் காண்பித்துள்ளோம். இனி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது இனி உஷாராக இருக்கவும்

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 17.01.2014

No comments:

Post a Comment