disalbe Right click

Monday, July 18, 2016

பொய் ஆவணம் தயாரித்தல்


பொய் ஆவணம் தயாரித்தல் - என்ன செய்ய வேண்டும்?
ஒருவர், அவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் கையெழுத்தைப் போடாமல், அவரது பெயரை அவரே எழுதி்னால்கூட, அவர் பொய் ஆவணம் புனைந்தவர் ஆகிறார்.
உதாரணம் - 1
ராமசாமிக்கு வயதாகிவிட்டதால், பிள்ளைகளுக்கு தனது சொத்துக்களை பிரித்துக் கொடுக்க எண்ணி, இருக்கும் சொத்துக்கள் தன் மகன் முருகனுக்கும், தன் மகள் கோமதிக்கும் சரிசமமாக சேரவேண்டும் என்று உயில் எழுதுகிறார். அந்த உயிலில் இருந்த தனது சகோதரியின் பெயரை முருகன் அகற்றி விடுகிறார். முருகன் பொய் ஆவணம் தயாரித்தவர் ஆகிறார்.
உதாரணம் - 2
கணேஷ் என்பவரால் கையெழுத்து போடப்பட்டு கொணர்பவர் பெறக்கூடிய (Bearer cheque) தொகை நிரப்பப்படாத காசோலை ஒன்றை மூர்த்தி என்பவர் பாதையில் கண்டெடுக்கிறார். அதில் 10,000 ரூபாய் என்ற தொகையை மூர்த்தி நிரப்புகிறார். மூர்த்தி பொய் ஆவணம் புனைந்தவர் ஆகிறார்.
தண்டணை என்ன?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 465ன்படி, பொய் ஆவணம் புனையும் எவரும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப் படுவார்கள்.

******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

No comments:

Post a Comment