disalbe Right click

Tuesday, October 11, 2016

தேசிய ஓய்வூதிய திட்டம்


தேசிய ஓய்வூதிய திட்டம் - மாற்றங்கள் - என்ன செய்ய வேண்டும்? 

தேசிய ஓய்வூதியத் திட்டம்…– புதிய மாற்றங்கள் நன்மை செய்யுமா?
இன்றைய தேதியில் அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டம் என்றால் அது என்பிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படுகிற ‘தேசிய ஓய்வூதியத் திட்டம்’.

இதில் முதலீடு செய்பவர்கள், தங்களுக்கு விருப்ப மான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வழி இருக் கிறது. ஆனால், எவ்வளவு சதவிகிதம் நிறுவனப் பங்குகளில் (ஈக்விட்டி) முதலீடு செய்யவேண்டும், எவ்வளவு சதவிகிதம் கடன் பத்திரங்களிலும் பாண்டுகளிலும் முதலீடு செய்யவேண்டும் என்று முதலீடு செய்பவரால் தீர்மானிக்க முடியாத நிலை நேற்று வரை இருந்தது.

அந்தக் குறையை இப்போது தீர்த்து வைத்திருக்கிறது என்பிஎஸ் திட்டத்தை நிர்வகிக்கும் பென்ஷன் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (பிஎஃப்ஆர்டிஏ). 

இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்திருக்கிறது பிஎஃப்ஆர்டிஏ. அந்த மாற்றங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளும் முன்பு முந்தைய திட்டம் எப்படி இருந்தது என்று முதலில் பார்ப்போம்.

முந்தைய திட்டம்!                
35 வயதுள்ள ஒருவர் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்றால், அவர் செய்யும் முதலீடுகளில் 50 சதவிகிதம் பங்குகளிலும், 30 சதவிகிதம் கார்ப்பரேட் பாண்டுகளிலும், 20 சதவிகிதம் அரசு பாண்டுகளிலும் முதலீடு செய்யப்படும். இதுவே அவர்  55 வயதாகும்போது, அவருடைய பங்கு சார்ந்த முதலீடுகள், அவர் முதலீடு செய்திருக்கும் மொத்த பணத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே இருக்கும்.

10 சதவிகிதம் கார்ப்பரேட் பாண்டுகளில் இருக்கும். மீதமுள்ள 80 சதவிகிதம் அரசு பாண்டுகளில் இருக்கும்.

இவற்றில்தான் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றம் 1…
தற்போது வந்துள்ள புதிய மாற்றத்தின்படி, 35 வயதுக்குள் இருக்கும் ஒருவரின் மொத்த முதலீட்டில் 75 சதவிகிதம் வரை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களிலும், 10 சதவிகித முதலீடுகளை கார்ப்பரேட் பாண்டுகளிலும், மீதமுள்ள 15 சதவிகித முதலீடுகளை அரசு பாண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

இவரின் வயது 35-ஐ தாண்டும்போது படிப்படியாக ஈக்விட்டியிலிருந்து இருந்து கார்ப்பரேட் பாண்டு மற்றும் அரசு பாண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

இவர் 55 வயது அடையும்போது ஈக்விட்டி 15%, கார்ப்பரேட் பாண்டுகளில் 10% ஜி-செக் பாண்டுகளில் 75% என இருக்கும்.

இதில் ஈக்விட்டியில் அதிகம் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கலாமே தவிர, எதில் அல்லது எந்த வகையான திட்டங்களில், எந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்று பரிந்துரைக்க முடியாது.

மாற்றம் 2…
35 வயதுக்குள் இருக்கும் ஒருவரின் மொத்த முதலீட்டில் 25 சதவிகிதம் வரை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீட்டைக் குறைத்துக் கொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து 45 சதவிகித முதலீடுகளை கார்ப்பரேட் பாண்டுகளிலும், மீதமுள்ள 30 சதவிகிதத்தை அரசு பாண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

இவரின் வயது 35-ஐ தாண்டும்போது படிப்படியாக ஈக்விட்டி மற்றும் கார்ப்பரேட் பாண்டு திட்டங்களில் இருந்து பணம் ஜி.செக் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

இவர் 55 வயது அடையும்போது ஈக்விட்டி 5 சதவிகிதம், கார்ப்பரேட் பாண்டுகளில் 5 சதவிகிதம், அரசு பாண்டுகளில் 90 சதவிகிதம் என முதலீட்டுத் தொகை இருக்கும்.

முடிவுகள் ஜாக்கிரதை!
இப்படி ஈக்விட்டி முதலீட்டைக் குறைத்துக் கொள்வதும், அதிகரித்துக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது என்றாலும், நன்றாக ஆராய்ந்தபின்பே நடவடிக்கை எடுப்பது நல்லது. 

இந்த மாற்றங்களில் உள்ள ஒரு பெரிய குறை என்னவெனில், ‘நமது முதலீடு ஈக்விட்டியில் அதிகம் இருக்கவேண்டும்’ என்று நினைப்பவர் களுக்கு இந்தத் திட்டம் சற்றே ஏமாற்றமளிப்பதாகவே இருக்கும்.

ஏனெனில் ஒருவருக்கு ஈக்விட்டியைப் பற்றிய சரியான புரிதல் வருவதற்கு சில வருடங்கள் தேவைப்படலாம் எனும்போது, 35 வயதிலேயே ஈக்விட்டி திட்டங்களில் இருந்து படிப்படியாக பாண்டுகளுக்கு முதலீடு மாற்றப்படும் விதமாக திட்டம் வரையறுக்கப்பட்டிருப்பதை ஒரு குறையாகவே சிலர் சொல்கிறார்கள்.

என்பிஎஸ் திட்டத்தைப் பொறுத்தவரை, அதில் நல்ல பல மாற்றங்கள் கொண்டுவந்த பின்பும் அதை மக்களிடம் இன்னும் பெரிய அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எதுவும் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது.

நன்றி- நாணயம் விகடன் - 16.10.2016

No comments:

Post a Comment