disalbe Right click

Sunday, September 11, 2016

அரசு வழக்கறிஞர்


அரசு வழக்கறிஞர் - என்ன செய்ய வேண்டும்?

சட்டம் தெரிஞ்சுக்கலாம் வாங்க...

அரசு வழக்கறிஞர் என்பவர் ஏன் நியமிக்கப்பட வேண்டும்? அதன் அவசியம் என்ன?

எந்த ஒரு குற்றம் நிகழ்ந்தாலும் அந்த குற்ற சம்பவம் சம்பந்தப்பட்டவரை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும் தன்மை கொண்டது.

 குற்றம் செய்த ஒருவன் தன்னுடைய செல்வாக்கினால் வழக்கில் சிக்காமல் வெளியே வந்து மீண்டும், மீண்டும் குற்றங்களை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

தவிர, பாதிக்கப்பட்டவர் பொருளாதாரத்தில் பின் தங்கியவராக, பின்புலம் இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் அவர் தனக்கென்று வழக்கறிஞர் ஒருவரை நியமித்து வழக்கு நடத்தும் போது அவர் மிரட்டப்படலாம். அதையடுத்து அந்த வழக்கு இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

இந்த நிலை வராமல் இருப்பதற்காகவே குற்றங்களை முற்றிலுமாக களையும் நோக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பாக அரசே வழக்கை நடத்தி வருகிறது.

 Cr.P.C. 1973, பிரிவு 24-இன் கீழ் அரசு குற்றத்துறை வழக்கறிஞரும், பிரிவு 25-இன் கீழ் அரசு குற்றத்துறை உதவி வழக்கறிஞர்களும் நியமிக்கப் படுகின்றனர்.

வழக்கமாக, ஒவ்வோர் அமர்வு நீதிமன்றத்தில் நடகும் வழக்கு விசாரணையில் “அரசு குற்றத்துறை வழக்கறிஞர் ( Public Prosecutor) ஏற்று நடத்த வேண்டும் என்று பிரிவு 225 உரைக்கிறது. 

அதே போல், மாஜிஸ்டிரேட் முன் நடத்தப்படும் வழக்குகளை Assitant Public Prosecutors என்று சொல்லப்படும் அரசு குற்றத்துறை உதவி வழக்கறிஞர்களால் நடத்தப்படுகின்றன.

இவர்கள் வழக்கு எந்த நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளதோ அந்த நீதிமன்றத்தின் முன் தோன்றி, எழுத்து மூலம் எவ்வித அதிகாரமும் இன்றி, வாதாடலாம் என்று பிரிவு 301(1) கூறுகிறது.

உண்மையிலேயே, அரசு சார்பாக வழக்கை ஏற்று நடத்தும் பொறுப்பும், கடமையும் வாய்ந்த இவர்கள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்டிரேட்டின் முன் அனுமதி பெற்றுத் தான் வழக்கை நடத்த வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை என்று பிரிவு 302(1) அதிகாரம் அளிக்கிறது.

தன்னை நியமித்த அதிகார அமைப்பு உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுயமாக செயல்படக்கூடிய கம்பீரமான இந்த பதவியில் உள்ள அரசுத்துறை வழக்கறிஞர்கள் காவல்துறை கொடுக்கும் சாட்சியம் மற்றும் ஆவணங்களை (ஒரு வேளை அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக இருந்தாலும் கூட) நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையிலேயே குற்றவாளி தானா என்பதை உறுதிப்படுத்த நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும்.

சுருக்கமாக சொன்னால், அரசு குற்றத்துறை வழக்கறிஞர் என்பவர் அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டுமேயன்றி காவல்துறையின் ஏஜண்ட் போல் செயல்படக்கூடாது. 

அவர் நீதியை நிலை நாட்ட உதவும் நீதி தேவதையின் பிரதிநிதியாக மட்டுமே இருக்க வேண்டும்!

சில நேர்வுகளில், அரசு குற்றத்துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பாக ஆஜராக வேண்டிய அவசியம் கூட நேரலாம் என்பதற்கு சாட்சியாக நிற்கிறது பின் வரும் வழக்கு.

Suneel Kumar Pal Vs. Phota Sheikh [(1984) S.C.C. (Cri.) 18]

By, சரவண அர்விந்த், Founder, LAW FOUNDATION

No comments:

Post a Comment