disalbe Right click

Wednesday, June 1, 2016

நேர்முகத்தேர்வு


நேர்முகத்தேர்வு - என்ன செய்ய வேண்டும்?

ரு நிறுவனம் தனக்கான ஊழியரைக் கண்டடையும் தேர்வுகளின் முக்கியமான கட்டம், நேர்முகத் தேர்வு. அதில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அலுவலர் தீபா சுந்தரராமன்…
கவனம் செலுத்த வேண்டியவை..!
 நேர்முகத் தேர்வுக்குச் சொல்லும் நிறுவனம் குறித்தும், நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலை குறித்தும் நன்கு தெரிந்துகொண்டு செல்லவும்.

 தேவையான சான்றிதழ்கள், சி.வி அனைத்தையும் முதல் நாளே சரிபார்த்து எடுத்துவைக்கவும்.

 ஃபன்கி, கேஷுவல் ஆடைகள் தவிர்த்து, ஃபார்மல் ஆடையில் செல்லவும்.

 ஒருவரின் பெர்சனாலிட்டி குறித்து, அவர் அணிந்துள்ள காலணியில் இருந்தும் முடிவெடுக்கப்படும். எனவே, சுத்தம் செய்யப்பட்ட காலணி முக்கியம்.
 மொபைலை சைலன்ட் மோடில் வைக்க வும் அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடவும்.
 நேர்முகத் தேர்வு அறைக்குள் செல்லும் முன் அனுமதி கேட்டுச் செல்லவும்.
 உள்ளே சென்றவுடன், அங்குள்ள அலுவலர்களை `கிரீட்’ செய்யவும். இது மிகவும் முக்கியம்.
 அவர்கள் `அமருங்கள்’ என்று கூறும்வரை காத்திருக்கவும். அல்லது, ‘நான் அமரலாமா?’ என்று கேட்டுவிட்டு அமரவும்.
 கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால் சரியான பதிலைச் செல்லவும். தெரியவில்லை என்றால் அதை நேர்மையாக ஒப்புக்கொண்டு, ‘இதைப்பற்றி நான் நிச்சயம் தெரிந்துகொள்கிறேன்’ என்று அதையும் பாசிட்டிவாகச் சொல்லவும். மழுப்பலான, குழப்பமான பதில்கள் வேண்டாம்.
 அங்குள்ள அனைத்து அலுவலர்களிடமும் சாந்தமாக நடந்துகொள்ளவும். அதில் ஒருவருக்கு உங்களின் மேனரிஸம் பிடிக்கவில்லை என்றாலும் வேலை கிடைக்காமல் போகக்கூடும்.
 கேள்வி கேட்கும் அலுவலரின் கண்களை அவ்வப்போது பார்த்தபடி பேசுவது, உங்கள் உறுதியை வெளிப்படுத்தும்.
 நேர்முகத் தேர்வுக்குப் பிறகு அவர்கள் உங்களைப் பற்றித் தரும் பின்னூட்டங்களை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்ளவும்… நெகட்டிவாக இருந்தாலும் கூட! வாதிட வேண்டாம்.

 வெளியே வரும் முன், மறக்காமல் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவும்.
இதையெல்லாம் செய்யாதீங்க..!
 முதல் மற்றும் முக்கியமான விஷயம், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு நிமிடம்கூட தாமதமாக வரக்கூடாது. 15 நிமிடங்களுக்கு முன்னரே அந்த இடத்தை அடைந்துவிட வேண்டும்.

 பேக், லேப்டாப் போன்ற உடைமைகளை கால்களுக்கு அருகிலோ, நேர்காணல் செய்பவரின் மேஜை மீதோ வைக்கக் கூடாது.
 கொட்டாவி விடுவது, சூயிங்கம் மெல்வது கூடாது.
 கால் மேல் கால்போட்டு அமர்வது, நன்றாக சாய்ந்து அமர்வது கூடாது. அமர்ந்திருக்கும் நாற்காலியை சுற்றுவது, ஆட்டுவது கூடாது.
 இயல்பில் வாயாடியாக இருந்தாலும் அங்கே தேவைக்கும் அதிகமாகப் பேசக் கூடாது. கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் சுற்றி வளைக்காமல் பதில் சொன்னால் போதும்.
 கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லாமல், முழு வாக்கியங்களாகப் பேசவும்.
 சம்பளம் குறித்த கேள்விகளை நீங்களாகத் தொடங்கக் கூடாது.
 சொந்த வாழ்க்கை, குடும்பம் பற்றியெல்லாம் தேவையில்லாமல் பேசக்கூடாது.
 படித்த பள்ளி, கல்லூரி குறித்தோ, ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனம் குறித்தோ எதிர்மறையான கருத்துகள் சொல்லக் கூடாது.
 திமிர், அலட்சியம் போன்றவை உங்கள் பேச்சில் வெளிப்படுவதாக நேர்காணல் காணும் அலுவலர் நினைத்துவிடக் கூடாது.
 அவர்களாக கைகொடுக்கும் வரை காத்திருக்கவும். நீங்களாகவே கைநீட்டக் கூடாது.
 நேர்காணல் முடிந்த அடுத்த நாளே போனில், நேரில் என்று நீங்கள் தேர்வாகிவிட்டீர்களா என்பது பற்றி கேட்கக்கூடாது.

 நேர்முகத்தேர்வு என்பது, உங்கள் தகுதியை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நிரூபிக்கும் ஒரே வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தீபா சொன்னவற்றை குறித்துக்கொள்ளுங் கள், இன்டர்வியூவில் ஸ்கோர் செய்யுங்கள்!

 டெலிபோனிக் இன்டர்வியூ!
ப்போது பெரும்பாலான நிறுவனங்கள், தொலை பேசியிலேயே நேர்காணல்களை முடித்துவிடுகிறார்கள். அந்த டெலிபோனிக் இன்டர்வியூ, வீடியோ ரெஸ்யூம், வீடியோ இன்டர்வியூ என அடுத்தடுத்த வெர்ஷனுக்கு நகர்ந்துகொண்டே இருப்பதற்கேற்ப நாமும் மாற வேண்டியது சூழலின் அவசியம். ஒரு டெலிபோனிக் இன்டர்வியூவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…

 டெலிபோனிக் இன்டர்வியூதானே என்ற அலட்சியம் இல்லாமல், நேர்முகத் தேர்வு போலவே தயாராகவும்.
 ஃபார்மல் உடையே அணிந்துகொள்ளுங்கள். அது உங்கள் பேச்சிலும் எதிரொலிக்கும்.
 சூழல் மிகவும் முக்கியம். உங்களைச் சுற்றி எந்த இடையூறும் இல்லாத அமைதியான இடமாக இருக்க வேண்டும்.
 சி.வி, சான்றிதழ்கள் என்று அனைத்தும் உங்கள் அருகில் இருக்கட்டும். அது சம்பந்தமாக ஏதாவது கேள்விகள் கேட்கப்படலாம்.
 நேர்காணலை ஆரம்பிக்கும்போது, ‘குட் மார்னிங்’, ‘ஹலோ’வைக்கூட தன்னம்பிக்கை வெளிப்படும்விதமாகச் சொல்லுங்கள். உங்கள் குரல் மட்டுமேதான் இங்கு உங்களின் பிரதிநிதி என்பதால், அதில் உங்களின் உணர்ச்சிகளை அளவோடும், அழகாகவும் வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்.
 போன் உங்கள் உதட்டில் இருந்து சிறிது இடைவெளி யில் இருக்கட்டும். சத்தமாகப் பேசி கடுப்பேற்றவும் வேண்டாம், தேவைக்கும் தணிந்த குரலில் பேசி அவர்கள் பொறுமையை சோதிக்கவும் வேண்டாம்.
 இன்டர்வியூ செய்பவர் ஒருவேளை வேகமாகவோ, மெதுவாகவோ பேசினால்கூட, நீங்களும் அதற்கேற்ப பேசாமல், நிதானமாகவே பேசவும்.
 குறுக்கே பேசாதீர்கள். அவர்கள் ஒரு விஷயத்தை கேட்டு முடிக்கும்வரை அல்லது சொல்லி முடிக்கும்வரை அமைதி காத்து, பின்னர் தொடருங்கள்.
 இன்டர்வியூவின் முடிவில் சொல்லும் ‘தேங்க்யூ’வரை உங்கள் குரலில் அந்த எனர்ஜி நீடித்திருக்க வேண்டும்.

 டெலிபோனிக் இன்டர்வியூவை ஒருமுறை ரிகர்சல் பார்த்துக்கொள்வது நலம்!

நன்றி : அவள்விகடன் - 31.05.2016

No comments:

Post a Comment