disalbe Right click

Monday, August 15, 2016

குழந்தைகளை காணவில்லை - புகார்


குழந்தைகளை காணவில்லை - புகார் - என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் மாயமான 47 குழந்தைகளின் பெற்றோருக்கு 4 மாதத்துக்குள் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘சென்னையில் ரோட்டோரங்களில் வசிக்கும் குழந்தைகள் கடத்தப் படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் கடத்தல்காரர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் தெரு வோரம் வசித்து வந்த 8 மாத குழந்தை ரோசன், 9 மாத குழந்தை சரண்யா ஆகியோர் கடத்தப் பட்டுள்ளனர். அந்த பச்சிளம் குழந்தைகளைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. எனவே அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:

போலீஸார் தாக்கல் செய் துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் 47 குழந்தை கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப் பதாகவும், இந்த வழக்கில் தொடர் புடைய 2 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும் கூறி யுள்ளனர். குழந்தை கடத்தலை தடுக்க ரேஞ்ச் வாரியாக தனிப் பிரிவு தொடங்கவும், குழந்தை கடத்தலை சிபிசிஐடி ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை மாயமாகி 4 மாதங்களுக்குள் மீட்கப்பட வில்லை என்றால் அந்த வழக்கை சிபிசிஐடி ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவு இதுவரை கடை பிடிக்கப்படவில்லை. பெரும் பாலான குழந்தை கடத்தல் வழக்குகளில் இன்னும் எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். குழந்தை ஒருவேளை மீட்கப்பட்டாலும்கூட கடத்தல் கும்பலின் பின்னணியை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட அளவில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு போதிய போலீஸார் இல்லை என்பதால் குழந்தை கடத்தல் வழக்குகளை சரியாக விசாரிக்க முடியவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு மாவட்டத் திலும் பிரத்யேகமாக தனிப் பிரிவை ஏற்படுத்தி போதிய எண்ணிக்கையில் போலீஸாரை பணியமர்த்த வேண்டும்.

இழப்பீட்டை பொறுத்தவரை 47 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டியுள்ளது. ஏற் கெனவே 7 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகளுக்கு ரூ.3 லட்ச மும், 3 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகளுக்கு ரூ.2 லட்சமும், ஓராண்டுக்கு மேலான வழக்கு களுக்கு ரூ.1 லட்சமும் இடைக் கால நிவாரணமாக வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் உள்ள 47 குழந்தைகளின் குடும்பத்தா ருக்கும் இந்த தொகையை 4 மாதத்தில் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.08.2016

No comments:

Post a Comment