disalbe Right click

Friday, November 18, 2016

இணையதளத்தில் எப்.ஐ.ஆர்


இணையதளத்தில் எஃப்.ஐ.ஆர் - என்ன செய்ய வேண்டும்?

கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தகவல்

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை 24 மணி நேரத்தில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காவல் குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தீவிரவாதம், இளம் சிறார் மற்றும் சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகள் நீங்கலாக அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) 24 மணி நேரத்திற்குள் காவல்துறை வலை தளத்தில் பதிவிறக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொலை தொடர்பு வசதிகளில் சிரமம் உள்ள காவல் நிலையங்களில் மட்டும் காவல் நிலைய வலை தளத்தில் பதிவேற்றம் செய்ய 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு காவல்துறை http://eservices.tnpolice.gov.in என்ற தமிழ்நாடு காவல்துறை வலை தளத்தில் முதல் தகவல் அறிக்கையினை பொது மக்கள் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கடந்த 14-ம் தேதிக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காவல்துறை வலை தளத்தினுள் பொது மக்கள் செல்ல தங்களது செல்போன் எண்ணினை பதிவு செய்த உடன் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வரும். 

ஒரு முறை கடவுச் சொல்லினை (ஓடிபி) உள்ளீடு செய்து பின்னரே முதல் தகவல் அறிக்கையை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 19.11.2016

No comments:

Post a Comment