disalbe Right click

Saturday, July 30, 2016

இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு


இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு
என்ன செய்ய வேண்டும்?

ஒருவருடைய முதல் மனைவி இறந்துவிட்ட பிறகோ அல்லது அவருடைய முதலாவது திருமணம் சட்டப்படி ரத்தான பிறகோ அவர் வேறோரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அந்த இரண்டாவது திருமணமானது சட்டப்படி செல்லும்.
அவருடைய சட்டப்படியான மனைவி என்கிற அந்தஸ்தும் அந்தப் பெண்ணிற்கு கிடைக்கும். அந்த வகையில் அந்தப் பெண்ணிற்கு தன் கணவர் இறந்த பிறகு, கணவரின் மூதாதையர் சொத்தில் உரிமை தானாகவே வந்துவிடும்.
அதே நேரத்தில் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது அவரை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அந்தப் பெண்ணிற்கு சட்டப்படி மனைவி என்ற அந்தஸ்தோ, கணவன்வழி சொத்தோ கிடைக்காது.
இருந்தாலும் சட்டப்படி செல்லாத அந்த திருமணம் மூலமாக அந்தப் பெண்ணிற்கு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் கணவன்வழி சொத்தில் பங்குண்டு.
முதல் மனைவி வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு என்ன பங்கு வழங்கப்படுகின்றதோ, அதே அளவு இரண்டாவது மனைவி வயிற்றில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment