disalbe Right click

Tuesday, August 16, 2016

கிரிமினல் கேஸ் - எக்ஸ்பார்ட்டி - தீர்ப்பு


கிரிமினல் கேஸ்-எக்ஸ்பார்ட்டி-என்ன செய்ய வேண்டும்?

மதுரை: 'கிரிமினல் வழக்கில் மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதற்காக ஒருதலைப்பட்சமாக (எக்ஸ்பார்ட்டி) தீர்ப்பளிக்க சட்டத்தில் இடமில்லை. ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் செல்வம். அருப்புக்கோட்டை கற்பகம். இவர்களுக்கு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். 

செல்வத்திற்கு எதிராக அவதுாறு வழக்கு மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரி அருப்புக்கோட்டை நீதித்துறை நடுவர் (ஜே.எம்.,) நீதிமன்றத்தில் கற்பகம் மனு செய்தார்.

செல்வத்திற்கு 2 மாதம் சிறை தண்டனை, 2000 ரூபாய் அபராதம் விதித்து, கற்பகத்திற்கு சில நிவாரணம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செல்வம் மேல்முறையீடு செய்தார். செல்வம் தரப்பில் தொடர்ந்து முறையாக யாரும் ஆஜராகாததால், நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக (எக்ஸ்பார்ட்டி) தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் நாகேந்திரன் ஆஜரானார்.
நீதிபதி: கிரிமினல் வழக்கில், மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தொடர்ந்து முறையாக ஆஜராகவில்லை எனக்கூறி, கீழமை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தது சரியான நடை முறையல்ல. அவ்வாறு செய்ய சட்டத்தில் இடமில்லை.

இது திருமண விவகாரம் தொடர்பான வழக்கு. மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாவிட்டாலும், நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறேன். ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் மனுதாரர், எதிர்மனுதாரர் ஆக.,22 ல் ஆஜராக வேண்டும்.
அந்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 16.08.2016

No comments:

Post a Comment