disalbe Right click

Monday, September 26, 2016

எலக்‌ஷன்ல நிக்கப் போறீங்களா!


எலக்‌ஷன்ல நிக்கப் போறீங்களா! - என்ன செய்ய வேண்டும்?

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒப்பந்ததார ராக இருக்கக்கூடாது, கண்டுபிடிக் கப்பட்டால் தகுதிநீக்கம் செய்யப்படு வதாக தேர்தல் ஆணையம் எச்ச ரித்துள்ளது.

தமிழகத்தில் 1,31,794 உள்ளாட் சிப் பதவிகளுக்கு அக்டோபர் 17, 19 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. நேற்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதிமுக, நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மற்ற கட்சியினரும், சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர். உள்ளாட்சித் தேர் தலில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை, மோதல்கள், சர்ச்சைகள் ஏற்படு வதை தடுக்க வேட்பாளர் தகுதி மற்றும் தகுதியின்மை, வாக்காளர் களை அணுகும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், நன்ன டத்தை விதிகள், சட்டத்திருத்தங்கள் அடங்கிய 14 அத்தியாயங்கள் அடங் கிய வழிகாட்டுதல் கையேட்டை தேர்தல் ஆணையம் வெளியிட்டு எச்சரித்துள்ளது. அதில் குறிப்பிடப் பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

$ குற்றவியல் நீதிமன்றத்தால் ஆறு மாதத்துக்கு மேல் தண் டனை பெற்றிருப்பின் தண் டனை காலத்திலும் மற்றும் தண்டனை முடிவடைந்த நாளி லிருந்து ஆறு ஆண்டு காலத் துக்கும் தேர்தலில் போட்டியிடு வதற்கு தகுதி அற்றவராக கருதப்படுவார்கள்.

$ தேர்தல் குற்றச்செயல்களுக் காக தண்டனை பெற்றிருப்பின் தண்டனை பெற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதி யற்றவராக கருதப்படுவர்.

$ தேர்தலில் போட்டியிடுபவர் மன நலம் குன்றியவராக இருக்கக் கூடாது.

$ 1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண் டனை பெற்றவராக இருத்தல் கூடாது.

$ பேரூராட்சி, நகராட்சி, மாநக ராட்சிகளில் கவுன்சிலராக போட்டியிடுகிறவர்கள், அந்த உள்ளாட்சியுடன் நேரடி யாகவோ, மறைமுகமாகவோ அல்லது பங்குதாரர் மூல மாகவோ எந்த ஒரு வேலைக் கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்த தாராக இருக்கக் கூடாது. கண்டுபிடித்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவர்.

$ அரசுப் பணியாளராகவோ, அலு வலராகவோ இருக்கக் கூடாது.

$ உள்ளாட்சிகளுக்கு சேர வேண்டிய தொகைகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது.

$ சட்டமன்ற தேர்தலில் போட்டி யிட தகுதியின்மை எதுவும் பெற்றிருத்தல் கூடாது.

$ கடந்த கால உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வேட்பாளர் தேர்தல் செலவின கணக்கினை உரிய காலத் தில் தாக்கல் செய்ய தவறிய மைக்காக மாநில தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வராக இருப்பின், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து மூன்றாண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட தகுதியற்றவராகக் கருதப் படுவர்.

$ வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களோ, அச்சுறுத்தல் களோ கொடுக்காமல் வாக்கு சேகரிக்கும் பணியை செய்ய வேண்டும்.

$ போட்டி வேட்பாளர் களை போட்டியிட விடாமல் செய் வதை தவிர்க்கவோ அல்லது போட்டியிட செய்ய வைக்கவோ முறையற்ற வழிகளை கையா ளக் கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி மனித தாக்குதல் கூடாது

$ மத, இன, சாதி மற்றும் மொழி உணர்வுகளை துாண்டி வாக்கு சேகரிக்கக் கூடாது.

$ சக வேட்பாளர்களின் சொந்த விஷயங்கள் மற்றும் அவர்கள் நடத்தை குறித்து பிரச்சாரம் செய்யக் கூடாது. வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வர வாகனங்களை வாடகைக்கு அமர்த்தக் கூடாது.

$ தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர், எவருக்கும் நேரடியாகவோ அல்லது முறைமுகமாகவோ இடையூறு, அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடாது.

$ வாக்காளர்களுக்கு உணவு வழங்குதல் மது மற்றும் போதைப் பொருட்களை வழங்குதல் கூடாது. வேட்பாளர் பெயரை முன்மொழிபவரது பெயர், போட்டியிடும் உள்ளாட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

$ வேட்புமனு படிவங்கள் தேர்தல் அலுவலகங்களில் கிடைக்கும். அச்சிட்டப் படிவம் கிடைக்கப்பெறாத நிலையில் கையால் எழுதியோ, தட்டச்சு செய்தோ வேட்புமனு தயாரித்து தாக்கல் செய்யலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 27.09.2016

No comments:

Post a Comment