disalbe Right click

Wednesday, July 6, 2016

காதல் திருமணம் செய்தவர்கள் குடும்ப அட்டை பெற


காதல் திருமணம் செய்தவர்கள் குடும்ப அட்டை பெற
என்ன செய்ய வேண்டும்?

பெற்றோர்களை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு குடும்ப அட்டை பெறுவது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இதனை உணர்ந்த உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதற்கென ஒரு கடிதத்தை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது இதனை தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டு குடும்ப அட்டையை வேண்டினால் அதனைப் பெறுவதற்கு இலகுவாக இருக்கும்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் 
                             பாதுகாப்புத் துறை
                             
அனுப்புனர்
திரு க.ராஜாராமன், இ.ஆ.ப.,
ஆணையாளர்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் ்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-600 005.

பெறுநர்
1. ஆணையாளர் (நகரம்) வடக்கு, தெற்கு
   உணவுப்பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-600 006.

2. அனைத்து மாவட்ட விநியோக அலுவலர்கள்

ந.க.எண்:இ4/8920/2009, நாள்:20.05.2009

அய்யா, 
          பொருள்:பொது விநியோகத்திட்டம்-குடும்ப அட்டைகள்- காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்- அவர்கள் பெயர்களை பெற்றொர் குடும்ப அட்டையில் இருந்து நீக்குவது - அறிவுரைகள் வழ்ங்கப்படுகின்றன.
                                                         *****************
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களுக்கு குடும்ப அட்டை பெறுவதற்கு ஏதுவாக, அவர்கள் பெயர்களை அவர்களது பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து நீக்க கோரும்போது, சில பெற்றோர்கள் அவர்களது குடும்ப அட்டையினை தர மறுக்கிறார்கள் என தெரிவித்து தங்கள் பெயர்களை தங்கள் பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கி உரிய சான்று வழங்க கோரி இத்துறைக்கு கோரிக்கைகள் தந்துள்ளனர்.

இந்த கோரிக்கைகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு கீழ்க் கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1) காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆண்களாக இருப்பின் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், பெண்களாக இருப்பின் 18 வயது பூர்த்தி அடைந்தவர்க்ளாக இருப்பின் அவர்கள் அவர்களது பெயரை அவர்கள் பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்யக் கோரி மனு செய்யலாம். குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்கி சான்றிதழ் பெற குடும்பத்தலைவர் மனு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளிலிருந்து இந்த இனத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. 

2) இவ்வாறு அளிக்கப்படும் மனுக்களுடன் கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

அ. வயது வரம்பு மற்றும் விண்ணப்பதாரரின் பெற்றோர் பெயர்கள்-இரண்டையும் நிரூபிப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது கல்விச் சான்று.

ஆ. பெற்றோர் குடும்ப அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை எண், அங்காடி குறியீடு எண், பெற்றோர் பெயர், குடும்ப அட்டையில் உள்ள முகவரி,  தற்போது பெற்றோர்கள் குடியிருக்கும் முகவரி, திருமண்பதிவு சான்றிதழ் நகல்.

3) இவ்வாறு பெறப்படும் மனுக்களின் மீது நீக்கல் சான்றிதழ் கோரும் மனுக்களுக்குரிய காலக் கெடுவிற்குள் வட்ட வழங்கல் அலுவலர் / உதவி ஆணையாளர் நீக்கல் சான்றிதழ் வழங்க வேண்டும்.

4) குடும்ப அட்டை இல்லாமல் இத்தகைய இன்ங்களில் சிறப்பினமாக நீக்கல் சான்றிதழ் வழங்கப்படுவதால் பெயர் நீக்கப்பட்டதற்கா்ன பதிவுகளை குடும்ப அட்டை்கள் தகவல் கணிணி பதிவில் பெயரை நீக்கம் செய்வதுடன் யூனிட்/நபர் குறைக்கப்பட்ட விவரத்தை அலுவலக மற்றும் அங்காடி அ மற்றும் வழங்கல் பதிவேட்டில் பதிவு்கள் செய்ய வேண்டும். மேலும் இவ்வாறு பெயர் நீக்கம் செய்யப்பட்டு வழங்கப்படும் ஆணையின் நகல் குடும்பத் தலைவருக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

5) இந்த அறிவுரைகள் உடன் அமுலுக்கு வருகின்றன. இக் கடிதத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை மறு அஞ்சலில் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப் படுகிறது.
                                                                                (ஒம்) க.ராஜாராமன்
                                                                                     ஆணையாளர்
நகல்:-

1. அரசுச் செயலாளர்,
கூட்டுறவு உணவு மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை
சென்னை-600 009.

2. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
 சென்னை - 600 010.

3. நிர்வாக இயக்குநர், 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
சென்னை-600012.

4. அனைத்து உதவி ஆணையாளர்கள்

5. அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள்

6. ஆவண காப்பு அலுவலகத்திலுள்ள 
  அனைத்து்பிரிவுகள்

7. இருப்புக் கோப்பு.

ஆணைப்படி அனுப்புதல்

No comments:

Post a Comment