காவல்துறை சட்டங்கள் - என்ன செய்ய வேண்டும்?
காவல்நிலையத்தில் எழுத்து மூலமாக புகார் அளிக்கும் மனுதாரரிடம், தங்கள் புகார் மீது இன்ன காரணத்தினால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று காவல்நிலையத்தில் உள்ளவர்கள்தான் எழுதித்தர வேண்டும். அதுதானே நியாயம்!
ஆனால், இன்ன காரணத்தினால் எனது புகார்மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்பதை நான் தெரிந்து கொண்டேன்! அதனால் என் புகார் மனுமீது மேல்நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று மனுதாரரை எழுதிக் கொடுக்க காவல் துறையினர் நிர்ப்பந்தம் செய்கின்றனர்.
இதன்மூலம் மனுதாரர் தானாகவே தனது புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டது போன்ற ஒரு பொய்யா்ன தோற்றத்தை காவல்துறையினர் ஏற்படுத்துகின்றனர்.
பல வருட காலமாக இதுதான் நடந்து வருகிறது.
எந்த சட்டத்தின் அடிப்படையில் இதுபோல தாங்கள் எழுதி வாங்குகிறீர்கள்? என்று காவல்துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் தகவல் கேட்டுள்ளேன்.
பதில் தரவில்லை. 01.09.2016 அன்று மேல்முறையீடு செய்துள்ளேன். இது வரையில் பதிலில்லை.
பதில் வாங்காமல் விடமாட்டேன்.
No comments:
Post a Comment