சொந்த வீடு வாங்குவது சுலபந்தான் - என்ன செய்ய வேண்டும்?
நடுத்தர வருமானப் பிரிவினரின் வாழ்நாள் கனவாக இருப்பது சொந்த வீடு. ஆனால், வீடு வாங்குவதற்கான முழுத் தொகையையும் ஒருவரால் மொத்தமாகப் புரட்டுவது என்பது கஷ்டமான காரியமாக இருக்கிறது. வேறு என்னதான் செய்வது..?
கவலையேபடத்தேவையில்லை. இருக்கவே இருக்கிறது இஎம்ஐ.
பெரிய கனவுகளை எல்லாம் மாதத் தவணை திட்டங்கள் மூலம்தான் எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். சிறிது சிறிதாக பணம் சேர்த்து வீடு கட்டலாம் அல்லது வாங்கலாம் என்றாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மிரட்டுவதாக இருக்கிறது. வீட்டு வாடகையும் அதிகமாக இருக்கிறது.
அப்படியானால் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க இஎம்ஐ-தானே ஒரே வழி.
நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ள ஒரு சின்ன உதாரணம்…
சென்னை கூடுவாஞ்சேரியில் 600 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு ரூ.25 லட்சத்துக்கு கிடைக்கிறது. மாதச் சம்பளம் ரூ.40,000 வாங்கும் ஒருவரால் எப்படி இவ்வளவு தொகையைப் புரட்டி அந்த வீட்டை சொந்தமாக்கி கொள்ள முடியும்.
வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்குவதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே சுலப வழி. ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை, கையில் இருக்கும் சேமிப்பு ரூ.5 லட்சம் போக, மீதி ரூ.20 லட்சத்துக்கு 25 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்கினால் வட்டி விகிதம் 10% என்கிறபோது, மாதத் தவணை18,200 ரூபாய்தான்.
ரூ.40,000 சம்பளம் வாங்கும் ஒருவரால் இந்தத் தொகையைக் கட்டுவது ஒன்றும் கஷ்டமில்லை.
வாடகை கொடுக்கும் தொகையைவிட கொஞ்சம்தான் அதிகம். சொத்தும் சொந்தமாகும்; வாடகை வீட்டு நச்சரிப்புகளில் இருந்தும் விடுதலை.
அதனால், உங்கள் கனவுகளின் பின்னால் ஓடாதீர்கள். அவற்றை நனவாக்க இஎம்ஐ செலுத்துங்கள். கொஞ்சம் யோசனை செய்தால் சொந்த வீடு வாங்குவது சுலபம்தான்.
நன்றி : நாணயம்விகடன் - 13.11.2016
No comments:
Post a Comment