disalbe Right click

Friday, May 13, 2016

செக் (காசோலை) மோசடி


செக் (காசோலை) மோசடி - என்ன செய்ய வேண்டும்?
தெரிந்தோ, தெரியாமலோ பெரும்பாலனவர்கள் காசோலைகளை சரியாக எழுதுவதில்லை. அது தகவல்களை நிரப்பும் செயல்பாடு மட்டுமல்லாமல், நீங்கள் எப்படி அந்த தகவல்களை நிரப்புகிறீர்கள் என்பதைத் பொறுத்த காசோலையில் பல விஷயங்கள் உள்ளது. 

தற்போது காசோலையானது, ஒரு முனையத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக, அந்த காசோலையை மின்னணு முறையில் ஸ்கேன் செய்து, அந்த ஸ்கேன் காப்பியை பணம் எடுக்க டெபாசிட் செய்த கிளையிலிருந்து, மற்றொரு வங்கி கிளைக்கு அனுப்புவார்கள். 

இதன் காரணமாக, நீங்கள் எழுதும் காசோலையில் ஒரு சிறிய தவறு இருந்தால் கூட, அந்த காசோலை ஏற்கப்படுவதில்லை. இது மட்டுமல்லாமல், காசோலைகளை சரியாக எழுதுவதன் மூலம் அதனால் ஏற்படும் அபாயங்களையும், மோசடிகளையும் தவிர்க்க முடியும். பணம்-சாராத காரணங்களுக்காக ஏற்கப்படாமல் பவுன்ஸ் ஆன காசோலைகளுக்காக, வங்கிகள் சில நூறு ரூபாய்களை அபராதமாக விதிப்பதையும் மறுப்பதற்கில்லை. 

எனவே, காசோலைகளை எழுதும் வேளைகளில் நீங்கள் சில முக்கிய விஷயங்களைப் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றைத் தவறாமல் பின்பற்றி வங்கிகள் விதிக்கும் அபராதம் மற்றும் மோசடிகளில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

இந்த முறையில் தான் காசோலையை எழுத வேண்டும் என்றில்லாவிட்டாலும், நீங்கள் இடது புறமிருந்து வலப்புறத்திற்கு எழுதும் போது காசோலையை எழுதும் வேலைக்கு அது உதவியாக இருக்கும். மேலும், அது காசோலையில் உள்ள அனைத்து பகுதிகளையும் சரியாக நிரப்புவதற்கு ஒரு திட்டமிட்ட வழிமுறையை ஏற்படுத்தும். அங்கொன்றும் இங்கொன்றுமாக காசோலையின் தகவல்களை நீங்கள் நிரப்பும் வேளைகளில், ஏதாவதொரு இடத்தை நீங்கள் மறந்து விட அல்லது விட்டு விட நேரலாம். இதன் காரணமாக, பணம்-சாராத காரணங்களுக்காக காசோலைகள் பவுன்ஸ் ஆகும் சூழலை எதிர்கொள்ள நேரிடலாம். 

காசோலையில் நீங்கள் தேதியைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்படா விட்டால், அந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 
காசோலைகளில் தேதிகளை எழுதாமல் மறப்பவர்களின் எண்ணிக்கையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே, உங்களுடைய காசோலை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைத்தால், அப்போதைய தேதியை உடனடியாக குறிப்பிடவும். சில நாட்கள் கழித்து எடுக்கும் வகையில் காசோலையைத் தர நினைத்தால், சரியான தேதியைக் குறிப்பிடுங்கள். போதிய அளவு பணம் இல்லாத நேரங்களில், முந்தைய தேதியை தவறுதலாக குறிப்பிட்டிருந்தால் அந்த காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் பவுன்ஸ் ஆகலாம். 

மக்களுக்கு இடையில் இடைவெளிகளை விடுவது நல்லது. ஆனால், காசோலைகளில் இவ்வாறு இடைவெளிகளை விடுவது மோசடி அபாயங்களை எதிர்கொள்ளும் நிலையும் மற்றும் காசோலைகள் சேதமடையும் நிலையும் உருவாகலாம். காசோலையில் 'Payee' என்று எழுதப்பட்டுள்ள இடத்தைத் தொடர்ந்த கோடிட்ட இடத்தில், நீங்கள் யாருக்கு கொடுக்க நினைக்கிறீர்களோ அவருடைய பெயரை அல்லது நிறுவனத்தின் பெயரை எழுதவும். 

நீங்கள் ஒரு தனிநபருக்கு காசோலையை வழங்குகிறீர்கள் என்றால் பெயரை சரியாக எழுதுங்கள். குறிப்பிட்டு சொல்லும் படியாக ஒரு நபருக்கு நீங்கள் காசோலையை கொடுத்தால், அந்த காசோலையில் அச்சிடப்பட்டிருக்கும் 'Bearer' என்ற வார்த்தையை அடித்து விடவும். 
இந்த 'Bearer' என்ற வார்த்தை வழக்கமாக காசோலையின் வலது பக்கத்தில் இருக்கும், சில காசோலைகளில் தேதிக்கு கீழாக இருக்கும். 'Bearer' என்ற வார்த்தைக்கு, இந்த காசோலையை கொண்டு வரும் நபர் யாராக இருந்தாலும், அவருக்கு காசோலையை கொடுக்கலாம் என்று பொருளாகும். எனவே, நீங்கள் ‘Bearer' என்ற வார்த்தையை அடிக்காமல் விட்டு விட்டால், மோசடி செய்வதற்கான வாய்ப்பை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். 

நீங்கள் எழுதும் காசோலை எந்தவொரு வங்கியின் கவுண்டரிலும் கொடுத்து பணமாக மாற்றத் தக்கதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதில் குறுக்கு கோடிட வேண்டாம். 
குறுக்கு கோடிடுதல் என்ற பெயரில் இரண்டு கோடுகளை காசோலையின் மேல் வலது மூலையில் வரைவதற்கு 'கணக்கில் வரவு வை (Account Payee)' என்று பொருளாகும். இவ்வாறு குறுக்கு கோடிடும் போது, அந்த காசோலையில் உள்ளவருடைய வங்கிக் கணக்கில் மட்டுமே பணம் வரவு வைக்கப்படும் என்பதையும், அதை வங்கியின் கவுன்டரில் கொடுத்து பணமாக பெற முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவும். 

காசோலையில் எழுதப்பட வேண்டிய பணத்தின் அளவை எண்ணில் எழுதும் பொருட்டாக கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் சரியாக எழுதவும். 
அதாவது, Rs999, என்று எழுதுவதற்குப் பதிலாக Rs.999/- என்று எழுதுங்கள். /- என்ற குறியீட்டை தொகையின் முடிவில் குறிப்பிடும் போது, அந்த எண்ணிற்குப் பின்னர் மற்றொரு இலக்கத்தை எழுத முடியாது. 

தொகையை எழுத வேண்டி வரும் போது, இடைவெளிகள் எதையும் விட வேண்டாம். உதாரணமாக, Rs.5,000 என்று எழுதும் போது 5000 என்ற எண்ணிற்கு முன்னதாக இடைவெளி விட வேண்டாம். இல்லாவிடில், அதற்கு முன்னதாக யாராவது ஒருவர் 3 என்ற எண்ணை எழுதி, 35000 ரூபாயாக மாற்றி விடலாம். இதே விஷயம், தொகையை எழுத்தில் எழுதும் போதும் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. ஐந்து ஆயிரம் என்று எழுதியிருப்பதை, எளிதில் முப்பத்து ஐந்து ஆயிரமாக மாற்றி விட முடியும். எனவே, தொகையை எண்ணிலோ அல்லது எழுத்திலோ எழுதும் போது, முன்னதாக இடைவெளி விட வேண்டாம். 

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தையும் நிரப்பிய பின்னர் மட்டுமே, உங்களுடைய கையொப்பத்தை இடவும். 
அதே போல முன்னோக்கி செல்லவும் மறந்து விட வேண்டாம்; காசோலைகளில் கையொப்பமிட அடர்த்தியான மையை கொண்டுள்ள பேனாவைப் பயன்படுத்தவும். காசோலையில் அச்சிடப்பட்டிருக்கும் உங்களுடைய பெயருக்கு மேல், கையொப்பமிடவும். மேலும், எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய காசோலைப் புத்தகத்தில் உள்ள வெற்றுக் காசோலைகளில் கையொப்பங்களை போட்டு வைக்க வேண்டாம். அந்த காசோலைப் புத்தகம் தொலைந்து போனால், அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். 

நன்றி :  குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 13.05.2016

No comments:

Post a Comment